தேரர்களுக்கு கொரோனா: 3 கிராமங்கள் தனிமைப்படுத்தலில்...

 


மதுகம பிரதேச செயலகத்தின் ஓவிடிகம, பதுகம மற்றும் பதுகம புதிய காலனி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 
இவர்களில் விகாராதிபதி ஒருவரும் மற்றும் 04 தேரர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல், 11 பெண்களும் 
அடங்குவதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர். 
இவர்கள் கடந்த 07 ஆம் திகதி அனுராதபுரத்திற்கு சுற்றுலா பயணமொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
இந்த சுற்றுலாவிற்கு சென்ற சாரதியே அண்மையில் தொற்றுக்கு உள்ளான மத்துகம - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் சேவையில் ஈடுபடும் சாரதி ஆகும். மத்துகம பிரதேசத்தில் இதுவரை 29 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
இந்த நிலையிலேயே மேற்படி மூன்று கிராமங்களும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக ராணுவ தளபதி நேற்று அறிவித்தார்.
தேரர்களுக்கு கொரோனா: 3 கிராமங்கள் தனிமைப்படுத்தலில்... தேரர்களுக்கு கொரோனா: 3 கிராமங்கள் தனிமைப்படுத்தலில்...  Reviewed by irumbuthirai on October 19, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.