20 ரூபாய்க்காக 22 வருடம் போராடி வெற்றி பெற்ற நபர்

August 11, 2022

20 ரூபாய்க்காக 22 வருடம் போராடி நபர் ஒருவர் வெற்றி பெற்ற சம்பவம் இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. 

துங்கநாத் சதுர்வேதி என்ற குறித்த நபர் 1999 ஆம் ஆண்டு புகையிரத அனுமதி சீட்டை கொள்வனவு செய்துள்ளார். குறித்த அனுமதிச்சீட்டை வழங்கியவர் 70 ரூபாவுக்கு பதிலாக 90 ரூபாய் வசூலித்துள்ளார். 

இதனை எதிர்த்து துங்கநாத் சதுர்வேதி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கானது 22 வருடங்களாக சுமார் 100 தவணைகளில் அழைக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் இதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அதாவது மனுதாரருக்கு 20 ரூபாய் பணம் திருப்பி தர வேண்டும். அத்துடன் 1999 முதல் 2022 வரையான காலப்பகுதிக்காக 12 வீத வட்டியையும் சேர்த்து 15,000 ரூபாய் அபராதமாக செலுத்தப்பட வேண்டும். இந்த 15,000 ஆனது 30 நாட்களுக்குள் செலுத்தப்பட வேண்டும். அவ்வாறு செலுத்தப்படாவிட்டால் 15 வீதம் வட்டி அறவிடப்படுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பில் துங்கநாத் சதுர்வேதி கூறுகையில், இந்த அபராத தொகையானது சிறிய தொகையாக இருந்தாலும் நீதிக்கான போராட்டம் வெற்றி அடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

குறித்த நபருக்கு தற்போது 66 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

20 ரூபாய்க்காக 22 வருடம் போராடி வெற்றி பெற்ற நபர் 20 ரூபாய்க்காக 22 வருடம் போராடி வெற்றி பெற்ற நபர் Reviewed by Irumbu Thirai News on August 11, 2022 Rating: 5

08-08-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

August 10, 2022

08-08-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 

இதில் பாடசாலை மட்டத்தில் ஜப்பான் மொழித் தேர்ச்சி வழங்கல், இலத்திரனியல் முற்சக்கர வண்டிகளைப் பதிவு செய்தல், நீர் கட்டண அதிகரிப்பு உட்பட பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 

இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.



முன்னைய அமைச்சரவை கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...


08-08-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 08-08-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on August 10, 2022 Rating: 5

நாளை முதல் அதிகரிக்கப்படும் மின் கட்டண விவரம்

August 09, 2022

நாளை முதல் அமுல்படுத்தப்படும் அதிகரிக்கப்பட்ட புதிய மின் கட்டண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.



நாளை முதல் அதிகரிக்கப்படும் மின் கட்டண விவரம் நாளை முதல் அதிகரிக்கப்படும் மின் கட்டண விவரம் Reviewed by Irumbu Thirai News on August 09, 2022 Rating: 5

Litro எரிவாயுவின் மாவட்ட அடிப்படையிலான புதிய விலை விபரம்

August 09, 2022


லிட்ரோ எரிவாயுவின் மாவட்ட அடிப்படையிலான புதிய விலை விபரத்தை  அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

இன்று(9) முதல் அமுலாகும் வகையில் இந்த விலை விவரம் வெளியிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

யாழ் மாவட்டத்திற்கான விலையே அதிகமாக உள்ளது. உதாரணமாக 12.5 Kg சிலிண்டரின் கொழும்பு மாவட்டத்திற்கான விலை 4,664/- ரூபாவாக இருக்கின்ற நிலையில் யாழ் மாவட்டத்தில் அது 5,044/- ரூபாவாக காணப்படுகிறது.

புதிய விலை விபரத்தை கீழே காணலாம்.





Litro எரிவாயுவின் மாவட்ட அடிப்படையிலான புதிய விலை விபரம் Litro எரிவாயுவின் மாவட்ட அடிப்படையிலான புதிய விலை விபரம் Reviewed by Irumbu Thirai News on August 09, 2022 Rating: 5

பாடசாலை மாணவர்களுக்கு பகுதிநேர வேலை வாய்ப்பு: அரசாங்கம் நடவடிக்கை!

August 09, 2022


பாடசாலை மாணவர்களுக்கு பகுதி நேரமாக தனியார் துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெறும் வகையில் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது 

16 தொடக்கம் 20 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இவ்வாறு பகுதிநேர தொழில் வாய்ப்பை பெறும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மாணவர்கள் தொழில் செய்யும் சூழலுக்கு பழக்கப்படாததன் காரணமாக வேலை உலகில் பல்வேறு பிரச்சனைகள் எழுகின்றன. 
மாதாந்தம் 20 மணித்தியாலங்கள் வேலை செய்யக்கூடிய வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு தொழில் புரிபவர்களுக்கான கொடுப்பனவை வழங்கவும் தனியார் துறை நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும். 

இதேவேளை பெண்களை மாலை 6 மணிக்கு பின்னர் வரையறுக்கப்பட்ட சில தொழில்களில் மாத்திரமே ஈடுபடுத்தலாம் என்ற சட்ட விதிமுறைகளிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவுள்ளது. இதற்காக அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது. 

இந்த திருத்தங்களை மேற்கொள்வதற்காக 1954 ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க கடைக்காரியாலய ஊழியர் சட்டம் திருத்தப்படவுள்ளது. இதற்காக அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


பாடசாலை மாணவர்களுக்கு பகுதிநேர வேலை வாய்ப்பு: அரசாங்கம் நடவடிக்கை! பாடசாலை மாணவர்களுக்கு பகுதிநேர வேலை வாய்ப்பு: அரசாங்கம் நடவடிக்கை! Reviewed by Irumbu Thirai News on August 09, 2022 Rating: 5

Diploma in Human Resource Management (University of Colombo)

August 07, 2022

University of Colombo. 
Faculty of Management and Finance. 

Course: Diploma in Human Resource Management (DHRM) 

Duration: 1 Year (Only Sundays) 

Medium: English/ Sinhala. 

Course Fee: 100,000/- 

Closing Date: 31-08-2022. 

Click the link below for full details.



Related:



Diploma in Human Resource Management (University of Colombo) Diploma in Human Resource Management (University of Colombo) Reviewed by Irumbu Thirai News on August 07, 2022 Rating: 5
Powered by Blogger.