நாளை முதல் முகக் கவசம் கட்டாயமில்லை! பரிசோதனைகளும் அவசியமில்லை!


நாட்டில் நாளை(10) முதல் முக கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

கொரோனாவிலிருந்து பாதுகாப்பு பெற பயன்படுத்தப்பட்ட முகக்கவசம் நாளை முதல் கட்டாயம் இல்லை. எவ்வாறாயினும் அதை பயன்படுத்த விரும்புபவர்கள் எவ்வித தடையுமின்றி பயன்படுத்தலாம். சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் இதைத் தொடர்ந்து அணிவது பொருத்தமானது. 

அதேபோன்று நாளை முதல் பிசிஆர் மற்றும் என்டிஜன் (PCR & Antigen) பரிசோதனைகளும் அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார். 

தற்போதைய நிலையில் 408 பேர் மாத்திரமே கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். 


நாளை முதல் முகக் கவசம் கட்டாயமில்லை! பரிசோதனைகளும் அவசியமில்லை! நாளை முதல் முகக் கவசம் கட்டாயமில்லை! பரிசோதனைகளும் அவசியமில்லை! Reviewed by Irumbu Thirai News on June 09, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.