இலங்கையிலும் மிகவும் வீரியம் கூடிய கொரோனா தொற்றாளர் கண்டுபிடிப்பு


மிகவும் வீரியம் கூடிய கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் அடையாளம் காணப்பட்டதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 
தம்புள்ளை சந்தைக்கு சென்று மரக்கறிகளை கொள்வனவு செய்து வந்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இவர் 37 வயதுடைய ஆண் ஆவார். 
இதனால் அவரோடு தொடர்பிலே இருந்தவர்கள் தங்களது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியுடன் தொடர்புகொண்டு PCR பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டும் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார். 
இதேவேளை தொற்றுறுதியான 
நபருடன் தொடர்புடைய 65 பேரும், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 129 பேரும் என மொத்தமாக 194 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ள போதிலும் ஏற்கனவே நாட்டில் காணப்படும் வைரஸ் மாற்றமடைந்து ஆபத்தானதாக மாறுவதை தடுக்கமுடியாது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையிலும் மிகவும் வீரியம் கூடிய கொரோனா தொற்றாளர் கண்டுபிடிப்பு இலங்கையிலும் மிகவும் வீரியம் கூடிய கொரோனா தொற்றாளர் கண்டுபிடிப்பு Reviewed by irumbuthirai on December 29, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.