இலங்கையில் பதிவான முதலாவது உயிரிழப்பு

March 28, 2020


கொரோனா வைரஸ் காரணமாக IDH வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த கொரோனா வைரசு தொற்று நோயாளி ஒருவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார். 
உயிரிழந்த இந்த நோயாளி 60 வயதான ஆண் ஆவார். இவர் மாரவில பிரதேசத்தை வதிவிடமாக கொண்டவர். சில வருடங்களுக்கு முன்னர் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு இவர் உட்பட்டிருந்தார். அத்தோடு நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்தினால் அவதிப்பட்ட நோயாளியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அ.த.தி.
இலங்கையில் பதிவான முதலாவது உயிரிழப்பு இலங்கையில் பதிவான முதலாவது உயிரிழப்பு Reviewed by irumbuthirai on March 28, 2020 Rating: 5

கொரோனாவுக்காக புது விடையத்தை உருவாக்கிய இலங்கை கடற்படை

March 28, 2020


கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் இலங்கை கடற்படை ஒரு கிருமிநாசினி அறையை உருவாக்கியுள்ளது. கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பிரிவின் கடற்படையினர் கிருமி நீக்கம் செய்வதற்கான புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர். 
கிருமி நீக்கம் செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த வடிவமைப்பு முழு உடலையும் ஒரே நேரத்தில் 

கிருமி நீக்கம் செய்ய உதவுகிறது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில், இந்த கண்டுபிடிப்பு தற்போது பல கடற்படை முகாம்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது, அவற்றில் ஒன்று கடற்படை தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலில் நிறுவப்பட்டுள்ளது. 
நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக, கடற்படை வீரர்கள் சிறப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்காக முகாம்களுக்கு வெளியே தங்களுடைய கடமைகலை ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த சோதனை நேரத்தில் கடற்படையின் ஆரோக்கியமான மனித வளத்தை பராமரிக்க முகாமில் ஒரு ஆரோக்கியமான சூழலை பராமரிப்பது கட்டாயமாக இருப்பதால் அவர்கள் வெளியே பணிகள் முடித்து முகாமுக்குள் திரும்பி வருகின்ற போது கிருமி நீக்கம் செய்யப்படுவது முக்கியமானதாகும்.
அ.த.தி.
கொரோனாவுக்காக புது விடையத்தை உருவாக்கிய இலங்கை கடற்படை கொரோனாவுக்காக புது விடையத்தை உருவாக்கிய இலங்கை கடற்படை Reviewed by irumbuthirai on March 28, 2020 Rating: 5

தயாராகிறது Voice of America கட்டிடம்...

March 28, 2020

சுகாதார அமைச்சர் கௌரவ திருமதி பவித்ரா வன்னிஆராச்சி ,பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் மருத்துவ நிபுணர் வைத்தியர் அனில் ஜாசிங்க ஆகியோர் பல அதிகாரிகளுடன் இணைந்து வியாழக்கிழமை 26 ஆம் திகதி மாலை சிலாபம், இரனவிலயிலுள்ள அரசுக்கு சொந்தமான வொய்ஷ் ஒப் அமேரிக்கா கட்டிடத்தை கோவிட்-19 நோயாளர்களை தனிமைப்படுத்தி வைத்து மருத்துவம் செய்வதற்கான களங்களாக பாவிப்பதற்காக பரிசீலனை செய்தனர். இதுவரை பயன்படுத்தப்படாத 

இந்த கட்டிடத்தில் தனிமைப்படுத்தல் மருத்துவ பரிசோதனைக்காக 50 படுக்கைகள் இடமளிக்க முடியும். லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், லெப்டினன் கேணல் ஆசிறி முஹந்திரம்கே அவர்களின் மேற்பார்வையின் கீழ் 1 ஆவது பொறியியல் சேவைப் படையணியின் படையினர் 5 நாட்களுக்குள் முழு கட்டிடத்தையும் மேம்படுத்தி திருத்தியமைக்கும் பணியை பொறுப்பெடுத்துள்ளனர். 
இந்த பரிசீலனையின் போது, சுகாதாரம், சமையல் வசதிகள் போன்றவற்றுக்கான இடங்களை ஒதுக்கீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் மதிப்பீடு செய்யப்பட்டு, அந்த இடத்தில் இருக்கும் தொடர்புடைய அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டன.
அ.த.தி.
தயாராகிறது Voice of America கட்டிடம்... தயாராகிறது Voice of America கட்டிடம்... Reviewed by irumbuthirai on March 28, 2020 Rating: 5

பல்கலைக்கழகங்களில் மாணவர் பதிவு தொடர்பாக வெளியான அறிவிப்பு..

March 27, 2020


பல்கலைக்கழகங்களில் 2020ஆம் ஆண்டுக்காக  பதிவு செய்வதற்காக மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால எல்லை தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு...

2020ஆம் ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களில் பதிவு செய்வதற்காக மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால எல்லையை மேலும் 2 வாரங்களினால் நீடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். 
இதற்கமைவாக, மாணவர்களைப் பதிவு செய்வதற்கான கால எல்லை மார்ச் மாதம் 26ஆம் திகதி வரையில் செல்லுபடியானதாக இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் நாட்டின் நிலவும் நிலமையின் அடிப்படையில் இந்த கால எல்லை மேலும் 2 வாரங்களுக்கு அதாவது ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிலமையைக் கருத்தில் கொண்டு 2020 பல்கலைக்கழக அனுமதிக்கான பதிவை எதிர்பார்த்துள்ள எந்தவொரு மாணவரும் சிரமத்திற்கு உள்ளாகாத வகையில் இந்த கால எல்லையை மேலும் நீடிப்பதற்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தயார் என தலைவர் மேலும் இதில் வலியுறுத்தியுள்ளார். 
இந்த விடயம் தொடர்பில் எதிர்கால திட்டம் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் இணையதளத்திலும் ஊடகங்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பேராசிரியர் அமரதுங்க அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.
(அ.த.தி)
பல்கலைக்கழகங்களில் மாணவர் பதிவு தொடர்பாக வெளியான அறிவிப்பு.. பல்கலைக்கழகங்களில் மாணவர் பதிவு தொடர்பாக வெளியான அறிவிப்பு.. Reviewed by irumbuthirai on March 27, 2020 Rating: 5

25-03-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

March 27, 2020


25-03-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
இதில், 

பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 

இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

25-03-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 25-03-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on March 27, 2020 Rating: 5

விடுமுறைகள் இரத்து

March 27, 2020

கொரோனா பரவல் காரணமாக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விடுமுறைகள் எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளது. 
பொலிஸ் ஊடகப்பிவு நேற்று (26) விடுத்துள்ள அறிவித்தவில் பதில் பொலிஸ் மாஅதிபரின் உத்தரவிற்கு அமைய, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(அ.த.தி.)

விடுமுறைகள் இரத்து விடுமுறைகள் இரத்து Reviewed by irumbuthirai on March 27, 2020 Rating: 5

வீட்டிலிருந்து வேலைசெய்யும் காலம் பிரகடனம்

March 26, 2020

கொரோனா பரவல் காரணமாக மார்ச் 30 முதல் ஏப்ரல் 03 வரை வீட்டிலிருந்து வேலைசெய்யும் காலமாக அரசாங்கம் பிரகடனம் செய்துள்ளது. 
(அ.த.தி)
வீட்டிலிருந்து வேலைசெய்யும் காலம் பிரகடனம் வீட்டிலிருந்து வேலைசெய்யும் காலம் பிரகடனம் Reviewed by irumbuthirai on March 26, 2020 Rating: 5

கல்வி அமைச்சின் e-தக்சலாவ வசதி இலவசமாக...

March 25, 2020


Covid19 காரணமாக தற்போது நடைமுறையில் உள்ள பாடசாலை விடுமுறைகாலத்தில் பிள்ளைகளுக்கு எந்தவொரு தொலைபேசி வலயமைப்பின் ஊடாகவும் கட்டணமின்றி e-தக்சலாவ இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதற்கான வசதியை 

கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது. கல்வி அமைச்சு தொலைதொடர்பு ஒழுங்குறுத்தில ஆணைக்குழுவுக்கு விடுத்த வேண்டுதலுக்கிணங்க சகல தொலைபேசி நிறுவனங்களின் ஒப்புதலின் அடிப்படையில் இந்த வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
இதில் பிரவேசிக்கும் அனைத்து பாடசாலை சிறார்களுக்கு பாட செயற்பாடுகள், வினாத்தாள்கள் மற்றும் பாடநூல் தொடர்பான பயிற்சிகள் உட்பட கற்றல் செயற்பாடுகளுக்கு வழிகாட்டியாக அதிகமான பாடதிட்டங்களுடன் ஒன்றிணைவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். மும்மொழிகளிலும் பாடப்பரப்புகளும் செயற்பாட்டு பயிற்சிகளும் வினாத்தாள்களும் உட்சேர்க்கப்பட்டுள்ளன.
குறித்த இணையத் தளத்திற்குச் செல்ல கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


கல்வி அமைச்சின் e-தக்சலாவ வசதி இலவசமாக... கல்வி அமைச்சின் e-தக்சலாவ வசதி இலவசமாக... Reviewed by irumbuthirai on March 25, 2020 Rating: 5

உலளாவிய ரீதியில் கொரோனா பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள...

March 24, 2020


கொரோனா பற்றிய தகவல்களை ஒவ்வொரு நாடு ரீதியாக இலகுவில் அறியும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேவையான நாட்டை கிளிக் செய்தவுடன் அங்கு பாதிக்கப்ட்டோர், குணமடைந்தோர், மரணமடைந்தோர் தொடர்பான விபரங்களை அறியலாம். 
கீழுள்ள லிங்கை கிளிக் செய்து குறித்த தளத்திற்கு சென்று தேவையான நாட்டை கிளிக் செய்க.


உலளாவிய ரீதியில் கொரோனா பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள... உலளாவிய ரீதியில் கொரோனா பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள... Reviewed by irumbuthirai on March 24, 2020 Rating: 5

பட்டதாரி நியமனம் பெற்றவர்களுக்கான கொடுப்பணவு

March 24, 2020

தொழில் வழங்குவதற்காக தெரிவுசெய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு மார்ச் மாத பயிற்சிக் கால கொடுப்பனவான ரூ.20,000 

அவர்களது வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
கொரோனா வைரஸ் பிரச்சினையால் ஜனாதிபதி நேற்றைய தினம் (23.03.2020) நாட்டு மக்களுக்கு அறிவித்த நிவாரணங்களிலே மேற்படி விடையமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பட்டதாரி நியமனம் பெற்றவர்களுக்கான கொடுப்பணவு பட்டதாரி நியமனம் பெற்றவர்களுக்கான கொடுப்பணவு Reviewed by irumbuthirai on March 24, 2020 Rating: 5

கொரோனாவினால் ஜனாதிபதி அறிவித்த நிவாரணங்கள்...

March 23, 2020


இந்த நிவாரணங்களை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மத்திய வங்கி ஆளுநர்,அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண சபை தலைமை செயலாளர்கள் மற்றும் அனைத்து வங்கி, நிதி நிறுவன மற்றும் வரி நிறுவன தலைவர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. 
அனைத்து நிவாரணங்களும் இன்று (மார்ச் 23) முதல் நடைமுறைக்கு வரும்... 
1. வருமான,வெற் வரி,சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான கட்டணங்கள்,ரூ 15,000க்கு குறைந்த நீர்,மின்சார கட்டணங்கள்,வரிகள்,வங்கி காசோலைகள் செல்லுபடியாகும் காலஎல்லை,ரூ50,000க்கு குறைந்த மாதாந்த கடனட்டை கொடுப்பனவுகள் 2020ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 
2. முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் லீசிங் கடன் தவணைக் கட்டணம் அறவிடுவது 06மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. 
3. அரசாங்க ஊழியர்களினதும் தனியார் துறை பணிக்குழாம் அல்லாத ஊழியர்களினதும் சம்பளத்தில் கடன் தவணை கட்டணங்கள் அறவிடுவது 2020மே மாதம் 30ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. 
4. வங்கி,நிதி நிறுவனங்களினால் ரூ.10லட்சத்திற்கு குறைவான தனிப்பட்ட கடன் அறவிடுவது 03மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. 
5. தொழில் வழங்குவதற்காக தெரிவுசெய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு, 

மார்ச் மாத பயிற்சிக் கால கொடுப்பனவான ரூ.20,000 அவர்களது வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படும். 
6. கொரோனா வைரஸ் ஒழிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார,பொலிஸ்,சிவில் பாதுகாப்பு உள்ளிட்ட அரசாங்க ஊழியர்களுக்கான அக்ரஹார காப்புறுதி நன்மைகள் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. 
7. சுற்றுலா, ஆடை, சிறிய மற்றம் நடுத்தர தொழில் முயற்சிகளுக்காக 6மாத கடன் நிவாரண காலத்தை நடைமுறைப்படுத்துதலும் இலங்கை மத்திய வங்கி அந்நிதியை மீள்நிதியாக்கம் செய்தலும். 
8. இலங்கை வங்கி,மக்கள் வங்கி,தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம், ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம் இணைந்து திறைசேறி பிணை முறிகளில் நிதி முதலீடு செய்கையில்,அதன் மூலம் நிதிச் சந்தையை 7வீத வட்டி விகிதத்தின் கீழ் நிலைப்படுத்தல். 
9. மாதாந்த கடன் தொகையை ரூ.50,000 வரையான தேசிய கொடுக்கல் வாங்கலுக்காக பயன்படுத்தப்படும் கடனட்டைக்கான கடன் வட்டி வீதத்தை அதிகபட்சம் 15வீதத்தின் கீழ் கொண்டு வருதலும் ஆகக் குறைந்த மாதாந்த அறவீட்டை 50வீதமாக குறைத்தலும். 
10. ஊரடங்கு சட்டம் இல்லாத சந்தர்ப்பங்களில் அனைத்து வங்கிக் கிளைகளையும் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச சேவைகளை வழங்கும் வகையில் திறந்து வைத்தல். 
11. இலங்கை துறைமுகம், சுங்கம் மற்றும் ஏனைய உரிய நிறுவனங்கள் அத்தியாவசிய உணவு,உரம்,மருந்துப்பொருட்கள் மற்றும் எரிபொருள்களை தொடர்ச்சியாக உரிய நபர்களுக்கு வழங்க வேண்டும். 
12. சமூர்த்தி நன்மை பெறுபவர்கள், சமூர்த்தி அட்டை உரிமையாளர்களுக்கு ரூ.10000 வட்டியில்லாத முற்பணத்தை அனைத்து சமூர்த்தி வங்கிச் சங்கங்களின் ஊடாகவும் பெற்றுக்கொடுத்தல். 
13. சதொச, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள் வெற் வரி மற்றும் ஏனைய பிரதேச வரிகள், கட்டணங்களில் இருந்து விலக்களித்தல். 
14. குறைந்த வருமானம் பெறுவோருக்கான போசனை உணவு பொருட்களை வழங்குவதற்காக சமூர்த்தி அதிகார சபை சமூர்த்தி, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான உணவு அட்டைகளை உடனடியாக வழங்க வேண்டும். அக்குடும்பங்களுக்கு முதியவர்கள், குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரிசி, பருப்பு, வெங்காயம் ஆகியன உணவு அட்டையின் ஊடாக வாராந்தம் வழங்க வேண்டும். 
15. கோவிட் - 19வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்குறிய சுகாதார, சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியத்தின் விசேட கணக்கொன்று இலங்கை வங்கியில் திறந்துள்ளது. அதற்காக ஜனாதிபதி நிதியத்தினால் 100மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது. அனைத்து தேசிய,சர்வதேச நன்கொடையாளர்கள் அதற்கு பங்களிப்புச் செய்வதற்காக வரி, வெளிநாட்டு நாணயக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. 
16. சார்க் நாடுகளில் கொரோனா நிதியத்திற்கு இலங்கை அரசாங்கத்தினால் 5மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 
இத்தீர்மானங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் உரிய அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். 
(அ.த.தி)
கொரோனாவினால் ஜனாதிபதி அறிவித்த நிவாரணங்கள்... கொரோனாவினால் ஜனாதிபதி அறிவித்த நிவாரணங்கள்... Reviewed by irumbuthirai on March 23, 2020 Rating: 5

பல்கலைக்கழக மாணவர்களுக்கான இலவச இணைய வசதி

March 22, 2020


ஈ-கற்கை (e-learning) முறைமையின் கீழ்  அரச பல்கலைக்கழகங்களில் தம்மைப் பதிவு செய்துள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்காக இணைய வசதிகளை இலவசமாக வழங்குமாறு 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை வழங்கியுள்ளார். 
குறித்த மாணவர்களின் விபரங்கள் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலைமை வழமைக்கு திரும்பும் வரை மட்டுமே இந்த இலவச இணையச் சேவை அமுலில் இருக்கும்.
இந்நிகழ்ச்சித்திட்டத்தினை நாளை முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் ஓஷத சேனாநாயக தெரிவித்தார். 
(அ.த.தி)
பல்கலைக்கழக மாணவர்களுக்கான இலவச இணைய வசதி பல்கலைக்கழக  மாணவர்களுக்கான இலவச இணைய வசதி Reviewed by irumbuthirai on March 22, 2020 Rating: 5

பொதுத்தேர்தல் ஒத்திவைப்பு - வர்த்தமானி

March 22, 2020


1981 ஆம் இலக்க பொதுத் தேர்தல் சட்டத்தின் 24-3 சரத்தின் கீழ் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உள்ள அதிகாரத்துக்கு அமைய இந்த விசேட வர்த்தமானி நேற்று வெளியிடப்பட்டுள்ளது. 2020 பொதுத் தேர்தலை ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் கொரோனா வைரஸ் காரணமாக தேர்தலை நடாத்த முடியாதுள்ளது. 
இது தொடர்பான வர்த்தமானியை மும்மொழிகளிலும் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

பொதுத்தேர்தல் ஒத்திவைப்பு - வர்த்தமானி பொதுத்தேர்தல் ஒத்திவைப்பு - வர்த்தமானி Reviewed by irumbuthirai on March 22, 2020 Rating: 5
Powered by Blogger.