அமைச்சர் அலி சப்ரியிடம் கையளிக்கப்பட்ட இறுதி அறிக்கை


அண்மையில் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான விடயங்களை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நீதி அமைச்சர் அலி சப்ரி, முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி குஸலா சரோஜினி வீரவர்தன தலைமையில் குழுவை கடந்த மாதம் 29ஆம் திகதி நியமித்தார். 
குழுவின் இடைக்கால அறிக்கை கடந்த 7ஆம் திகதி (2020.12.07) கையளிக்கப்பட்டது. 
அதன் இறுதி அறிக்கையை குழுவின் தலைவர் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி குஸலா சரோஜினி வீரவர்தன தலைமையில் இன்று 
நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியிடம் கையளித்தது. 
மஹர சிறைச்சாலை கலவரத்தின்போது 11 கைதிகள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் அலி சப்ரியிடம் கையளிக்கப்பட்ட இறுதி அறிக்கை அமைச்சர் அலி சப்ரியிடம் கையளிக்கப்பட்ட இறுதி அறிக்கை Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.