கொவிஷீல்ட் தடுப்பூசி: இலங்கையில் செய்யப்பட்ட ஆய்வின் முடிவு வெளியானது!


பல்வேறு கொரோனா தடுப்பூசிகள் தொடர்பாக ஆய்வுகள் செய்யப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்படுகின்றமை தற்சமயம் பெரும்பாலான நாடுகளில் இடம்பெறும் விடயமாகும். 

அந்த வகையில் கொவிஷீல்ட் தடுப்பூசி தொடர்பாக செய்யப்பட்ட ஆய்வின் முடிவை ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர அறிவித்துள்ளார். 
அதாவது இந்த தடுப்பூசியின் முதல் டோஸை மாத்திரம் செலுத்திக் கொண்டவர்களுக்கு 93.4% நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதாகவும் நடுநிலையாக்கும் பிறபொருள் எதிரிகள் (developed neutralizing antibodies) 97.1 % மாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும் முதல் டோஸ் செலுத்தி 16 வாரங்களின் பின்னர் நோய் எதிர்ப்பு சக்தியில் மாற்றம் இல்லாத போதிலும், நடுநிலையாக்கும் பிறபொருள் எதிரிகள் 26% ஆல் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஆனால் 2வது டோஸ் செலுத்திக் கொண்டவுடன் அது மீண்டும் வழமைக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கொவிஷீல்ட் தடுப்பூசி: இலங்கையில் செய்யப்பட்ட ஆய்வின் முடிவு வெளியானது! கொவிஷீல்ட் தடுப்பூசி: இலங்கையில் செய்யப்பட்ட ஆய்வின் முடிவு வெளியானது! Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.