10-06-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 10-06-2022

June 11, 2022

10-06-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
 
 
10-06-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 10-06-2022 10-06-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 10-06-2022 Reviewed by Irumbu Thirai News on June 11, 2022 Rating: 5

பரீட்சை திணைக்களத்தால் 2022 ஜுன் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (திருத்தியமைக்கப்பட்டது)

June 09, 2022

பரீட்சை திணைக்களத்தால் 2022 ஜூன் மாதம் நடத்தப்படும் பரீட்சைகளுக்கான திருத்தியமைக்கப்பட்ட நாட்காட்டியை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 
 
நாட்டின் தேசிய பாடசாலைகளில் வெளிநாட்டு மொழிகளைக் கற்பிப்பதற்காக பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை உட்பட 09 வகையான பரீட்சைகள் ஜுன் மாதத்தில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளன. 
 
குறித்த நாட்காட்டியை மும்மொழிகளிலும் இங்கே காணலாம்.

பரீட்சை திணைக்களத்தால் 2022 ஜுன் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (திருத்தியமைக்கப்பட்டது) பரீட்சை திணைக்களத்தால் 2022 ஜுன் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (திருத்தியமைக்கப்பட்டது) Reviewed by Irumbu Thirai News on June 09, 2022 Rating: 5

நாளை முதல் முகக் கவசம் கட்டாயமில்லை! பரிசோதனைகளும் அவசியமில்லை!

June 09, 2022

நாட்டில் நாளை(10) முதல் முக கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

கொரோனாவிலிருந்து பாதுகாப்பு பெற பயன்படுத்தப்பட்ட முகக்கவசம் நாளை முதல் கட்டாயம் இல்லை. எவ்வாறாயினும் அதை பயன்படுத்த விரும்புபவர்கள் எவ்வித தடையுமின்றி பயன்படுத்தலாம். சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் இதைத் தொடர்ந்து அணிவது பொருத்தமானது. 

அதேபோன்று நாளை முதல் பிசிஆர் மற்றும் என்டிஜன் (PCR & Antigen) பரிசோதனைகளும் அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார். 

தற்போதைய நிலையில் 408 பேர் மாத்திரமே கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். 


நாளை முதல் முகக் கவசம் கட்டாயமில்லை! பரிசோதனைகளும் அவசியமில்லை! நாளை முதல் முகக் கவசம் கட்டாயமில்லை! பரிசோதனைகளும் அவசியமில்லை! Reviewed by Irumbu Thirai News on June 09, 2022 Rating: 5

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு!

June 09, 2022

நாட்டிலுள்ள மாகாண பாடசாலைகளில் சுமார் 8000 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

கல்வி அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, 

நாட்டில் மாகாண பாடசாலைகளில் மாத்திரம் 8000 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்றன. 

இது மாத்திரமன்றி நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளுக்கு 22 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. 

இதற்காக பட்டதாரி பயிலுனர்களாக அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 

2018, 2019, 2020 பட்டமளிப்பு திட்டத்தின் கீழ் அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளிடமிருந்து இவ்வாறு விண்ணப்பங்களை கோர அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு! ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on June 09, 2022 Rating: 5

06-06-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

June 09, 2022

06-06-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். இதில் பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...
 
06-06-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 06-06-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on June 09, 2022 Rating: 5

30-05-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

June 09, 2022

30-05-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். இதில் பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
முன்னைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...
30-05-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 30-05-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on June 09, 2022 Rating: 5

நாட்டின் முதலாவது சுதந்திர வீதி நூலகம் திறப்பு!

June 05, 2022


முதன்முறையாக நாட்டில் சுதந்திர வீதி நூலகம் ஒன்று கொழும்பு 7ல் திறக்கப்பட்டுள்ளது. 

சுமார் 2.3 மில்லியன் ரூபா செலவில் திறக்கப்பட்ட இந்த நூலகத்திற்கு பாகிஸ்தான் நிதியுதவி வழங்கியுள்ளது.

அரச ஊழியர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு: அரசின் புதிய திட்டம்! 

கொழும்பு 7ல் அமைந்துள்ள கொழும்பு வர்த்தக வளாகத்திற்கு பிரவேசிக்கும் நுழைவாயிலுக்கு அருகாமையில் இந்த வீதி நூலகம் திறக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை?

 

பொறுப்பாளரோ பாதுகாவலரோ இல்லாமல் தானியக்க முறையில் செயற்படும் இந்த நூலகத்திலிருந்து 24 மணி நேரமும் சேவையைப் பெறலாம். இந்த நூலகத்திலிருந்த புத்தகங்களை வெளியில் கொண்டு செல்ல அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


நாட்டின் முதலாவது சுதந்திர வீதி நூலகம் திறப்பு! நாட்டின் முதலாவது சுதந்திர வீதி நூலகம் திறப்பு! Reviewed by Irumbu Thirai News on June 05, 2022 Rating: 5

அரச ஊழியர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு : அரசின் புதிய திட்டம்!

June 05, 2022

வேலை அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவும் வெளிநாடு செல்ல விரும்பும் அரச ஊழியர்களுக்கு 5 வருட கால சம்பளமில்லாத விடுமுறை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒப்சர்வர் பத்திரிகைக்கு தெரிவித்தார். 


அமைச்சர் குணவர்தனவின் கூற்றுப்படி, அரச ஊழியர்கள் 5 வருட முடிவில் சம்பளம் இல்லாத விடுமுறை காலத்தை பூர்த்தி செய்ததன் பின்னர் சகல சலுகைகளுடனும் அவர்களின் மூப்பு மற்றும் தரங்களை மீளப் பெறுவார்கள் என்று தி சண்டே ஒப்சர்வர் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. 

இதன் மூலம் அரச ஊழியர்கள் வெளிநாட்டிற்கு வேலை வாய்ப்புக்காக செல்வதற்கு ஊக்கம் கிடைக்கும். எனவே, இத்திட்டம் அரச ஊழியர்களுக்கு பல நன்மைகளை வழங்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அரச ஊழியர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு : அரசின் புதிய திட்டம்! அரச ஊழியர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு : அரசின் புதிய திட்டம்! Reviewed by Irumbu Thirai News on June 05, 2022 Rating: 5

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை?

June 05, 2022


தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற் கொண்டுஅரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்குவதற்கான யோசனை எதிர்வரும் நாட்களில்  முன்வைக்கப்படவுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை? அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை? Reviewed by Irumbu Thirai News on June 05, 2022 Rating: 5
Powered by Blogger.