Vacancy: Tea Research Institute of Sri Lanka

November 14, 2020

Vacancy: Tea Research Institute of Sri Lanka 
Closing date: 23-11-2020 
See the details below.
Source: 08-11-2020 Sunday Observer

Vacancy: Tea Research Institute of Sri Lanka Vacancy: Tea Research Institute of Sri Lanka Reviewed by irumbuthirai on November 14, 2020 Rating: 5

Vacancies: Sri Lanka Ports Authority

November 14, 2020

Vacancies in the Sri Lanka Ports Authority. 
Closing :date 20-11-2020. 
See the details below.
Source: 08-11-2020 Sunday Observer.

Vacancies: Sri Lanka Ports Authority Vacancies: Sri Lanka Ports Authority Reviewed by irumbuthirai on November 14, 2020 Rating: 5

Vacancy: University of Colombo (Closing date extended)

November 14, 2020

Vacancy: University of Colombo (Closing date extended) 
 See the details below.
Source : 08-11-2020 Sunday Observer

Vacancy: University of Colombo (Closing date extended) Vacancy: University of Colombo (Closing date extended) Reviewed by irumbuthirai on November 14, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 13-11-2020 நடந்தவை...

November 14, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 40ம் நாள் அதாவது வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • கொழும்பில் உள்ள மக்கள் குடியிருப்புகளில் தங்கியுள்ள நபர்கள் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காவிடின் பாரிய பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை விடுத்தனர். 
  • தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளில் வசிக்கும் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளுக்கு சென்று மருந்து விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு. 
  • Covid-19 வைரஸ் தொற்று காரணமாக வீதியில் மரணித்திருப்பதாக தெரிவித்து போலியான உடல்களின் படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டோர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு. 
  • கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிறைச்சாலை/ விளக்கமறியலில் இருந்து பாராளுமன்றத்திற்கு வரும் பாராளுமன்ற உறுப்பினர்களை நாடாளுமன்ற அமர்வுகளுக்காக அழைக்காமல் இருக்க நாடாளுமன்ற செயற்பாடுகள் தொடர்பான செயற்குழு தீர்மானித்துள்ளது. அந்தவகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர ஆகியோர் இன்றைய (13) பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளவில்லை. 
  •  இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்யும் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான அலுவலகம், அரசாங்கத்திடம் கோரியுள்ளது. 
  • வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் அடுத்த வாரம் முதல் கட்டம் கட்டமாக நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள் என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 
  • இன்றும் உலங்கு வானூர்திகள் மற்றும் ட்ரோன் கமராக்களைப் பயன்படுத்தி முகத்துவாரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். 
  • கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இரு வார காலம் அவர்களது உத்தியோகபூர்வ இல்லங்களில் தங்கியிருக்குமாறு சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்தது. 
  • இதற்கு பின்னர் பதிவாகும் சிறைச்சாலை கொவிட் தொற்றாளர்களை கந்தகாடு அல்லது கல்லேல்ல சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு. 
  • தீபாவளி தினமாகிய நாளைய தினம் (14) மக்கள் ஆலயங்களில் ஒன்று கூடாதீர்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் கோரிக்கை விடுத்தார். 
  • ஆலயங்களுக்குள் 5 பேருக்கு மேல் செல்ல அனுமதிக்க வேண்டாம் என இந்து கலாச்சார திணைக்களம் அறிவுப்பு.
  • ஹினிதும பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 16 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஹினிதும பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட 02 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
  • கொவிட் 19 தொற்றாளர்களை இனங்காண்பதற்கான உடனடி ஆண்டிபயாடிக் சோதனை கருவிகள் இதுவரை அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன பாராளுமன்றத்தில் இன்று தெரிவிப்பு. 
  • தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறும் நபர்களை தேடுவதற்காக பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரை ஈடுபடுத்தி விசேட நடைமுறையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு. 
  • சிறைச்சாலைகளில் பரவிவரும் கொவிட்- 19 தொற்றை தொடர்ந்தும் பரவாமல் தடுப்பதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கொவிட் 19 தடுக்கும் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துசார உப்புல்தெனிய தெரிவிப்பு. 
  • மேலும் 05 கொரோனா மரணங்கள் அறிவிப்பு. (1) கொழும்பு – 14 பகுதியைச் சேர்ந்த 83 வயது பெண் (வீட்டில் உயிரிழப்பு) (2) சிலாபம் பகுதியைச் சேர்ந்த 68 வயது ஆண் (முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் உயிரிழப்பு) (3) இரத்மலானை பகுதியை சேர்ந்த 69 வயது ஆண் (வீட்டிலிருந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழப்பு) (4) கொழும்பு - 13 பகுதியைச் சேர்ந்த 78 வயது ஆண் (வீட்டில் உயிரிழப்பு) (5) கொழும்பு - 13 பகுதியைச் சேர்ந்த 64 வயது ஆண். (வீட்டில் உயிரிழப்பு) இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53ஆக அதிகரித்தது. 
  • இன்றைய தினம் மாத்திரம் 468 பேருக்கு கொரோனா உறுதியானது. அந்தவகையில் இலங்கையின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 16,191 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 13-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 13-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 14, 2020 Rating: 5

இன்றும் ட்ரோன் கெமராவில் இடம்பெற்ற கண்காணிப்பு..

November 14, 2020

நேற்றைய தினத்தில் (12) 15 பேர் முகத்துவாரம் பிரதேசத்தில் வைத்து Drone Camera வின் உதவியுடன் கைது செய்யப்பட்டனர். 
பொலிஸார் மற்றும் விமானப் படையினர் இணைந்து முகத்துவாரம் பிரதேசத்தில் மேற்கொண்ட நடவடிக்கையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். 
இதேவேளை உலங்கு வானூர்திகள் மற்றும் ட்ரோன் கமராக்களைப் பயன்படுத்தி முகத்துவாரம் பகுதியில் இன்று (13) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். 
விசேட அதிரடிப்படை மற்றும் விமானப்படை இணைந்து மேற்படி சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இன்றும் ட்ரோன் கெமராவில் இடம்பெற்ற கண்காணிப்பு.. இன்றும் ட்ரோன் கெமராவில் இடம்பெற்ற கண்காணிப்பு.. Reviewed by irumbuthirai on November 14, 2020 Rating: 5

மற்றுமொரு சிறைச்சாலையிலும் கூரை மேல் ஏறிய கைதிகள்...

November 13, 2020

தங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து உடனடியாக PCR பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் இல்லாவிடின் வேறு இடத்திற்கு மாற்றுமாரும் கோரி பழைய போகம்பர சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கைதிகள் சிலர் கூரை மேல் ஏறி நேற்று (12) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 பின்னர் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதும் ஆர்ப்பாட்டத்தை நேற்றைய தினமே கைவிட்டனர். 
அதேபோன்று களுத்துறை சிறைச்சாலையின் கைதிகள் சிலர் சிறைச்சாலை கூரையின் மீது ஏறி இன்று (13) மாலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
அதாவது தங்களுக்கு உடனடியாக பிணை வழங்குமாறு கோரியே இவ்வாறு கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படடவர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மற்றுமொரு சிறைச்சாலையிலும் கூரை மேல் ஏறிய கைதிகள்... மற்றுமொரு சிறைச்சாலையிலும் கூரை மேல் ஏறிய கைதிகள்... Reviewed by irumbuthirai on November 13, 2020 Rating: 5

சிறையில்/தடுப்புக்காவலில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்ட தடை...

November 13, 2020

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர ஆகியோர் இன்றைய (13) பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளவில்லை. 
கொவிட்-19 தொற்றுப் பரவல் அபாயத்தைக் கருத்திற்கொண்டு, சிறையில் அல்லது தடுப்புக்காவலில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகளை பாராளுமன்றக் கூட்டங்களுக்கு அழைப்பதை தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதென பாராளுமன்ற அலுவல்களுக்கான தெரிவுக்குழு தீர்மானித்ததற்கமைவாக இவர்கள் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளவில்லை. 
எவ்வாறேனும், முக்கியமான வாக்கெடுப்புகள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை அனுசரித்து, அவர்களை சபைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.
சிறையில்/தடுப்புக்காவலில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்ட தடை... சிறையில்/தடுப்புக்காவலில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்ட தடை... Reviewed by irumbuthirai on November 13, 2020 Rating: 5

Vacancies: University of Peradeniya.

November 13, 2020

Vacancies: University of Peradeniya. 
Closing date: 28-11-2020: 
See the details below.

Source : 08-11-2020 Sunday Observer.
Vacancies: University of Peradeniya. Vacancies: University of Peradeniya. Reviewed by irumbuthirai on November 13, 2020 Rating: 5

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிக்காக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்...

November 13, 2020

இலவசக் கல்வி உரிமைக்கான மாணவர் இயக்கத்தினால் ஆர்ப்பாட்டம் ஒன்று காலி நகரில் இன்று முன்னெடுக்கப்பட்டது. 
பல்கலைக்கழக நுழைவுக்கு வெட்டுப்புள்ளிகள் வழங்கப்படுவதில் ஏற்பட்டுள்ள குழறுபடிகள் காரணமாக தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
-ஹிரு.
பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிக்காக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்... பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிக்காக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்... Reviewed by irumbuthirai on November 13, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 12-11-2020 நடந்தவை...

November 13, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 39ம் நாள் அதாவது வியாழக்கிழமை (12) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • மேல் மாகாணத்தில் பயணத் தடை விதிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்றவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு. ஆனால் அத்தியாவசிய பொருட்களை கொண்டுச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிப்பதற்கான இயலுமை உள்ளது. குறிப்பாக எவரெனும் இன்றைய தினத்திற்குள் மேல் மாகாணத்தில் கடமைகளை நிறைவேற்றிக் கொண்டு மீண்டும் தமது பகுதிகளுக்கு செல்ல நினைத்தால் அது முடியாது. அவர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மேல் மாகாணத்திற்குள் தங்கியிருந்து அதன் பின்னர் அவர்களின் இடங்களுக்கு செல்ல முடியும் எனவும் தெரிவித்தார். 
  • தங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து உடனடியாக PCR பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் இல்லாவிடின் வேறு இடத்திற்கு மாற்றுமாரும் கோரி பழைய போகம்பர சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்ட கைதிகள் சிலர் கூரை மேல் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கை நிறைவேற்றப்பட்டவுடன் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. 
  • டிரோன் கெமரா மூலம் கண்காணிக்கப்பட்டதை அடுத்து கொழும்பு, மோதர பகுதியில் வைத்து தனிமைப்படுத்தலை மீறிய 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
  • வீட்டினுள் உயிரிழக்கும் எந்தவொரு நபரின் சடலமும் மரண பரிசோதகரின் அல்லது நீதவானின் பரிந்துரையின் பேரில்தான் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவிப்பு. 
  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வார இறுதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுமா? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் அவ்வாறான ஏற்பாடுகள் ஏதும் இல்லை என கூறினார். பண்டிகை ஒன்று இருப்பதை அறிந்தும் நாம் அவ்வாறு செயற்பட போவதில்லை. நாட்டு மக்கள் எத்தகைய நிலைமைகள் இருந்த போதிலும் புத்திசாதூர்யமாக செயல்படுவார்கள் என்றும் ராணுவ தளபதி தெரிவித்தார். 
  • தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது கடைபிடிக்க வேண்டிய சுகாதார விதிமுறைகள் தொடர்பான வழிகாட்டலை சுகாதார அமைச்சு வெளியிட்டது. 
  • தொலைக்கல்வி முறையின் மூலம் மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள பாடசாலை தொலைக்கல்வி நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போகும் மாணவர்களுக்கு, பாடவிதானங்களுக்கு அமைய தயாரிக்கப்பட்ட பாடங்களை தமது பாடசாலைகள் ஊடாக பெற்றுக் கொள்ளும் முறை வகுக்கப்பட்டுள்ளதாக கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இவ்வாறு தெரிவித்தார். 
  • மினுவங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 12,226 ஆக அதிகரிப்பு. 
  • கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் சரீரத்தை புதைப்பதற்கு அனுமதிகோருவது, அடிப்படைவாதம் ஆகும் என்றும், அதற்கு அனுமதிவழங்கப்படக்கூடாது என்றும் அகில இலங்கை இந்து சம்மேளனம் என்ற அமைப்பின் தலைவர் நாரா டி அருள்காந்த் தெரிவிப்பு. 
  • எதிர்வரும் 14 ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் அனைத்து பயணிகள் புகையிரத சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவிப்பு. அத்துடன் மீண்டும் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் அலுவலக மற்றும் ஏனைய புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் அறிவிப்பு. 
  • காலி - பூசா சிறைச்சாலையில் கைதிகள் மூவருக்கு கொரோனா தொற்றுறுதி. இதற்கமைய சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 158 ஆக அதிகரிப்பு. 
  • பத்தரமுல்லை பகுதியில் யாசகர் ஒருவருக்கு கொரோனா. அத்துடன் குறித்த யாசகருடன், தொடர்புகளை பேணிய 8 பேர் நிட்டம்புவ தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 
  • மேலும் இரு கொரோனா மரணங்கள் அறிவிப்பு. (1) கொழும்பு-12, 54 வயது ஆண். (முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் உயிரிழப்பு) (2) மீகொட பகுதி. 45 வயது ஆண். (முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் உயிரிழப்பு) இத்துடன் மொத்த மரணம் 48 ஆக அதிகரிப்பு. 
  • இன்றைய தினம் மாத்திரம் 373 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. நாட்டின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 15,723ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 12-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 12-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 13, 2020 Rating: 5

குழம்பிப்போன ஜனாஸா விவகாரம்: நடந்தது என்ன?

November 12, 2020

கொரோனாவினால் மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்குதல் தொடர்பான கதைகள் கடந்த வாரத்தில் இருந்து சமூகத்தில் அடிபட ஆரம்பித்தன. 
பாராளுமன்றத்தில் சஜித் ஆற்றிய உரையில் அது குறித்து குறிப்பிட்டதும், அமைச்சர் பவித்ரா அது குறித்து மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டமையை ஏற்றுக்கொண்டமையும் முஸ்லீம் தரப்பில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. 
அவ்வாறே 20 ஆம் சீர்திருத்தத்தின் போது அரசுக்கு ஆதரவளித்த முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் நாம் ஆதரவு வழங்கியதன் நன்மையை சமூகம் கூடிய விரைவில் பெற்றுக்கொள்ளும் என்று எரிப்பு தடை நீக்கத்தையே குறிப்பிட்டதாக அவர்தம் ஆதரவாளர்கள் அடித்து விட ஆரம்பித்தனர். அப்படி என்றால் ஜனாசா விவகாரத்துக்கு மாத்திரம் 20 ன் பக்கம் சாய்ந்திருப்பார்களா?  அப்ப தலைவர்கள் இருவரும் இதற்கு எதிர்ப்பா? என்று பல கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இந்நிலையில் இது தொடர்பில் நடைபெற்ற கூட்டம் இணக்கப்பாடுகள் எதுவும் இன்றி நிறைவடைய முஸ்லீம் சமூகம் மீண்டும் ஏமாற்றப்பட்டது. 
இச்சந்தர்ப்பத்தில் குறித்த ஒரே நேரத்தில் அனைவரும் துஆ இஸ்திஹ்பார் செய்யும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அவ்வாறே இரு அமைப்புக்கள் கொழும்பில் குறித்த தினத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்தன. மீண்டும் விழித்துக் கொண்ட எமது அறைவேற்காட்டு வாட்சப், பேஸ்புக் ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் அவரவர் சிற்றறிவை பிரயோகித்து அதன் சாதக பாதகங்களை எழுதித் தள்ளினர். தடை நீக்கப்படும் சாத்தியம் உள்ளமையையும், அவ்வாறு நீக்கப்பட்டால் ஏற்படும் எதிர் வினைகளையும் நன்றாக விளங்கிக் கொண்ட பலர் இவ்வாறான சந்தர்ப்பத்தில் சமூகம் என்ற அடிப்படையில் நிதானமாக நடந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நின்றனர். 
இந்நிலையில் யாருமே எதிர்பாராத தருணத்தில் ஜம்இய்யதுல் உலமா தலைவரின் ஒரு ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி முஸ்லீம் மக்களை நிம்மதிப் பெருமூச்சு விடச் செய்தது. கடந்த திங்கள் (9) நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஜனாஸா அடக்கம் செய்ய ஏகமனதாக முடிவு செய்யப்பட்டதாகவும், மன்னார் பகுதியில் முஸ்லிம்கள் செறிவாக வாழும் இடம் ஒன்றில் அடக்கம் செய்யுமாறு சொல்லப்பட்டதாகவும் அந்த தகவல் சொன்னது. 
அதன் பின்னர் மேலே சொன்ன சமூக ஆர்வலக் குஞ்சுகளுக்கு, ஸ்மார்ட் போன் ஊடக பருப்புகளாலும் பொறுப்பற்ற விதமாக நன்றி தெரிவிக்கவும், வெற்றிக் கொண்டாட்ட பதிவுகளையும் இட்டு வேலையை ஆரம்பித்தனர். 
இனவாத செயற்பாட்டாளர்கள் தம் பங்கிற்கு மறுபுறம் ஆரம்பித்தனர். சுகாதார தொழில்நுட்ப குழுவின் பரிந்துரை இல்லாமல் ஜனாதிபதி எவ்வாறு தனித் தீர்மானம் எடுப்பார்? IDH வைத்தியசாலைக்கு மிக அண்மையிலுள்ள தகனசாலையில் எரிக்கும்போது கொழும்பிலிருந்து மன்னாருக்கு எப்படி அவ்வளவு தூரம் கொண்டு செல்லலாம்? அது பாதிப்பை ஏற்படுத்தாதா? தேர்தலுக்கு முன் முடியாது என்றால் தற்போது மாத்திரம் எவ்வாறு முடியும் ? அன்று கிருமி பரவும் என்றால் இன்று கிருமி பரவாதா? போன்ற பல்வேறு கோணங்களில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. 
உடனே சுதாகரித்துக் கொண்ட அரசு சார்பில் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
இன்னொரு புறம் அமைச்சர் அலி சப்ரி தான் அவ்வாறான தகவலை ரிஸ்வி முப்திக்கு சொல்லவில்லை என்று கூறிய தகவல்களும் வெளியாகின. இவ்விடயம் குழம்பிப்போன பின்னர் அமைச்சருக்கு வந்த தொலைபேசி அழைப்புகளுக்கு கூட பதிலளிக்காமல் இருந்ததாகவும் தகவல். 
எனவே இந்த விவகாரம் இன்னும் நீண்டு கொண்டு செல்லலாம். 
இங்கே அமைச்சர் அலி சப்ரி உண்மையில் அவ்வாறான செய்தி ஒன்றை ரிஸ்வி முப்தியிடம் சொன்னாரா? அவ்வாறு சொல்லியிருப்பின் அது அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை மறந்த செயலாகும். தனிப்பட்ட நட்பு காரணமாக சொல்லி இருப்பின் அதனை பகிரங்கப்படுத்தியமையும் தவறாகும். ஆ
ஆனால் அலிசப்ரி சொல்லாத ஒரு விடயத்தை தானாக நினைத்து ரிஸ்வி முப்தி சொல்லியிருக்கவும் வாய்ப்பில்லை. இங்கு அலிசப்ரி கூட்டுப்பொறுப்பை மீறினார். தனிப்பட்ட நட்பு காரணமாக சொல்லப்பட்ட ஒரு விடயத்தை உத்தியோகபூர்வ அறிவித்தல் வருவதற்கு முன்னர் பகிரங்கப் படுத்தினார் ரிஸ்வி முப்தி என்றே தோன்றுகிறது. மொத்தத்தில் இரு பக்கமும் தவறு என்றே தோன்றுகிறது. 
இது மாத்திரமன்றி எமது அரசியல்வாதிகளின் அல்லக்கைகளும், ஊடக பருப்புக்களும் கொஞ்சம் கூட அறிவு இன்றி செயற்பட்டமை அதை விட பிழையாகும். ஏனென்றால் உரிய வர்த்தமானி வெளியிடப்படும் வரை இனவாதிகளின் வாய்க்கு அவல் கொடுக்காமல் இருந்திருக்க வேண்டும். ஒரு சிறிய தவறு எந்தளவு பெரிய தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தும் என்பதற்க்கு இது சிறந்த உதாரணம். 
அல்லாஹ்வின் நாட்டம் இருப்பின் அடக்கம் செய்ய அனுமதி கிடைக்கலாம். ஆனால் அது வரை எத்தனை ஜனாஸாக்களை எரித்து விடுவார்களோ... அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். 
 ஒருவேளை நாளையோ, இன்னும் ஓரிரு தினங்களிலோ அனுமதி கிடைத்தாலும் அடக்கம் செய்து விட்டு வேலையைப் பார்க்க வேண்டுமே தவிர வெட்டி பீற்றல் மூலம் சமூகம் அடைய போகும் நன்மைகள் எதுவும் இல்லை என்பதற்கு இச்சம்பவம் மிகப் பெரிய பாடமாக உள்ளது. 
அவசரத்தின் விளைவுகளை அறிந்து  நிதானமாக செயற்படுவோமாக! 
குழம்பிப்போன ஜனாஸா விவகாரம்: நடந்தது என்ன? குழம்பிப்போன ஜனாஸா விவகாரம்: நடந்தது என்ன? Reviewed by irumbuthirai on November 12, 2020 Rating: 5

அரசியல் களத்தில் திரைக்கு அப்பால்... சமகால அரசியல் பார்வை...

November 12, 2020

#நாட்டை ஸ்தம்பிக்க செய்த கொரோனா
கடந்த வாரம் இலங்கையில் அரசியல், சமூக, பொருளாதார பேசு பொருள் கொரோனா.
வார அடிப்படையில் நோக்கின் மிக அதிகமான இறப்புக்கள் ஏற்பட்ட வாரம் இதுவாகும். தினமும் 200, 300 என்று நோயாளர்கள் இனம் காணப்பட்டனர். கடந்த 29 ஆம் திகதி மேல் மாகாணம் முழுவதற்கும் போடப்பட்ட ஊரடங்கு கடந்த திங்கள்தான் நீக்கப்பட்டது.
இலங்கையின் அத்தியாவசிய பொருட்களின் விநியோக மையம் கொழும்பு. அங்கே ஊரடங்கு என்பதால் அதன் பிரதிபலிப்புகள் நாடு பூராகவும் அவதானிக்கத் தக்கதாக இருந்தது. 

#வேலையில் இறங்கினார் பசில்
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பொருளாதார மறுமலர்ச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ. மீண்டும் கொரோனா பரவலைத் தொடர்ந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு வழங்க வேண்டிய பொருளாதார உதவிகள் குறித்து ஆராய்வதற்காக பசில் தலைமையில் அலரி மாளிகையில் ஒன்று கூடியது. 
பவித்ரா, பந்துல, பிரசன்ன ரணதுங்க, ரோஹித, காமினி லோகுகே போன்ற அமைச்சர்களும், மேல் மாகாணத்தில் உள்ள ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் அதில் கலந்து கொண்டனர். 
ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் 5000 ரூபா கொடுப்பனவு வழங்குதல், தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 10,000 ரூபா வழங்குதல் போன்ற அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் முறை பற்றி கலந்துரையாடப்பட்டது. 
குறிப்பாக களுத்துறை மாவட்டத்தில் 5000 ரூபா கொடுப்பனவு அதுவரை வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதுடன் அதனை வழங்க நடவடிக்கை எடுப்பது பற்றியும் பேசப்பட்டது. 
 கட்டுநாயக்க உட்பட சுதந்திர வர்த்தக வலயங்களில் தொழில் செய்யும் விடுதிகளில் தங்கியிருக்கும் தொழிலாளர்கள் பற்றிய விடயத்தை ஆரம்பித்தார் அமைச்சர் பிரசன்ன. "அவர்களுக்கு சாப்பிடக் கூட எதுவும் இல்லையென்று பாரிய பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது" என அவர் தெரிவித்தார். விடுதிகளில் உள்ளவர்களில் பலர் Man Power தொழிலாளர்கள். அவர்களுக்கான வேலைத்திட்டம் ஒன்று பிரதேச செயலாளர் ஊடாக முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். 

#கேபினட் கூட்டம்
02/11/2020 கேபினட் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. 
வழமையாக கூட்ட மேசையை சூழ ஒரு வரிசையாக அமரும் அமைச்சர்கள் அன்றைய தினம்  மீட்டர் இடைவெளி பேணியமை காரணமாக இரு வரிசைகளில் அமர வைக்கப்பட்டனர். 
அந்த கேபினட் கூட்டத்தின் பிரதான பேசு பொருளாக இருந்தது கோவிட்19 பிரச்சினை. "நிறைய பேர் சொல்வது போல லொக் டவுன் செய்து பிரச்சனை தீரப்போவதில்லை. அவ்வாறு மூடினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்படும். பாடசாலைகளை மூடினால் அதன் தாக்கம் பல ஆண்டுகளுக்கு இருக்கும். அதனால் எமக்கு இப்போது இருக்கும் தெரிவு இதனுடன் வாழ்வது. நோயினால் பீடிக்கப்பட்டவார்களுக்கு சிகிச்சை அளிப்பதுடன், ஏனையவர்களை தனிமைப்படுத்தலுக்கு அனுப்புவது அதனாலாகும்" என ஜனாதிபதி நீண்ட விளக்கம் வழங்கினார். 

#போலீசுக்கு வாகனம் கேட்ட சமல்
போலீஸ்க்கு பொறுப்பான அமைச்சர் சமல் ராஜபக்ச. போலீஸ்க்கு போதுமான வாகனங்கள் இல்லாமையினால் பாரிய சிக்கல்கள் உருவாகியுள்ளதாக கேபினட் இல் சொன்னது மாற்று ஏற்பாடு தொடர்பிலும் விளக்கியாகும். 
அமைச்சரின் கையில் அரசுடைமையாக்கப்பட்ட, சுங்கத்தின் கைவசம் உள்ள வாகனங்களின் பட்டியல் ஒன்றை கேபினட் இல் முன் வைத்த அமைச்சர் சமல் அவற்றை போலீஸ் திணைக்களத்திற்கு பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தார். 

#டிவியில் நேரம் கேட்ட பீரிஸ்
கொரோனா காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையினால் மாணவர்களின் கல்வியில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அதனை நிவர்த்தி செய்வதற்காக தொலைக்காட்சி அலைவரிசைகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற யோசனையை கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் முன்வைத்தார். 
தொலைக்காட்சி அலைவரிசைகளில் பாடசாலை பாடங்களை உள்ளடக்கிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்வதன் மூலம் மாணவர்களின் கல்விக்கு அது உதவும் என்றும் அவர் தெரிவித்தார். 

#அரிசி மாபியாவிற்கு எதிராக பந்துல
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட பின்னர் அரிசி விலைகள் அதிகரித்துள்ளன. அரிசி உற்பத்தியாளர்கள்/அரிசி ஆலை உரிமையாளர்களிடம் இருந்து அதிக விலைக்கு அரிசி கிடைப்பதால் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக அரிசி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். 
அமைச்சர் பந்துல சில முறை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை சந்தித்து விலையைக் குறைக்குமாறு கேட்டுக் கொண்ட போதிலும் அதற்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. 
இதனால் அமைச்சர் பந்துல நுகர்வோர் அதிகார சபை ஊடாக அரிசிக்கான உச்ச சில்லறை விலையை நிர்ணயித்தார். என்ற போதிலும் விலை குறைவதாக இல்லை. அரிசி விலை நாட்டில் பாரிய சிக்கலாக உருவாகியுள்ளது. அதே போன்று சீனிக்கான வரி குறைக்கப்பட்டு ஒரு மாதம் அளவு கடந்து விட்டது. ஆனால் குறைந்த விலையில் சீனி நாட்டில் இல்லை. சதோச இல் கூட மட்டுப்படுத்தப்பட்ட விநியோகம் நடக்கிறது. அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்திய இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத் தலைவர் அது தொடர்பில் அரசு மீது நிறைய குற்றச்சாட்டுக்களை அடுக்கி இருந்தார். அவற்றில் முக்கியமானது நாட்டில் தேவையான சீனி கையிருப்பில் இருக்கும் போது துறைமுகத்தை அண்டியிருந்த அரசுக்கு ஆதரவளிக்கும் பிரபல வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான சீனியை வரியின்றி நாட்டுக்குள் கொண்டு வர அரசு செய்த சதியே இதுவென அவர் தெரிவித்தார். 
சீனிக்கான விலையை குறைக்கும் நோக்கில் வரிக் குறைப்பு செய்ததாகவும், அதன் நன்மை பொதுமக்களுக்கு சென்றடையவில்லை என்றும் இந்நிலை தொடருமாக இருப்பின் வரியை மீண்டும் விதிக்க வேண்டிய நிலை உருவாகும் என்று அமைச்சர் பந்துல ஊடகங்களுக்கு தெரிவித்தார். 
ஏற்கனவே இவ்வரசு வந்த பின்னர் அரிசி உட்பட பல அத்தியாவசிய பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயம் செய்த போதிலும் அவை எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை 

##வரவு செலவுத் திட்ட விவாதத்திற்கு குறுக்கே வந்த கொரோனா
2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 17 ஆம் திகதி பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்படவுள்ளது. 
வழமையாக வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர் அதற்கான விவாதங்கள் சுமார் ஒரு மாதம் நீடிக்கும். ஆனால் இம்முறை கொரோனா காரணமாக அதனை 10 நாட்களுக்கு மட்டுப்படுத்தல் தொடர்பாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் 4 நாட்களும், குழுநிலை விவாதம் 6 நாட்களும் நடைபெறும் என் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

#சிறிலங்கா பொது ஜன பெரமுனவை சந்தித்த சீன கமியூனிஸ்ட் கட்சி
சிறிலங்கா பொது ஜன பெரமுனவிற்கும் சீன கமியூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று கடந்த வாரம் கொழும்பு வோட்டர்ஸ் எஜ் ஹோட்டலில் நடைபெற்றது. 
சிறிலங்கா பொது ஜன பெரமுன சார்பில் அதன் தவிசாளர் ஜீ. எல். பீரிஸ், நாமல் ராஜபக்ஷ மற்றும் ஷெஹான் சேமசிங்ஹ ஆகிய அமைச்சர்களும் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்த்தனவும் கலந்து கொண்டார். சீன கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொரோனா நிலைமை காரணமாக எவரும் இங்கு வரவில்லை. சீனாவில் இருந்து நிகழ்நிலை (Online) சந்திப்பாக இது நடைபெற்றது. இலங்கைக்கான சீனத் தூதுவர் இதில் பங்குபற்றுவதாக இருந்த போதிலும் அவர் புதிதாக நியமனம் பெற்று இலங்கை வந்து தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை காரணமாக பங்குபற்றவில்லை. 
ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் மூளையாக கருதப்படும் பசில் ராஜபக்ஷ இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சி, சீனாவின் கமியூனிஸ்ட் கட்சி பாணியில் தமது கட்சியை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்த பின்னணியில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

#தம்புள்ளையில் தேங்கிய மரக்கறிகள்#  
இலங்கையின் மிக முக்கியமான பொருளாதார மத்திய நிலையம் தம்புள்ளை. பல விவசாயிகள் மட்டுமன்றி ஏனைய பிராந்திய பொருளாதார மத்திய நிலையங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான மரக்கறி, பழ வகைகள் நாடுபூராக இங்கிருந்து விநியோகிக்கப்படுகின்றன. மேல் மாகாணத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக மேல் மாகாணத்தில் உள்ள முக்கிய பொருளாதார மத்திய நிலையங்கள் மூடப்பட்டதன் காரணமாக தம்புள்ளையில் உற்பத்திகளை விற்பனை செய்து கொள்ள முடியாத நிலை உருவானது. 
உடனடியாக ஸ்தலத்திற்கு சென்ற அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் மற்றும் பா.உ பிரமித பண்டார தென்னகோன் ஆகியோர் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் சிக்கல்களை கேட்டறிந்தனர். அறுவடைகளை நீண்ட நேரம் வைத்திருப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை உணர்ந்த அவர்கள் அவசரமாக செய்யக்கூடிய மாற்று ஏற்பாடுகள் குறித்து தேவையான ஆலோசனைகளை வழங்கியதுடன், பொருளாதார மறுமலர்ச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவோடு தொடர்பு கொண்டு விடயத்தை எத்தி வைத்தார். 
பசில் உடனடியாக செயல்பட்டு மேல் மாகாணத்தில் உள்ள எல்லா பொருளாதார மத்திய நிலையங்களையும் ஊரடங்கு சட்டம் உள்ள நிலையிலும் திறக்க நடவடிக்கை மேற்கொண்டார். அதன் காரணமாக தம்புள்ளை நிலைமைகள் பெரும்பாலும் சீரடைந்தன. 

#குருணாகளில் இருந்து பிரதமருக்கு முறைப்பாடு
கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் குருநாகல் மாவட்டமும் ஒன்றாகும். எனினும் குருநாகல் போதனா வைத்தியசாலையில் உள்ள PCR இயந்திரத்தில் ஒரு நாளைக்கு 10 பரிசோதனைகளையாவது செய்ய முடியாதுள்ளது. இது தொடர்பில் பாராளுமன்றத்தில் பிரதமரை சந்தித்த பா.உ சாந்த பண்டார முறைப்பாடு ஒன்றை முன்வைத்தார். 
 "Sir, குருநாகல் வைத்தியசாலையில் உள்ள PCR இயந்திரத்தின் கொள்ளளவு போதாது. ஏற்கனவே குருநாகல் மாவட்டத்தில் பல போலீஸ் பிரிவுகளில் ஊரடங்கு அமுலில் உள்ளது. எனவே, 5000 ரூபாய் நிவாரணம் குருநாகல் மாவட்டத்திற்கும் வழங்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார். பதிலளித்த பிரதமர் "இது தொடர்பில் பசிலுடன் கதைக்க வேண்டும். நானும் பேசுகிறேன். நீங்களும் பேசுங்கள்." என்று கூறினார். 

#மீண்டும் அபயாராமவில் மஹிந்த# பிரதமரின் அரசியல் விவகார இணைப்புச் செயலாளர் குமாரசிரி ஹெட்டிக்கே இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தப்பனத்தின் தலைவர் சுமித் விஜேவிங்க ஆகியோர் கடந்த 30 ஆம் திகதி நரஹேன்பிடவில் உள்ள அபயாராம விகாரைக்கு சென்று முறுத்தெட்டுவே ஆனந்த தேரரை சந்தித்தனர். 
அப்போது வேறு அலுவல் விடயமாக சென்று வரும் வழியில் பிரதமரும் அங்கே வந்து சேர்ந்தார். 
 தேரரை விழித்த பிரதமர் "வேறு அலுவலாக இந்தப் பக்கமாக வந்தேன். தங்களை தரிசித்து செல்ல எண்ணி இங்கே வந்தேன்" என்று கூற "நீங்கள் ஒரு போதும் மாறாத தலைவர். அதனால்தான் நாங்கள் இன்னும் உங்களை கவனிக்கிறோம்" என மிக பரிவுடன் கூறினார். 
"Sir தலைமை பிக்கு இப்போதெல்லாம் அரசாங்கத்திற்கு எதிராகவும் கொஞ்சம் காரமாக பேசுகிறார். அதனால் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் இந்தப் பக்கம் வந்து செல்ல ஆரம்பித்துள்ளனர்" என குமாரசிரி ஹெட்டிக்கே கூறினார். 
 "ஆனந்த தேரரின் குணம் அப்படித்தான். குறைபாடுகள் உள்ள இடத்தில் பேசுவார். நாங்கள் அதை கணக்கில் எடுப்பதில்லை. உங்களுக்கு வேண்டியது வேகமாக வேலைகள் நடக்க. அப்படித்தானே! " என பிரதமர் கூற, "பிரதமர் அவர்களே! எதற்கும் சுற்றுப்புறம் குறித்து அவதானமாக இருங்கள். சில அமைச்சர்கள், உத்தியோகத்தர்கள் செய்யும் வேலை அவ்வளவு நல்லதல்ல. அரசின் மீது மக்கள் வெறுப்படைய அவையும் ஒரு காரணம்" என தேரர் குறிப்பிட்டார். 

#அனுராதபுரத்தில் சஜித்
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கடந்த வாரம் அனுராதபுரத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள பல விகாரைகளுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். அந்த விஜயத்தின் போது விகாரைகளின் குறைபாடுகள் தொடர்பில் தேடிப் பார்க்கவும் அவர் தவறவில்லை. 
இசுருமுனிய விகாரைக்கு சென்று பிக்குகளிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டு வெளியே வரும் போது ஏராளமான மக்கள் அங்கே திரண்டிருந்தனர். "Sir நீங்கள் ஆரம்பத்தில் இருந்து சொல்லி விடயங்கள் உண்மையாகிக் கொண்டே வருகின்றன. பொய் வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியைப் பெற்றுக்கொண்டாலும் இப்போது உண்மை வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது" என கூட்டத்தில் இருந்த ஒருவர் கூறியதுடன் கடந்த தேர்தல்களில் தான் மொட்டுவின் வெற்றிக்காக உழைத்ததாகவும் குறிப்பிட்டார். 
"அரசு நினைக்குமானால் மக்களை தொடர்ந்து ஏமாற்றலாம் என்று அது நடக்கப் போவதில்லை. எந்த ஆட்சிக்கும் ஏற்பட்ட தவறு மக்கள் பிரச்சினைகளை மறந்தமையே" என சஜித் பதிலளித்தார். 
தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சஜித் "அரசு முன்னுரிமை அளிப்பது தேவையான விடயங்களுக்கு அல்ல. தேவையற்ற விடயங்களுக்கு. 20 கொண்டு வர இருந்த அவசரம் வெள்ளையர்கள் காலத்தில் கொண்டுவரப்பட்ட தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு பதிலாக புதிய ஒன்றைக் கொண்டு வருவதில் இல்லை" எனவும் தெரிவித்தார். 
 தொடர்ந்து மிரிசவெடிய விகாரைக்கும் சென்றார். அங்கே இருந்த ரோஹன பண்டார சஜித் இடம் "Sir அரசு கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடித்துள்ளது" என்று ஒரு வீடியோவை கட்டினார் அதில் சுகாதார அமைச்சர் பவித்ரா, இன்னும் சில அமைச்சர்கள் குடங்களை ஆற்றில் வீசும் காட்சி இருந்தது. "இவ்வாறுதான் இந்த அரசாங்கம் கோரோணாவை ஒளிக்கப் போகிறது" எனக் கூற "ஒவ்வொருவரினதும் நம்பிக்கையை நாம் இகழ்ந்து பேசக் கூடாது. ஜனாதிபதி தேர்தலின் போது பாம்பு ஒன்றை வைத்து ஆட்டம் போட்டவர்கள் இவர்கள்" எனக் கூறினார். 

 #சஜித் இன் பாராளுமன்ற உரைக்கு கிடைத்த பாராட்டு
 எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கடந்த வாரம் பாராளுமன்றத்தில் சுமார் ஒரு மணி நேர உரையொன்றை ஆற்றியிருந்தார். சுகாதரத்துறை தற்போது எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்தும், அதன் மூலம் ஏற்பட்டுள்ள சமூக சிக்கல்கள் குறித்தும் அந்த உரையில் கருத்து தெரிவித்த அவர், தான் நல்ல நோக்கில் சொன்ன பல ஆலோசனைகளை அரசு தட்டிக் கழித்ததுடன், தன்னை எள்ளி நகையாடி, தனக்கு சேறு பூசிக்கொண்டு இருந்ததையும் நினைவுபடுத்தினார். இந்த உரையிலேயே முஸ்லிம்களின் ஜனாஸா அடக்கம் குறித்தும் அரசை காரசாரமான முறையில் விமர்சனம் செய்திருந்தார். கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் இந்த உரையை பாராட்டியிருந்தனர். 

 #ருவன் விஜேவர்த்தனவின் கட்சிப் பணி
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன கடந்த சில நாட்களாக கட்சிப் பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார். கடந்த வாரம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தமை காரணமாக அவரால் கொழும்பை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. எனினும், Zoom தொழில் நுட்பத்தை ஊடாக பல முக்கியஸ்தர்களோடு தனியாகவும், கூட்டாகவும் கலந்துரையாடல்களை நடத்தினார். கடந்த போயா தினத்தை முன்னிட்டு கட்சித் தலைமையாகமான ஸ்ரீகொத்தவில் தர்ம உபதேசம் ஒன்றையும் ருவன் ஏற்பாடு செய்திருந்தார். 
அதன் பின்னர் அங்கே சேர்ந்திருந்தவர்களோடு பேசிய ருவன் "கட்சியை மீள கட்டியெழுப்ப மக்களிடையே செல்ல வேண்டும். அவ்வாறெல்லாமல் மக்களில் விசுவாசத்தை கட்டியெழுப்ப முடியாது" என்று தெரிவித்தார். 
அத்துடன் ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளை ஏற்று ஒன்லைன் மூலம் பத்திரிகையாளர் மாநாடு ஒன்றையும் நடத்தினார். 
இவை கடந்த வார நிகழ்வுகளின் சுருக்கமே. அடுத்த வாரம் ஜனாஸா எரிப்பு, Rapid Test தொடர்பான வாத விவாதங்கள் அரசியல் களத்தில் மேலோங்கலாம். அவை பற்றிய சுவையான உள்ளக தகவல்களோடு அடுத்த வாரம் மீண்டும் வரும். 
- fபயாஸ் MA fபரீட்.
அரசியல் களத்தில் திரைக்கு அப்பால்... சமகால அரசியல் பார்வை... அரசியல் களத்தில் திரைக்கு அப்பால்... சமகால அரசியல் பார்வை... Reviewed by irumbuthirai on November 12, 2020 Rating: 5

ட்ரோன் (Drone) கெமரா மூலம் கண்காணிக்கப்படும் பிரதேசங்கள்...

November 12, 2020

ட்ரோன் கெமரா (Drone Camera) உதவியுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிக்கும மக்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதாகவும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர், அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 
பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ட்ரோன் (Drone) கெமரா மூலம் கண்காணிக்கப்படும் பிரதேசங்கள்... ட்ரோன் (Drone) கெமரா மூலம் கண்காணிக்கப்படும் பிரதேசங்கள்... Reviewed by irumbuthirai on November 12, 2020 Rating: 5

எங்களுக்கும் PCR செய்யுங்கள்... கைதிகள் கூரை மேல்...

November 12, 2020

பழைய போகம்பர சிறைச்சாலையில் 800 இற்கு அதிகமான கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதில் 30 கைதிகள் மற்றும் இரு அதிகாரிகளுக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 
இந்நிலையில் தங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து உடனடியாக PCR பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் இல்லாவிடின் வேறு இடத்திற்கு மாற்றுமாரும் கோரி கைதிகள் சிலர் கூரை மேல் ஏறி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எங்களுக்கும் PCR செய்யுங்கள்... கைதிகள் கூரை மேல்... எங்களுக்கும் PCR செய்யுங்கள்... கைதிகள் கூரை மேல்... Reviewed by irumbuthirai on November 12, 2020 Rating: 5

இன்றுடன் ஓய்வுபெறும் மஹிந்த...

November 12, 2020

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இன்றுடன் ஓய்வுப் பெறுகிறார். 
அதாவது 19ம் திருத்தச் சட்டத்தின் கீழ் கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்ட தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் காலமும் இன்றுடன் நிறைவுக்கு வருகிறது. 
இந்த ஆணைக்குழுவின் தலைவராக மகிந்த தேசப்பிரிய மற்றும் பேராசிரியர் ரத்னஜீவன் ஹுல் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நலின் அபேசேகர ஆகியோர் அங்கத்துவம் வகிக்கின்றனர். 
19ம் திருத்தத்தின் கீழ் ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்படுகின்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களது பெயர்கள், அப்போது நடைமுறையில் இருந்து அரசியலமைப்பு சபையினால் அங்கீகரிக்கப்பட வேண்டும். 
ஆனால் 20ம் திருத்தத்தின் கீழ் தேர்தல்கள் ஆணைக்குழவின் உறுப்பினர்களது எண்ணிக்கை 5 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அந்த உறுப்பினர்களது பெயர்களை ஜனாதிபதி நாடாளுமன்ற பேரவைக்கு சமர்ப்பித்து, நாடாளுமன்ற பேரவை மீண்டும் தமது ஆய்வினை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும். இந்த ஆய்வு கிடைக்கப்பெறுவதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில், நாடாளுமன்ற பேரவையை புறக்கணித்தேனும், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு 20ம் திருத்தச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டிருக்கிறது. 
இந்தநிலையில், 20ம் திருத்தச் சட்டத்துக்கு அமைவாக புதிய தேர்தல்கள் ஆணைக்குழு அடுத்தவாரமளவில் நியமிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றுடன் ஓய்வுபெறும் மஹிந்த... இன்றுடன் ஓய்வுபெறும் மஹிந்த... Reviewed by irumbuthirai on November 12, 2020 Rating: 5

40 இற்கும் மேற்பட்ட ஹோட்டல்களுக்கு சான்றிதழ்...

November 12, 2020

கொரோனா தொற்றுக்கு மத்தியில் தமது தொழிற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஆர்வமாகவுள்ள மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவுசெய்யப்பட்டுள்ள 40 இற்கும் மேற்பட்ட ஹோட்டல்களுக்கு பாதுகாப்பு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. 
கொரோனா தொற்றுக்கு பின்னர் விடுமுறையை கழிப்பதற்காக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு உத்தரவாதமளிக்கும் வகையில் அதிகாரசபையில் பதிவு செய்த அனைத்து நிறுவனங்களுக்கும் பாதுகாப்புக்கு உகந்தது என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழை வழங்க அரசாங்கம் கடந்த ஜூன் மாதம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
40 இற்கும் மேற்பட்ட ஹோட்டல்களுக்கு சான்றிதழ்... 40 இற்கும் மேற்பட்ட ஹோட்டல்களுக்கு சான்றிதழ்... Reviewed by irumbuthirai on November 12, 2020 Rating: 5

British Degrees @ Sri Lanka Institute of Information Technology (SLIIT)

November 12, 2020

British Degrees @ Sri Lanka Institute of Information Technology (SLIIT) 
See the details below.
Source: 08-11-2020 Sunday Observer.

British Degrees @ Sri Lanka Institute of Information Technology (SLIIT) British Degrees @ Sri Lanka Institute of Information Technology (SLIIT) Reviewed by irumbuthirai on November 12, 2020 Rating: 5

Vacancies for Medical Officers (Navy General Hospital)

November 12, 2020

Vacancies for Medical Officers (Navy General Hospital) 
Closing date: 25-11-2020: 
See the details below.
Source : 08-11-2020 Sunday Observer.

Vacancies for Medical Officers (Navy General Hospital) Vacancies for Medical Officers (Navy General Hospital) Reviewed by irumbuthirai on November 12, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 11-11-2020 நடந்தவை...

November 12, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 38ம் நாள் அதாவது புதன்கிழமை (11) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டால் 0113 422 558 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து அம்பியுலன்ஸ் சேவையை பெற்று கொள்ள முடியும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிப்பு. 
  • கண்டி மாவட்டத்தில் மாத்திரம் இதுவரை 63 கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் தெரிவிப்பு. 
  • பயன்படுத்திய முகக்கவசம் உள்ளிட்ட கழிவு பொருட்களை எவ்வாறு அகற்ற வேண்டும்? என்ற வழிகாட்டல்களை மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவித்தது. 
  • ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய உடன் அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணத்தில் உள்ளவர்கள் வேறு மாகாணங்களுக்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டது. எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரையில் இந்த பயணத்தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. மேல் மாகாணத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதன் காரணமாக, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. 
  • கம்பஹா மாநகர சபையின் உறுப்பினர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு. இவர் கடந்த சில தினங்களாக பிரதேசங்களில் சிலவற்றில் அமைந்துள்ள விகாரைகளில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை அரசாங்கத்தினால் பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும் 5 ஆயிரம் கொடுப்பனவை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 
  • பயணிகளுக்கான பேருந்து கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு. 
  • இலங்கையில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் சேவையாற்றும் 14 இந்திய நாட்டு பிரஜைகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிப்பு. காலி முகத்திடலுக்கு அருகில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் குழுவினரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படது. 
  • அதிகரிக்கப்பட்டுள்ள பேருந்து கட்டணத்திற்கு சமாந்திரமாக இலங்கை போக்குவரத்து சபையும் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க இ.போ.ச. தீர்மானித்துள்ளதாக அறிவிப்பு. ஆனால் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் தொடருந்து கட்டணத்தில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படமாட்டாது என புகையிரத திணைக்களம் தெரிவிப்பு. 
  • இன்று (11) இரவு 10 மணி தொடக்கம் எதிர்வரும் 15ஆம் திகதி வரை மேல்மாகாணத்திற்கு உள்நுழைவதற்கு தொடருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக புதையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, பிற்பகல் வேளைகளில் மேல்மாகாணத்தில் இருந்து வெளிச்செல்லும் தொடருந்து சேவைகள் அலுத்கம, அம்பேபுஸ்ஸ, கொச்சிகடை மற்றும் அவிசாவளை வரை மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் புகையிரத திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
  • மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் மற்றும் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து பேருந்து சேவைகளும் எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை இடைநிறுத்தப்படுவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு. 
  • கொழும்பு மெனிங் சந்தை மூடப்பட்டமையால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள மரக்கறி வியாபாரிகளுக்கு தங்களது உற்பத்திகளை விற்பனை செய்து கொள்ளும் பொருட்டு பேலியகொட பிரதேசத்தில் புதிய இடமொன்றை ஒதுக்கீடு செய்வது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை. 
  • சைனா ஹார்பர் இன்ஜினியரிங் (China Harbor Engineering) நிறுவனத்தின் ஊடாக கொழும்பு 13 பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டம் ஒன்றில் பணியாற்றும் சீன பிரஜைகள் நால்வருக்கும் மற்றும் இந்நாட்டு ஊழியர்கள் இருவருக்கும் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் கொழும்பு துறைமுக நகர் (Port city) கட்டுமான பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கட்டிடமொன்றில் தங்கியிருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 
  • இன்று 5 கொரோனா மரணங்கள் அறிவிப்பு. (1) பாணந்துரை பிரதேசம். 80 வயது ஆண். (பொலிஸ் வைத்தியசாலையில் உயிரிழப்பு) (2) கொழும்பு-11. 40 வயது ஆண். (கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழப்பு) (3) களனி பிரதேசம். 45 வயது ஆண் (அம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையில் உயிரிழப்பு) (4) மாளிகாவத்தை பகுதி. 68 வயது பெண். (வீட்டில் உயிரிழப்பு) (5) இம்புல்கொட பகுதி. 63 வயது ஆண். (அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலையில் உயிரிழப்பு) 
  • இன்றைய தினத்தில் மாத்திரம் 635 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 11-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 11-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 12, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 10-11-2020 நடந்தவை...

November 11, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 37ம் நாள் அதாவது செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • சீனிக்கான மொத்த விற்பனை விலை அடங்கிய வர்த்தமானி வெளியானது. பொதி செய்யப்பட்ட வெள்ளை சீனி கிலோ ரூ. 90, பொதி செய்யப்படாத வெள்ளை சீனி கிலோ 85 ரூபா, இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனி கிலோ 80 ரூபாவாகவும் நிர்ணயித்து அந்த வர்த்தமானி வெளியிடப்பட்டது. 
  • ஆசன எண்ணிக்கைக்கு அமையவே பயணிகளை ஏற்ற வேண்டும் என்பதால் இன்று நள்ளிரவு முதல் பேரூந்து கட்டணங்கள் அதிகரிப்பு. குறைந்த கட்டணம் 12 ரூபாவில் இருந்து 14 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏனையவை 20% அதிகரிப்பு. 
  • 4 % வட்டி கடன் திட்டத்தில் கடன் பெற்றோர் அதனை திருப்பி செலுத்துவதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சலுகைக்காலமானது 9 மாதங்களாக நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் இதுவரை தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்தது. 
  • திருகோணமலை மாவட்டத்தில் மேலும் இரண்டு வைத்தியர்களுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது. ஏற்கனவே திருகோணமலை பொது வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறதியாகியிருந்தது. 
  • தனிமைபடுத்தபட்ட காரணத்தால் மாவனெல்லை பிரதேச சபையின் அமர்வுகளை இன்று முதல் 7 நாட்களுக்கு நடத்த தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
  • கொவிட் 19 பரவல் ஆரம்பத்தின் போது, பயணிகள் பேருந்து இயக்குனர்களிடம் இருந்து அறவிடப்படும் கட்டணத்தை விடுவிக்க எடுத்த தீர்மானத்தை இந்த வருடம் இறுதி வரையில் செயற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அறிவிப்பு. 
  • மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான காரியாலயம் ஊடாக வழங்கப்படும் சேவைகள் நாளை முதல் யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம், குருநாகல், மற்றும் கம்பஹா மாவட்டங்களின் காரியாலயங்கள் ஊடாக பெற்றுக்கொடுப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு. 
  • மேல் மாகாணத்தில் கொவிட் 19 தொற்றுறுதியான காவல்துறை உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 260 ஆக அதிகரித்துள்ளது. 
  • மதுகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஊழியர் ஒருவருக்கும் கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளது. 
  • மஸ்கெலியா காட்மோர் தோட்டத்தில் – பிரொக்மோர் பிரிவில் 12 வயதுடைய மாணவியொருவருக்கு கொரோனா தொற்றியுள்ளது. 
  • இதுவரையில் 460 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
  • Covid-19 நோய்த்தொற்றுகளை அடையாளம் காண இலங்கையில் ரெபிட் என்டிஜென் டெஸ்ட் கிட்டை பயன்படுத்த சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு இன்று அனுமதி வழங்கியுள்ளது.
  • இன்று 05 கொரோனா மரணங்கள் அறிவிப்பு. 1) ராஜகிரிய முதியோர் இல்லத்தில் வசித்தவர். 51 வயது ஆண். (கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழப்பு) 2) கொழும்பு-10, 45 வயது ஆண். (கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழப்பு) 3) கம்பஹா, உடுகம்பல பிரதேசம். 63 வயது பெண். (கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் உயிரிழப்பு) 4) 55-60 வயது மதிக்கத்தக்க ஆண். பிரேத பரிசோதனையில் தொற்று உறுதியானது. (இவர் தொடர்பான வேறு எந்த தகவலையும் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிடவில்லை) 5) ராகம பிரதேசம். 48 வயது ஆண். (வீட்டில் உயிரிழப்பு) இத்துடன் மொத்த கொரோனா மரணங்கள் 41 ஆக அதிகரிப்பு. 
  • இன்றைய தினத்தில் மாத்திரம் 430 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 10-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 10-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 11, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 09-11-2020 நடந்தவை...

November 11, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 36ம் நாள் அதாவது திங்கட்கிழமை (09) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்ககளின் உடல்களை, நல்லடக்கம் செய்ய, சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக பரவலாக செய்திகள் வெளியாகின. அதாவது நாட்டின் எந்தப் பகுதியில், முஸ்லிம்கள் கொரோனாவால் மரணித்தாலும், அவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய மன்னார் மாவட்டத்தில் ஒரு பகுதியை தேர்ந்தெடுக்குமாறும், இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானித்ததாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்ததாக அந்த செய்திகள் தெரிவித்தன. 
  • குருணாகலை மாநகர எல்லை பிரதேசத்திற்குள் இலிப்பு கெதர கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் கடவீதிய கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இரண்டை தவிர குருணாகலை மாநகர எல்லை பிரதேசத்திற்குள் ஏனைய பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் குளியாப்பிட்டிய பொலிஸ் வலயத்திற்குள் கலகெதர, ஹம்மலவ மற்றும் இகல கலுகோமுவ, ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மூன்றைத் தவிர குளியாப்பிட்டி பொலிஸ் வலயத்தில் ஏனைய பிரதேசங்களும் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். 
  • கம்பஹா மாவட்டத்தின் கந்தானை மற்றும் மஹாபாகே பொலிஸ் பிரிவுகள் மற்றும் அங்குலான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அங்குலான வடக்கு மற்றும் அங்குலான தெற்கு கிராம சேவகர் பிரிவுகள் என்பன உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவ தளபதி அறிவித்துள்ளார். 
  • கொவிட் - 19 தொற்று நிலைமைக்கு மத்தியில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மாற்று வழிமுறைகளை பயன்படுத்தி தொடர்ச்சியாக முன்னெடுப்பது தொடர்பாக கல்வி சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், குறிப்பாக பகல் வேளையில் ஆரம்ப பிரிவில் தரம் 3, 4 மற்றும் 5 தரத்துக்கான முக்கிய பாடங்களும், தரம் 6 தொடக்கம் 11 வரையிலுமான முக்கிய பாடங்களும், உயர்தர வகுப்புக்களில் அனைத்து பாடங்களுக்குமான முக்கிய பாடங்களுக்காகவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒளிபரப்புக்களை 2020.11.15 திகதி தொடக்கம் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • வெலிகட மற்றும் போகம்பர சிறைச்சாலைகளில் மேலும் 107 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். 90 பெண் கைதிகள் மற்றும் 17 ஆண் கைதிகளுமே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். 
  • பேலியகொட மீன் சந்தையில் இருந்து மீன் எடுத்துச் சென்று அம்பலாங்கொட பகுதியில் விற்பனை செய்த மீன் வியாபாரி உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தொற்றாளர்கள் கடந்த போயா தினம் திலகபுர உதயகிரி விகாரையில் இடம்பெற்ற மத நிகழ்வில் கலந்து கொண்டதை அடுத்து விகாராதிபதி விகாரையினுள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 
  • கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பான நீதி அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய சிறைச்சாலைகளில் பிணை வழங்க முடியுமான கைதிகளுக்கு பிணை வழங்குமாறும் ஏனைய சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர் அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார். 
  • மேல் மாகாணம் உட்பட கொரோனா வைரஸ் வேகமாக பரவும் அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து மலையக பெருந்தோட்டப் பகுதிகளுக்கு இன்று (09) வருகை தந்த வாகனங்களும், அதில் பயணித்தவர்களும் திருப்பியனுப்பட்டனர். 
  • நோய் அறிகுறிகள் தென்படாத கொரோனா தொற்றுக்குள்ளானவரின் மூலம் வைரஸ் பரவும் ஆபத்து நிலை உயர் மட்டத்தில் காணப்படுவதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 
  • கொவிட் தொற்றாளர்களை விரைவாக அடையாளம் காண்பதற்காக பயன்படுத்தப்படும் ´உடனடி ஆண்டிபயாடிக் சோதனை கருவிகள்´ ஒரு இலட்சம் உலக சுகாதார அமைப்பினால் இந்நாட்டிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். 
  • மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, 42 அலுவலக ரயில்கள் இன்று தொடக்கம் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார். 
  • கொழும்பு மத்திய தபால் பரிமாறல் கடமைகள் சில இன்று மீண்டும் ஆரம்பம். 
  • கடுவெலை மாநகர சபையின் சாரதி ஒருவருக்கு கொரோனா தொற்று இன்று உறுதியாகியுள்ளது. 
  • நீர் கட்டணத்தை வழங்க வருபரை சந்திப்பது அல்லது உரையாடுவதை குறைத்துக்கொள்ளுமாறும், நீர் கட்டணம் தொடர்பில் பிரச்சினைகள் காணப்பட்டால் நீர் கட்டணத்தில் உள்ள தொலை பேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 
  • குறைந்த எண்ணிக்கையிலான பயணிகள் மாத்திரமே பொது போக்குவரத்தில் ஈடுபடுகின்றமையினால் பேருந்து கட்டணத்தை அதிகரிக்கப்போவதாக பேருந்து உரிமையாளர்களின் சங்கங்கள் அறிவித்த போதிலும் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது என போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். 
  • 36வது கொரோனா மரணம் பதிவு. கந்தானை பிரதேசம். 84 வயது பெண். (தனியார் வைத்தியசாலையிலிருந்து IDHக்கு மாற்றும் பொழுது உயிரிழப்பு) 
  • இன்றைய தினம் 356 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 09-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 09-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 11, 2020 Rating: 5

பயன்படுத்திய முகக்கவசம் உள்ளிட்ட கழிவு பொருட்களை எவ்வாறு அகற்ற வேண்டும்?

November 11, 2020

பயன்படுத்தப்படும் முகக்கவசம் உள்ளிட்ட கழிவு பொருட்களை அகற்றுவது தொடர்பாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை பின்வரும் வழிகாட்டல்களை வெளியிடப்பட்டுள்ளன. 
  • தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் பிரதேசங்களில் சிகிச்சை கழிவு பொருட்களை அகற்றுவதற்கு உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்கள், ஊழியர்களை பயன்படுத்த வேண்டும். 
  • Covid-19 தொற்றுக்கு உள்ளானவர்கள் பயன்படுத்தும் முகக்கவசம் உள்ளிட்ட கழிவு பொருட்களை அகற்றுவதற்கு மஞ்சள் நிற பைகளை பயன்படுத்த வேண்டும். ஆனால் இந்த பொதிகளில் போடப்படும் கழிவு பொருட்கள் எவ்வகையிலும் மீள்சுழற்சி செய்யப்படாமல் முறையாக அழிக்கப்பட வேண்டும். 
  • வைரஸ் தொற்றை தடுப்பதற்காக பொது மக்கள் பயன்படுத்தும் பொருட்களை அகற்றும் பொழுது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயன்படுத்திய முகக்கவசம் உள்ளிட்ட கழிவு பொருட்களை எவ்வாறு அகற்ற வேண்டும்? பயன்படுத்திய முகக்கவசம் உள்ளிட்ட கழிவு பொருட்களை எவ்வாறு அகற்ற வேண்டும்? Reviewed by irumbuthirai on November 11, 2020 Rating: 5

Courses: Sri Lanka Institute of Information Technology (SLIIT)

November 11, 2020

Courses at the Sri Lanka Institute of Information Technology (SLIIT) 
See the details below.
Source: 08-11-2020 Sunday Observer.

Courses: Sri Lanka Institute of Information Technology (SLIIT) Courses: Sri Lanka Institute of Information Technology (SLIIT) Reviewed by irumbuthirai on November 11, 2020 Rating: 5

Courses: Sir John Kotalewela Defense University

November 11, 2020

Courses at the Sir John Kotalewela Defense University. 
Closing date: 04-12-2020. 
See the details below.
Source: Sunday Observer 08-11-2020.

Courses: Sir John Kotalewela Defense University Courses: Sir John Kotalewela Defense University Reviewed by irumbuthirai on November 11, 2020 Rating: 5

09-11-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

November 11, 2020

09-11-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
09-11-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 09-11-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on November 11, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 08-11-2020 நடந்தவை...

November 11, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 35ம் நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • நாளை (9) காலை 5:00 மணியுடன் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் நீக்கப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இதேவேளை தனிமைப்படுத்தல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்ட பிரதேசங்களை இங்கு தருகிறோம். கொழும்பு மாவட்டம்: மோதர, மட்டக்குளி ,புளூமெண்டல், மாளிகாவத்த, பொரள்ள, தெமடகொட, கொட்டாஞ்சேனை, வெல்லம்பிட்டிய, கிரான்பாஸ், ஆட்டுப்பட்டி தெரு, வாழைத்தோட்டம் மற்றும் கரையோர பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை மட்டக்குளியின் மெத்சந்த செவன, மிஹிஜயசெவன, முகத்துவாரத்தின் ரண்மின செவன, தெமட்டகொடையின் சிறிசந்த உயன, மாளிகாவத்தையின் தேசிய வீடமைப்புத் திட்டம் போன்ற தொடர்மாடிகளில் இருந்து எவரும் வெளிச் செல்லவோ, அல்லது உட்பிரவேசிப்பதற்கோ அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டம்: வத்தளை, பேலியகொடை, கடவத்தை, ராகம, நீர்கொழும்பு, பமுனுகம, ஜா-எல, சபுகஸ்கந்தை ஆகிய பொலிஸ் அதிகார பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. களுத்துறை மாவட்டம்: ஹொரண மற்றும் இங்கிரிய பொலிஸ் பிரிவுகளும் வேகட கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. குருநாகல் மாவட்டம்: குருணாகலை மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசம், குளியாப்பிட்டிய பகுதிகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும். கேகாலை மாவட்டம்: மாவனெல்ல, ருவான்வெல்ல பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாகவே பேணப்படும் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் ஊடாக போக்குவரத்து மேற்கொள்ள முடியும் எனவும் தனிமைப்படுத்தப்படுத்தல் பகுதிகளில் இருந்து எவரையும் வாகனத்தில் ஏற்றவோ இறக்கவோ முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • 35 ஆவது கொரோனா மரணம் அறிவிக்கப்பட்டது. 78 வயதான நபர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழப்பு. பிரேதபரிசோதனையில் அவருக்கு கொவிட்19 தொற்று இருந்தமை உறுதியானது. அவர் எந்த இடத்தை சேர்ந்தவர் என்பது குறித்த விபரங்கள் எவையும் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. 
  • நாளைய தினம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் அரச நிறுவனங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மாத்திரமே சேவையாட்களை இணைத்துக்கொள்ள முடியும் என பொது நிர்வாக அமைச்சு தெரிவிப்பு. 
  • தூர சேவை பேருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவிப்பு. 
  • டெங்கு நோயும் கொரோனா நோயும் உறுதிசெய்யப்பட்ட 29 வயது இளைஞர் ஒருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையிலிருந் IDH ற்கு மாற்றம். 
  • கொவிட் -19 சோதனை முடிவுகளை விரைவாக வழங்கக்கூடிய ஆன்டிஜென் அடிப்படையிலான கொரோனா வைரஸ் சோதனைக் கருவிளின் நிலை தொடர்பிலான ஆராய்ச்சிகள் இன்று அல்லது நாளைய தினம் நிறைவடையும் என எதிர்ப்பார்ப்பதாக தேசிய தொற்று நோயியல் பிரிவின் தலைவர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவிப்பு. 
  • மேல் மாகாணத்திற்கு உட்பட்ட அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளும் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிப்பு. 
  • வெலிக்கடை சிறைச்சாலையில் மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. 
  • தனிமைப்படுத்திய பகுதிகளுக்குள் அத்தியாவசிய சேவைகள், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) மற்றும் இலங்கை முதலீட்டுச் சபை (BOI) ஊழியர்கள் மாத்திரம் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு. 
  • இன்றைய தினம் 510 பேருக்கு கொரோனா உறுதி.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 08-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 08-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 11, 2020 Rating: 5

மீண்டும் திறக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலைகள்

November 09, 2020

அதிவேக நெடுஞ்சாலைகளின் அனைத்து நுழைவு மற்றும் வௌியேறும் பகுதிகளும் இன்று (9) முதல் மீண்டும் திறக்கப்படுகிறது. 
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.
மீண்டும் திறக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலைகள் மீண்டும் திறக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலைகள் Reviewed by irumbuthirai on November 09, 2020 Rating: 5

கொழும்பு மத்திய தபால் பரிமாற்றை ஆரம்பிப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை...

November 09, 2020

கொழும்பு மத்திய தபால் பரிமாறல் கடமைகள் சில மீண்டும் ஆரம்பிக்கப்படவிருப்பது தொடர்பாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: 
குறைந்த பட்ச பணியாளர்களை பயன்படுத்தி மத்திய தபால் பரிமாறல் கடமைகளை தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலைமைக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட போதிலும் , இந்த ஆளணியினரை எழுந்தமானமாக PCR பரிசோதனைக்கு உட்படுத்திய 03 சந்தர்ப்பங்களில் மூவர் தொற்றுக்கு உள்ளானதாக பதிவானதையடுத்து இந்த அலுவல்களை முழுமையாக இடைநிறுத்துவதற்கு கடந்த 05 ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டது. 
 நவம்பர் மாதம் 09 ஆம் திகதி ஊரடங்கு சட்டத்தில் தளர்வு ஏற்படுத்தப்படுவதை தொடர்ந்து கிருமி நீக்கத்திற்கு உட்படுத்தப்பட்ட மத்திய தபால் பரிமாறல் வரையறுக்கப்பட்ட கடமைகள் சிலவற்றுக்காக திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக,
 
• சர்வதேச விரைதூதர் தபால் சேவை ( EMS Courier)

 • வர்த்தக தபால் (Business mail) 

 • உள்ளூர் விரைதூதர் தபால் சேவை ( SL Post Courier ) என்பன நவம்பர் மாதம் 09 ஆம் திகதி தொடக்கம் செயற்பாட்டு அலுவல்களுக்காக திறக்கப்படும.; 
பதிவுத் தபால் (Register Letters) பிரிவு தெரிவு நடவடிக்கைகளுக்காக செவ்வாய்க்கிழமையன்று திறப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன் கொழும்பு மாநகரிலும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலும் அரசாங்க அலுவலகங்களுக்கு பதிவு செய்யப்பட்ட தபால்களை விநியோகிக்கும் அலுவல்களை 11ஆம் திகதி புதன் கிழமை தொடக்கம் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 
 அரசாங்கத்தின் அல்லது தனியார் நிறுவனங்களுக்கான முத்திரை இடல் இயந்திரம் தொடர்பான அலுவல்களை நவம்பர் மாதம் 9ஆம் திகதி தொடக்கம் முன்னெடுக்கக் கூடியதாக இருப்பதுடன் அதற்கான 0112 320 700 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு நேரத்தை தெரிவுசெய்துக் கொள்ளுவதற்கான முன்னேற்பாட்டை மேற்கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்கின்றோம். இருப்பினும் வரையறுக்கப்பட்ட ஊழியர்களைப் பயன்படுத்தி கடமைகளை நிறைவேற்றவேண்டியிருப்பதினால் கடமைகள் ஓரளவிற்கு தாமதமடையக் கூடும் என்பதை மேலும் அறியத்தருகின்றோம். என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)
கொழும்பு மத்திய தபால் பரிமாற்றை ஆரம்பிப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை... கொழும்பு மத்திய தபால் பரிமாற்றை ஆரம்பிப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை... Reviewed by irumbuthirai on November 09, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 07-11-2020 நடந்தவை...

November 08, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 34ம் நாள் அதாவது சனிக்கிழமை (07) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • சஹரான் ஹஷீமின் மனைவியும் வெலிக்கட சிறையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி தற்போது வெலிக்கட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 
  • மீகொடை ஆயர்வேத வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில் குறித்த வைத்தியர் அண்மையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். 
  • போகம்பர சிறைச்சாலையின் 7 கைதிகளுக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • கொவிட்-19 தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கு மேற்கொள்ளப்படும் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்காக, நாளாந்தம் 6 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை செலவிடப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. ஒருவருக்கு 6 ஆயிரம் ரூபா செலவாகுவதாகவும் தெரிவித்துள்ளது. 
  • தனிமைப்படுத்தல் மத்திய நிலைங்களுக்கு அனுப்பப்படுபவர்களுக்கு கொரோன தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாவிட்டால் அவர்கள் PCR பரிசோதனையின்றி 14 நாட்களுக்குள் மீண்டும் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டது. 
  • கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக இடம் கொழும்பு கிழக்கு வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் 80 இற்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக வைத்தியர் மயுரமான்ன தெவொரகே தெரிவித்துள்ளார். 
  • கிழக்கு மாகாணத்தில் கொவிட்19 தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 100ஆக அதிகரிப்பு. 
  • காலி-கரந்தெனிய மாவட்ட மருத்துவமனையும் இன்று முதல் Covid-19 தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் மத்திய நிலையமாக மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 
  • 5,600 இற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றும் ஹொரணை குறுகொட ஆடைத் தொழிற்சாலையில் பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 159 ஆக அதிகரிப்பு. 
  • தீபாவளி பண்டிகையின்போது சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு நாட்டிலுள்ள சகல இந்து மக்களிடமும் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சிறிதரன் கோரிக்கை விடுத்தார். 
  • கொவிட் தொற்றுக்குள்ளான பேலியகொடை மீன் சந்தை தொகுதியின் அலுவலக ஊழியர்கள் நான்கு பேர் இன்று (07) பொலன்னறுவை மின்னேரியா பிரதேசத்தில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டனர். 
  • இன்று அறிவிக்கப்பட்ட 4 கொரோனா மரணங்களின் விபரம்: 1) கொழும்பு 10 மாளிகாவத்தை, 42 வயது பெண் (வீட்டில் உயிரிழப்பு) 2) கொழும்பு 10 மாளிகாவத்தை, 69 வயது பெண் (கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழப்பு) 3) வெல்லம்பிட்டி, 67 வயது ஆண் (வீட்டில் உயிரிழப்பு) 4) கனேமுல்லை, 88 வயது பெண் (IDH வைத்தியசாலையில் உயிரிழப்பு) இத்துடன் கொரோனா மரணங்கள் 34 ஆக அதிகரிப்பு. 
  • இன்றைய தினம் 449 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 07-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 07-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 08, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 06-11-2020 நடந்தவை...

November 08, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 33ம் நாள் அதாவது வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • வெலிகட சிறைச்சாலையில் மேலும் 23 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்தார். இதில் 22 பெண் கைதிகள் மற்றும் 1ஆண் கைதியாகும். 
  • தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் பதுகம புதிய காலனி பகுதி தனிமைப்படுத்தல் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு. 
  • வார இறுதியில் கூட்டங்கள், விளையாட்டு போட்டிகள் என்பன நடத்தப்படுவது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இல்லாத பகுதிகளுக்கும் இது பொருந்தும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
  • ராகமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 
  • வத்தளையில் இயங்கி வந்த விளையாட்டுப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் இதுவரை 119 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 
  • கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இதுவரை 20 சிறுவர்கள், 12 கர்ப்பிணிகள் மற்றும் வைத்தியர் ஒருவருக்கும் கொவிட் தொற்று இனம் காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜி.ஜயசூரிய தெரிவித்தார். 
  • கொழும்பு குற்றவியல் பிரிவின் சுமார் 40 அதிகாரிகளுக்கு தற்போதைய நிலையில் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள காரணத்தால் பெரண்டிக்ஸ் கொவிட் கொத்தணி தொடர்பில் விசாரணை செய்வது குறித்து தற்போது சிக்கலான நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிப்பு. 
  • ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதா என்பதை 20 நிமிடங்களில் கண்டறியக்கூடிய அவசரப் பரிசோதனை நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் PCR பரிசோதனை ஊடாக தொற்றாளர்களை இனக்காண்பதையும் விட விரைவில் நோயாளர்களை இனங்காண முடியும் என்று சுகாதார அமைச்சின் இரசாயனகூட சேவைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சமன் ரத்னாயக்க தெரிவித்தார். இதன்படி, உலக சுகாதார அமைப்பினால் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு இலட்சம் வைரஸ் பரிசோதனைக் கட்டமைப்புக்களை கொரியாவில் இருந்து தருவித்திருப்பதாகவும் பிரதிப் பணிப்பாளர் கூறினார். 
  • இம்முறை கொரோனாவிற்கு மத்தியிலும் சிறப்பாக இன்றுடன் நிறைவடைந்தது உயர்தர பரீட்சை. இம்முறை IDH வைத்தியசாலையில் மற்றும் தனிமைப்படுத்தல் முகாம்களிலும் பரீட்சைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 
  • 07 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து தலாத்துஓயா பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • புதிய வழமைப்படுத்தல் திட்டத்தின்கீழ், பெரும்பாலும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல், நாடு திறக்கப்படக்கூடும் என காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 
  • LPL 20க்கு20 கிரிக்கட் தொடரை, எதிர்வரும் 27ஆம் அல்லது 28ஆம் திகதிகளில் சூரியவெவ விளையாட்டு மைதானத்தில் ஆர்ம்பிக்கக்கூடியதாக இருக்கும் என லங்கா பிறீமியர் லீக்தொடரின் பணிப்பாளர், ஸ்ரீலங்கா கிரிக்கட உப தலைவர் ரவின் விக்கிரமரட்ன இதனைத் தெரிவித்துள்ளார். 
  • சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் ஒரு வீட்டில் இரண்டு குடும்பங்களுக்கு மேல் வசிப்பார்களாயின், கிராம உத்தியோகத்தவர் மூலம் அது தொடர்பாக உறுதிப்படுத்தபடுமாயின், அவர்களுக்கும் தனித்தனியாக ரூபா 10,000/= பெறுமதியான அத்தியாவசிய உலர் உணவுப்பொதி வழங்கப்படும் என கொழும்பு மாவட்ட பிரதேச செயலாளர் பிரதீப் யசரட்ன இதனை தெரிவித்தார். இதுவரை கிடைக்காதவர்கள் 011 236 9139 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உலர் உணவுப்பொதியை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிப்பு. 
  • 2020 ற்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சை 2021 ஜனவரி 18 - 28 வரை நடைபெறும் என கல்வி அமைச்சர் இன்று தெரிவித்தார். 
  • 30ஆவது கொரோணா மரணம் மோதர, கொழும்பு-15 ஐச் சேர்ந்த 23 வயதுடைய ஆண். IDH வைத்தியசாலையில் நேற்று(5) உயிரிழந்துள்ளார். ஆனால் அரச தகவல் திணைக்களம் இதை இன்று இரவு 11.10 ற்குதான் அறிவித்தது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 06-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 06-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 08, 2020 Rating: 5
Powered by Blogger.