ஜனவரி 15-ல் ஆசிரிய நியமனம்?


ஜனவரி 15ஆம் தேதி டிப்ளமாதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்பட இருப்பதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளதாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
தேசிய கல்வியியற் கல்லூரிகளில் டிப்ளோமா முடித்த 3,772 பேர்களுக்கே இவ்வாறு நியமனம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
திறமைச் சித்தி உடையவர்களுக்கு தேசிய பாடசாலைகளுக்கும் ஏனையவர்களுக்கு அந்த மாவட்டத்திலேயே 
நியமனம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 ஆனால் ஜனவரி 15 நியமனம் வழங்கப்படும் என்ற விடயத்தில் தமக்கு நம்பிக்கை இல்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார். ஏனெனில் இது தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் கல்வி அமைச்சு வெளியிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 15-ல் ஆசிரிய நியமனம்? ஜனவரி 15-ல் ஆசிரிய நியமனம்? Reviewed by irumbuthirai on January 01, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.