இன்றும் ட்ரோன் கெமராவில் இடம்பெற்ற கண்காணிப்பு..


நேற்றைய தினத்தில் (12) 15 பேர் முகத்துவாரம் பிரதேசத்தில் வைத்து Drone Camera வின் உதவியுடன் கைது செய்யப்பட்டனர். 
பொலிஸார் மற்றும் விமானப் படையினர் இணைந்து முகத்துவாரம் பிரதேசத்தில் மேற்கொண்ட நடவடிக்கையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். 
இதேவேளை உலங்கு வானூர்திகள் மற்றும் ட்ரோன் கமராக்களைப் பயன்படுத்தி முகத்துவாரம் பகுதியில் இன்று (13) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். 
விசேட அதிரடிப்படை மற்றும் விமானப்படை இணைந்து மேற்படி சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இன்றும் ட்ரோன் கெமராவில் இடம்பெற்ற கண்காணிப்பு.. இன்றும் ட்ரோன் கெமராவில் இடம்பெற்ற கண்காணிப்பு.. Reviewed by irumbuthirai on November 14, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.