கொரியாவிலிருந்து மரண அச்சுறுத்தல்: ஆசிரியர் சேவை சங்க செயலாளர் வெளியிட்ட தகவல்! (தொலைபேசி இலக்கம் இணைப்பு)


கொரிய நாட்டிலிருந்து வந்த அழைப்பு ஒன்றின் மூலமாக தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் தூஷண வார்த்தைகளால் கடுமையாக ஏசி நடுத்தெருவில் கொண்டு போடுவதாக அச்சுறுத்தியதாகவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார். 
இதேவேளை ஜோசப் ஸ்டாலின் மற்றும் தனக்கு எதிராக 
பல்வேறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முகநூல் வாயிலாக முன்வைத்து சேறுபூசும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். 
தாம் இறுதிவரை போராடும் உறுதியோடு இருப்பதாகவும் தலைவர்களை கொலை செய்தோ மிரட்டியோ சிறையிலடைத்தோ இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்பதை நினைவுபடுத்த விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 
தனக்கு கொரியாவில் இருந்து வந்த தொலைபேசி இலக்கத்தை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அந்த இலக்கம் இதோ! +821076752216.
கொரியாவிலிருந்து மரண அச்சுறுத்தல்: ஆசிரியர் சேவை சங்க செயலாளர் வெளியிட்ட தகவல்! (தொலைபேசி இலக்கம் இணைப்பு) கொரியாவிலிருந்து மரண அச்சுறுத்தல்: ஆசிரியர் சேவை சங்க செயலாளர் வெளியிட்ட தகவல்! (தொலைபேசி இலக்கம் இணைப்பு) Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.