Port City வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதது ஏன்? முஸ்லிம் காங்கிரஸின் விளக்கம்

May 22, 2021

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூல வாக்கெடுப்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 5 உறுப்பினர்களும் கலந்துகொள்ளவில்லை. இதற்கான காரணத்தை அந்த கட்சி தெரிவித்துள்ளது. 
அதாவது குறித்த சட்டமூலத்தில் சாதகமும் பாதகமும் காணப்படுவதாலேயே வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லையென ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 
வாக்கெடுப்பின் போது குறித்த உறுப்பினர்கள் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இருந்தாலும் சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
எந்த முடிவை எடுத்தாலும் சகலரும் தலைமைத்துவத்திற்கு 
கட்டுப்பட்டு ஒரே முடிவினை எடுக்க வேண்டும் என கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் அதன் பின்னரே பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடி, வாக்கெடுப்பில் கலந்துகொள்வதில்லை என்ற முடிவை எடுத்ததாகவும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார். 
ஆனால் கட்சியின் தலைவரைத் தவிர ஏனைய உறுப்பினர்கள் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்ததோடு பிரதமரின் இப்தார் நிகழ்விலும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Port City வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதது ஏன்? முஸ்லிம் காங்கிரஸின் விளக்கம் Port City வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதது ஏன்? முஸ்லிம் காங்கிரஸின் விளக்கம் Reviewed by irumbuthirai on May 22, 2021 Rating: 5

Online கல்வி முறையில் தேவையற்ற அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டாம் - கல்வி அமைச்சு

May 22, 2021

கொரோனா பரவல் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன நிலையில் தற்போது இடம்பெறும் இணையவழி (Online) கல்வி நடவடிக்கைகளினால் மாணவர்களும் ஆசிரியர்களும் பல்வேறு மன அழுத்தங்களுக்கு உள்ளாகும் நிகழ்வுகள் இடம்பெறுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 
மாணவர்களுக்கு ஓய்வில்லாமல் எந்நேரமும் வகுப்புகளை நடாத்துதல், பாட ரீதியாக அளவுக்கதிகமான வேலைப் பளுவை சுமத்துததல், ஆசிரியைகள் சாரி அல்லது ஒசரி போன்ற 
உடைகளை அணிந்து பாடங்களை நடத்துமாறும் அறிவுறுத்தப்படல் போன்ற பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 
எனவே, இது போன்ற சம்பவங்கள் இடம் பெறாமல் தடுக்க அதிபர்கள், பிரதி அதிபர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் தேவையற்ற மன அழுத்தங்களுக்கு உள்ளாகாதவாறு இணைய வழி கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Online கல்வி முறையில் தேவையற்ற அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டாம் - கல்வி அமைச்சு Online கல்வி முறையில் தேவையற்ற அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டாம் - கல்வி அமைச்சு Reviewed by irumbuthirai on May 22, 2021 Rating: 5

17-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

May 22, 2021

17-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.




17-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 17-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on May 22, 2021 Rating: 5

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அதிரடி: Port City க்கு ஆதரவாக வாக்களித்த இருவர் நீக்கம்!

May 22, 2021

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (All Ceylon Makkal Congress - ACMC) கட்சியைச் சேர்ந்த இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 
புத்தளம் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஷப்ரி ரஹீம் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தின் இஷாக் ரஹ்மான் ஆகியோரே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளனர். 
இது தொடர்பில் அக்கட்சியின் பதில் தலைவர் சட்டத்தரணி எம்.என். ஷஹீட் தெரிவிக்கையில், 
அண்மையில் இடம்பெற்ற கட்சி உயர்மட்டக்குழு கூட்டத்தின் போது கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி இருவரும் ஆதரவாக வாக்களித்ததனால் தாம் இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் தெரிவித்தார். 
தனது தீர்மானம் கட்சியின் அரசியல் பீடத்திற்கு அறிவிக்கப்பட்டு, அவர்கள் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அதிரடி: Port City க்கு ஆதரவாக வாக்களித்த இருவர் நீக்கம்! அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அதிரடி: Port City க்கு ஆதரவாக வாக்களித்த இருவர் நீக்கம்! Reviewed by irumbuthirai on May 22, 2021 Rating: 5

21-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

May 22, 2021

21-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 21-05-2021 (In three languages) 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.



21-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 21-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on May 22, 2021 Rating: 5

இதுவரை 1000 ற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பாதிப்பு:

May 21, 2021

எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு வேகமாக கொரோனா வைரஸ் பரவும் அபாயம் அதிகமாக இருப்பதனால் அவர்களை பாதுகாப்பதற்காக நோய் தடுப்பூசி வழங்குவது மிக அவசியம். எனவே 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவது மிக அவசியம் என விஷேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். 
இதுவரை 1,000 இற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தொற்றுறிதியாகி உள்ளதுடன் அவர்களில் 5 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதுவரை 1000 ற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பாதிப்பு: இதுவரை 1000 ற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பாதிப்பு:  Reviewed by irumbuthirai on May 21, 2021 Rating: 5

ஓட்டமாவடியில் சகல இனத்தவரும் நல்லடக்கம்: 4 நாட்களில் 46 உடல்கள்:

May 21, 2021

ஓட்டமாவடி மஜ்மா நகர் பகுதியில் கொரோனா உடல்களை நல்லடக்கம் செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. 
அங்கு முஸ்லிம், கிறிஸ்தவ, சிங்களம், இந்து ஆகிய இனங்களைச் சேர்ந்தவர்கள் நல்லடக்கம் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 
 கடந்த திங்கள் முதல் நேற்று வரையான நான்கு நாட்களில் மாத்திரம் 46 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
இதேவேளை அங்கு இதுவரை மொத்தமாக 202 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஓட்டமாவடியில் சகல இனத்தவரும் நல்லடக்கம்: 4 நாட்களில் 46 உடல்கள்: ஓட்டமாவடியில் சகல இனத்தவரும் நல்லடக்கம்: 4 நாட்களில் 46 உடல்கள்: Reviewed by irumbuthirai on May 21, 2021 Rating: 5

இலங்கையில் உற்பத்தியாகவிருக்கும் கொரோனா தடுப்பு மருந்து!

May 21, 2021

தற்போதைய நிலையில் கொரோனா தடுப்பு மருந்துகளை பல்வேறு நாடுகளில் இருந்து இலங்கை பெற்றுக்கொண்டு வருகிறது. அந்த தடுப்பு மருந்து இலங்கையிலேயே உற்பத்தி செய்வதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாக தற்போது சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். 
விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். 
இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனமும் சிநோவெக் பயோடெக் மற்றும் கெலுன் லைஃப் சயன்ஸ் தனியார் கம்பெனியும் இணைந்து இந்த தடுப்பு மருந்தை உற்பத்தி செய்வது தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் உற்பத்தியாகவிருக்கும் கொரோனா தடுப்பு மருந்து! இலங்கையில் உற்பத்தியாகவிருக்கும் கொரோனா தடுப்பு மருந்து! Reviewed by irumbuthirai on May 21, 2021 Rating: 5

பல்கலைக்கழக மாணவர் அனுமதிக்கான கையேட்டினை பெற்றுக் கொள்ளும் முறைகள் இதோ!

May 21, 2021

2020/2021ம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக் கைநூலொன்றை, பின்வரும்  முறைகளில் 21.05.2021 ஆம் திகதியிலிருந்து ஒரு கைநூலிற்காக ரூபா. 500/- செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். 
(1) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு செயலகத்தில் பெறலாம் (முகவரி: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் செயலகம், இல. 20, வாட் பிளேஸ், கொழும்பு 07. 

(2) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட விநியோக முகவர்களிடமிருந்து (பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமனம் செய்யப்பட்டுள்ள விநியோக முகவர்களின் பட்டியல் UGC இணையத்தளத்திலும் பார்வையிடலாம்.) 

(3) தலா ரூபா 500/- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கணக்கில் வைப்பில் இட்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையதளத்திலிருந்து (www.ugc.ac.lk) பல்கலைக்கழக அனுமதிக்கான கைநூலின் மென்நகலினை (Soft Copy) பதிவிறக்கம் செய்யலாம். (கணக்கிலக்கம் போன்ற விபரங்கள் 5வது படிமுறையில் விளக்கமாக தரப்பட்டுள்ளது)

(4) பின்வரும் பல்கலைக்கழக நலன்புரிப் பிரிவுகளிலிருந்து பெறலாம்: 
i.  கொழும்புப் பல்கலைக்கழகம் 
ii.  பேராதனைப் பல்கலைக்கழகம் 
iii.  ஸ்ரீ ஜயவர்த்தனபுர                        
      பல்கலைக்கழகம் 
iv.  களனிப் பல்கலைக்கழகம் 
v.  மொறட்டுவைப் பல்கலைக்கழகம் 
vi.  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 
vii.  உறுகுணைப் பல்கலைக்கழகம் 
viii.  கிழக்குப் பல்கலைக்கழகம், 
        இலங்கை 
ix.   இலங்கைத் தென் கிழக்குப் 
                  பல்கலைக்கழகம் 
x.  இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகம் 
xi.  இலங்கை சப்ரகமுவ.                                      பல்கலைக்கழகம் 
xii.  இலங்கை வயம்ப.                                           பல்கலைக்கழகம்
xiii. இலங்கை ஊவா வெல்லஸ்ஸ 
                  பல்கலைக்கழகம் 
xiv. கட்புல அரங்கேற்றக்கலைப் 
                 பல்கலைக்கழகம் 
xv. இலங்கை கம்பஹா விக்ரமாராச்சி     சுதேச        மருத்துவ பல்கலைக்கழகம்
 
(5) பல்கலைக்கழக அனுமதிக் கைநூலினை தபால் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும். 

இதற்காக வேண்டி இலங்கை வங்கியின் ரொறிங்ரன் கிளையிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு திரட்டுக் கணக்கு இலக்கம் 0002323287 இன் அல்லது மக்கள் வங்கியின் நகர மண்டபக் கிளையிலுள்ள திரட்டுக் கணக்கு இலக்கம் 167-1-001-4-3169407 இற்கு வரவு வைக்கும் விதமாக, இலங்கை வங்கியின் அல்லது மக்கள் வங்கியின் ஏதாவது ஒரு கிளையில் ஒவ்வொரு கைநூலுக்கும் ரூபா 500/- இனைச் செலுத்தி பெற்றுக்கொண்ட கொடுப்பனவு பட்டோலை, அனுமதிக் கைநூலிற்கான எழுத்து மூல வேண்டுகோளுடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்தல் வேண்டும். 
மேலும், குறித்த பணத்தை செலுத்தியமைக்கான வங்கியின் இலச்சினை பொறிக்கப்பட்டு அதிகாரமுடைய அலுவலர் ஒருவரினால் கொடுப்பனவு பட்டோலையில் முறையாக ஒப்பமிடப்பட்டிருக்கவும் வேண்டும். 
அவ்வாறு வங்கிக் கொடுப்பனவுப் பட்டோலையை அனுப்பி அனுமதிக் கைநூலினை தபால் மூலமாகப் பெற்றுக் கொள்ளும் போது விண்ணப்பதாரியின் பெயர் மற்றும் விண்ணப்பதாரி பெற விரும்பும் அனுமதிக் கைநூலின் ஊடகம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு சுய முகவரியிடப்பட்டதும், முத்திரை ஒட்டப்படாததுமான 
37செ.மீ x 26செ.மீ அளவுக்குக் குறையாத கடிதவுறையொன்றுடன் எழுத்து மூல கோரிக்கையொன்றினை சிரேஷ்ட உதவிச் செயலாளர் (பல்கலைக்கழக அனுமதிகள்), பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, இல. 20, வாட் பிளேஸ், கொழும்பு 07 என்ற முகவரிக்கு விண்ணப்பதாரி அனுப்பி வைத்தல் வேண்டும்.'
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் பட்டப்பயில் நெறிகளுக்கான அனுமதி - கல்வியாண்டு 2020/2021' எனத் தலைப்பிடப்பட்ட பல்கலைக்கழக அனுமதிக்கான கைநூலுடன் (37செ.மீ. X 26செ.மீ.) கடிதவுறை ஒன்றும் தரப்படும் என்பதும் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயமாகும். 
இணையவழி விண்ணப்பச் செயன்முறையின் இறுதியில் விண்ணப்பதாரி பெற்றுக்கொள்ளும் இணையவழி விண்ணப்பத்தின் அச்சுப்பிரதியை முறையாக நிரப்பிக் கையொப்பமிட்டு அனுப்புவதற்காக இக் கடிதவுறையை விண்ணப்பதாரிகள் உபயோகிக்க வேண்டும். பரீட்சார்த்திகள் கைநூலை வாங்கும்போது மேற்கூறப்பட்ட கடிதவுறை தமக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
(Source: பத்திரிகை விளம்பரம் -தினகரன்)
பல்கலைக்கழக மாணவர் அனுமதிக்கான கையேட்டினை பெற்றுக் கொள்ளும் முறைகள் இதோ! பல்கலைக்கழக மாணவர் அனுமதிக்கான கையேட்டினை பெற்றுக் கொள்ளும் முறைகள் இதோ! Reviewed by irumbuthirai on May 21, 2021 Rating: 5

வெளியானது பல்கலைக்கழக அனுமதிக்கான கையேடு (Online விண்ணப்பம் மற்றும் முழு விபரம் இணைப்பு)

May 21, 2021

2020/21 ஆம் கல்வியாண்டுக்காக பல்கலைக்கழக அனுமதிக்கான மாணவர் கையேடு மற்றும் Online விண்ணப்பம் என்பவற்றை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 
ஆன்லைன் விண்ணப்பத்தை மாணவர்கள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் போன்ற எந்த ஒரு மொழியிலும் பூர்த்தி செய்யலாம். 
மிக முக்கிய விடயம் என்னவென்றால் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு முன்னர் கையேட்டை முழுமையாக வாசித்து அதன் அறிவுறுத்தலுக்கமையவே பூர்த்தி செய்ய வேண்டும். 

Online விண்ணப்பத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
கையேட்டை (Hand Book) தரவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க (பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கணக்கிற்கு ரூபாய் 500 வைப்பு செய்தாலே தரவிறக்கம் செய்யும் வசதியைப் பெறலாம்)
வெளியானது பல்கலைக்கழக அனுமதிக்கான கையேடு (Online விண்ணப்பம் மற்றும் முழு விபரம் இணைப்பு) வெளியானது பல்கலைக்கழக அனுமதிக்கான கையேடு (Online விண்ணப்பம் மற்றும் முழு விபரம் இணைப்பு) Reviewed by irumbuthirai on May 21, 2021 Rating: 5

இறப்பவர்களில் அதிகமானோர் 55 வயதுக்கு மேற்பட்டோர்: அரசாங்கத்தின் முக்கிய வேண்டுகோள்:

May 20, 2021

இலங்கையில் கொரோனா 3ஆம் அலை பரவல் உச்சமடைந்துள்ள நிலையில், கொரோனா தொற்றால் மரணிப்பவர்களில் அதிகமானோர் 55 வயதுக்கு மேற்பட்டவர்களாக காணப்படுகின்றமை காரணமாக கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 
அதாவது சுவாசிப்பதில் சிக்கல் உட்பட, கொரோனா அறிகுறிகள் காணப்படும், 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடனடியாக மருத்துவர் ஒருவரினது ஆலோசனையை பெறுமாறு அல்லது அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக செல்லுமாறு அவர் அறிவித்தல் விடுத்துள்ளார். 
நோயின் ஆரம்பத்திலேயே இவ்வாறானவர்களை அடையாளம் கண்டு, மருத்துவ கண்காணிப்பின் கீழ் அவர்களை பேணுவதற்காக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறப்பவர்களில் அதிகமானோர் 55 வயதுக்கு மேற்பட்டோர்: அரசாங்கத்தின் முக்கிய வேண்டுகோள்: இறப்பவர்களில் அதிகமானோர் 55 வயதுக்கு மேற்பட்டோர்: அரசாங்கத்தின் முக்கிய வேண்டுகோள்: Reviewed by irumbuthirai on May 20, 2021 Rating: 5

அரசாங்கம் உண்மையான தகவல்களை மறைக்கிறதா?

May 20, 2021

நேற்று (19) 3,000 ற்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதைவிட அதிகமான தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கலாம். 3,500 ஐ போன்று மூன்று மடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கலாம். அவர்களால் இன்னுமின்னும் நோய் பரவக் கூடும். மக்களை வீட்டில் இருக்குமாறு சொன்னால் 
அவ்வாறு நடந்துக்கொள்வதில்லை. வீதிகள் வெறுமையடைய வேண்டும். எனவே, தொற்றை தவிர்க்க வேண்டுமானால் தேவையான விடயங்களுக்கு மாத்திரம் மக்கள் வெளியில் செல்வது நல்லது´என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார். 
இதனைத் தொடர்ந்து... உண்மையான தகவல்களை அரசாங்கம் மறைப்பதாக ஒரு குற்றச்சாட்டும் உண்டல்லவா? என ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், 
'அதில் எவ்வித உண்மையும் இல்லை. உண்மையை மறைத்தால் நாமும் மறைந்து போவோம்´ என தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் பிரதேச ரீதியாக நடைபெறும் வெவ்வேறு சம்பவங்கள் மற்றும் பல்வேறு வைத்தியசாலைகளிலிருந்து வெளியாகும் தகவல்கள் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பில் வெளியாவதில்லை. இதேவேளை அரசாங்கத்தின் சுகாதார நடைமுறைகள் தொடர்பான கருத்துக்களை வெளியிடுவதற்கு சுகாதாரப் பணியாளர்களுக்கு அரசாங்கத்தினால் தற்போது வரையறைகள்  விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கம் உண்மையான தகவல்களை மறைக்கிறதா? அரசாங்கம் உண்மையான தகவல்களை மறைக்கிறதா? Reviewed by irumbuthirai on May 20, 2021 Rating: 5

வெளியானது பல்கலைக்கழகங்களுக்கான புதிய அனுமதி தொடர்பான அறிவிப்பு!

May 20, 2021

பல்கலைக்கழகங்களுக்கான புதிய அனுமதி தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
அதாவது 2020/21 கல்வி ஆண்டிற்கான பல்கலைகழக விண்ணப்பங்கள் இம்மாதம் (மே) 21 முதல் ஜூன் 11 ஆம் திகதி வரையில் கோரப்படவுள்ளதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். 
மாணவர்களின் விண்ணப்பங்களை இணையத்தின் ஊடாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான சகல பூர்வாங்க செயற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளது.  மாணவர்களினால் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தின் 
புகைப்படம் ஒன்றை எடுத்து அதில் கையொப்பமிட்டு உறுதிப்படுத்தி, apply2020@UGC.ac.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பல்கலைக்கழக பாடநொறிகளை தெரிவு செய்வதற்கான வழிகாட்டல் கைநூலை அங்கீகரிக்கப்பட்டுள்ள புத்தக விற்பனை நிலையங்கள் மற்றும் சகல பல்கலைக்கழகங்களிலும் கொள்வனவு செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வெளியானது பல்கலைக்கழகங்களுக்கான புதிய அனுமதி தொடர்பான அறிவிப்பு! வெளியானது பல்கலைக்கழகங்களுக்கான புதிய அனுமதி தொடர்பான அறிவிப்பு! Reviewed by irumbuthirai on May 20, 2021 Rating: 5

விரைவில் பாடசாலைகள் ஆரம்பம்: சகல ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி:

May 18, 2021

பாடசாலைகள் மிக விரைவில் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் இதற்கு தேவையான சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 
இதேவேளை சகல ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 
தடுப்பூசி செலுத்துவதில் மேல் மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் அதற்கு பின்னர் ஏனைய மாகாணங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு செலுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விரைவில் பாடசாலைகள் ஆரம்பம்: சகல ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி: விரைவில் பாடசாலைகள் ஆரம்பம்: சகல ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி: Reviewed by irumbuthirai on May 18, 2021 Rating: 5

வெளியானது Port City தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு: சர்வசன வாக்கெடுப்புக்கு செல்லுமா இலங்கை?

May 18, 2021

கொழும்பு துறைமுக நகர (Port City)பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். 
 அந்த வகையில் குறித்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணாக காணப்படுவதாகவும் அதற்கு சர்வசன வாக்கெடுப்பும் விசேட பெரும்பான்மையும் அவசியம் எனவும் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டிருப்பதாக சபாநாயகர் இன்று அறிவித்தார். 
62 பக்கங்களைக் கொண்ட இந்த தீர்ப்பு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளான பிரியந்த ஜயவர்தன, முர்த்து பெர்ணான்டோ, புவனெக அலுவிகார மற்றும் ஜனக் த சில்வா ஆகியோரினால் வழங்கப்படுள்ளது.
வெளியானது Port City தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு: சர்வசன வாக்கெடுப்புக்கு செல்லுமா இலங்கை? வெளியானது Port City தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு: சர்வசன வாக்கெடுப்புக்கு செல்லுமா இலங்கை? Reviewed by irumbuthirai on May 18, 2021 Rating: 5

எதிர்வரும் திங்கள், செவ்வாய் அரச விடுமுறையாக அறிவிப்பு!

May 18, 2021

எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமை (24 & 25) அரச விடுமுறை தினங்களாகும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். 
இருப்பினும் 24ஆம் திகதி நாடுபூராகவும் பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என்பதோடு, 25ம் திகதி அதிகாலை 04.00 மணிக்கு அது விலக்கப்பட்டு, மீண்டும் அதேநாள் இரவு 11.00 மணிக்கு நாடுதழுவிய பயணக் கட்டுப்பாடு அமுலாகின்றமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் திங்கள், செவ்வாய் அரச விடுமுறையாக அறிவிப்பு! எதிர்வரும் திங்கள், செவ்வாய் அரச விடுமுறையாக அறிவிப்பு! Reviewed by irumbuthirai on May 18, 2021 Rating: 5

சைபர் தாக்குதலுக்கு உள்ளான அரச இணையதளங்கள்

May 18, 2021

இலங்கையில் அரச இணைய தளங்கள் சிலவற்றின் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 
அந்த வகையில் மின்சக்தி அமைச்சு, சுகாதார அமைச்சு, ரஜரட்டை பல்கலைக்கழகம் மற்றும் சீனாவிலுள்ள இலங்கை தூதரகம் ஆகியவற்றின் இணையத்தளங்கள் இவ்வாறு ஊடுருவப்பட்டுள்ளதாக Sri Lanka Computer Emergency Response Team (SLCERT) அறிவித்துள்ளது.
சைபர் தாக்குதலுக்கு உள்ளான அரச இணையதளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளான அரச இணையதளங்கள் Reviewed by irumbuthirai on May 18, 2021 Rating: 5

கொரோனாவால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மரணம்!

May 18, 2021

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி திருகோணமலை, கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் (TNA) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரத்னசிங்கம் காலமாகியுள்ளார். இவர் தனது 80 வது காலமாகியுள்ளார்.
கொரோனாவால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மரணம்! கொரோனாவால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மரணம்! Reviewed by irumbuthirai on May 18, 2021 Rating: 5

தடுப்பூசிகளிற்காக ஆபிரிக்க நாட்டிடம் உதவி கோரிய இலங்கை!

May 16, 2021

Covid-19 தடுப்பூசிகளை பெறுவதற்காக இலங்கை கொங்கோ நாட்டின் உதவியை நாடியுள்ளது. 
இந்தியாவில் தயாரிக்கப்படும் அஸ்டிரா ஜெனேகா (Astra Zeneca) தடுப்பூசியை கொங்கோவும் பயன்படுத்துகிறது. இந்நிலையில் அங்கு மேலதிகமாக கொரோனா வைரஸ் தடுப்பூசி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே இலங்கை இந்த உதவியை நாடியுள்ளது. 
எனவே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கொங்கோ ஜனாதிபதிக்கு இந்த உதவியை கோரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசிகளிற்காக ஆபிரிக்க நாட்டிடம் உதவி கோரிய இலங்கை! தடுப்பூசிகளிற்காக ஆபிரிக்க நாட்டிடம் உதவி கோரிய இலங்கை! Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5

கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் தடுப்பூசி போட வேண்டுமா?

May 16, 2021

Covid - 19 அறிகுறிகள் இருப்பவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது பயனற்றது என்பதால் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதே பொருத்தமானது என்று தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். 
இன்று (16) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் தடுப்பூசி போட வேண்டுமா? கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் தடுப்பூசி போட வேண்டுமா? Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு அறிமுகமாகிறது புதிய முறை!

May 16, 2021

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் சுற்றுலாத்துறை தொடர்பாக அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி வருவதை அவதானிக்க முடிகிறது. 
அந்தவகையில் இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு Bio Bubble (உயிர்க்குமிழி) என்ற முறை மூலம் வர முடியும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க இதனை தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் சுகாதார சேவை பணிப்பாளருக்கும் பொலிஸ்மா அதிபருக்கும் அறிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 
எவ்வாறாயினும் இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் சுகாதார வழிகாட்டுதல்களை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு அறிமுகமாகிறது புதிய முறை! இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு அறிமுகமாகிறது புதிய முறை! Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5

13-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

May 16, 2021

13-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 13-05-2021 (In three languages) 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.
13-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 13-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5

ஒலிம்பிக் தொடர்பில் மூன்றரை இலட்சம் கையொப்பங்களுடன் விடுக்கப்பட்ட கோரிக்கை

May 16, 2021

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த வருடம் (2020) நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக இந்த வருடம் வரை ஒத்திவைக்கப்பட்டது. அந்தவகையில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் 10 வாரங்களே உள்ள நிலையில் ஜப்பானியர்கள் முக்கிய கோரிக்கை விடுத்துள்ளனர். 
அதாவது ஒலிம்பிக்கை இரத்து செய்யுமாறு கோரி சுமார் 350,000 கையொப்பங்களுடனான விண்ணப்பத்தை டோக்கியோ ஆளுநருக்கும் ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் குழு அதிகாரிகளுக்கும் சமர்ப்பித்துள்ளனர். 
ஜப்பானுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளையும், விளையாட்டு வீரர்களையும் ஏக மனதுடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழலில் மாத்திரமே இந்த போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 
கொரோனா பரவல் காரணமாக டோக்கியோ உட்பட முக்கிய நகரங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் தொடர்பில் மூன்றரை இலட்சம் கையொப்பங்களுடன் விடுக்கப்பட்ட கோரிக்கை ஒலிம்பிக் தொடர்பில் மூன்றரை இலட்சம் கையொப்பங்களுடன் விடுக்கப்பட்ட கோரிக்கை  Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5

10-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

May 16, 2021

10-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
10-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 10-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5

கொரோனா தீவிரம்: ஆரம்பமானது பிரேசில் ஜனாதிபதிக்கு எதிரான விசாரணை:

May 16, 2021

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாக தெரிவித்து பிரேசிலின் செனட் சபையினால் பிரேசில் ஜனாதிபதி Jair Bolsonaro-விற்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 
தடுப்பூசிகள் கொள்வனவை நிறுத்தியமை, தொற்றினை கட்டுப்படுத்த சுகாதார தரப்பால் முன்மொழியப்பட்ட திட்டங்களை நிராகரித்தமை போன்ற குற்றச்சாட்டுகள் ஜனாதிபதி மீது சுமத்தப்பட்டுள்ளன. 
நாட்டை முடக்கும் எண்ணமில்லை. நாட்டை முடக்கும் பட்சத்தில் பொருளாதாரம் பாதிக்கப்படும் என அவர் கூறி வருகிறார். 
அங்கு இதுவரை 432,000ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையிலேயே, அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் அனுமதியுடன் தற்போது விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா தீவிரம்: ஆரம்பமானது பிரேசில் ஜனாதிபதிக்கு எதிரான விசாரணை: கொரோனா தீவிரம்: ஆரம்பமானது பிரேசில் ஜனாதிபதிக்கு எதிரான விசாரணை: Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5

அமெரிக்காவுக்கு இணையாக செவ்வாய் கிரகத்தில் சீனாவின் சாதனை

May 16, 2021

உலகில் இதுவரை காலமும் அமெரிக்காவே செவ்வாய் கிரகத்தில் ரோவர் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கியிருந்தது. 
அந்த வகையில் தற்போது சீனாவும் Zhurong என்ற ரோவர் விண்கலத்தை வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கியுள்ளது. நேற்று (15) அதிகாலை இந்த விண்கலம் இவ்வாறு தரையிறங்கியதாக சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது. 
2020 ஜூலை மாதம் சீனா அனுப்பிய Tianwen-1 என்ற விண்கல திட்டத்தின் Zhurong என்ற ரோவர் கடந்த பெப்ரவரியில் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. இதற்கு 6 சக்கரங்கள். இந்த விண்கலத்தின் மொத்த எடை 240Kg ஆகும். 
செவ்வாய்கிரகம் தொடர்பான படங்களை எடுக்கவும் இதில் கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுமட்டுமன்றி செவ்வாய் கிரகத்தின் மேல், கீழ் பகுதிகளின் புவியியல் அமைப்பு குறித்தும் இந்த விண்கலம் ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவுக்கு இணையாக செவ்வாய் கிரகத்தில் சீனாவின் சாதனை அமெரிக்காவுக்கு இணையாக செவ்வாய் கிரகத்தில் சீனாவின் சாதனை Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5

கொரோனா தொற்றுள்ள கைதிகள்: தகவல்களை அறிவதற்கான முறை:

May 16, 2021

சிறைச்சாலையில் கொவிட் தகவல் கேந்திர நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் கைதிகளின் விபரங்களை அவர்களின் குடும்பத்தினர் 011- 4677101 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். 
இதுமட்டுமன்றி www.prison.gov.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து உரிய சிறைச்சாலையின் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கத்தை அறிந்து கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
கொரோனா தொற்றுள்ள கைதிகள்: தகவல்களை அறிவதற்கான முறை: கொரோனா தொற்றுள்ள கைதிகள்: தகவல்களை அறிவதற்கான முறை: Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5

என்னால் இதை செய்ய முடியவில்லை: சட்டமா அதிபரின் பொதுமக்களுக்கான அறிவிப்பு:

May 16, 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை நடத்தியவர்கள் மற்றும் சந்தேக நபர்களுக்கு எதிராக தனது பதவி காலத்தினுள் குற்றப்பத்திரிக்கையை தன்னால் தாக்கல் செய்ய முடியாதுள்ளதாக சட்டமா அதிபர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார். 
இதற்கான காரணம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகள் இதுவரையில் முழுமை பெறாததே என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
என்னால் இதை செய்ய முடியவில்லை: சட்டமா அதிபரின் பொதுமக்களுக்கான அறிவிப்பு: என்னால் இதை செய்ய முடியவில்லை: சட்டமா அதிபரின் பொதுமக்களுக்கான அறிவிப்பு: Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5

08 மாதங்களுக்கு முன்னரே உயர் கற்கைநெறிக்கான வசதி - கல்வியமைச்சர்.

May 16, 2021

பல்வேறு நாடுகளில் 21 வயதை அடையும் போது பிள்ளைகள் பட்டப்படிப்பை முடிக்கிறார்கள். இலங்கை மாணவர்களுக்கும் இதுபோன்ற வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன. இதற்காக கல்வி மறுசீரமைப்பு தொடர்பாக கலந்தாலோசிக்கப்படுகின்றது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். 
அந்தவகையில் புதிய மறுசீரமைப்பின் ஊடாக 08 மாதங்களுக்குப் முன்னர் பாடசாலை கல்வியை 
முடித்துக் கொண்ட பிள்ளைகளுக்கு உயர்தர கற்கை நெறிகளுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளது. 10ம், 11ஆம் வகுப்பிற்காக இருந்த காலவரையறை ஒன்றரை வருடமாக குறைக்கப்படவுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
08 மாதங்களுக்கு முன்னரே உயர் கற்கைநெறிக்கான வசதி - கல்வியமைச்சர். 08 மாதங்களுக்கு முன்னரே உயர் கற்கைநெறிக்கான வசதி - கல்வியமைச்சர். Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5

பயணக் கட்டுப்பாட்டை மீறுவோர் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம்...

May 16, 2021

நாட்டில் தற்போது அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாட்டை பொலிஸார் கண்காணித்து வருவதாகவும் அதனை மீறுவோர் தொடர்பாக ´1997´ என்ற தொலைபேசி இலக்கத்திற்கு பொலிஸாருக்கு அறியத் தருமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பயணக் கட்டுப்பாட்டை மீறுவோர் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம்... பயணக் கட்டுப்பாட்டை மீறுவோர் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம்... Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5
Powered by Blogger.