ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு!


நாட்டிலுள்ள மாகாண பாடசாலைகளில் சுமார் 8000 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

கல்வி அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, 

நாட்டில் மாகாண பாடசாலைகளில் மாத்திரம் 8000 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்றன. 

இது மாத்திரமன்றி நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளுக்கு 22 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. 

இதற்காக பட்டதாரி பயிலுனர்களாக அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 

2018, 2019, 2020 பட்டமளிப்பு திட்டத்தின் கீழ் அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளிடமிருந்து இவ்வாறு விண்ணப்பங்களை கோர அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு! ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on June 09, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.