மனம் பதற்றமாகி இதயத்துடிப்பு அதிகரிக்கும் போது என்ன செய்ய வேண்டும்?

August 21, 2021

சென்னையைச் சேர்ந்த 30 வயதான குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது இதயத்தில் கோளாறு இருக்கலாம் என்று ஒரு மாதத்துக்குள்ளாக 10 முறை மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சைப் பிரிவுக்குச் சென்று வந்திருக்கிறார். 

ஆனால் அவருக்கு இதயத்தில் எந்த விதமான கோளாறும் இல்லை என ஒவ்வொரு முறையும் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் திருப்பி அனுப்பி விட்டனர். இந்தப் பிரச்னையைக் கூறிக் கொண்டு மருத்துவமனைக்கு வரக்கூடாது என்று கண்டிப்புடன் கூறியிருக்கிறனர். 

உண்மையில் அவருக்கு என்னதான் பிரச்னை? "அவருக்கு ஏற்பட்டது உடல் கோளாறு இல்லை. Anxiety எனப்படும் மனப் பதற்றம்தான். அனைத்தையும் முயற்சி செய்து பார்த்துவிட்டு, உடல் பிரச்னை ஏதும் இல்லை என்று தெரிந்த பிறகு கடைசியாக தயக்கதுடன் என்னிடம் சிகிச்சைக்கு வந்தார்" என்கிறார் மனநல மருத்துவர் யாமினி கண்ணப்பன். 
 குமார் நல்ல வேலையில் இருப்பவர். திடீரென ஓர் இரவில் படபடப்புடன், இதயத்துடிப்பு அதிகரித்தது. அதிகமாக வியர்த்தது. சில மாதங்களுக்கு முன்பு இதுபோன்ற அறிகுறிகள் ஏற்பட்ட உறவினர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததும் அவரது நினைவில் இருந்தது. அதனால் தமக்கும் இதயத்தில் ஏதேனும் கோளாறு இருக்கலாம் என்று எண்ணி மருத்துவமனையில் சேர்ந்தார். இப்படிப் பல முறை நடந்திருக்கிறது ஆனால் ஒரு முறைகூட இதயத்தில் கோளாறு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. 

அறிகுறிகளைப் கண்டு அஞ்சியதால் ஏற்பட்ட மனப் பதற்றம் என்கிறார் யாமினி கண்ணப்பன். புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் 5 முதல் 7 சதவிகிதம் பேருக்கு மனப் பதற்றம் இருக்கிறது. பெரும்பாலானவர்களுக்கு தங்களுக்கு இது இருக்கிறது என்பதே தெரியாது என்கிறார்கள் நிபுணர்கள். 


மனப் பதற்றம் (ANXIETY) என்பது என்ன? 
எல்லோருக்கும் ஏதாவது ஒரு நேரத்தில் பயம் வரும். சிலருக்கு குறிப்பிட்ட சூழலில் மட்டும் பயம் வந்து போகும். அதுவே நீடித்திருந்தால் நோயாக மாறுகிறது என மனநோய் ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.  

"மனப் பதற்றம் என்பது ஒரு வகையான பயம். எந்த வகையான எதிர்மறையான உணர்வும் உடனடியாக நோயாகிவிடாது. மனதில் சிறிதளவு பயம் இருப்பதால் பிரச்னையில்லை. உண்மையில் அத்தகைய பயம் திறனை மேம்படுத்துவதற்கும் வெளிப்படுத்துவற்கும் உதவும். 

சிலருக்கு பயம் அதிகமாகி . எப்போதும் பயத்திலேயே இருப்பார்கள் . வருங்காலத்தைப் பற்றியோ, அல்லது ஏதோ விபரீதம் நடந்துவிடும் என்றோ எப்போதும் அச்ச எண்ணத்திலேயே இருந்தால் அதை நோயாகக் கருத வேண்டும். இதுதான் மனப் பதற்றக் கோளாறு" 
நண்பர்களுடன் பழகுவதற்குத் தயங்குவது, வகுப்பறையில் கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கு அச்சம், நேர்காணல்களின் போது ஏற்படும் பயம் போன்றவையெல்லாம் அன்றாட வாழ்கையை நடத்துவதிலேயே சிக்கல் ஏற்படுத்தும் அளவுக்கு இருந்தால் அது மனப் பதற்றக் கோளாறின் அறிகுறிகளாகவே பட்டியலிடப்படுகின்றன. 

அதாவது சாதாரண பயம், பீதியாக மாறி இயல்பு வாழ்க்கையை சிதைக்க முற்படும்போது அதற்கு சிகிச்சை தேவைப்படுகிறது. OCD என்று கூறப்படும் எண்ணம் மற்றும் செயல் சுழற்சி நோயும் இதன் மனப் பதற்றத்தின் ஒரு பிரிவாகவே வரையறுக்கப்படுகிறது. 

"கொரோனா காலத்தில் எண்ணம் மற்றும் செயல் சுழற்சி நோய் அதிகரித்திருக்கிறது. கொரோனா தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அச்சம் எல்லோருக்கும் இருந்தாலும். சிலருக்கு இது அதிகமாகி அடிக்கடி கைகழுவுவது, சுத்தம் செய்வது போன்ற வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்கள். இது ஓசியிடின் அறிகுறி" என்கிறார் யாமின் கண்ணப்பன். 

மனப் பதற்றத்தின் அறிகுறிகள் ஆன்சைட்டி என்பது பெரும்பாலும் மனதளவிலானது. ஆனால் இதன் அறிகுறிகள் அனைத்தும் உடல் வழியாகவே தெரிகின்றன. உடல் உறுப்புகளில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருப்பது போன்ற மாயை ஏற்படுகிறது. இதனால் பலர் மன நல மருத்துவர்களை அணுகுவதற்குப் பதிலாக வேறு உடல்நலக் கோளாறுகளுக்கான மருத்துவர்களை நாடுகிறார்கள். 

 "உச்சி முதல் பாதம் வரைக்கும் பல்வேறு வகையான அறிகுறிகள் மனப் பதற்றத்தால் ஏற்படுகின்றன. இதயம் படபடப்பாக அடித்துக் கொள்கிறது என்று பெரும்பாலும் கூறுவார்கள். அடிக்கடி வியர்த்துக் கொட்டுவது, உள்ளங்கை மற்றும் பாதம் ஜில்லெனக் குளிர்ச்சியாகி விடுவது, அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படுவது, அதிகபட்ச உடல் சோர்வு போன்ற உடல் ரீதியான அறிகுறிகள் மனப் பதற்றத்தால் ஏற்படும். 

ஆனால் இதயப் படபடப்புக்கு இதய நிபுணரையும், வயிற்றுப் பிரச்னைக்கு அதற்கான மருத்துவரையும் பார்க்கிறார்கள். ஆனால் அங்கெல்லாம் சரியாகவில்லை என்ற பிறகுதான் மனநல மருத்துவரை அணுகுகிறார்கள்." 

அதிகப்படியான தகவல்கள் கிடைப்பதும் மனப் பதற்றம் அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக அமைகிறது. இதயக் கோளாறு என்று கருதி அடிக்கடி தீவிரச் சிகிச்சைப் பிரிவை நாடிய குமாரும் இதையேதான் செய்திருக்கிறார். 

இதயம் படபடப்பதை உணர்ந்த பிறகு அதிகமாக உடற்பயிற்சி செய்வது, கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பது, இதயத் துடிப்பை அளக்கும் உபகரணங்களை வாங்குவது என எண்ணம் முழுவதையும் நிரப்பிக் கொண்டிருக்கிறார். 

கூகுளில் இதைப் பற்றியே தேடியிருக்கிறார். கோளாறு ஒன்றுமில்லை என்று மருத்துவர்கள் கூறிய பிறகும் தாமாகவே சில இதயப் பரிசோதனைகளையும் செய்து பார்த்திருக்கிறார். 

 தனக்கு ஏற்பட்டிருக்கும் அறிகுறிகளுக்கு என்ன காரணம் என்று இணையத்தில் தேடி தாங்களாகவே ஒரு முடிவுக்கு வந்துவிடுதால், அதுவே அவர்களைப் பீதியடையச் செய்கிறது. மாரடைப்புக்கு உள்ள அனைத்து அறிகுறிகளும் தமக்கு இருப்பதாகவே அவர்கள் எண்ணிக் கொள்வார்கள். பின்னர் அவர்களே அதற்கான சிகிச்சையை முடிவு செய்து கொண்டு அதை மருத்துவர்களிடமும் வலியுறுத்துகின்றனர்" என்கிறார் யாமினி கண்ணப்பன். 


 மனப் பதற்றம் ஏன் வருகிறது? 
குமாரைப் பொறுத்தவரை அவருக்கு திருமணமாகி புதிய வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கும் வயது. இதயக் கோளாறால் உறவினர் இறந்ததை சமீபத்தில் பார்த்திருக்கிறார். 

அதனால் தமக்கும் அதுபோன்ற நிலைமை தமக்கும் வந்துவிடக்கூடாது என்ற அதிகப்படியான உடல்நல அக்கறையும் கவனமும்தான் அவருக்கு மனப் பதற்றக் கோளாறை ஏற்படுத்தியிருக்கிறது. 

"மனப் பதற்றம் என்பது உடல் சார்ந்ததாகவும் இருக்கலாம். ஏனென்றால் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் தொடர்ந்து நீடித்திருப்பதால் அவை மனப் பதற்றத்துக்கு காரணமாக இருக்கலாம்." என்கிறார் யாமினி கண்ணப்பன். 

எல்லா வயதினருக்கும் மனப் பதற்றக் கோளாறு வருகிறது. ஆனால் வயதானோருக்கு இதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். 


சிகிச்சை என்ன? 

மனப் பதற்றக் கோளாறால் பாதிக்கப்படுவோருக்கு மருந்துகள் மற்றும் ஆலோசனைகள் ஆகிய இரண்டுமே வழங்கப்படுகின்றன. 

மன நோய்க்கு மருந்துகள் ஏன் தேவைப்படுகிறது என்றால் மூளையில் ஏற்படும் சில ரசாயன மாற்றங்களைச் சமன் படுத்துவதற்காகத்தான். இவற்றை மருந்துகள் மூலமாகவே சரி செய்ய முடியும்" 

"எல்லோருக்குமே மனப் பதற்றம் இருக்கும். முக்கியமான அல்லது புதிய நிகழ்வுகளை எதிர்கொள்ளும்போது இது ஏற்படும். ஆனால் சிறிது நேரத்துக்குள் சரியாகிவிடும். 

சிலருக்கு மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றமானது எப்போதும் இயல்பைவிட அதிமாக இருக்கும். அவருக்கு உரிய சிகிச்சை தேவைப்படுகிறது" 

 மனப் பதற்றம் அதிகமாக இருந்தால் அது பல்வேறு உடல் கோளாறுகளுக்கு அடிப்படையாக அமைகிறது. 

"பதற்றத்தின்போது உருவாகும் கார்டிசால் என்ற ஹார்மோன் தொடர்ந்து அதிகமாக இருப்பது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். நீண்ட காலமாக இதைக் கவனிக்காமல் விட்டால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், வயிற்றுக் கோளாறு என பலவகையான சிக்கல் ஏற்படும். உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பையே குலைத்துவிடும் ஆபத்தும் உண்டு" என்கிறார் யாமினி கண்ணப்பன். 

மனப் பதற்றம் வேலையிலும், குடும்ப வாழ்க்கையும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தயங்குவார்கள். தங்களது உறவுகளைத் தவிரித்து உலகத்தைச் சுருக்கிக் கொள்வார்கள் என்கிறார் அவர். 


பதற்றத்தைக் குறைக்க எளிய வழி 
மனப் பதற்றம் அதிகரிப்பதாக உணர்ந்த மாத்திரத்தில் அதை உடனடியாகக் கையாளுவதற்கு சில எளிமையான வழிகள் இருப்பதாகக் கூறுகிறார் யாமினி கண்ணப்பன். இதன் மூலம் பதற்றத்தின்போது ஏற்படும் விபரீதச் சிந்தனைகளை உடைக்க முடியும் என்கிறார் அவர். 

 இதை Grounding Technique கூறுவோம். 5 4 3 2 1 என்றும் கூறலாம். அதாவது இயல்பு நிலைக்குத் திரும்புவது. இதில் கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என ஐம்புலன்களையும் பயன்படுத்த வேண்டும். முதலில் உங்களை சுற்றியுள்ள 5 பொருள்களைப் பார்க்க வேண்டும். அது எதிரேயுள்ள தொலைக்காட்சியாகவோ, சட்டப் பையில் உள்ள பேனாவாகவோ இருக்கலாம். அடுத்து அருகேயுள்ள நான்கு பொருள்களை தொட வேண்டும். அது காலுக்கு அடியில் இருக்கும் தரையாகவோ, அருகேயுள்ள மேஜையாகவோ இருக்கலாம். அடுத்து மூன்று ஒலிகளைக் கேட்ட வேண்டும். பின்னர் இரு வாசனைகளை நுகர வேண்டும். ஐந்தாவதாக ஒரு சுவையை உணர வேண்டும். அது நீங்கள் அப்போதுதான் குடித்து முடித்திருந்த தேநீரின் சுவையாகவும் இருக்கலாம். இப்போது நீங்கள் பதற்றம் தணிந்து ஓரளவு இயல்பு நிலைக்கு வந்திருப்பீர்கள்" 

இன்னும் எளிமையாக ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு அதிலேயே மனதைக் குவிப்பதன் மூலமாகவும் மனப் பதற்றத்தைக் குறைக்க முடியும் என்கிறார் மருத்துவர் யாமினி கண்ணப்பன். 

சில வகையான மனப் பயிற்சிகள், உடற்பயிற்சி, வாழ்வியல் மாற்றங்கள் போன்றவற்றையும் அவர் பரிந்துரைக்கிறார். 

மதுக்குடிப்பது, சிகரெட் புகைப்பது போன்வற்றின் மூலம் மனம் லேசாகிறது என்று பலர் சொல்லக் கேட்டிருப்போம். ஆனால் அவை அனைத்தும் போலியானவை, உடலிலும் மனதிலும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை என்கிறார் மருத்துவர். "மதுவும் புகையும் முதலில் மனதை சாந்தப்படுத்துவது போலத் தோன்றும். ஆனால் அது மாயை"
Source: bbc.com
நன்றி: பிபிசிதமிழ்.
மனம் பதற்றமாகி இதயத்துடிப்பு அதிகரிக்கும் போது என்ன செய்ய வேண்டும்? மனம் பதற்றமாகி இதயத்துடிப்பு அதிகரிக்கும் போது என்ன செய்ய வேண்டும்? Reviewed by irumbuthirai on August 21, 2021 Rating: 5

B. Ed மற்றும் M. Ed பாடநெறிகள் (தேசிய கல்வி நிறுவகம் - NIE)

August 21, 2021

தேசிய கல்வி நிறுவகத்தினால் கல்வி முகாமைத்துவத்தில் கல்வி இளமாணி பட்டம் (B.Ed - Education Management) மற்றும் கல்வி முகாமைத்துவத்தில் கல்வி முதுமாணி பட்டம் (M.Ed - Education Management) ஆகியவற்றுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


B.Ed (Education Management) 
Duration: 03 years. 
Medium: Tamil, Sinhala. 
Course fee: Rs. 150,000/- (3 Installments) 
Registration fee: Rs. 1000/- 
Application fee: Rs. 1,500/- 
Closing date: 10-09-2021.

M.Ed (Education Management) 
Duration: 02 years. 
Medium: Tamil, Sinhala. 
Course fee: Rs. 150,000/- (2 Installments) 
Registration fee: Rs. 5,000/- 
Application fee: Rs. 1,500/- 
Closing date: 10-09-2021.

மேற்சொன்ன இரு பாடநெறிகளுக்குமான மேலதிக விபரங்கள், Online விண்ணப்பம், தபாலில் அனுப்புவதற்கான விண்ணப்பம் என்பவற்றை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
B. Ed மற்றும் M. Ed பாடநெறிகள் (தேசிய கல்வி நிறுவகம் - NIE) B. Ed மற்றும் M. Ed பாடநெறிகள் (தேசிய கல்வி நிறுவகம் - NIE) Reviewed by irumbuthirai on August 21, 2021 Rating: 5

20-08-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

August 21, 2021

20-08-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 

Official Government Gazette released on 20-08-2021. 

இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாக பார்வையிட. 

தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 

ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 

சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


முன்னைய வர்த்தமானிகளைப் பார்வையிட...
 
20-08-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 20-08-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on August 21, 2021 Rating: 5

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு: நிதி அமைச்சரை சந்தித்த உப குழு:

August 21, 2021

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவானது நேற்றைய தினம்(20) நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவை சந்தித்துள்ளது. 

இந்த சந்திப்பின்போது கல்வி அமைச்சின் செயலாளரும் கலந்துகொண்டார். 

சந்திப்பின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த உப குழுவின் அங்கத்தவர்களுள் ஒருவரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும, 
இதுதொடர்பான யோசனைகள் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 

குறித்த குழுவானது கட்டங்கட்டமாக கடந்த நாட்களில் தொழிற்சங்கங்களை சந்தித்திருந்தது.
அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு: நிதி அமைச்சரை சந்தித்த உப குழு: அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு: நிதி அமைச்சரை சந்தித்த உப குழு: Reviewed by irumbuthirai on August 21, 2021 Rating: 5

Vacancies (Sri Jayawardenapura General Hospital)

August 21, 2021

Vacancies (Sri Jayawardenapura General Hospital) 

EEG Technician 
Radiographer 
Medical Laboratory Technologist 

Closing date: 26-08-2021. 

See the details below.
Source: Sunday Observer.


ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...
Vacancies (Sri Jayawardenapura General Hospital) Vacancies (Sri Jayawardenapura General Hospital) Reviewed by irumbuthirai on August 21, 2021 Rating: 5

கொரோனாவுக்கு எதிரான உலகின் முதல் மரபணு தடுப்பூசி இந்தியாவில்...

August 21, 2021

இந்தியாவின் சைடஸ் கேடில்லா நிறுவனம் தமது கொவிட் தடுப்பூசியான ஸைக்கோவ்-டி (ZyCoV-D) என்ற தடுப்பூசியை 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்துவதற்கு அவசர அனுமதி கோரி கடந்த ஜூலை மாதம் விண்ணப்பித்திருந்தது. 

இந்த தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்காக இந்திய மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. 

மேலும் இந்த தடுப்பூசி மூன்று முறை செலுத்தப்பட வேண்டும். 

இந்தியா முழுவதும் 50க்கும் மேற்பட்ட மையங்களில் தங்களின் இந்த தடுப்பூசியை 
விரிவாக பரிசோதனை செய்து விட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அதேவேளை இந்த தடுப்பூசியே இந்திய மருந்து நிறுவனம் தயாரிக்கும் உலகின் முதல் மரபணு தடுப்பூசி என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளது. 

அதாவது ஊசி மூலம் தடுப்பு மருந்து செலுத்தப்படாமல் தோல் பகுதியில் ஹைப்போடெர்மிக் நீடில் (Hypodermic Needle) மூலம் அதிர்வலைகள், வாயுக்களின் அழுத்தம், மின்முனை மூலம் செலுத்தப்படுவதே இதுவாகும்.
கொரோனாவுக்கு எதிரான உலகின் முதல் மரபணு தடுப்பூசி இந்தியாவில்... கொரோனாவுக்கு எதிரான உலகின் முதல் மரபணு தடுப்பூசி இந்தியாவில்... Reviewed by irumbuthirai on August 21, 2021 Rating: 5

பட்டதாரி பயிலுனர்களின் தகவல்களைப் பெறல் (கட்டம் 2)

August 21, 2021

வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் திட்டம் - 2020 

இணைய வழி முறையில் தகவல்களை பெற்றுக் கொள்ளல் - (கட்டம் 2 )

பட்டதாரி பயிலுனர்களின் தகவல்களை இணையம் மூலம் பெற்றுக்கொள்ளும் இரண்டாம் கட்ட நடவடிக்கை 23-08-2021 முதல் 06-09-2021 வரை இடம்பெறும். 

இடமாற்றம் பெற்றவர்களுக்கு அல்லது வேறு காரணங்களால் தரவுகளை உள்ளீடு செய்ய முடியாதவர்களுக்கு பொருத்தமான நியாயமான காலம் வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். 

District List: 
Gampaha, Kalutara, Kandy, Matale, Nuwaraeliya, Galle, Matara, Hambantota, Jaffna, Mannar, Vavuniya, Mulative, Kilinochchi, Batticaloa, Ampara, Trincomalee, Kurunagala, Puttalam, Anuradhapura, Polonnaruwa, Badulla, Monaragala, Ratnapura, Kegalle.

தரவுகளை உள்ளீடு செய்வதற்கான லிங்குகள்:

குறிப்பு
0 - 1000 வரைய முதலாவது இணைப்பையும் 1001 - 2000 வரை இரண்டாவது இணைப்பையும் 2001-3000 வரை மூன்றாவது இணைப்பையும் 3001-4000 வரை நான்காவது இணைப்பையும் பயன்படுத்தவும்.

முழுமையான விபரங்களை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

கட்டம் - 1 ஐப் பார்வையிட இந்த லிங்கை கிளிக் செய்க.
பட்டதாரி பயிலுனர்களின் தகவல்களைப் பெறல் (கட்டம் 2) பட்டதாரி பயிலுனர்களின் தகவல்களைப் பெறல் (கட்டம் 2) Reviewed by irumbuthirai on August 21, 2021 Rating: 5

உலகில் முதன் முறையாக மூன்று பிறழ்வுகளுடனான தொற்றாளர் இலங்கையில்...

August 20, 2021

தற்போது இலங்கை உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் டெல்டா திரிபாது மிக வேகமாக பரவி வருகிறது. 

இந்த நிலையில் டெல்டா திரிபின் மூன்று பிறழ்வுகளைக் கொண்ட தொற்றாளர் இலங்கையில் 
கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் உலகில் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதன் முறை எனவும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான பிரிவு வைத்தியர் சந்திம ஜீவந்திர தெரிவித்துள்ளார். 

இதில் ஒரு பிறழ்வு இலங்கையில் முதன் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ஏனைய இரண்டும் ஏற்கனவே வெளிநாடுகளில் காணப்பட்டவையாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பைச் சேர்ந்த பெண் ஒருவருக்கே இவ்வாறு மூன்று பிறழ்வுகளுடனான தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகில் முதன் முறையாக மூன்று பிறழ்வுகளுடனான தொற்றாளர் இலங்கையில்... உலகில் முதன் முறையாக மூன்று பிறழ்வுகளுடனான தொற்றாளர் இலங்கையில்... Reviewed by irumbuthirai on August 20, 2021 Rating: 5

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தொடர்பான அறிவித்தல்!

August 20, 2021

பல்கலைக்கழக அனுமதிக்காக இம்முறை 110,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் 
அடுத்த மாத இறுதிக்குள் வெளியிட உள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார். 

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிப்பதற்கான கால எல்லை ஏற்கனவே நிறைவடைந்துள்ளது. அதே போன்று தற்போது பரவும் கொரோனா நிலைமையிலும் குறைந்த ஊழியர்களை கொண்டு வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை மானியங்கள் ஆணைக்குழு மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தொடர்பான அறிவித்தல்! பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தொடர்பான அறிவித்தல்! Reviewed by irumbuthirai on August 20, 2021 Rating: 5

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான ஊரடங்கு அறிவிப்பு!

August 20, 2021


ஏற்கனவே அமுலில் இருந்த இரவு நேர ஊரடங்கு சட்டம் தற்போது முழு நேர ஊரடங்காக  மாற்றப்பட்டுள்ளது. 

இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருக்கும் என ராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் கொவிட் பரவல் நிலைமை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் விவாசாயத்துறை, ஆடை தொழிற்சாலைகள் 

மற்றும் மருந்தகங்கள் வழமை போன்று இயங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே ஒவ்வொரு நாளும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான ஊரடங்கு அறிவிப்பு! நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான ஊரடங்கு அறிவிப்பு! Reviewed by irumbuthirai on August 20, 2021 Rating: 5

HND பாடநெறிகள் (இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனம் - SLIATE)

August 19, 2021

2020 இல் பாடநெறிகளுக்காக விண்ணப்பித்தும் இதுவரை எந்த ஒரு பாடநெறிக்கும் தெரிவு செய்யப்படாத மாணவர்களிடமிருந்து வெற்றிடங்கள் நிலவும் கற்கைநெறிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 

விண்ணப்ப முடிவு திகதி: 26-08-2021. 

மேலதிக விபரங்களுக்கு கீழே உள்ள இலக்கங்களுக்கு அழைக்கலாம்:

Institute.                  Contact Number 

Advanced Technological Institute – Kegalle 0715447676, 0766949546 

 Advanced Technological Institute – Tangalle 0716790886, 0703767381, 0715177580, 0762237580 

 Advanced Technological Institute – Ampara 0717638653, 0634929131, 0705965769, 0632222056 

 Advanced Technological Institute – Sammanthurai 0703418480, 0775153500 

 Advanced Technological Institute – Trincomalee 0755592927, 0778086443, 0702324439 

 Advanced Technological Institute – Colombo 0714407665, 0769619175 

 Advanced Technological Institute – Anuradhapura 0252234417, 0716564572, 0252234417, 0714430161 

 Advanced Technological Institute – Kandy 0812226644, 0714848210, 0812232097, 0774538133 
 Advanced Technological Institute – Vavuniya 0776162010, 0242052733 

 Advanced Technological Institute – Mannar 0767966111, 0779202279 

 Advanced Technological Institute – Galle 0912246179 

 Advanced Technological Institute – Nawalapitiya 0713702889, 0718501374 

Advanced Technological Institute – Badulla 0552230218, 0716723048, 0712347677 

Advanced Technological Institute – Ratnapura 0718000460, 0712122692 

 Director General - SLIATE 

Click the link below for more details:


ஏனைய கற்கை நெறிகள் மற்றும் கல்வி தொடர்பான செய்திகளுக்கு...
HND பாடநெறிகள் (இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனம் - SLIATE) HND பாடநெறிகள் (இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனம் - SLIATE) Reviewed by irumbuthirai on August 19, 2021 Rating: 5

வீடுகளில் சிகிச்சை: கண்காணிக்க 1500 வைத்தியர்கள்:

August 19, 2021

வீடுகளில் சிகிச்சை பெறுகின்ற கொவிட் தொற்றாளர்களை கண்காணிப்பதற்காக எதிர்வரும் சில வாரங்களில் 1500 வைத்தியர்களை சேவையில் ஈடுபடுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. 

தற்போது வீடுகளில் சிகிச்சை பெறுகின்ற கொவிட் தொற்றாளர்களை கண்காணிப்பதற்காக 900 வைத்தியர்கள் மற்றும் 28 விசேட வைத்தியர்களை சேவையில் 
ஈடுபடுத்தியுள்ளதாக, சுகாதார அமைச்சின் மூன்றாம் நிலை மருத்துவ சேவைகள் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அயந்தி கருணாரத்ன தெரிவித்தார். 

வீடுகளில் சிகிச்சை பெறுகின்ற தொற்றாளர்கள், 1390 என்ற தொலைபேசி இலக்கத்துடன் பதிவை மேற்கொள்வதன் மூலம் தமக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகளை நியமிக்கப்பட்டுள்ள வைத்தியர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும். 

நேற்று (18) மாலை வரையிலும் 5110 தொற்றாளர்கள் வீடுகளில் இருந்து சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியர் அயந்தி கருணாரத்ன தெரிவித்தார். அத்துடன், கடந்த ஜூன் மாதம் 7ஆம் திகதி முதல் நேற்று (18) வரையிலும் இவ்வாறு பதிவு செய்துள்ள நோயாளர்களின் எண்ணிக்கை 16,282 ஆகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Source: அரசாங்க தகவல் திணைக்களம்.
வீடுகளில் சிகிச்சை: கண்காணிக்க 1500 வைத்தியர்கள்: வீடுகளில் சிகிச்சை: கண்காணிக்க 1500 வைத்தியர்கள்: Reviewed by irumbuthirai on August 19, 2021 Rating: 5

ஆப்கானின் தற்போதைய நிலை (முழுமையான அப்டேட்)

August 19, 2021


தலைநகரின் நிலை: 

ஆப்கான் தலைநகர் காபூல் தற்போது வழமைக்கு திரும்பியிருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உணவகங்கள் கடைகள் என்பன திறக்கப்பட்டிருந்ததுடன் பொது மக்களும் ஏராளமானோர் நகருக்கு வந்து சென்றுள்ளனர். புர்கா என்ற முழுமையாக மறைக்கப்படும் ஆடை இல்லாமலும் பெண்கள் வந்து சென்றுள்ளனர். இந்த ஆடையை முன்னர் தலிபான்கள் பெண்களுக்கு கட்டாயமாக்கியிருந்தனர். 

முதல் ஊடக சந்திப்பு: 

தலிபான்கள் முதன்முறையாக ஊடக சந்திப்பை நடத்தியுள்ளனர். அதில் மூத்த தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். அனைவரையும் மன்னித்து விட்டோம். யாரையும் கொல்ல மாட்டோம். வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் எங்களுக்கு எந்த எதிரிகளும் வேண்டாம். யாரும் நாட்டை விட்டு வெளியேறத் தேவையில்லை. அரச ஊழியர்கள் தமது பணியை வழமைபோன்று தொடரலாம். முந்தைய தலைமுறை தலிபான்களை விட தற்போதைய தலிபான்கள் மாற்றங்களை விரும்புகிறவர்கள். அந்த வகையில் அமைதியான மாற்றங்கள் நிகழும் என்ற கருத்துப்பட ஊடக சந்திப்பில் தெரிவித்தனர். 


ஜலாலாபாத் போராட்டம்: 

ஜலாலாபாத் என்ற இடத்தில் பெருமளவான பொதுமக்கள் ஒன்றுகூடி தலிபான்களின் கொடிகளுக்கு பதிலாக ஆப்கானிஸ்தான் தேசியக் கொடியை வைத்துகொண்டு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த கூட்டத்தை கலைந்து செல்லும்படி தலிபான்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவர்கள் கேட்காததன் காரணமாக அங்கே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

வீடு வீடாக சோதனை: 

இதனிடையே தலிபான்கள் வீடு வீடாக சென்று ஒவ்வொருவரைப் பற்றியும் விசாரிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.பொதுமன்னிப்பு என்று அறிவித்துவிட்டு ஏன் இவ்வாறு நடக்கிறார்கள் என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. 


தாலிபான்களும் ஒத்துழைக்கிறார்கள்: 

ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டினரை நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளுக்கு தாலிபான்களும் ஒத்துழைப்பு வழங்குவதாக மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. 


மாறுபட்ட செய்தி: 

விமான நிலையம் அமெரிக்க கூட்டுப் படையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் விமான நிலையத்திற்கு செல்லும் பல்வேறு இடங்களில் தலிபான்கள் இருந்து கொண்டு அங்கே செல்பவர்களை தடுப்பதாகவும் செய்திகள் வெளியாகின்றன. உரிய நபர்களுக்கு உரிய ஆவணங்கள் இருந்தாலும் அவர்கள் விமான நிலையம் செல்லும் விடையத்தில் இவர்கள் தடங்கல்களை ஏற்படுத்துவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நேட்டோ மற்றும் அமெரிக்க படைகளுடன் நெருக்கமாக செய்யப்பட்டவர்களை தேடும் நடவடிக்கையே இது எனவும் சந்தேகிக்கப்படுகிறது. 

விமான நிலையத்தில் மரணித்தோர் எண்ணிக்கை: 
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் விமான நிலையம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர் என தலிபான் அமைப்பின் பெயர் குறிப்பிட விரும்பாத நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கு காரணம் துப்பாக்கிச்சூடு அல்லது கூட்ட நெரிசல் என அவர் தெரிவித்துள்ளார்.
தொகுப்பு: irumbuthirainews.com
ஆப்கானின் தற்போதைய நிலை (முழுமையான அப்டேட்) ஆப்கானின் தற்போதைய நிலை (முழுமையான அப்டேட்) Reviewed by irumbuthirai on August 19, 2021 Rating: 5

சுபோதினி அறிக்கைக்கு பதிலாக வேறு ஏதும் உண்டா? அதிபர் ஆசிரியர் சங்கங்களுக்கும் அமைச்சரவை குழுவிற்குமிடையிலான கடைசி சந்திப்பு! நடந்தது என்ன?

August 19, 2021

அமைச்சரவை உப குழுவிற்கும் அதிபர் ஆசிரியர் சங்கங்களுக்கும் இடையிலான கடைசி கட்ட சந்திப்பு நேற்றைய தினம்(18) அமைச்சர் விமல் வீரவன்சவின் இல்லத்தில் நடைபெற்றது. 

இந்த சந்திப்பில் உப குழுவில் உள்ள அங்கத்தவர்களான விமல் வீரவன்ச, பிரசன்ன ரணதுங்க, மஹிந்த அமரவீர, டலஸ் அழகப்பெரும ஆகியோர் கலந்து கொண்டனர். 

தொழிற்சங்கங்கள் சார்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த ஜோசப் ஸ்டாலின், ஆசிரியர் சேவை சங்கத்தைச் சேர்ந்த மஹிந்த ஜயசிங்க உட்பட இன்னும் சில பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். 

சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தொழிற்சங்க பிரதிநிதிகள், 
சுபோதினி அறிக்கைக்கு பதிலாக வேறு ஏதும் உண்டா? என்று அமைச்சரவை உபகுழு கேட்டது. அதற்கு நாம் கேட்டோம் உங்களிடம் ஏதாவது மாற்று திட்டம் உண்டா என்று. அதற்கு அவர்கள் சரியான பதில் தரவில்லை. நாம் சொன்னோம் அரசாங்கம் தருவதாக கூறியதை தான் நாம் கேட்கிறோம் என்று. அதற்கு அவர்கள் நிதியமைச்சரிடமும் கலந்துரையாடிவிட்டு எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பதாக எம்மிடம் தெரிவித்தனர் என்று கூறினர். 

எவ்வாறாயினும் இந்த பிரச்சினைகளுக்கு தீர்க்கமான முடிவு வரும்வரை எமது தொழிற்சங்க போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர். 

இதேவேளை இந்த சந்திப்பின் நிறைவில் கருத்து தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர், 
இதுவரை நாம் பல்வேறு தொழிற்சங்கங்களோடு கட்டங்கட்டமாக சிறந்த முறையில் சந்திப்புகளை நடத்தினோம். இன்றைய தினம் கடைசிக்கட்ட சந்திப்பு நடைபெற்றது. வெள்ளிக்கிழமை இது தொடர்பில் நிதி அமைச்சரிடம் கலந்துரையாடல் செய்ய இருக்கிறோம். அதன்பின்னர் சம்பள ஆணைக்குழுவுடனும் பேச வேண்டியிருக்கிறது. பின்னர் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தின் போது இது தொடர்பான அறிக்கைகளை நாங்கள் வழங்க இருக்கிறோம் என தெரிவித்தனர்.
சுபோதினி அறிக்கைக்கு பதிலாக வேறு ஏதும் உண்டா? அதிபர் ஆசிரியர் சங்கங்களுக்கும் அமைச்சரவை குழுவிற்குமிடையிலான கடைசி சந்திப்பு! நடந்தது என்ன? சுபோதினி அறிக்கைக்கு பதிலாக வேறு ஏதும் உண்டா? அதிபர் ஆசிரியர் சங்கங்களுக்கும் அமைச்சரவை குழுவிற்குமிடையிலான கடைசி சந்திப்பு! நடந்தது என்ன? Reviewed by irumbuthirai on August 19, 2021 Rating: 5

Courses (University Colleges)

August 19, 2021

Courses (University Colleges) 

National Diploma Courses (NVQ - 5) 
Higher National Diploma Courses (NVQ - 6) 

Closing date: 17-09-2021. 

See the details below.
Source: Sunday Observer.

ஏனைய கற்கை நெறிகள் மற்றும் கல்வி சம்பந்தமான செய்திகளுக்கு...
Courses (University Colleges) Courses (University Colleges) Reviewed by irumbuthirai on August 19, 2021 Rating: 5

17-08-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

August 18, 2021

17-08-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 

இதன் முழு வடிவத்தைப் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


முன்னைய அமைச்சரவை கூட்டத்திற்கு செல்ல...
17-08-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 17-08-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on August 18, 2021 Rating: 5

Courses (University of Moratuwa)

August 18, 2021

Courses (University of Moratuwa) 

National Diploma in Technology 
Closing date: 17-09-2021. 

M.Sc / PG Diploma in Financial Mathematics
Closing date: 29-08-2021. 

MBA in Management of Technology 
MBA in Entrepreneurship 
Closing date: 31-08-2021. 

See the details below.


Source: Sunday Observer.

மேலும் கற்கை நெறிகள் மற்றும் கல்வி தொடர்பான செய்திகளுக்கு...
Courses (University of Moratuwa) Courses (University of Moratuwa) Reviewed by irumbuthirai on August 18, 2021 Rating: 5

Degree Courses (SLIIT - Sri Lanka Institute of Information Technology)

August 18, 2021

Degree Courses (SLIIT - Sri Lanka Institute of Information Technology) 

Admission of new students September in take- 2021

Application Closing Date: 16-09-2021. 

Online Aptitude Test: 18-09-2021.
Source: Sunday Observer.

கல்வி சார்ந்த ஏனைய தகவல்களை பார்வையிட...
Degree Courses (SLIIT - Sri Lanka Institute of Information Technology) Degree Courses (SLIIT - Sri Lanka Institute of Information Technology)  Reviewed by irumbuthirai on August 18, 2021 Rating: 5

13-08-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

August 18, 2021

13-08-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 


Official Government Gazette released on 13-08-2021. 

இதில்,
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாக பார்வையிடுக. 

தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 

ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 

சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
13-08-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 13-08-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on August 18, 2021 Rating: 5

விடுதலைப் புலிகளுக்கும் தலிபான்களுக்கும் தொடர்பு இருந்ததா? தலிபான் பேச்சாளர் வெளியிட்ட தகவல்

August 17, 2021

தலிபான் பேச்சாளர் ஸுஹைல் ஷஹீன் இலங்கையில் உள்ள ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார். 

அதில் அவர்,
இலங்கை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமது அமைப்புக்கும் எவ்விதமான தொடர்பும் இருக்கவில்லை என தெரிவித்துள்ளார். 

ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டு படையினரை வெளியேற்றும் நடவடிக்கையில் தான் தலிபான்கள் 20 வருடங்கள் ஈடுபட்டார்கள். மேலும் தலிபான்கள் சுதந்திரமாக இயங்கும் விடுதலையை குறிக்கோளாக கொண்ட ஒரு அமைப்பு எனவும் அவர் அந்த செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆப்கானிஸ்தானிலிருந்த 08 இலங்கையர்கள் பிரித்தானியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் இன்னும் 45 இலங்கையர்கள் 
அங்குள்ளதாகவும் அவர்களை விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கும் தலிபான்களுக்கும் தொடர்பு இருந்ததா? தலிபான் பேச்சாளர் வெளியிட்ட தகவல் விடுதலைப் புலிகளுக்கும் தலிபான்களுக்கும் தொடர்பு இருந்ததா? தலிபான் பேச்சாளர் வெளியிட்ட தகவல்   Reviewed by irumbuthirai on August 17, 2021 Rating: 5

G.C.E.(A/L) Examinations - 2020 (New Syllabus) - Marking Schemes / உயர்தர பரீட்சையின் (புதிய பாடத்திட்டம்) பாடங்களுக்கான புள்ளிவழங்கும் திட்டம் - 2020

August 17, 2021

2020 இல் புதிய பாடத்திட்டத்திற்கமைவாக நடைபெற்ற க.பொ.த. (உ.தர) பரீட்சையின் வினாத்தாள்கள் விடைகள் மற்றும் புள்ளிவழங்கும் திட்டம் என்பவற்றை இங்கு தருகிறோம்.

Islam    sinhala    Tamil                                   

Agricultural Science  Sinhala   Tamil

Japanese   Sinhala

German   English

Geography   English   Sinhala   Tamil

Business statistics   Sinhala

English   English

Buddhism    Sinhala

Civil Technology   sinhala   Tamil

Physics    English   Sinhala   Tamil

Combined Mathematics-I    English   Sinhala   Tamil

Dancing (Indigenous - Kandyan)    Sinhala

Hindi    Sinhala

Hinduism   Tamil

Accounting   English   Sinhala   Tamil

Electrical , Eletronic and Information Technology   Sinhala   Tamil

Mechanical Technology   Sinhala   Tamil

Arabic   Tamil

Engineering Technology   Sinhala   Tamil

Agro Technology   Sinhala Tamil

Biology   English   Sinhala   Tamil

Home Economics   Sinhala   Tamil

History   Sinhala

Information & Communication Technology   English   Sinhala   Tamil

Russian   English

Chinese   Sinhala

History of Europe   Sinhala   Tamil

Sanskrit   Sinhala

Bio Systems Technology   Sinhala   Tamil

Communication & Media Studies   Sinhala

Chemistry   English   Sinhala   Tamil

Mathematics-ii   English   Sinhala   Tamil

French   English

Economics   English   Sinhala   Tamil

Art   English   Sinhala   Tamil

Science for Technology   English   Sinhala   Tamil

Food Technology   Sinhala   Tamil

History of India   Sinhala   Tamil


குறிப்பு:- இது விடைத்தாள் திருத்தும் பரீட்சகர்களுக்கு உதவியாக தயாரிக்கப்பட்டதாகும். பிரதம பரீட்சகர்களின் கூட்டத்தில் சில வேளகளில் சில விடயங்கள் மாற்றங்களிற்கு உட்பட்டிருக்கலாம்.







G.C.E.(A/L) Examinations - 2020 (New Syllabus) - Marking Schemes / உயர்தர பரீட்சையின் (புதிய பாடத்திட்டம்) பாடங்களுக்கான புள்ளிவழங்கும் திட்டம் - 2020 G.C.E.(A/L) Examinations - 2020 (New Syllabus) - Marking Schemes / உயர்தர பரீட்சையின் (புதிய பாடத்திட்டம்) பாடங்களுக்கான புள்ளிவழங்கும் திட்டம் - 2020 Reviewed by irumbuthirai on August 17, 2021 Rating: 5
Powered by Blogger.