சிறையில்/தடுப்புக்காவலில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்ட தடை...


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர ஆகியோர் இன்றைய (13) பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளவில்லை. 
கொவிட்-19 தொற்றுப் பரவல் அபாயத்தைக் கருத்திற்கொண்டு, சிறையில் அல்லது தடுப்புக்காவலில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகளை பாராளுமன்றக் கூட்டங்களுக்கு அழைப்பதை தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதென பாராளுமன்ற அலுவல்களுக்கான தெரிவுக்குழு தீர்மானித்ததற்கமைவாக இவர்கள் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளவில்லை. 
எவ்வாறேனும், முக்கியமான வாக்கெடுப்புகள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை அனுசரித்து, அவர்களை சபைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.
சிறையில்/தடுப்புக்காவலில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்ட தடை... சிறையில்/தடுப்புக்காவலில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்ட தடை... Reviewed by irumbuthirai on November 13, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.