திவுலபிடிய கொரோனா எதிரொலி: 19-10-2020 நடந்தவை...


திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 15ம் நாள் அதாவது திங்கட்கிழமை (19) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • உயர் தர பரீட்சை நிலையங்களில் ஏதேனும் சுகாதார குறைப்பாடுகள் இருப்பின் அதனை அறிவிப்பதற்காக தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 1988 என்ற துரித இலக்கத்திற்கு அழைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் இந்த தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
  • கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த வாரம் நாட்டில் தீர்மானமிக்க வாரமாக மாறவுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவிப்பு. 

  • ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நாளை (20) காலை 08 மணி முதல் இரவு 10 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் வர்த்தக நிலையங்கள் திறந்திருக்கும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு. 
  • புறக்கோட்டையில் நான்காம் குறுக்கு தெருவில் மொத்த வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் உள்ளிட்ட 4 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி என அறிவிப்பு. 
  • ஒவ்வொரு வாரமும் செய்வாய்க்கிழமைகளில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெறும் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக கலந்துரையாடல் கொரோனா வைரஸ் பரவலை கருத்திற்கொண்டு நாளை (20) இணைய (Online) வழியில் அதாவது Zoom முறையில் நடத்துதப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவிப்பு. 
  • கொழும்பு மெனிங் சந்தையில் உள்ள சிற்றுண்டிச்சாலையின் உரிமையாளருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியானது. 
  • கொரோனா தொற்றாளர் பல்வேறு பகுதிகளில் இருந்து இனங்காணப்பட்டு வருவதனால் இவ்வாரம் நடைபெறவுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான விவாதத்தை ஒத்திவைக்குமாறு எதிர்கட்சியின் பிரதான ஒருகிணைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிப்பு. சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார். 
  • உயர்தரப் பரீட்சை நடைபெறும் மத்திய நிலையங்களில் சுகாதார பாதுகாப்பை அதிகரிக்கும் முகமாக அந்த நிலையங்களுக்கு ரூபா 15 ஆயிரம் வீதம் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவிப்பு. 
  • யாழ் மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலைமை சுமூகமாக காணப்படுகின்றது எனினும் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவிப்பு. 
  • கொழும்பு மெனிங் சந்தை பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றை பராமரித்துச் செல்லும் கந்தானை, கபால சந்தி பிரதேசத்தை சேர்ந்த நபரொருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 19-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 19-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 20, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.