தனித்துப் பயணிப்பது தொடர்பில் தமது கட்சி தீர்மானிக்கும் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால

December 31, 2020

மாகாண சபை தேர்தலில் தமிழ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்பார்க்கும் அளவு வேட்பாளர்களை ஒதுக்குவதற்கு ஆளும்கட்சி தவறினால் 
தனித்து பயணிப்பது தொடர்பில் தமது கட்சி தீர்மானிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 
The Hindu பத்திரிகைக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். 
மேலும் தெரிவிக்கையில், 
கடந்த பொதுத் தேர்தலில் தமது கட்சிக்கு அநீதி இழைக்கபட்டதாக கூறிய அவர் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் கூட்டணியில் போட்டியிட தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தனித்துப் பயணிப்பது தொடர்பில் தமது கட்சி தீர்மானிக்கும் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால தனித்துப் பயணிப்பது தொடர்பில் தமது கட்சி தீர்மானிக்கும் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால Reviewed by irumbuthirai on December 31, 2020 Rating: 5

நீதிமன்ற தீப்பரவல் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா? குழுவின் அறிவிப்பு

December 31, 2020

டிசம்பர் 15ஆம் திகதி உயர்நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தீ பரவலானது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட செயல் என்பதற்கான சாட்சிகள் இல்லை என அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குழு தெரிவித்துள்ளது. 
 இதேவேளை இது தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீதிமன்ற தீப்பரவல் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா? குழுவின் அறிவிப்பு நீதிமன்ற தீப்பரவல் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா? குழுவின் அறிவிப்பு Reviewed by irumbuthirai on December 31, 2020 Rating: 5

புதிய கட்சிகளை பதிதல்... மாகாண சபைத் தேர்தலுக்கு நான்காயிரம் மில்லியன்... இன்றைய கூட்ட தீர்மானங்கள்:

December 31, 2020

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று அதன் தலைமையகத்தில் நடைபெற்றது. 
அதில், புதிய அரசியல் கட்சிகளை ஜனவரி முதல் பதிவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டதாக அதன் தலைவர் நிமல் நிமல் புஞ்சி ஹேவா தெரிவித்தார். 
இதேவேளை மாகாணசபைத் தேர்தல் ஒன்று நடைபெற்றால் அதற்காக 
4 ஆயிரம் மில்லியன் ரூபாய்கள் நிதி ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 
மேலும் எதிர்வரும் ஜனவரி 11ஆம் திகதி அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறும். அதே தினம் மாலை வேளையில் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் உடனான சந்திப்பும் இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.
புதிய கட்சிகளை பதிதல்... மாகாண சபைத் தேர்தலுக்கு நான்காயிரம் மில்லியன்... இன்றைய கூட்ட தீர்மானங்கள்: புதிய கட்சிகளை பதிதல்... மாகாண சபைத் தேர்தலுக்கு நான்காயிரம் மில்லியன்... இன்றைய கூட்ட தீர்மானங்கள்: Reviewed by irumbuthirai on December 31, 2020 Rating: 5

சபாநாயகர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாரா? ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கை

December 31, 2020

சபாநாயகர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என வெளியான தகவல்களை சபாநாயகர் ஊடகப்பிரிவு மறுத்துள்ளது. இது உண்மைக்கு புறம்பான தகவல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சபாநாயகரின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து சபாநாயகர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என நேற்றைய தினம் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
சபாநாயகர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாரா? ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கை சபாநாயகர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாரா? ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கை Reviewed by irumbuthirai on December 31, 2020 Rating: 5

ஊடக அடையாள அட்டை: நீடிக்கப்பட்டது செல்லுபடியான காலம்:

December 31, 2020

ஊடகவியலாளர்களின் ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியான காலம் 2021 மார்ச் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 
 இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில்,
2021 ஆம் ஆண்டுக்கான ஊடக அடையாள அட்டையை வழங்குவதற்கான அடிப்படை அலுவல்கள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 
இதற்கான விண்ணப்பத்தை www.dgi.gov.lk என்ற அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அல்லது www.news.lk என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். 
இதே போன்று 2020 க்காக வழங்கப்பட்டுள்ள ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியான காலம் 2020 டிசம்பர் 31 ஆம் திகதி தொடக்கம் 2021 மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடக அடையாள அட்டை: நீடிக்கப்பட்டது செல்லுபடியான காலம்: ஊடக அடையாள அட்டை:  நீடிக்கப்பட்டது செல்லுபடியான காலம்: Reviewed by irumbuthirai on December 31, 2020 Rating: 5

சகல வசதிகளுடனும் 1000 தேசிய பாடசாலைகள்: முதல் பாடசாலை 200 வருட பழமையானது:

December 31, 2020

மாணவர்களுக்கு முழுமையான கல்வியை வழங்கும் விடயத்தில் கணினி தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், மொழிக் கல்வி உள்ளிட்ட வசதிகள் விருத்தி செய்யப்பட வேண்டும். நாட்டில் அமைக்கப்படும் புதிய தேசிய பாடசாலைகள் இந்த சகல வசதிகளையும் வழங்கும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார். 
 நாட்டில் சகல வசதிகளுடன் கூடிய 1000 தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப வைபவம் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தலைமையில் நேற்று (30) 
கோட்டை ஸ்ரீ ஜயவர்தனபுர கல்லூரியில் இடம்பெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார். 
அவர் மேலும் தெரிவிக்கையில், 
இந்த வேலைத்திட்டத்தின் முதல் பாடசாலையாக சுமார் 200 வருடங்கள் பழைமைவாய்ந்த இந்த கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ், 1000 தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த செயற்றிட்டம் பல கட்டங்களாக முன்னெடுக்கப்படும். 1ம் கட்டத்தில் 123 பாடசாலைகளும், 2ம் கட்டத்தில் 673 பாடசாலைகளும் தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்படும் என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சகல வசதிகளுடனும் 1000 தேசிய பாடசாலைகள்: முதல் பாடசாலை 200 வருட பழமையானது: சகல வசதிகளுடனும் 1000 தேசிய பாடசாலைகள்: முதல் பாடசாலை 200 வருட பழமையானது: Reviewed by irumbuthirai on December 31, 2020 Rating: 5

Degree Courses with Free Laptop (Sir John Kotelawela Defence University)

December 31, 2020

Degree Courses with Free Laptop in the Sir John Kotelawela Defence University - Ratmalana. 
Closing date: 06-01-2021. 
See the details below.
Source: 27-12-2020 Sunday Observer.


Degree Courses with Free Laptop (Sir John Kotelawela Defence University) Degree Courses with Free Laptop (Sir John Kotelawela Defence University) Reviewed by irumbuthirai on December 31, 2020 Rating: 5

Vacancies: National Enterprise Development Authority (NEDA)

December 31, 2020

Vacancies in thevNational Enterprise Development Authority (NEDA) 
Closing date:12-01-2021. 
See the details below.
Source: 27-12-2020 Sunday Observer.


Vacancies: National Enterprise Development Authority (NEDA) Vacancies: National Enterprise Development Authority (NEDA) Reviewed by irumbuthirai on December 31, 2020 Rating: 5

Vacancies: United Nations High Commissioner for Refugees (UNHCR)

December 31, 2020

Vacancies in the United Nations High Commissioner for Refugees (UNHCR) 
See the details below.

Source: 27-12-2020 Sunday Observer.

Vacancies: United Nations High Commissioner for Refugees (UNHCR) Vacancies: United Nations High Commissioner for Refugees (UNHCR) Reviewed by irumbuthirai on December 31, 2020 Rating: 5

Vacancies: State Ministry of Estate Housing and Community Infrastructure

December 31, 2020

Vacancies in the State Ministry of Estate Housing and Community Infrastructure. 
Closing date: 15-01-2021. 
See the details below.
Source: 27-12-2020 Sunday Observer.


Vacancies: State Ministry of Estate Housing and Community Infrastructure Vacancies: State Ministry of Estate Housing and Community Infrastructure Reviewed by irumbuthirai on December 31, 2020 Rating: 5

Teacher Vacancies (Musaeus College - Colombo 07)

December 31, 2020

Teacher Vacancies in the Musaeus College, Colombo - 07. 
Closing date:10 days from 27-12-2020. 
See the details below.

Source : 27-12- 2020 Sunday Observer.


Teacher Vacancies (Musaeus College - Colombo 07) Teacher Vacancies (Musaeus College - Colombo 07) Reviewed by irumbuthirai on December 31, 2020 Rating: 5

மேல் மாகாண பாடசாலைகள்: மீள ஆரம்பிப்பது பற்றி கல்வியமைச்சர்...

December 30, 2020

மேல் மாகாணத்தில் தற்போதைய நிலையில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் பாடசாலைகளை மீள திறப்பது சற்றுக் கடினம். அது 
00000
மேலும் தாமதம் அடையலாம் என கல்வி அமைச்சர் G.L. பீரிஸ் தெரிவித்துள்ளார். 
 முடக்கப்படாத ஏனைய பிரதேசங்கள் பற்றியே தீர்மானம் எடுக்கப்பட்டது. அந்த பிரதேச பாடசாலைகள் திட்டமிட்டபடி ஜனவரி 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். அதில் எந்த மாற்றமுமில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேல் மாகாண பாடசாலைகள்: மீள ஆரம்பிப்பது பற்றி கல்வியமைச்சர்... மேல் மாகாண பாடசாலைகள்: மீள ஆரம்பிப்பது பற்றி கல்வியமைச்சர்... Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

ரத்து செய்யப்பட்டது 50 பஸ்களின் அனுமதிப் பத்திரம்

December 30, 2020

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத 50 பேருந்துகளின் பயண அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். 
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 
கொவிட் தொற்றாளர்களுடன் தொடர்புடைய 68 சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத பஸ் வண்டிகள் தொடர்பாக தொடர்ந்தும் கண்காணிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ரத்து செய்யப்பட்டது 50 பஸ்களின் அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்பட்டது 50 பஸ்களின் அனுமதிப் பத்திரம் Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

சான்றிதழ் பெற்ற இலங்கையின் வயது கூடிய பெண்மணி மரணம்

December 30, 2020

இலங்கையின் அதிகூடிய வயதை கொண்ட பெண்மணி களுத்துறை நாவல பெரிய வைத்தியசாலையில் நேற்று (29) காலமானார். 
தொடாங்கொடை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மெஹின்ன கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த வேலு பாப்பாத்தி என்ற 117 வயது மூதாட்டியை இவ்வாறு மரணமானார். 
1903-மே-3ஆம் திகதி பிறந்த இவர் பெருபான்மை இனத்தவரை 
திருமணம் செய்துள்ளதுடன் இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். 
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி சர்வதேச முதியோர் தினத்தில் முதியோருக்கான தேசிய சபை நாட்டின் ஆகக்கூடிய வயதை கொண்ட பெண் என்ற சான்றிதழை இவருக்கு வழங்கியுள்ளது. 
அரசாங்கத்தினால் வழங்கப்படும் முதியோர் அடையாள அட்டையில் இவரது வயது குறிப்பிடப்பட்டுள்ளது.
சான்றிதழ் பெற்ற இலங்கையின் வயது கூடிய பெண்மணி மரணம் சான்றிதழ் பெற்ற இலங்கையின் வயது கூடிய பெண்மணி மரணம் Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

கொரோனா தடுப்பூசியை போட்ட தாதிக்கு கொரோனா

December 30, 2020

பைஸர் பயோ-என்-டெக் கொரோனா தடுப்பு மருந்தை போட்டுக்கொண்ட அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநில தாதி ஒருவருகுக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 
டிசம்பர் 18 ஆம் திகதி குறித்த தடுப்பு மருந்தைப் போட்டுக்கொண்டவருக்கு 6 நாள் கழித்து கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 
எவ்வாறாயினும் குறித்த தடுப்பு மருந்து செயல்பட சுமார் 10 - 14 நாள்களாகும் எனக் கூறப்படுவதோடு 2 முறை போட்டுக்கொண்டால் தான் அது 95% திறன்வாய்ந்ததாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா தடுப்பூசியை போட்ட தாதிக்கு கொரோனா கொரோனா தடுப்பூசியை போட்ட தாதிக்கு கொரோனா Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

அமைச்சர் அலி சப்ரியிடம் கையளிக்கப்பட்ட இறுதி அறிக்கை

December 30, 2020

அண்மையில் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான விடயங்களை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நீதி அமைச்சர் அலி சப்ரி, முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி குஸலா சரோஜினி வீரவர்தன தலைமையில் குழுவை கடந்த மாதம் 29ஆம் திகதி நியமித்தார். 
குழுவின் இடைக்கால அறிக்கை கடந்த 7ஆம் திகதி (2020.12.07) கையளிக்கப்பட்டது. 
அதன் இறுதி அறிக்கையை குழுவின் தலைவர் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி குஸலா சரோஜினி வீரவர்தன தலைமையில் இன்று 
நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியிடம் கையளித்தது. 
மஹர சிறைச்சாலை கலவரத்தின்போது 11 கைதிகள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் அலி சப்ரியிடம் கையளிக்கப்பட்ட இறுதி அறிக்கை அமைச்சர் அலி சப்ரியிடம் கையளிக்கப்பட்ட இறுதி அறிக்கை Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

உருமாறிய கொரோனா: விஷேட பரிசோதனையை ஆரம்பித்த இலங்கை..

December 30, 2020

தற்பொழுது பல நாடுகளிலும் பதிவாகி வரும் உருமாறிய கொரோனா வைரசு இலங்கைக்குள் வந்துள்ளதா? என்பது பற்றி விசேட பரிசோதனைகளை ஜெயவர்த்தனபுரா பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவம் மற்றும் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவு (The Department of Immunology and Molecular Medicine and Allergy, Immunology and Cell Biology Unit of University of Sri Jayewardenepura) ஆம்பித்துள்ளது. 
 இது தொடர்பாக, இதன் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவன்தர தெரிவிக்கையில், 
இந்த புதிய உருமாறிய வைரஸ் இங்கிலாந்திலே ஆரம்பமானது. தற்பொழுது இந்தியா உட்பட பல நாடுகளிடையே பரவி வருகிறது. இதை PCR பரிசோதனையின் மூலம் அறிந்துக்கொள்ள முடியாது என்று கூறுவதற்கில்லை. இவ்வாறான பரிசோதனை மூலம் கண்டறிய முடியும் இதனால் இதுதொடர்பில் பொது மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லை. இருப்பினும், பொதுவான பி.சீ.ஆர் பரிசோதனையில் இதனை வேறுப்படுத்தி அடையாளம் காண முடியாது. இதை கண்டறிவதற்கு தனியான விசேட மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 
இந்த உருமாறிய வைரஸை அடையாளம் காண்பது இலங்கை போன்ற நாடுக்கு மிகவும் முக்கியமானதாகும் என்று தெரிவித்த அவர் பொதுவான பி.சீ.ஆர் பரிசோதனையில் இந்த புதிய உருமாறிய வைரசுக்கு இலக்கான நபர்கள் தொடர்பில் ஏமாறக்கூடிய வாய்ப்பும் இருப்பதாக அவர் கூறினார். தற்போதுள்ள நிலைமையில் இதுதொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை. இருப்பினும் ஒரு பிரச்சினை உண்டு. பொதுவாக நாம் பி.சீ.ஆர் பரிசோதனையில் குறிப்பிட்ட இலக்குடன் செயல்படும் பொழுது அந்த இலக்கு சிலவேளை தவறக்கூடும். இதனால் பி.சீ.ஆர் பரிசோதனையின் மூலம் இதனை கண்டறிய முடியாது என்று திட்டவட்டமாக கூறமுடியாது என்றும் அவர் மேலும் கூறினார்.
உருமாறிய கொரோனா: விஷேட பரிசோதனையை ஆரம்பித்த இலங்கை.. உருமாறிய கொரோனா: விஷேட பரிசோதனையை ஆரம்பித்த இலங்கை.. Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

அடுத்த வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு பற்றிய அறிவிப்பு...

December 30, 2020

அடுத்த வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வை ஜனவரி 05 - 08 வரை கூட்டுவதற்கு இன்று (30) முற்பகல் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற செயலாளர் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார். 
Covid-19 சுகாதார வழிகாட்டல்களின் கீழ் பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்குள் பிரவேசிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கும் இதன்போது அனுமதி வழங்கப்படும். ஜனவரி 06, புதன்கிழமை மு.ப. 10.00 - 10.30 மணி வரை பிரதமரிடம் கேள்வி கேட்பதற்கான 
நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 
 கொரோனா பரவல் காரணமாக கடந்த நவம்பர் 03ஆம் திகதி முதல், பாராளுமன்றம் செல்ல ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு பற்றிய அறிவிப்பு... அடுத்த வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு பற்றிய அறிவிப்பு... Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

கொரோனாவிற்கு பலியான அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்..

December 30, 2020

கொரோனா தொற்றினால் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மரணமடைந்துள்ளார். 
குடியரசு கட்சியை சேர்ந்த லூக் லெட்லோ ( luke letlow) என்பவரே இவ்வாறு மரணமானார். கடந்த 18ஆம் திகதி கொரோனா உறுதியான அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவிற்கு பலியான அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்.. கொரோனாவிற்கு பலியான அமெரிக்க  நாடாளுமன்ற உறுப்பினர்.. Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

தனிமைப்படுத்தப்பட்ட சபாநாயகர்...

December 30, 2020

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தன்னைத் தானே சுயதனிமைப்படுத்திக் கொண்டார். தனது 02 
பாதுகாப்பாளர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளானதையடுத்தே இவ்வாறு தன்னைத் தானே சுயதனிமைப்படுத்திக் கொண்டார். 
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டையிலுள்ள சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே தனிமைப்படுத்தலில் உள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட சபாநாயகர்... தனிமைப்படுத்தப்பட்ட சபாநாயகர்... Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிறைச்சாலை பாதுகாப்பு பணியில்...

December 30, 2020

முன்னாள் இராணுவ அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு குழுவொன்றை சிறைச்சாலைகளின் பாதுகாப்பிற்காக நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார். 
200 பேர் கொண்ட குழுவொன்று இந்த பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிறைச்சாலை பாதுகாப்பு பணியில்... முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிறைச்சாலை பாதுகாப்பு பணியில்... Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

சாரதி அனுமதிப் பத்திரத்தை இழக்கும் போதைப் பொருள் பாவனையாளர்கள்...

December 30, 2020

பார ஊர்திகளுக்காக (Heavy Vehicles) புதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு வருபவர்களும் பழைய அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கு வருபவர்களும் கடந்த ஒரு வருடத்திற்குள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளனரா என்பது தொடர்பில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில் போதைப்பொருள் பாவனை உறுதிப்படுத்தப்பட்டால் அவருக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார். 
பார ஊர்தி சாரதிகள் தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகளை ஆராய்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நடவடிக்கை ஜனவரி முதல் ஆரம்பமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சாரதி அனுமதிப் பத்திரத்தை இழக்கும் போதைப் பொருள் பாவனையாளர்கள்... சாரதி அனுமதிப் பத்திரத்தை இழக்கும் போதைப் பொருள் பாவனையாளர்கள்... Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

என்னை மன்னியுங்கள்: மிகவும் வருத்தத்துடன் அறிக்கையை வெளியிட்ட ரஜினிகாந்த் (அறிக்கை இணைப்பு)

December 29, 2020

ஜனவரியில் கட்சி தொடங்குவேன் என அறிவித்து மருத்துவர்களின் ஆலோசனையையும் மீறி ஹைதராபாத் சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார் தென்னிந்திய Super Star நடிகர் ரஜனிகாந்த். 
கொரோனா விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு படப்பிடிப்பு நடந்தாலும் அதில் நான்கு பேருக்கு தொற்று உறுதியானது. 
ரஜினிக்கு தொற்று ஏற்படவில்லையாயினும் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மூன்று நாட்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருக்க நேரிட்டது. 
வீடு திரும்பிய அவர் தனது அரசியல் பிரவேசம் பற்றியும் இதர விடயங்கள் தொடர்பாகவும் உருக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். 
அவர் வெளியிட்ட முழுமையான அறிக்கையை கீழே தருகிறோம்.




என்னை மன்னியுங்கள்: மிகவும் வருத்தத்துடன் அறிக்கையை வெளியிட்ட ரஜினிகாந்த் (அறிக்கை இணைப்பு) என்னை மன்னியுங்கள்: மிகவும் வருத்தத்துடன் அறிக்கையை வெளியிட்ட ரஜினிகாந்த் (அறிக்கை இணைப்பு) Reviewed by irumbuthirai on December 29, 2020 Rating: 5

சாரதி அனுமதிப் பத்திரம்: ஜனவரி முதல் இலங்கை ராணுவத்தால்...

December 29, 2020

இலங்கையில் மாதமொன்றுக்கு 60,000 - 90,000 வரையான சாரதி அனுமதிப் பத்திரங்கள் விநியோகிக்கப்படுகின்றன. 
அந்த சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து ஆணையாளர் சுமித் அளஹகோன் தெரிவித்துள்ளார். 
சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணி தென்னாபிரிக்க நிறுவனமொன்றினாள் கடந்த 11 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
சாரதி அனுமதிப் பத்திரம்: ஜனவரி முதல் இலங்கை ராணுவத்தால்... சாரதி அனுமதிப் பத்திரம்: ஜனவரி முதல் இலங்கை ராணுவத்தால்... Reviewed by irumbuthirai on December 29, 2020 Rating: 5

20 வகையான புதிய கொரோனா வைரஸ்கள்.... இலங்கைக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை...

December 29, 2020

வைரஸ்கள் மாற்றமடைவது இயல்பான விடயம். அதற்கு எல்லையில்லை. எங்கும் அது நிகழக்கூடும். இதன் காரணமாக உலகின் ஏனைய நாடுகளை போல இலங்கையிலும் புதிய வைரஸ் உருவாவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். 
மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ள போதிலும் ஏற்கனவே நாட்டில் காணப்படும் 
வைரஸ் மாற்றமடைந்து ஆபத்தானதாக மாறுவதை தடுக்க முடியாது. உலகில் 20 வகையான புதிய கொரோனா வைரஸ்கள் உள்ளன. எவ்வகையான வைரஸ் காணப்பட்டாலும் அடிப்படை சுகாதார விதிமுறைகளை பின்பற்றவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
20 வகையான புதிய கொரோனா வைரஸ்கள்.... இலங்கைக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை... 20 வகையான புதிய கொரோனா வைரஸ்கள்.... இலங்கைக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை... Reviewed by irumbuthirai on December 29, 2020 Rating: 5

இலங்கையிலும் மிகவும் வீரியம் கூடிய கொரோனா தொற்றாளர் கண்டுபிடிப்பு

December 29, 2020

மிகவும் வீரியம் கூடிய கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் அடையாளம் காணப்பட்டதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 
தம்புள்ளை சந்தைக்கு சென்று மரக்கறிகளை கொள்வனவு செய்து வந்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இவர் 37 வயதுடைய ஆண் ஆவார். 
இதனால் அவரோடு தொடர்பிலே இருந்தவர்கள் தங்களது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியுடன் தொடர்புகொண்டு PCR பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டும் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார். 
இதேவேளை தொற்றுறுதியான 
நபருடன் தொடர்புடைய 65 பேரும், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 129 பேரும் என மொத்தமாக 194 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ள போதிலும் ஏற்கனவே நாட்டில் காணப்படும் வைரஸ் மாற்றமடைந்து ஆபத்தானதாக மாறுவதை தடுக்கமுடியாது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையிலும் மிகவும் வீரியம் கூடிய கொரோனா தொற்றாளர் கண்டுபிடிப்பு இலங்கையிலும் மிகவும் வீரியம் கூடிய கொரோனா தொற்றாளர் கண்டுபிடிப்பு Reviewed by irumbuthirai on December 29, 2020 Rating: 5

ICC யின் தசாப்த விருது பெற்றோரும் தெரிவு முறையும் (முழு விபரம் இணைப்பு)

December 29, 2020

2020ஆம் ஆண்டு நிறைவடைந்த நிலையில், கடந்த 10 ஆண்டு காலப் பகுதியில் சிறந்து விளங்கிய கிரிக்கெட் வீரரை தெரிவு செய்து ICC யினால் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 
இது தொடர்பான நிகழ்வு நேற்று இடம்பெற்றது. 
தெரிவு செய்யப்படும் முறை: 
90% ஆன தெரிவு, முன்னாள் கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட குழு, ஊடகவியலாளர்கள், ஒளிபரப்பு நிறுவன பிரநிதிகள் உள்ளிட்டோரினாலும் 10% ஆன தெரிவு இரசிகர்களின் வாக்களிப்பின் மூலமும் இடம்பெறும். 
தெரிவு செய்யப்பட்டோர்: 
(1) தசாப்பதத்தின் ICC கிரிக்கெட் வீரருக்கான விருதான, சேர் கா(ர்)பீல்ட் சோபர் விருதுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி தெரிவு செய்யப்பட்டுள்ளார். 
(2) தசாப்பதத்தின் ICC ஒருநாள் கிரிக்கெட் வீரராகவும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி தெரிவு செய்யப்பட்டுள்ளார். 
(3) தசாப்தத்தின் ICC கிரிக்கெட் வீராங்கனைக்கான, ரச்சல் ஹெஹொ பிளின்ட் விருதுக்கும் தசாப்தத்தின் ஒரு நாள் கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதுக்கும் அவுஸ்திரேலிய அணியின் எல்லீஸ் பெர்ரி தெரிவு செய்யப்பட்டுள்ளார். 
(4) தசாப்தத்தின் சிறந்த டெஸ்ட் வீரர் - ஸ்டீவன் ஸ்மித் (அவுஸ்திரேலியா). 
(5) தசாப்தத்தின் ரி20 கிரிக்கெட் வீரர் ரஷீட் கான் (ஆப்கானிஸ்தான்) 
(6) தசாப்தத்தின் சிறந்த அறத்துடன் விளையாடிய வீரர்- MS Dhoni (இந்தியா) 
இது தவிர ICC தசாப்தத்தின் டெஸ்ட் அணியில் சங்கக்கார, ஒருநாள் அணியில் மாலிங்க ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். 
இது தொடர்பில் ICC யினால் வெளியிடப்பட்ட பட்டியல் வருமாறு: 
Virat Kohli wins the Sir Garfield Sobers Award for ICC Male Cricketer of the Decade 
Ellyse Perry wins the Rachael Heyhoe-Flint Award for ICC Female Cricketer of the Decade 
Steve Smith is ICC Men’s Test Cricketer of the Decade 
Virat Kohli is ICC Men’s ODI Cricketer of the Decade 
Ellyse Perry is ICC Women’s ODI Cricketer of the Decade 
Rashid Khan is ICC Men’s T20I Cricketer of the Decade 
Ellyse Perry is ICC Women’s T20I Cricketer of the Decade 
Kyle Coetzer is ICC Men’s Associate Cricketer of the Decade 
Kathryn Bryce is ICC Women’s Associate Cricketer of the Decade 
MS Dhoni wins ICC Spirit of Cricket Award of the Decade








ICC யின் தசாப்த விருது பெற்றோரும் தெரிவு முறையும் (முழு விபரம் இணைப்பு) ICC யின் தசாப்த விருது பெற்றோரும் தெரிவு முறையும் (முழு விபரம் இணைப்பு) Reviewed by irumbuthirai on December 29, 2020 Rating: 5

இராணுவத் தளபதிக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் கிடைத்த பதவி உயர்வு

December 28, 2020

இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இன்று (28) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜெனரல் தரத்திற்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதிக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் கிடைத்த பதவி உயர்வு இராணுவத் தளபதிக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் கிடைத்த பதவி உயர்வு Reviewed by irumbuthirai on December 28, 2020 Rating: 5

கொரோனா தடுப்பூசி: சர்வதேச உற்பத்தி கேந்திர நிலையமாக மாறும் இந்தியா:

December 28, 2020

இந்தியாவின் தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத், Covid-19 தடுப்பூசிக்கான உலகளாவிய உற்பத்தி கூடமாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
இங்கு 5 நிறுவனங்கள், கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளமையே இதற்கான காரணமாகும். 
அது தொடர்பான விபரங்களை கீழே தருகிறோம். 
(1) பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து 'கோவாக்சின் (Covaxin)' என்ற தடுப்பூசியை உருவாக்கி அதன் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. இந்திய பிரதமர் மோடி கடந்த மாதம் 28-ந் தேதி அங்கு நேரில் சென்று தடுப்பூசி உற்பத்தியின் முன்னேற்றத்தை கேட்டறிந்தார். 60-க்கு மேற்பட்ட வெளிநாட்டு தூதரக அதிகாரிகளும் தனியாக பார்வையிட்டனர். 
(2) Biological E Limited  (பயாலஜிக்கல் இ லிமிடெட்) என்ற மற்றொரு ஐதராபாத் நிறுவனம், ஜான்சென் பார்மசூட்டிக்கல் என்வி என்ற நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. அதன் பரிசோதனையும் நடந்து வருகிறது. 
(3) ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெடீஸ் லேப்ஸ் நிறுவனம், 
ரஷிய தயாரிப்பான 'ஸ்புட்னிக் வி (Sputnik-v)' கொரோனா தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைக்கும், இந்தியாவில் 10 கோடி டோஸ் தடுப்பூசியை வினியோகிப்பதற்கும் ஒப்பந்தம் செய்துள்ளது. 
(4) அரவிந்தோ பார்மா என்ற ஐதராபாத் நிறுவனம், கொரோனா உள்பட பல்வேறு வைரஸ்களை குணப்படுத்தும் தடுப்பூசிகள் உற்பத்திக்காக ரூ.275 கோடி முதலீடு செய்துள்ளது. 
(5) அத்துடன், ஐதராபாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம், கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி, இறக்குமதி செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தடுப்பூசிகளை சேமிக்க குளிர்பதன கிடங்கு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. 
இந்த வகையில் பார்க்கும் பொழுது கொரோனா தடுப்பூசிக்கான சர்வதேச மத்திய நிலையமாக இந்தியா மாறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா தடுப்பூசி: சர்வதேச உற்பத்தி கேந்திர நிலையமாக மாறும் இந்தியா: கொரோனா தடுப்பூசி: சர்வதேச உற்பத்தி கேந்திர நிலையமாக மாறும் இந்தியா: Reviewed by irumbuthirai on December 28, 2020 Rating: 5

உடல்களை எரிப்பது தொடர்பில் ஐ.தே.க.யின் நிலைப்பாடு...

December 28, 2020

Covid-19 னால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் தொடர்பிலான தீர்மானத்தை அரசாங்கம் சகல இனத்தினருடனும் கலந்தாலோசித்து பொது இணக்கப்பாட்டிற்கு வர வேண்டும் என கட்சியின் நிலைப்பாட்டை பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளார். 
கடந்த 23 ஆம் திகதி கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் போது குறித்த அறிக்கை ஒருமனதாக முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உடல்களை எரிப்பது தொடர்பில் ஐ.தே.க.யின் நிலைப்பாடு... உடல்களை எரிப்பது தொடர்பில் ஐ.தே.க.யின் நிலைப்பாடு... Reviewed by irumbuthirai on December 28, 2020 Rating: 5

ஆரம்பப் பிரிவில் இரண்டு பிரிவுகளாக மாணவர்கள்: கல்வி அமைச்சரின் இன்றைய அறிவிப்பு:

December 28, 2020

2021 ஜனவரி மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆரம்ப பிரிவு பாடசாலைகளில் மாணவர்களை இரண்டு பிரிவுகளாக பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக இன்று நடைபெற் செய்தியாளர்களுடனான சந்திப்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 
இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், 
மாணவர்கள் மத்தியில் தனிப்பட்ட இடைவெளியை முன்னெடுப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான வேலைத்திட்டம் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும். மாணவர்களின் நலன்கருதியே முறையான திட்டமிடலுக்கு அமைவாகவே, ஜனவரி மாதம் 11ஆம் திகதி பாடசாலைகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
மேலும் விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளும் இதற்காக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. குறுகிய அரசியல் நோக்கில் இதுபற்றி கவனம் செலுத்தக்கூடாது பாடசாலைகளை திறக்குமாறு பெற்றோர் நாளாந்தம் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். பாடசாலைகளுக்கான சுகாதார உபகரணங்களை வழங்குவதற்கென அரசாங்கம் ஆயிரத்து 50 லட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஆரம்பப் பிரிவில் இரண்டு பிரிவுகளாக மாணவர்கள்: கல்வி அமைச்சரின் இன்றைய அறிவிப்பு: ஆரம்பப் பிரிவில் இரண்டு பிரிவுகளாக மாணவர்கள்: கல்வி அமைச்சரின் இன்றைய  அறிவிப்பு: Reviewed by irumbuthirai on December 28, 2020 Rating: 5

9 மாதங்களின் பின்னர் இலங்கையைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள்

December 28, 2020

Covid-19 தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி இலங்கையின் விமான நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் கடந்த 09 மாதங்களில் எந்தவொரு சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகை தரவில்லை. 
மாறாக பயணிகள் பரிமாற்றம், பண்டங்களை எடுத்துச் செல்லல், வெளிநாடுகளில் பணியாற்றிய தொழிலாளர்களை அழைத்துவருதல் போன்ற நடவடிக்கைகளுக்காக மாத்திரமே கடந்த 09 மாதங்களில் விமான நிலையங்கள் பயன்படுத்தப்பட்டன. 
இதேவேளை சுற்றுலாத் துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் முப்பது லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டார்கள். இந்த விடயத்தைக் கருத்திற் கொண்டு சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் விமான நிலையங்களை மீண்டும் சுற்றுலா பயணிகளுக்காக திறந்து வைக்கும் முன்னோட்ட வேலைத்திட்டம் இன்று (28) ஆரம்பமானது. 
இதற்கமைய, இன்று உக்ரேனின் கியுவ் நகரிலிருந்து 186 பயணிகளுடன் இலங்கைக்கு வந்த விமானம் 


மத்தள விமான நிலையத்தில் பிற்பகல் 2.30 மணியளல் தரை இறங்கியது. அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் டி.வி சானக்க, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஜி.ஏ சந்ரசிறி ஆகியோரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்கள். 
இலங்கை வந்த உக்ரேன் சுற்றுலாப் பயணிகளிடம் 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் 
PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதோடு, அவர்கள் ஹொட்டல்களில் தங்குவதற்கு முன்னரும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படவிருக்கிறார்கள். அவர்கள் 10 நாட்கள் இலங்கையில் தங்கவிருக்கிறார்கள். இந்த சுற்றுலாப் பயணிகள் கொக்கல பிரதேசத்தில் உள்ள ஹொட்டல்களில் தங்கவுள்ளதோடு, அவர்களுக்கு பொதுமக்கள் உள்ள பகுதிகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது. 
 சுற்றுலாப் பயணிகளை அழைத்துவரும் முன்னோட்ட நடவடிக்கை அடுத்த மாதம் 24ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. ரஷ்ய பிராந்தியத்தில் உள்ள நாடுகளிலிருந்து 2,580 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வரவிருப்பதாக மத்தள விமான நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
(அ.த.தி)
9 மாதங்களின் பின்னர் இலங்கையைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் 9 மாதங்களின் பின்னர் இலங்கையைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் Reviewed by irumbuthirai on December 28, 2020 Rating: 5

உயர் தர விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடர்பாக...

December 28, 2020

2020 இல் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணிகள் ஜனவரி மாதம் 15ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார். 05 கட்டங்களின் கீழ் 17 நகரங்களில் இந்த பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். 
உயர்தரப் பரீட்சை விடைகளை மதிப்பீடு செய்யும் பணிகள் கடந்த மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.
உயர் தர விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடர்பாக... உயர் தர விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடர்பாக... Reviewed by irumbuthirai on December 28, 2020 Rating: 5

க.பொ.த. (சா/த) மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சை தொடர்பான அறிவிப்பு

December 28, 2020

2020ம் வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் மார்ச் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதற்கான முன்னோடிப் பரீட்சை ஜனவரியில் ஆரம்பமாகவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித் தெரிவித்துள்ளார். 
11 பாடங்களுக்கான முன்னோடிப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
க.பொ.த. (சா/த) மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சை தொடர்பான அறிவிப்பு க.பொ.த. (சா/த) மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சை தொடர்பான அறிவிப்பு  Reviewed by irumbuthirai on December 28, 2020 Rating: 5

Vacancy: Sri Lankan Airlines

December 28, 2020

Vacancy: Sri Lankan Airlines - Sri Lankan Catering. 
Closing date: 14 days from 20-12-2020. 
See the details below.
Source: 20-12-2020 Sunday Observer.

Vacancy: Sri Lankan Airlines Vacancy: Sri Lankan Airlines Reviewed by irumbuthirai on December 28, 2020 Rating: 5

Vacancy: The Institution of Engineers

December 28, 2020

Vacancy: The Institution of Engineers. 
Closing date: 14 days from 20-12-2020. 
See the details below.
Source: 20-12-2020 Sunday Observer.

Vacancy: The Institution of Engineers Vacancy: The Institution of Engineers Reviewed by irumbuthirai on December 28, 2020 Rating: 5

Vacancies: Sri Lanka Army.

December 28, 2020

Vacancies in the Sri Lanka Army. 
Closing date: 08-01-2021. 
See the details below.
Source: 20-12-2020 Sunday Observer.

Vacancies: Sri Lanka Army. Vacancies: Sri Lanka Army. Reviewed by irumbuthirai on December 28, 2020 Rating: 5
Powered by Blogger.