கர்ப்பிணிகளுக்கு ஏன் கொரோனா அபாயம் அதிகம்?

May 25, 2021

கர்ப்பிணி தாய்மார்களுக்கு இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதனால் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயம் அதிகம் உள்ளதாக கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். 
இவ்வாறான நிலையில் கர்ப்பிணித் தாய்மார்களை பாதுகாப்பது வீட்டிலுள்ள சகலரினதும் பொறுப்பாகும் என தெரிவித்த அவர், இதுவரை கர்ப்பிணித் தாய்மார்களுக்கென விசேடமாக கொரோனா தடுப்பூசியொன்று அறிமுகப்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
கர்ப்பிணிகளுக்கு ஏன் கொரோனா அபாயம் அதிகம்? கர்ப்பிணிகளுக்கு ஏன் கொரோனா அபாயம் அதிகம்? Reviewed by irumbuthirai on May 25, 2021 Rating: 5

அத்தியாவசிய சேவைகளுக்காக அறிமுகமானது 1965

May 25, 2021

பயணக் கட்டுப்பாடு காலத்திலும் அதற்குப் பின்னரும் அரச பொறிமுறையுடன் தொடர்புகளை மேற்கொண்டு அத்தியாவசிய சேவைகள் குறித்த தகவல்களை பொது மக்கள் கேட்டறிவதற்காக 1965 என்ற அவசர தொலைபேசி இலக்கம் நேற்று அலரி மாளிகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
இதுதொடர்பான மத்திய நிலையமும் நேற்று (24) திறக்கப்பட்டதோடு  குறித்த நிகழ்வு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது. 
24 மணித்தியாலமும் இயங்கும் இந்த தொலைபேசி சேவையின் ஊடாக மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வது தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 தற்போதும் எதிர்வரும் வரையறுக்கப்பட்ட காலப்பகுதியிலும் பொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விசேடமாக பயணக் கட்டுப்பாட்டு 
காலப்பகுதியில் அத்தியாவசிய பொருள் விநியோகம் மற்றும் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் போதும் ஏற்படும் பிரச்சினைகள் அந்தந்த அரச நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தல் மற்றும் பொது மக்கள் செயல்திறன் மிக்கதாக இநத பணிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான இணைப்பு மத்திய நிலையமாக 1965 என்ற அவசர தொலைபேசி மத்திய நிலையம் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளுக்காக அறிமுகமானது 1965 அத்தியாவசிய சேவைகளுக்காக அறிமுகமானது 1965 Reviewed by irumbuthirai on May 25, 2021 Rating: 5

Vacancy: Lanka Electricity Company (PVT) Ltd.

May 25, 2021

Vacancy: Lanka Electricity Company (PVT) Ltd. 
Post: Customer Service Superintendent.
Age: Below 50. 
Closing date: 03-06-2021. 
See the details below.
Source: Sunday Observer.



Vacancy: Lanka Electricity Company (PVT) Ltd. Vacancy: Lanka Electricity Company (PVT) Ltd. Reviewed by irumbuthirai on May 25, 2021 Rating: 5

Vacancy: Bank of Ceylon (BOC)

May 25, 2021

Vacancy: Bank of Ceylon (BOC) 
Closing date: 05-06-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancy: Bank of Ceylon (BOC) Vacancy: Bank of Ceylon (BOC) Reviewed by irumbuthirai on May 25, 2021 Rating: 5

பொலிஸ் திணைக்களத்தின் புதிய Mobile App: வீடியோ மற்றும் படங்களுடன் முறைப்பாடு செய்யலாம்: (App. Download செய்யும் வசதி இணைப்பு)

May 25, 2021

According to the increasing population and the number of vehicles, it is impossible to deploy large police forces to reduce the violations to the traffic law. Therefore, an official app is a timely requirement so that police can enforce the general. 
Also, this can act as an empowerment tool. At the moment, many people share traffic violations videos via social media and personal groups unofficially. This should not happen like this. This should be available for everyone to use at any time. 
These actions conclude that there is a need in the community for official reporting mechanisms so that they can make roads a safer place for all of us. So that, our proposed application enables the general public to report traffic violations or traffic obedience cases along with media evidence and its location. 

சனத்தொகையும் வாகனங்களும் அதிகரிப்பதற்கு ஏற்ப இடம்பெறும் போக்குவரத்து விதிமுறை மீறல்களை குறைப்பதற்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ள தற்போது அவசியமில்லை. அது சாத்தியமும் இல்லை. 
இதற்காக போலீஸ் திணைக்களம் கையடக்க தொலைபேசி செயலி ஒன்றை (Mobile App.) வெளியிட்டுள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் தொடர்பாக பொதுமக்கள் இந்த App மூலம் முறைப்பாடு செய்யலாம். 
இந்த முறைப்பாடுகள் அதே நேரத்திலேயே போலீஸ் தலைமையகத்திற்கு சென்றடைகின்றன. 
வீடியோ படங்கள் என்பவற்றுடன் Location வசதி காணப்படுவதனால் குறித்த இடத்தையும் சேர்த்து முறைப்பாட்டில் தெரிவிக்கலாம். 
இதன் காரணமாக, போக்குவரத்து குற்றங்களை புரிந்துவிட்டு தப்பிப்பதோ அல்லது போலீசாருக்கு இலஞ்சம் கொடுத்து தப்பிப்பதோ முடியாமல் போகிறது. 
குறித்த செயலியை (App) உங்கள் கையடக்க தொலைபேசிக்கு Download செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

பொலிஸ் திணைக்களத்தின் புதிய Mobile App: வீடியோ மற்றும் படங்களுடன் முறைப்பாடு செய்யலாம்: (App. Download செய்யும் வசதி இணைப்பு) பொலிஸ் திணைக்களத்தின் புதிய Mobile App: வீடியோ மற்றும் படங்களுடன் முறைப்பாடு செய்யலாம்: (App. Download செய்யும் வசதி இணைப்பு) Reviewed by irumbuthirai on May 25, 2021 Rating: 5

கொரோனா நோயாளர்களுக்காக வெளியானது சுற்றுநிருபம்

May 24, 2021

கொரோனா தொற்றாளர்களுக்காக புதிய சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 
அதாவது வைத்தியசாலைக்கு அழைத்துவரப்படும் நோயாளர் ஒருவர் 15 முதல் 30 நிமிடங்களுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்து இந்த சுற்றுநிறுபம் சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 
சில வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளர்கள் முறையாக கவனிக்கப்படுவதில்லை என்றும் நோயாளர்களை அனுமதிப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா நோயாளர்களுக்காக வெளியானது சுற்றுநிருபம் கொரோனா நோயாளர்களுக்காக வெளியானது சுற்றுநிருபம் Reviewed by irumbuthirai on May 24, 2021 Rating: 5

பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்தல் தொடர்பான புதிய அறிவித்தல்

May 24, 2021

தற்போது பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காரணத்தினாலும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாலும் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கும் பொழுது பாடசாலையில் இருந்து பெற்றுக் கொள்ளவேண்டிய சான்றிதழ்கள் இல்லாமல் இணையதளத்தின் ஊடாக 
மாத்திரம் விண்ணப்பங்களை சமர்பிக்குமாறு பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். 
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
பயணக் கட்டுபாடு நீக்கப்பட்டதன் பின்னர் சான்றிதழ்களை சமர்பிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 
இதேவேளை பல்கலைக்கழக அனுமதிக்காக மாணவர்கள் மே 21 முதல் ஜூன் 11 வரை Online மூலம் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்தல் தொடர்பான புதிய அறிவித்தல் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்தல் தொடர்பான புதிய அறிவித்தல் Reviewed by irumbuthirai on May 24, 2021 Rating: 5

Vacancies: Engineering Council, Sri Lanka.

May 24, 2021

Vacancies: Engineering Council, Sri Lanka. 
Closing date: 11-06-2021. 
See the details below.
Source : Sunday Observer.

Vacancies: Engineering Council, Sri Lanka. Vacancies: Engineering Council,  Sri Lanka. Reviewed by irumbuthirai on May 24, 2021 Rating: 5

Vacancy: People's Bank

May 24, 2021

Vacancy: People's Bank. 
Post: Chief Digital Officer. 
Closing date: 07-06-2021. 
See the details below.
Source : Sunday Observer. 
Vacancy: People's Bank Vacancy: People's Bank Reviewed by irumbuthirai on May 24, 2021 Rating: 5

திருத்தம்: இலங்கை வெளிநாட்டு சேவை தரம் III இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2020 (2021)

May 23, 2021
 


இலங்கை வெளிநாட்டு சேவை தரம் III இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2020 (2021) 
 
09.04.2021 ஆம் திகதிய வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட, இலங்கை வெளிநாட்டுச் சேவை தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2020 (2021)’ அறிவித்தலில் பின்வரும் திருத்தங்களை அரசாங்க சேவை ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது என்பதை வெளிநாட்டமைச்சு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. 
திருத்தம்
மேற்படி அறிவித்தலின் பிரிவு 8 (꠰꠰꠰) இல் குறிப்பிட்ட மேற்குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய இறுதித் திகதி, 04.06.2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது. 
மேலும், இந்த அறிவித்தலின் குறிப்பிடப்பட்ட அதிகபட்ச வயதெல்லையானது, மூல வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டவாறு, விண்ணப்பங்களுக்கான முடிவுத் திகதியாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த  10.05.2021 என்றவாறே அமையும் எனவும் வெளிநாட்டமைச்சு அறிவித்துள்ளது. 
குறித்த திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
திருத்தம்: இலங்கை வெளிநாட்டு சேவை தரம் III இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2020 (2021) திருத்தம்: இலங்கை வெளிநாட்டு சேவை தரம் III இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2020 (2021) Reviewed by irumbuthirai on May 23, 2021 Rating: 5

அரச வைத்தியசாலைகளில் உரிய சேவைகள் கிடைக்கவில்லையா?

May 23, 2021

கொரோனா தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சில நோயாளர்களுக்கு ஒருசில வைத்தியசாலைகளில் முறையான சிகிச்சைகள் வழங்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 
எனவே இவ்வாறு அரச வைத்தியசாலைகளில் உரிய சேவைகள் கிடைக்காவிட்டால் அது தொடர்பாக சுகாதார அமைச்சுக்கு அறிவிக்குமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் நோயாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
இதேவேளை Covid-19 சிகிச்சை நிலையங்களுக்கு தேவையான மருந்து வகைகள் உட்பட சகல வசதிகளையும் சுகாதார அமைச்சு ஏற்கனவே வழங்கி இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அரச வைத்தியசாலைகளில் உரிய சேவைகள் கிடைக்கவில்லையா? அரச வைத்தியசாலைகளில் உரிய சேவைகள் கிடைக்கவில்லையா? Reviewed by irumbuthirai on May 23, 2021 Rating: 5

Official Mobile App. for Department of Examinations (பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ Mobile App)

May 23, 2021

Official mobile application offered by Department of Examinations, Sri Lanka. 
Results of G.C.E (A/L ) Examination, G.C.E (O/L) Examination, Grade 5 Scholarship Examination and Other Examination can be viewed via this application faster and easier than any other means. This application provides the many services like online exams, Online Certificate Request and Results Verifications, Online Application for the School Exams & Recruitment Exams, download facility for Admission Cards, Download facility for past papers & Exam Calendar etc. 
இலங்கை பரீட்சைத் திணைக்களம் கையடக்க தொலைபேசிகளுக்கான உத்தியோகபூர்வ மென்பொருளை வெளியிட்டுள்ளது. 
பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்படும் சகல பரீட்சைகளின் பெறுபேறுகளை இந்த மென்பொருள் மூலமாக இலகுவாக பார்க்கலாம். 
அத்துடன் Online பரீட்சைகள், Online சான்றிதழ்களுக்காக விண்ணப்பித்தல், பெறுபேறுகளை உறுதிப்படுத்தல், சகல பரீட்சைகளுக்கும் Online மூலம் விண்ணப்பித்தல், பரீட்சை அனுமதி அட்டையை தரவிறக்கம் செய்தல், பரீட்சை நாட்காட்டி, கடந்தகால வினா பத்திரங்கள் என்பவற்றை தரவிறக்கம் செய்தல் போன்ற பல்வேறு சேவைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 
குறித்த App ஐ தரவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for download the App.

Official Mobile App. for Department of Examinations (பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ Mobile App) Official Mobile App. for Department of Examinations (பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ Mobile App)  Reviewed by irumbuthirai on May 23, 2021 Rating: 5

பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2020 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் பகுப்பாய்வு அறிக்கை

May 23, 2021

கடந்த வருடம் (2020) நடைபெற்ற உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் பல்வேறு அடிப்படைகளிலான பகுப்பாய்வு அறிக்கையை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 
பழைய மற்றும் புதிய பாடத் திட்டங்களில் தோற்றிய பரீட்சார்த்திகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பகுப்பாய்வு வெவ்வேறாக செய்யப்பட்டுள்ளது. 
மாகாண ரீதியாக, மாவட்ட ரீதியாக, பாடசாலை பரீட்சார்த்திகள், தனிப்பட்ட பரீட்சார்த்திகள், உயர்தர துறைகள் மற்றும் உயர்தர பாடங்கள் ரீதியாக என பல்வேறு நியதிகளின் அடிப்படையில் இந்த பகுப்பாய்வு வெவ்வேறாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
இது மாத்திரமன்றி 2019 பெறுபேறுகளுடன் ஒப்பீடு செய்தும் இந்தப் பகுப்பாய்வு அறிக்கை பரீட்சைத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது. 
குறித்த அறிக்கையை முழுமையாக பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2020 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் பகுப்பாய்வு அறிக்கை பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2020 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்  பகுப்பாய்வு அறிக்கை Reviewed by irumbuthirai on May 23, 2021 Rating: 5
Powered by Blogger.