விடுதலைப் புலிகளுக்கும் தலிபான்களுக்கும் தொடர்பு இருந்ததா? தலிபான் பேச்சாளர் வெளியிட்ட தகவல்


தலிபான் பேச்சாளர் ஸுஹைல் ஷஹீன் இலங்கையில் உள்ள ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார். 

அதில் அவர்,
இலங்கை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமது அமைப்புக்கும் எவ்விதமான தொடர்பும் இருக்கவில்லை என தெரிவித்துள்ளார். 

ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டு படையினரை வெளியேற்றும் நடவடிக்கையில் தான் தலிபான்கள் 20 வருடங்கள் ஈடுபட்டார்கள். மேலும் தலிபான்கள் சுதந்திரமாக இயங்கும் விடுதலையை குறிக்கோளாக கொண்ட ஒரு அமைப்பு எனவும் அவர் அந்த செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆப்கானிஸ்தானிலிருந்த 08 இலங்கையர்கள் பிரித்தானியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் இன்னும் 45 இலங்கையர்கள் 
அங்குள்ளதாகவும் அவர்களை விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கும் தலிபான்களுக்கும் தொடர்பு இருந்ததா? தலிபான் பேச்சாளர் வெளியிட்ட தகவல் விடுதலைப் புலிகளுக்கும் தலிபான்களுக்கும் தொடர்பு இருந்ததா? தலிபான் பேச்சாளர் வெளியிட்ட தகவல்   Reviewed by irumbuthirai on August 17, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.