பகிரங்க விவாதத்திற்கு வர முடியுமா? சரத் வீரசேகரவிற்கு சவால் விட்ட ஹரின்!


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தன்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவை ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ அழைத்துள்ளார். 
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு நேற்றைய தினம் (28) அழைக்கப்பட்டிருந்தார். அந்த வகையில் சுமார் 6 மணி நேரம் வாக்குமூலம் வழங்கி விட்டு 
வெளியேறிச் செல்லும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 
எந்த தொலைக்காட்சி அலைவரிசையாயினும் பரவாயில்லை உதவிக்கு அவர் யாரை அழைத்து வந்தாலும் பரவாயில்லை விவாதத்திற்கு வர தயாரா? என அவர் கேட்டுள்ளார். 
இதேவேளை பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணை செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பகிரங்க விவாதத்திற்கு வர முடியுமா? சரத் வீரசேகரவிற்கு சவால் விட்ட ஹரின்! பகிரங்க விவாதத்திற்கு வர முடியுமா? சரத் வீரசேகரவிற்கு சவால் விட்ட  ஹரின்! Reviewed by irumbuthirai on July 29, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.