Vacancy (Parliament of Sri Lanka)

July 31, 2021

Vacancy (Parliament of Sri Lanka) 
Closing date: 22-08-2021. 
See the details below.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட ...
Vacancy (Parliament of Sri Lanka) Vacancy (Parliament of Sri Lanka) Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5

அரச ஊழியர்களை கடமைக்கு அழைத்தல்: கல்வியமைச்சின் அறிவித்தல்!

July 31, 2021

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளரால் அனுமதி வழங்கப்பட்டால் மாத்திரமே ஆசிரியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 
எனவே அரச ஊழியர்களை வழமை போன்று கடமைகளுக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபம் ஆசிரியர்களுக்கு பொருந்தாது எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களை கடமைக்கு அழைத்தல்: கல்வியமைச்சின் அறிவித்தல்! அரச ஊழியர்களை கடமைக்கு அழைத்தல்: கல்வியமைச்சின் அறிவித்தல்! Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5

30-07-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

July 31, 2021

30-07-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official Government Gazette released on 30-07-2021. 
இதில்,
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாக பார்வையிடுக. 

தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

இதற்கு முன்னர் வெளிவந்த வர்த்தமானிகளைப் பார்வையிட ...
30-07-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 30-07-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5

கொத்தலாவல பல்கலைக்கழக பீடமாக மாற்றப்பட்ட நிறுவனம்:

July 31, 2021

அமைச்சுக்கள் சிலவற்றின் விடயதானங்களில் மாற்றம் செய்து நேற்றைய தினம் ஜனாதிபதியினால் அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது. 

மிலோதா ( Miloda) எனப்படும் Academy of Financial Studies என்ற நிறுவனம் புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பீடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னர் இந்த நிறுவனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் 
தனிப்பட்ட ஒரு நிறுவனமாக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு பூராகவும் பல்வேறு தரப்பினர் பல வகைகளிலும் போராட்டங்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொத்தலாவல பல்கலைக்கழக பீடமாக மாற்றப்பட்ட நிறுவனம்: கொத்தலாவல பல்கலைக்கழக பீடமாக மாற்றப்பட்ட நிறுவனம்: Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5

கொவிஷீல்ட் தடுப்பூசி: இலங்கையில் செய்யப்பட்ட ஆய்வின் முடிவு வெளியானது!

July 31, 2021

பல்வேறு கொரோனா தடுப்பூசிகள் தொடர்பாக ஆய்வுகள் செய்யப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்படுகின்றமை தற்சமயம் பெரும்பாலான நாடுகளில் இடம்பெறும் விடயமாகும். 

அந்த வகையில் கொவிஷீல்ட் தடுப்பூசி தொடர்பாக செய்யப்பட்ட ஆய்வின் முடிவை ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர அறிவித்துள்ளார். 
அதாவது இந்த தடுப்பூசியின் முதல் டோஸை மாத்திரம் செலுத்திக் கொண்டவர்களுக்கு 93.4% நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதாகவும் நடுநிலையாக்கும் பிறபொருள் எதிரிகள் (developed neutralizing antibodies) 97.1 % மாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும் முதல் டோஸ் செலுத்தி 16 வாரங்களின் பின்னர் நோய் எதிர்ப்பு சக்தியில் மாற்றம் இல்லாத போதிலும், நடுநிலையாக்கும் பிறபொருள் எதிரிகள் 26% ஆல் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஆனால் 2வது டோஸ் செலுத்திக் கொண்டவுடன் அது மீண்டும் வழமைக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கொவிஷீல்ட் தடுப்பூசி: இலங்கையில் செய்யப்பட்ட ஆய்வின் முடிவு வெளியானது! கொவிஷீல்ட் தடுப்பூசி: இலங்கையில் செய்யப்பட்ட ஆய்வின் முடிவு வெளியானது! Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5

புதிய பாதையில் போராட்டத்தை முன்னெடுப்போம் - ஜோசப் ஸ்டாலின்

July 31, 2021

தங்களுக்கு பிரச்சினைகளுக்கு எதிர்வரும் திங்கட் கிழமை (2) உரிய தீர்வு கிடைக்காவிட்டால் புதிய பாதையில் தங்களது போராட்டம் முன்னெடுக்கப்படுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஏற்கனவே கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய பாதையில் போராட்டத்தை முன்னெடுப்போம் - ஜோசப் ஸ்டாலின் புதிய பாதையில் போராட்டத்தை முன்னெடுப்போம் - ஜோசப் ஸ்டாலின் Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5

புதிய ஒலிம்பிக் சாதனை படைத்த ஜமைக்கா!

July 31, 2021

ஒலிம்பிக் 100M ஓட்டப்போட்டியில் ஜமைக்கா பல்வேறு சாதனைகளை படைப்பது வழமை. 
இதற்கு முன்னர் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலும் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் உசைன் போல்ட் சாதனைகளை நிகழ்த்தியது அறிந்ததே. 
அந்தவகையில் இம்முறை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 
பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஜமைக்கா மீண்டும் சாதனை படைத்துள்ளது. 
இன்று நடைபெற்ற பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஜமைக்கா வீராங்கனை எலைன் தாம்சன்-ஹெரா 10.61 வினாடிகளில் ஓடி முடித்து தங்கம் வென்றார். 
இதற்கு முன்னர் 10.62 வினாடிகளே இந்த போட்டிக்கு சாதனையாக இருந்தது. அது அமெரிக்க வீராங்கனை பிளோரன்ஸ் நிகழ்த்திய சாதனையாகும். அதனை தற்போது ஜமைக்கா முறியடித்துள்ளது.
புதிய ஒலிம்பிக் சாதனை படைத்த ஜமைக்கா! புதிய ஒலிம்பிக் சாதனை படைத்த ஜமைக்கா! Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5

Vacancy (Civil Aviation Authority of Sri Lanka)

July 31, 2021

Vacancy (Civil Aviation Authority of Sri Lanka) 
ICT Director. 
Closing date: 09-08-2021.
See the details below.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட 
Vacancy (Civil Aviation Authority of Sri Lanka) Vacancy (Civil Aviation Authority of Sri Lanka) Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5

Vacancies (Development Lotteries Board)

July 31, 2021

Vacancies (Development Lotteries Board) 
Closing date: 13-08-2021. 
See the details below.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...
Vacancies (Development Lotteries Board) Vacancies (Development Lotteries Board) Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5

கொரியாவிலிருந்து மரண அச்சுறுத்தல்: ஆசிரியர் சேவை சங்க செயலாளர் வெளியிட்ட தகவல்! (தொலைபேசி இலக்கம் இணைப்பு)

July 31, 2021

கொரிய நாட்டிலிருந்து வந்த அழைப்பு ஒன்றின் மூலமாக தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் தூஷண வார்த்தைகளால் கடுமையாக ஏசி நடுத்தெருவில் கொண்டு போடுவதாக அச்சுறுத்தியதாகவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார். 
இதேவேளை ஜோசப் ஸ்டாலின் மற்றும் தனக்கு எதிராக 
பல்வேறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முகநூல் வாயிலாக முன்வைத்து சேறுபூசும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். 
தாம் இறுதிவரை போராடும் உறுதியோடு இருப்பதாகவும் தலைவர்களை கொலை செய்தோ மிரட்டியோ சிறையிலடைத்தோ இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்பதை நினைவுபடுத்த விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 
தனக்கு கொரியாவில் இருந்து வந்த தொலைபேசி இலக்கத்தை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அந்த இலக்கம் இதோ! +821076752216.
கொரியாவிலிருந்து மரண அச்சுறுத்தல்: ஆசிரியர் சேவை சங்க செயலாளர் வெளியிட்ட தகவல்! (தொலைபேசி இலக்கம் இணைப்பு) கொரியாவிலிருந்து மரண அச்சுறுத்தல்: ஆசிரியர் சேவை சங்க செயலாளர் வெளியிட்ட தகவல்! (தொலைபேசி இலக்கம் இணைப்பு) Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5

நீடிக்கப்பட்டது உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப திகதி! (விண்ணப்பம் இணைப்பு)

July 31, 2021

2021 ற்கான உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப திகதி நீடிக்கப்பட்டுள்ளது. 

புதிய விண்ணப்ப முடிவு திகதி: 06-08-2021

முக்கிய விடயம்: அரச பாடசாலைகளில் கற்றுக்கொண்டு தனிப்பட்ட முறையில் விண்ணப்பிப்பது முற்றாகத் தடை. அவ்வாறு செய்தால் பெறுபேறு ரத்து செய்யப்படுவதோடு பரீட்சை தடையும் விதிக்கப்படும். 

Online விண்ணப்பத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
நீடிக்கப்பட்டது உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப திகதி! (விண்ணப்பம் இணைப்பு) நீடிக்கப்பட்டது உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப திகதி! (விண்ணப்பம் இணைப்பு) Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5

Vacancies (People's Bank)

July 31, 2021


Vacancies (People's Bank) 
Closing date: 09-08-2021. 
See the details below.




ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட ...
Vacancies (People's Bank) Vacancies (People's Bank) Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5

Vacancies (Sri Lanka Army)

July 31, 2021

Vacancies (Sri Lanka Army)  
35 types of vacancies. 
Closing date: 13-08-2021. 
See the details below.


ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட ...
Vacancies (Sri Lanka Army) Vacancies (Sri Lanka Army) Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5

Vacancies in Israel (Home Based Care Givers)

July 30, 2021

Vacancies in Israel (Home Based Care Givers) 

Only 500 vacancies 

No charges (Free) 

Closing date: 27-09-2021.

Application method: Online 

More details & Application: 

See the details below.


ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட ...
Vacancies in Israel (Home Based Care Givers) Vacancies in Israel (Home Based Care Givers) Reviewed by irumbuthirai on July 30, 2021 Rating: 5

Vacancies: NSBM Green University

July 30, 2021

Vacancies: NSBM Green University 
Closing date: 08-08-2021. 
See the details below.


ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட ....
Vacancies: NSBM Green University Vacancies: NSBM Green University Reviewed by irumbuthirai on July 30, 2021 Rating: 5

சகல அரச ஊழியர்களும் பணிக்கு திரும்ப உத்தரவு! வெளியானது அறிவித்தல்!

July 30, 2021

சகல அரச ஊழியர்களும் வழமைபோன்று கடமைக்கு திரும்ப வேண்டும் என அழைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 
அந்த வகையில் ஆகஸ்ட் 
2 ஆம் திகதி முதல் சகல அரச ஊழியர்களும் வழமைபோன்று கடமைக்கு திரும்ப வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தலை ஜனாதிபதியின் செயலாளர் அரச நிறுவன பிரதானிகளுக்கு விடுத்துள்ளார். 
மேலும் குறைந்த ஊழியர்களைக் கொண்டு கடமைகளை மேற்கொள்வது தொடர்பாக இதற்கு முன்னர் வெளியான சுற்றுநிருபங்கள் மற்றும் அறிவித்தல்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சகல அரச ஊழியர்களும் பணிக்கு திரும்ப உத்தரவு! வெளியானது அறிவித்தல்! சகல அரச ஊழியர்களும் பணிக்கு திரும்ப உத்தரவு! வெளியானது அறிவித்தல்! Reviewed by irumbuthirai on July 30, 2021 Rating: 5

Vacancy (American Embassy - Colombo)

July 30, 2021

Vacancy (American Embassy - Colombo) 
Monthly salary: 82,050/- 
Post: Plumbing Maintenance Worker (Male/Female) 
Closing date: 04-08-2021.
 See the details below.


Vacancy (American Embassy - Colombo) Vacancy (American Embassy - Colombo) Reviewed by irumbuthirai on July 30, 2021 Rating: 5

கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில் கல்வியமைச்சின் அறிவிப்பு!

July 30, 2021

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு 2021-2023 கல்வியாண்டுக்கான நேர்முகப் பரீட்சை மற்றும் தெரிவு நடவடிக்கைகள் என்பன தற்போது நாட்டில் நிலவும் கொரோனா நிலை சுமுகமானதும் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 
அதன் பின்னர் மாணவர் பதிவு, திசைமுகப்படுத்தல், கல்வி நடவடிக்கைகள் என்பன சுகாதார முறைப்படி இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில் கல்வியமைச்சின் அறிவிப்பு! கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில் கல்வியமைச்சின் அறிவிப்பு! Reviewed by irumbuthirai on July 30, 2021 Rating: 5

தேசிய கல்வியியற் கல்லூரி பரீட்சை தொடர்பான அறிவித்தல்!

July 30, 2021

தேசிய கல்வியற் கல்லூரியின் இறுதி பரீட்சை தொடர்பான அறிவித்தலை இலங்கை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 

தற்போதைய நிலையில் தேசிய கல்வியற் கல்லூரிகள் Covid-19 பரிகார மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களாக பயன்படுத்தப்படுவதால் பாடசாலைகளில் இந்த பரீட்சை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பரீட்சைக்கான திகதிகள் வருமாறு: 
2021 ஆகஸ்ட் 28,29 மற்றும் செப்டம்பர் 04,05,11,12 ஆகிய தினங்களில் பரீட்சை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்வியியற் கல்லூரி பரீட்சை தொடர்பான அறிவித்தல்! தேசிய கல்வியியற் கல்லூரி பரீட்சை தொடர்பான அறிவித்தல்! Reviewed by irumbuthirai on July 30, 2021 Rating: 5

பரீட்சை திணைக்களத்தால் 2021 ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (திருத்தியமைக்கப்பட்ட நாட்காட்டி மும்மொழிகளிலும் இணைப்பு)

July 30, 2021

Amended exam calendar for the month of August, 2021. 

2021 ஆகஸ்ட் மாதத்தில் பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்படவிருக்கும் பரீட்சைகள் தொடர்பான திருத்தியமைக்கப்பட்ட நாட்காட்டியை இங்கு தருகிறோம். 

தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
பரீட்சை திணைக்களத்தால் 2021 ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (திருத்தியமைக்கப்பட்ட நாட்காட்டி மும்மொழிகளிலும் இணைப்பு) பரீட்சை திணைக்களத்தால் 2021 ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (திருத்தியமைக்கப்பட்ட நாட்காட்டி மும்மொழிகளிலும் இணைப்பு) Reviewed by irumbuthirai on July 30, 2021 Rating: 5

தரம்:04 ஆங்கிலம் (இலகு முறையில்)

July 29, 2021

தரம்: 04 ற்குரிய ஆங்கிலம் என்ற பாடம் இலகு முறையில் இங்கு தரப்படுகிறது. இதில்,

கற்றலில் ஆர்வத்தை தூண்டும் வகையில் இலகுவான எளிமையான முறையில் வடிவமைப்பு, 

படங்கள் மூலமும் விளையாட்டு மூலமும் விளக்கங்கள், 

மாணவர்கள் சுயமாக கற்கவும் அதை தாமே பயிற்சி செய்து தாமே சரிபார்க்கவும், 

ஆங்கில வசனங்களை பூர்த்தியாக்கும் முறை போன்ற பல விடயங்கள் காணப்படுகின்றன. 

இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
தரம்:04 ஆங்கிலம் (இலகு முறையில்) தரம்:04 ஆங்கிலம் (இலகு முறையில்) Reviewed by irumbuthirai on July 29, 2021 Rating: 5

தரம்: 04 சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் (இலகு முறையில்)

July 29, 2021

தரம்:04 சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் என்ற பாடம் இலகு முறையில் இங்கு தரப்படுகிறது. 
இது, 

இலகுவான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மாணவர்கள் சுயமாக கற்கவும் அதை பயிற்சி செய்து தாமே சரிபார்க்கவும் முடியும். 

கற்றலில் ஆர்வத்தை தூண்டும் வகையில் வடிவமைப்பு. 

இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
தரம்: 04 சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் (இலகு முறையில்) தரம்: 04 சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் (இலகு முறையில்) Reviewed by irumbuthirai on July 29, 2021 Rating: 5

தனிமைப்படுத்தப்பட்ட விமல் வீரவன்ச!

July 29, 2021

தன்னுடைய பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக கடமையாற்றி பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து தான் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தளில் இருப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 
தனது முகநூல் பக்கத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட விமல் வீரவன்ச! தனிமைப்படுத்தப்பட்ட விமல் வீரவன்ச! Reviewed by irumbuthirai on July 29, 2021 Rating: 5

பகிரங்க விவாதத்திற்கு வர முடியுமா? சரத் வீரசேகரவிற்கு சவால் விட்ட ஹரின்!

July 29, 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தன்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவை ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ அழைத்துள்ளார். 
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு நேற்றைய தினம் (28) அழைக்கப்பட்டிருந்தார். அந்த வகையில் சுமார் 6 மணி நேரம் வாக்குமூலம் வழங்கி விட்டு 
வெளியேறிச் செல்லும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 
எந்த தொலைக்காட்சி அலைவரிசையாயினும் பரவாயில்லை உதவிக்கு அவர் யாரை அழைத்து வந்தாலும் பரவாயில்லை விவாதத்திற்கு வர தயாரா? என அவர் கேட்டுள்ளார். 
இதேவேளை பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணை செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பகிரங்க விவாதத்திற்கு வர முடியுமா? சரத் வீரசேகரவிற்கு சவால் விட்ட ஹரின்! பகிரங்க விவாதத்திற்கு வர முடியுமா? சரத் வீரசேகரவிற்கு சவால் விட்ட  ஹரின்! Reviewed by irumbuthirai on July 29, 2021 Rating: 5

03 வருட பயணத்தடை: சவுதியின் அதிரடி அறிவிப்பு!

July 29, 2021

மூன்று வருட பயணத் தடை விதிப்பது தொடர்பான சவுதி அரசின் அதிரடி தீர்மானம் தொடர்பில் அரசுக்கு சொந்தமான சவூதி பிரஸ் ஏஜென்சி (SPA) செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 

அதாவது இந்தியா உள்ளிட்ட சில நாடுகளை கொரோனா அபாய நாடுகளாக சவுதி அண்மையில் அறிவித்தது. 

அந்தப் பட்டியலில் இந்தியா, துருக்கி, எத்தியோப்பியா, சோமாலியா, காங்கோ, வெனிசூலா, பெலாரஸ், வியத்நாம், ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், 
ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா, லெபனான், யேமன், ஆா்மீனியா போன்ற நாடுகள் உள்ளடங்குகின்றன. எனவே இந்த நாடுகளுக்கு தமது நாட்டு பிரஜைகள் செல்ல வேண்டாம் எனவும் உத்தரவிட்டது. 

எனவே அரசின் வழிகாட்டுதல்களை மீறி, குறித்த நாடுகளுக்கு யாரேனும் சென்றால், அவா்களுக்கு மிகப் பெரிய தொகை அபராதம் விதிக்கப்படும். அத்துடன், 3 ஆண்டுகளுக்கு அவா்கள் வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. 

இது நோய்த் தடுப்பு கட்டுப்பாட்டு விதிமுறைகளையும் சவூதி அரசின் வழிகாட்டுதல்களையும் மீறும் குற்றமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
03 வருட பயணத்தடை: சவுதியின் அதிரடி அறிவிப்பு! 03 வருட பயணத்தடை: சவுதியின் அதிரடி அறிவிப்பு! Reviewed by irumbuthirai on July 29, 2021 Rating: 5

கல்வி அமைச்சு: இலங்கை பாடசாலை கட்டமைப்பு தொடர்பான முழுமையான புள்ளிவிபரங்கள் / School Census - 2020

July 28, 2021

2020 வருட தகவல்களின்படி இலங்கையில் உள்ள ஒட்டு மொத்த அரச பாடசாலைகளின் கட்டமைப்பு தொடர்பான முழுமையான புள்ளிவிவர தகவல்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 

கல்வித்துறை சார்ந்த பல்வேறு போட்டிப் பரீட்சைகளுக்கு இதில் உள்ள தகவல்கள் உதவலாம். 

மொத்த பாடசாலைகள், தேசிய பாடசாலைகள், மாகாண பாடசாலைகள், ஆண்கள் பாடசாலைகள், பெண்கள் பாடசாலைகள், 
கலவன் பாடசாலைகள், தமிழ் மொழி மூல பாடசாலைகள், சிங்கள மொழி மூல பாடசாலைகள், கலப்பு மொழி மூல பாடசாலைகள், ஆண் ஆசிரியர்கள், பெண் ஆசிரியர்கள், தகைமை களுக்கேற்ப ஆசிரியர்களின் எண்ணிக்கை போன்றவை மாத்திரமன்றி இன்னும் பல புள்ளிவிபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 

குறித்த தொகை மதிப்பு புள்ளி விபரங்கள் தொடர்பான முழுமையான அறிக்கையை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
கல்வி அமைச்சு: இலங்கை பாடசாலை கட்டமைப்பு தொடர்பான முழுமையான புள்ளிவிபரங்கள் / School Census - 2020 கல்வி அமைச்சு: இலங்கை பாடசாலை கட்டமைப்பு தொடர்பான முழுமையான புள்ளிவிபரங்கள் / School Census - 2020 Reviewed by irumbuthirai on July 28, 2021 Rating: 5

அதிபர், ஆசிரியர்களின் பிரச்சனைக்கான தீர்வு தொடர்பாக பிரதமரின் அறிவிப்பு

July 28, 2021

எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் முரண்பாடுகள் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (27) தெரிவித்தார். 

அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அதற்கமைய எதிர்வரும் திங்கள் முதல் மீண்டும்  பணியாற்றுவதற்கு தயாராகுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொழிற்சங்கத்தினரிடம் தெரிவித்தார். 

இந்த சம்பள முரண்பாடுகள் 24 வருட காலமாக காணப்படுகின்ற போதிலும் இதுவரை ஒரு நியாயமான தீர்வு கிடைக்கவில்லை என்றும், தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து தெளிவான புரிந்துணர்வை கொண்டிருப்பதால் ஒரே தடவையில் சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள முடியாவிடினும், சம்பள முரண்பாட்டை குறைப்பதற்கு விளக்க அறிக்கையின்படி கொள்கை தீர்மானமொன்றை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் இதன்போது வேண்டுகோள் விடுத்தனர். 

இதற்கு  கருத்து தெரிவித்த பிரதமர், 
அதிபர், மற்றும் ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பில் நான் தெளிவான புரிதலை கொண்டுள்ளேன். ஒரு அரசாங்கம் என்ற வகையில் சம்பள முரண்பாட்டை குறைப்பது அவசியம் என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் உலகளாவிய நிலைமை காரணமாக நாட்டின் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சி மட்டத்தில் காணப்படுவதால் அரசாங்கத்தினால் விரைவில் சம்பள அதிகரிப்பை மேற்கொள்வது முடியாத விடயம் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். 

உங்களது பிரச்சினை தொடர்பில் கல்வி அமைச்சர் சென்ற திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்தார். அமைச்சரவையில் நான் அதிபர், ஆசிரியர்களுக்காக முன்நிற்பேன். இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம். எனினும் சம்பள ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி சம்பளம் வழங்குவது தொடர்பில் தீர்மானிக்கப்பட வேண்டும் என கௌரவ பிரதமர் சுட்டிக்காட்டினார். 

சமூக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் பரப்பப்படுவதாக சுட்டிக்காட்டிய தொழிற்சங்க பிரதிநிதிகள், சம்பள முரண்பாடு குறித்த விளக்க அறிக்கைக்கு தொழிற்சங்கங்கள் உடன்படுவதாகவும், அதன் உள்ளடக்கங்கள் அமைச்சரவை பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை என்றும் கூறினர். 

இதற்கு பதிலளித்து உரையாற்றிய கல்வி அமைச்சர் G.L.பீரிஸ், அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பிலான உச்சநீதிமன்ற தீர்ப்பு, அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானம் மற்றும் விளக்க அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 
அதிபர், ஆசிரியர் சேவையை வரைவிட்ட சேவையாக (மூடிய சேவை - Closed Service) பிரகடனப்படுத்துவதன் நோக்கம் பிற அரச சேவைகளின் சம்பள அளவுகோள்களை பாதிக்காத வகையில் அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டை குறைத்தலாகும் எனவும், இதுவரை அதிபர், ஆசிரியர் சேவையை வரைவிட்ட சேவையாக மாற்றுவதற்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் சில மாதங்கள் ஆய்வு செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட வரைவை சமர்ப்பித்து கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 

கடந்த ஐந்து ஆண்டு காலப்பகுதியில் காணப்பட்ட அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பில் கௌரவ பிரதமரின் தலையீட்டிற்கு இதன்போது தொழிற்சங்க பிரதிநிதிகள் தங்களது நன்றியினை தெரிவித்தனர். 

குறித்த கலந்துரையாடலில், அமைச்சர்களான பேராசிரியர் G.L.பீரிஸ், விமல் வீரவங்ச, ரமேஷ் பதிரண, காமினி லொகுகே, பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, லசந்த அழகியவன்ன, பிரதமரின் மேலதிக செயலாளர் பேராசிரியர் கபில C.K.பெரேரா, கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சின் செயலாளர் கலாநிதி M. உபாலி சேதர உள்ளிட்ட அதிபர் சேவையை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
Source: thaitv.
அதிபர், ஆசிரியர்களின் பிரச்சனைக்கான தீர்வு தொடர்பாக பிரதமரின் அறிவிப்பு அதிபர், ஆசிரியர்களின் பிரச்சனைக்கான தீர்வு தொடர்பாக பிரதமரின் அறிவிப்பு Reviewed by irumbuthirai on July 28, 2021 Rating: 5

இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையில் (SLTES) இணைப்பதற்கான போட்டிப் பரீட்சை

July 28, 2021

இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் 111 ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கான திகதியை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 
அந்தவகையில் எதிர்வரும் ஆகஸ்ட் 29ஆம் திகதி நாட்டில் உள்ள 09 மாகாணங்களின் பிரதான நகரங்களில் இந்தப் பரீட்சை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையில் (SLTES) இணைப்பதற்கான போட்டிப் பரீட்சை இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையில் (SLTES)  இணைப்பதற்கான போட்டிப் பரீட்சை Reviewed by irumbuthirai on July 28, 2021 Rating: 5

Results Released (EB Exam for Management Service Officer - 111)

July 28, 2021

Efficiency Bar (EB) examination for officers in grade 111 of Management Service Officers exam results. 
Exame held: 2020-09-27. 
Click the link below for results sheet.
Results Released (EB Exam for Management Service Officer - 111) Results Released (EB Exam for Management Service Officer - 111) Reviewed by irumbuthirai on July 28, 2021 Rating: 5

LLB Selection Test date (Open University) / சட்டமானி பட்டப்படிப்பிற்கான தெரிவுப் பரீட்சை (திறந்த பல்கலைக்கழகம்)

July 28, 2021

Selection test for the LLB Degree programme of the Open University of Sri Lanka - 2021. 

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமானி பட்டப் படிப்பிற்காக சேர்த்துக் கொள்வதற்கான தெரிவு பரீட்சைக்குரிய திகதியை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 
அந்தவகையில் ஆகஸ்ட் 21ஆம் திகதி நாட்டில் உள்ள 09 மாகாணங்களின் பிரதான நகரங்களில் இந்தப் பரீட்சை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
LLB Selection Test date (Open University) / சட்டமானி பட்டப்படிப்பிற்கான தெரிவுப் பரீட்சை (திறந்த பல்கலைக்கழகம்) LLB Selection Test date (Open University)  / சட்டமானி பட்டப்படிப்பிற்கான தெரிவுப் பரீட்சை (திறந்த பல்கலைக்கழகம்) Reviewed by irumbuthirai on July 28, 2021 Rating: 5

பரீட்சை திணைக்களத்தால் 2021 ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மூன்று மொழிகளிலும்)

July 28, 2021

பரீட்சை திணைக்களத்தால் 2021 ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும் பரீட்சைகளுக்கான நாட்காட்டியை மூன்று மொழிகளிலும் இங்கு தருகிறோம். 
Examination calendar for the month of August, 2021 

தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
பரீட்சை திணைக்களத்தால் 2021 ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மூன்று மொழிகளிலும்) பரீட்சை திணைக்களத்தால் 2021 ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மூன்று மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on July 28, 2021 Rating: 5

செயலிழக்கும் சினோவெக் தடுப்பூசி: ஆய்வில் வெளியான தகவல்!

July 27, 2021

சீனாவினால் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசியான சினோவெக் (Sinovac) தடுப்பூசி தொடர்பான ஆய்வொன்றை சீனாவைச் சேர்ந்த ஆய்வுக்குழுவொன்று மேற்கொண்டது. 
அதாவது 18 - 59 வயதுக்குட்பட்டவர்களை ஆய்வு செய்த பொழுது அதிர்ச்சியளிக்கும் விடயம் அவதானிக்கப்பட்டுள்ளது. அதாவது சினோவெக் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தி 6 மாதங்களில் உடலில் எதிர்ப்பு சக்தி 
35% என்ற குறைவான அளவே எஞ்சியிருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. 
எவ்வாறாயினும் மீண்டும் ஒருமுறை தடுப்பூசி செலுத்தும் பட்சத்தில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. 
எனவே தற்போது தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவில் இவ்வாறு சினோவெக் 2 தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைஸர் அல்லது மொடர்னாவும் துருக்கியிலும் மூன்றாவது தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசியை பயன்படுத்தும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செயலிழக்கும் சினோவெக் தடுப்பூசி: ஆய்வில் வெளியான தகவல்! செயலிழக்கும் சினோவெக் தடுப்பூசி: ஆய்வில் வெளியான தகவல்! Reviewed by irumbuthirai on July 27, 2021 Rating: 5

பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் ஒன்லைன் (Online) கற்பித்தலிலிருந்து விலகல்!

July 27, 2021

பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் நாளைய தினம் Online கற்பித்தலில் இருந்து விலக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே நாளைய தினம் இவ்வாறு பகிஷ்கரிப்பை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் ஒன்லைன் (Online) கற்பித்தலிலிருந்து விலகல்! பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் ஒன்லைன் (Online) கற்பித்தலிலிருந்து விலகல்! Reviewed by irumbuthirai on July 27, 2021 Rating: 5

பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை: முடிவை அறிவித்தார் ஜோசப் ஸ்டாலின்:

July 27, 2021

அதிபர், ஆசிரியர் சங்கங்களுக்கும் பிரதமருக்குமிடையிலான பேச்சுவார்த்தை இன்று (27) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. 
சுமார் 2 மணி நேர கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், 
பிரதமருடனான பேச்சுவார்த்தை எந்தவித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்ததாகவும் எனவே தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை: முடிவை அறிவித்தார் ஜோசப் ஸ்டாலின்: பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை: முடிவை அறிவித்தார் ஜோசப் ஸ்டாலின்: Reviewed by irumbuthirai on July 27, 2021 Rating: 5

26-07-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

July 27, 2021

26-07-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. இதன் முழு வடிவத்தைப் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


முன்னைய அமைச்சரவை கூட்ட தீர்மானங்களை பார்வையிட ...
26-07-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 26-07-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on July 27, 2021 Rating: 5

உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலமாணிக்க கொத்தணி இலங்கையில் கண்டுபிடிப்பு!

July 27, 2021

உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீல மாணிக்க கொத்தணி (Star Sapphire Cluster) ஒன்று இலங்கையின் இரத்தினபுரி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
இரத்தினபுரி பகுதியில் வியாபாரி ஒருவர் தனது வீட்டுக்குப் பின்புறம் கிணறு தோண்டும் வேளையில் இந்த நட்சத்திர நீல மாணிக்க கொத்தணி கிடைத்துள்ளது. 
ஏறத்தாழ 510 Kg (2.5 மில்லியன் கரட்) நிறையுடைய இந்த கல்லின் பெறுமதி 
சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது இலங்கை நாணய பெறுமதியில் சுமார் 20 பில்லியன் ரூபா ஆகும். 
குறித்த நபர் இந்த கல்லிற்கு செரண்டிப் நீல மாணிக்கம் (Serendipity Sapphire) என பெயரிட்டுள்ளார்.
உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலமாணிக்க கொத்தணி இலங்கையில் கண்டுபிடிப்பு! உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலமாணிக்க கொத்தணி இலங்கையில் கண்டுபிடிப்பு! Reviewed by irumbuthirai on July 27, 2021 Rating: 5

தேசிய கல்வி நிறுவகத்திற்கு (NIE) 150 ஆசிரியர்கள்:

July 27, 2021

தேசிய கல்வி நிறுவகத்திற்கு (NIE) 150 ஆசிரியர்களின் சேவைகளைப் பெறல்: 

மேற்படி விடயம் தொடர்பாக நேற்றைய தினம் (26) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்தை இங்கு தருகிறோம். 

"21 ஆம் நூற்றாண்டில் எதிர்கொள்ள நேரிட்டுள்ள சவால்களுக்கு வெற்றிகரமான தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கு தேவையான நிபுணத்துவத்துடன் கூடிய மாணவர் பரம்பரையை நாட்டில் உருவாக்குவதற்குத் தேவையான கல்வி முறைமையை உருவாக்குவதற்காக மேற்கொள்ள வேண்டிய கல்வி மறுசீரமைப்பை அறிமுகப்படுத்துவதற்காக தேசிய கல்வி நிறுவகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 
குறித்த மறுசீரமைப்புக்கள் மூலமும் கற்பித்தல் மூலோபாயங்களில் விசேட மாற்றங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள மறுசீரமைப்பு 1,2,6,8 மற்றும் 10 ஆம் தரங்களுக்காக 2023 ஆம் ஆண்டிலும் 
3,4,5,7 மற்றும் 11 ஆம் தரங்களுக்காக 2024 ஆண்டிலும் அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 
குறித்த பணிகளுக்காக தற்போது தேசிய கல்வி நிறுவகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் போதுமனாதல்ல என்பதுடன், அதற்காக அரச பாடசாலைகளில் ஆசிரியர் சேவையிலுள்ள குறிப்பிட்ட பாடவிதானங்களுடன் தொடர்புடைய, தேர்ச்சியுடன் கூடிய அனுபவம் வாய்ந்த 150 ஆசிரியர்களை தேசிய கல்வி நிறுவகத்திற்கு இணைத்துக் கொள்வதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது."
Source : அரசாங்க தகவல் திணைக்களம்.
தேசிய கல்வி நிறுவகத்திற்கு (NIE) 150 ஆசிரியர்கள்: தேசிய கல்வி நிறுவகத்திற்கு (NIE) 150 ஆசிரியர்கள்: Reviewed by irumbuthirai on July 27, 2021 Rating: 5

எனது மகளின் பிரேதப் பரிசோதனையை செய்தவர் முஸ்லிம் வைத்தியர். அதனால் சந்தேகம் - ஹிஷாலினியின் தாய்

July 27, 2021
எனது மகளின் பிரேத பரிசோதனையை செய்தவர் ஒரு முஸ்லிம் வைத்தியர். அதனால் எனக்கு சந்தேகம் உள்ளது. எனவே அதனை மீண்டும் செய்ய வேண்டும் என ஹிஷாலினியின் தாய் தெரிவித்துள்ளார். 
தனது மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும் என கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்றைய தினம் (26) முறைப்பாடு செய்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
இதேவேளை ஹிசாலினியின் உடலை தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு நேற்றைய தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனது மகளின் பிரேதப் பரிசோதனையை செய்தவர் முஸ்லிம் வைத்தியர். அதனால் சந்தேகம் - ஹிஷாலினியின் தாய் எனது மகளின் பிரேதப் பரிசோதனையை செய்தவர் முஸ்லிம் வைத்தியர். அதனால் சந்தேகம் -  ஹிஷாலினியின் தாய் Reviewed by irumbuthirai on July 27, 2021 Rating: 5

புதிய கேஸ் சிலிண்டரின் (Gas Cylinder) 25 மாவட்டங்களுக்குமான விலை விபரங்கள்...

July 27, 2021

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 18 லீற்றர் (9.6 கிலோகிராம்) திரவவாயு சிலிண்டரின் (Liquefied Petroleum Gas - LPG) மாவட்ட ரீதியான அதிகூடிய சில்லரை விலை விஷேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.  
இதன்படி கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கு 1150/- ரூபாவும் யாழ்ப்பாணத்திற்கு 1259/- ரூபாவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

மேலும் புதிய Gas Cylinder இன் நிறை கிலோகிராமில் (Kg) குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் எனவும் குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

25 மாவட்டங்களுக்குமான விலை விபரங்களை கீழே காணலாம்.


புதிய கேஸ் சிலிண்டரின் (Gas Cylinder) 25 மாவட்டங்களுக்குமான விலை விபரங்கள்... புதிய கேஸ் சிலிண்டரின் (Gas Cylinder) 25 மாவட்டங்களுக்குமான விலை விபரங்கள்... Reviewed by irumbuthirai on July 27, 2021 Rating: 5
Powered by Blogger.