40 இற்கும் மேற்பட்ட ஹோட்டல்களுக்கு சான்றிதழ்...


கொரோனா தொற்றுக்கு மத்தியில் தமது தொழிற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஆர்வமாகவுள்ள மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவுசெய்யப்பட்டுள்ள 40 இற்கும் மேற்பட்ட ஹோட்டல்களுக்கு பாதுகாப்பு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. 
கொரோனா தொற்றுக்கு பின்னர் விடுமுறையை கழிப்பதற்காக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு உத்தரவாதமளிக்கும் வகையில் அதிகாரசபையில் பதிவு செய்த அனைத்து நிறுவனங்களுக்கும் பாதுகாப்புக்கு உகந்தது என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழை வழங்க அரசாங்கம் கடந்த ஜூன் மாதம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
40 இற்கும் மேற்பட்ட ஹோட்டல்களுக்கு சான்றிதழ்... 40 இற்கும் மேற்பட்ட ஹோட்டல்களுக்கு சான்றிதழ்... Reviewed by irumbuthirai on November 12, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.