சான்றிதழ் பெற்ற இலங்கையின் வயது கூடிய பெண்மணி மரணம்


இலங்கையின் அதிகூடிய வயதை கொண்ட பெண்மணி களுத்துறை நாவல பெரிய வைத்தியசாலையில் நேற்று (29) காலமானார். 
தொடாங்கொடை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மெஹின்ன கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த வேலு பாப்பாத்தி என்ற 117 வயது மூதாட்டியை இவ்வாறு மரணமானார். 
1903-மே-3ஆம் திகதி பிறந்த இவர் பெருபான்மை இனத்தவரை 
திருமணம் செய்துள்ளதுடன் இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். 
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி சர்வதேச முதியோர் தினத்தில் முதியோருக்கான தேசிய சபை நாட்டின் ஆகக்கூடிய வயதை கொண்ட பெண் என்ற சான்றிதழை இவருக்கு வழங்கியுள்ளது. 
அரசாங்கத்தினால் வழங்கப்படும் முதியோர் அடையாள அட்டையில் இவரது வயது குறிப்பிடப்பட்டுள்ளது.
சான்றிதழ் பெற்ற இலங்கையின் வயது கூடிய பெண்மணி மரணம் சான்றிதழ் பெற்ற இலங்கையின் வயது கூடிய பெண்மணி மரணம் Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.