நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான ஊரடங்கு அறிவிப்பு!


ஏற்கனவே அமுலில் இருந்த இரவு நேர ஊரடங்கு சட்டம் தற்போது முழு நேர ஊரடங்காக  மாற்றப்பட்டுள்ளது. 

இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருக்கும் என ராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் கொவிட் பரவல் நிலைமை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் விவாசாயத்துறை, ஆடை தொழிற்சாலைகள் 

மற்றும் மருந்தகங்கள் வழமை போன்று இயங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே ஒவ்வொரு நாளும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான ஊரடங்கு அறிவிப்பு! நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான ஊரடங்கு அறிவிப்பு! Reviewed by irumbuthirai on August 20, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.