மலேசிய பிரதமரிடம் ஜாகிர் நாயக் குறித்து உண்மையிலேயே பேசினாரா மோதி?

September 07, 2019
அண்மையில் ரஷ்யாவில் நடைபெற்ற மாநாட்டின்போது இந்திய பிரதமரும் மலேசிய பிரதமரும் நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது 
மலேசியாவில் நிரந்தரமாக வசிக்கும் உரிமை பெற்றுள்ள மத போதகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை மலேசிய அரசு மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோதி வலியுறுத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. 

இந்தக் கோரிக்கையை மலேசியப் பிரதமர் ஏற்றாரா என்பது குறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்தியா மற்றும் மலேசியாவின் பிரதமர்கள் இருவரும் சந்தித்துப் பேசினர் என்றும், இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் மட்டுமே மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன. 
இந்நிலையில் ரஷ்யாவில் இருந்து ஜப்பானுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார் மகாதீர். அங்கு கியோடோ நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியப் பிரதமர் மோதியுடனான பேச்சுவார்த்தையின் போது, ஜாகிர் என்ற பெயரை மட்டுமே மோதி உச்சரித்ததாகவும், மேற்கொண்டு ஏதும் கேட்கவில்லை என்றும் குறிப்பிட்டார். அவர் (மோதி) பெயரை மட்டுமே குறிப்பிட்டாரே தவிர, என்ன பிரச்சினை என்பது குறித்தோ, அல்லது என்ன தேவை என்பது குறித்தோ ஏதும் தெரிவிக்கவில்லை. விரிவாக எதையும் கூறவில்லை என்று தெரிவித்தார்.
முன்னதாக, மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுதின் அப்துல்லாவும் செய்தியாளர்களிடம் பேசுகையில், இரு தலைவர்களும் சந்தித்த போது ஜாகிர் நாயக் விவகாரம் குறித்து இந்திய பிரதமர் ஏதும் வலியுறுத்தவில்லை என்றே கூறியிருந்தார். மேலும், ஜம்மு காஷ்மீர் குறித்து தெளிவுபடுத்துவதற்கே பிரதமர் மோதி அதிக நேரம் எடுத்துக் கொண்டார் என்றும், இவ்விவகாரத்தில் மலேசியாவின் நிலைபாட்டை மகாதீர் தெளிவாக எடுத்துக் கூறினார் என்றும் அமைச்சர் சைஃபுதின் அப்துல்லா தெரிவித்தார்.
காஷ்மீர் விவகாரத்தில் மலேசியாவின் நிலைப்பாட்டை வலியுறுத்திய மகாதீர்,"இந்த விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஐநா தீர்மானங்களின்படி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிரதமர் மகாதீர் தெரிவித்தார். பேச்சுவார்த்தை மூலமாகவே இந்த விவகாரத்துக்கு தீர்வு காண முடியும் என்றும் மலேசியப் பிரதமர் கூறினார்," என்றார் அமைச்சர் சைஃபுதின் அப்துல்லா. 
தேவை ஏற்படும் பட்சத்தில் மூன்றாம் தரப்பின் உதவியைக் கோரலாம் என்றும், இந்த வழக்கை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லலாம் என்றும் பிரதமர் மகாதீர் தெரிவித்ததாக மலேசிய வெளியுறவு அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
(பீபீசி)
மலேசிய பிரதமரிடம் ஜாகிர் நாயக் குறித்து உண்மையிலேயே பேசினாரா மோதி? மலேசிய பிரதமரிடம் ஜாகிர் நாயக் குறித்து உண்மையிலேயே பேசினாரா மோதி? Reviewed by irumbuthirai on September 07, 2019 Rating: 5

அஜித், விஜய் ரசிகர்களை ஒருங்கிணைத்த சந்திரயான் 2

September 07, 2019

பாகிஸ்தான் அமைச்சர் ஃபாவட் ஹுசைன் செளத்திரி ட்விட்டரில், அனைவரும் தூங்க செல்லுங்கள், நிலவுக்கு செல்வதற்கு பதிலாக மும்பையில் தரையிறங்கியுள்ளது அந்த பொம்மை என்று பதிவிட்டார். 

சந்திரயான் - 2 திட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து பாகிஸ்தான் அமைச்சர் ஃபாவட் ஹுசைன் செளத்திரி கிண்டல் செய்வது போல ட்வீட் செய்தார். அதன்பின் 


#indiafailed என்ற ஹாஷ்டேகை பாகிஸ்தான் டிவிட்டர் பயனர்கள் டிரண்ட் ஆக்கினர். #indiafailed என்ற ஹாஷ்டேக் டிவிட்டர் டிரண்டிங்கில் உலகளவில் இடம் பிடித்தது. அதற்கு எதிர்வினையாற்றும் வகையில் இந்திய தரப்பில் #worthlesspakistan என்ற ஹாஷ்டேக் டிரண்ட் செய்யப்பட்டது. மேலும் #worthlesspakistan என்ற ஹாஷ்டேக் உலகளவில் டிரண்டிங் பட்டியலில் இடம்பெற்றது. 
பாகிஸ்தானுக்கு எதிராக விஜய், 

அஜித் ரசிகர்கள் ஒன்று சேர வேண்டும் என்றும் பல பதிவுகள் இந்த ஹாஷ்டேகில் காணப்பட்டன. அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சேர்ந்து பாகிஸ்தானை கிண்டல் செய்வது போன்ற பல மீம்களையும் இவர்கள் பகிர்ந்துள்ளனர். பாகிஸ்தான் அமைச்சருக்கு இந்திய ட்விட்டர்வாசிகள் கடும் எதிர்வினையாற்ற தொடங்க, ஃபாவட் ஹுசைன் செளத்திரி மீண்டும் வெளியிட்ட ட்விட் பதிவில், சந்திரயான் - 2 திட்டத்தின் பின்னடைவுக்கு நான் எப்படி காரணமாவேன்? ஏன் என்னை வசைபாடுகிறார்கள்? என்றும் கேள்வியெழுப்பினார்.
(பீபீசி)
அஜித், விஜய் ரசிகர்களை ஒருங்கிணைத்த சந்திரயான் 2 அஜித், விஜய் ரசிகர்களை ஒருங்கிணைத்த சந்திரயான் 2 Reviewed by irumbuthirai on September 07, 2019 Rating: 5

6-9-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி (முழு விபரம் இணைப்பு)

September 07, 2019

அரச வேலைவாய்ப்பு, பரீட்சை மற்றும் பல முக்கிய தகவல்களை


 உள்ளடக்கி 6-9-2019 அன்று வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இதில்,


பதிவாளர் நாயக திணைக்களம்
சுகாதார அமைச்சு


இலங்கை புகையிரத திணைக்களம்
நில அளவைத் திணைக்களம்


இலங்கை மதுவரி திணைக்களம் போன்ற பல்வேறு நிறுவனங்கள் தொடர்பான
வேலைவாய்ப்பு , பரீட்சை தொடர்பாக விபரங்களை அறியலாம். முழுமையான வர்த்தமானியைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


Gazette- Tamil
6-9-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி (முழு விபரம் இணைப்பு) 6-9-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி (முழு விபரம் இணைப்பு) Reviewed by irumbuthirai on September 07, 2019 Rating: 5

சந்திரயான்-2 என்ன நடந்தது?

September 07, 2019

இந்தியாவினால் அனுப்பப்பட்ட சந்திராயன் - 2 பற்றி பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் 

சந்திரயான்-2 விண்கலத்தின் 'விக்ரம் லேண்டர்' நிலவை நெருங்கியநிலையில், அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவிக்கையில், 'லேண்டரில் இருந்து கட்டுபாட்டு அறைக்கு சிக்னல் எதுவும் வரவில்லை. இந்த தரவுகளை ஆராய்ந்து வருகிறோம். நிலவிற்கு 2.1 கிலோ மிட்டர் தொலைவில் இருந்தபோது விக்ரம் லேண்டரில் தகவல் துண்டிக்கப்பட்டது. தகவல் தொடர்பு துண்டிப்பு குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது' என்று கூறினார். இஸ்ரோ சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய 'சந்திரயான்-2' விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டது. 


புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம், படிப்படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது. கடந்த மாதம் 20 ஆம் திகதி 'சந்திரயான்-2' விண்கலம் நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைந்தது. அதன்பிறகு படிப்படியாக 5 முறை 'சந்திரயான்-2' விண்கலத்தின் நிலவின் சுற்று வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது. கடந்த 2 அம் திகதி 'சந்திரயான்-2' விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்க தொடங்கியது. பின்னர் 2 முறை உள் உந்து விசையை பயன்படுத்தி விக்ரம் லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டு, அதன் சுற்று வட்டப்பாதை மாற்றி அமைக்கப்பட்டது. இதன் மூலம் விக்ரம் லேண்டர் நிலவை நெருங்கியது. 

இந்நிலையில் 'சந்திரயான்-2' விண்கல திட்டத்தின் முக்கிய மற்றும் சவாலான நிகழ்வு இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் நடந்தது. சந்திரயான்-2 விண்கலத்தின் 'விக்ரம் லேண்டர்' நிலவை நெருங்கியநிலையில் அதிலிருந்து சிக்னல் எதுவும் வரவில்லை. அதில் இருந்து வரும் சிக்னலுக்காக விஞ்ஞானிகள் காத்திருக்கிறார்கள். 

இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவிக்கையில், 'லேண்டரில் இருந்து கட்டுபாட்டு அறைக்கு சிக்னல் எதுவும் வரவில்லை. இந்த தரவுகளை ஆராய்ந்து வருகிறோம். நிலவிற்கு 2.1 கிலோ மிட்டர் தொலைவில் இருந்தபோது விக்ரம் லேண்டரில் தகவல் துண்டிக்கப்பட்டது. தகவல் தொடர்பு துண்டிப்பு குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தார். இன்று, அதிகாலை, 2:15 மணி அளவில், 'லேண்டர்' தரையிறங்கும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலிருந்து, 'சிக்னல்' துண்டிக்கப்பட்டது. இதை, இஸ்ரோ தலைவர், சிவன் அறிவித்தார். இங்கு வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி , 'விஞ்ஞானிகள் நம்பிக்கை இழக்க வேண்டாம்' என கூறி, இஸ்ரோ நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
சந்திரயான்-2 என்ன நடந்தது? சந்திரயான்-2 என்ன நடந்தது? Reviewed by irumbuthirai on September 07, 2019 Rating: 5

மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு

September 07, 2019

மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு அதகரிக்கப்படும் என வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். மூன்று சதவீதமாகவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு வீதம் அடுத்த வருடத்தில் இருந்து 

6 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். எம் மத்தியில் வாழும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகளும் வாய்ப்புக்களும்' என்ற தலைப்பில் யாழ் பொது நூலகத்தில் இம்மாதம் 5ஆம் திகதி மாலை நடைபெற்ற ஐந்தாவது வடக்கு வட்டமேசை கலந்துரையாடலில் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் சவால்கள், அவர்களது தேவைகள் தொடர்பாக கருத்துக்கள் பரிமாறப்பட்டன இதன்போது ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 
இந்த வடக்கு வட்டமேசை கலந்துரையாடலில் சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் சவால்கள் தொடர்பில் ஆளுநருக்கு எடுத்துரைத்தார். இதன்போது அவர்களுக்கான சில தீர்வுகள் கலந்துரையாடலின் போதே ஆளுநரால் வழங்கப்பட்டது. 

தற்பொழுது 3 சதவீதமாகவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு அடுத்த வருடம் அதாவது எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 6 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்றும் ஆளுநர்; நம்பிக்கை தெரிவித்தார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான போக்குவரத்து வசதிகளும் அவர்களது தேவைகள் தொடர்பிலான அறிவுறுத்தல்களை திணைக்கள தலைவர்களுக்கு வழங்கவுள்ளதாகவும் ஆளுநர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி)
மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு Reviewed by irumbuthirai on September 07, 2019 Rating: 5

அர்ஜூன் மகேந்திரனை அழைத்து வருவதற்கான ஆவணங்களில் ஜனாதிபதி கைச்சாத்து

September 06, 2019

மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள ஆவணங்களில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன் இன்று (06) கைச்சாத்திட்டார். அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக சட்டமா அதிபரினால் தயாரிக்கப்பட்டுள்ள சுமார் 

21,000 பக்கங்களை கொண்ட ஆவணங்கள் சிங்கப்பூரின் குறித்த திணைக்களத்திற்கு அனுப்பப்பட வேண்டியுள்ளது. முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநரை நாட்டுக்கு கொண்டு வருவதற்கு தேவையானவை எனக் குறிப்பிடப்பட்டுள்ள அந்த அனைத்து ஆவணங்களும் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியினால் பரிசீலனை செய்யப்பட்டதுடன், 

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் அந்த ஆவணங்கள் சான்றுப்படுத்தப்பட்டன. வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக உடனடியாக அந்த ஆவணங்களை சிங்கப்பூர் அரசாங்க அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
அர்ஜூன் மகேந்திரனை அழைத்து வருவதற்கான ஆவணங்களில் ஜனாதிபதி கைச்சாத்து அர்ஜூன் மகேந்திரனை அழைத்து வருவதற்கான ஆவணங்களில் ஜனாதிபதி கைச்சாத்து Reviewed by irumbuthirai on September 06, 2019 Rating: 5

Yala sixth in world

September 06, 2019


The Yala National Park has been ranked number six among the world’s best national parks by the acclaimed National Geographic in its recently-published book, 100 Parks, 5000 Ideas by Joe Yogerst, Wildlife Conservation Department Deputy Director (Planning and ICT) Ranjan Marasinghe said.National Geographic’s ‘100 Parks, 5,000 Ideas’ was published in February and its author Joe Yogerst has lived and worked in Asia, Africa, Europe, and North America. Wrangell-St Elias National Park in Alaska, Torres del Paine National Park in Chile, Theodore Roosevelt National Park in North Dakota, Kakadu National Park in Australia and Jasper National Park in Canada are the top five national parks as ranked by Yogerst in this book. “Yala National Park tends to really fly under the radar, but it’s one of the world’s most diverse national parks.


It’s primarily known for wildlife, especially leopards and elephants. But the park also has terrific beaches, ancient rock temples that are still active places of worship, and a choice of lodges or camping for overnight stays. There aren’t many places on the planet where you can safari drive in the morning and surf in the afternoon,” Yogerst said in his book. Marasinghe referred to Yogerst’s ranking of national parks while making the opening remarks at the ‘Wildlanka International Symposium 2019’ organised by the Wildlife Conservation Department at Waters Edge on Monday.The two-day symposium themed ‘Innovation for Conservation’ was attended by wildlife enthusiasts, researchers and officials.


“In the local sphere, our achievements are hardly recognised, but in the international sphere we were talked about,” he said, also pointing out that all six proposals the Sri Lankan delegation presented at the recently-concluded ‘World Wildlife Conference 2019’ (CITES CoP18) in Geneva obtained positive votes. “The contribution of the Sri Lankan delegation at the CITES, which I was proud to be a part of, was admired by many. We presented the proposed ‘eCITES’ platform about to be launched next month to facilitate the CITES information-permitting system. Even the US delegation was interested,” he said.He said the Wildlife Department has always been keen to embrace technology in all aspects of its work, adding that it adopted geo-informatics, remote sensing and video technology for work before many other institutions did. 


“Now we explore new technology in the human–elephant conflict mitigation efforts too,” he added. “Our field officers are blamed for not being present at several places at the same time and our senior officers are blamed for not allowing land for other uses and not protecting the reserves at the same time. People expect us to have the cake and eat it at the same time and we are quite used to this attitude now,” he remarked.Tourism Development, Wildlife and Christian Religious Affairs Minister John Amaratunga who took part in the event as the chief guest congratulated the Sri Lankan delegation to the CITES conference for their remarkable performance. He added that a scientific approach is needed for conservation of wildlife as the successive governments depend on it to boost tourism income.
(GID)


Yala sixth in world Yala sixth in world Reviewed by irumbuthirai on September 06, 2019 Rating: 5

ஜப்பானில் வேலைவாய்ப்பு: போலி நபர்களிடம் ஏமாற வேண்டாம்: உண்மை விளக்கம் இதோ..

September 06, 2019

ஜப்பான் அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ் இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பை வழங்கும் வேலைத்திட்டம் இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முக்கிய இரண்டு பிரிவுகள் மூலம் தொழில் வாய்ப்புக்கள் இலங்கையர்களுக்கு கிடைப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 

 01. தோழில்நுட்ப சேவை பயிற்சியுடனான தெழில்வாய்ப்பிற்கான உடன்படிக்கை NEW TITP 
02. விஷேட செயலாற்றலை கொண்டவர்களுக்காக தெழில்வாய்ப்பிற்கான உடன்டபடிக்கை 
SSWRP NEW TITP தோழில்நுட்ப சேவை பயிற்சியுடன் தொழிலில் ஈடுபடுவதற்கான உடன்படிக்கையின் கீழ் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மூலம் அல்லது பணியகத்தின் அனுமதியுடன் தனியார் தொழில்வாய்ப்பு முகவர் நிலையத்தின் மூலம் இதில் ஈடுபடமுடியம். பணியகத்தின் மூலம் IM ஜப்பான் நிறுவனத்தில் இணைத்துக்கொள்ளல் இலவசமாக மேற்கொள்ளப்படும். 

அத்தோடு தெரிவுசெய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு தமது தனிப்பட்ட செலவிற்காக சில தொகையை செலவிட வேண்டியிருக்கும். இந்த தொழிலுக்காக விண்ணப்பிக்கும் பணியாளர்களுக்கு ஜப்பான் மொழி ஆற்றல் தொடர்பில் தகுதியிருக்க வேண்டும்.(N5/N4) பணியகத்தின் அனுமதி பெற்ற தனியார் தொழில்வாய்ப்பு முகவர் நிறுவனம் மேற்கொள்ளும் ஆட்களை இணைத்துக்கொள்வதில் தகுதிகளை கொண்ட தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களிடம் கட்டணம் அறிவிடமுடியும். 
இவ்வாறு அறவிடப்படும் கட்டணம் 350,000.00 இற்கும் குறைந்ததாக இருக்க வேண்டும். இவ்வாறு அங்கீகரிக்கப்படும் கட்டணம் பணியகத்தின் இணையத்தளத்தின் மூலம் அவதானிக்க முடியும். ஜப்பான் தொழில் வாய்ப்பிற்காக இது வரையில் அனுமதிப்பத்திரம் பெற்ற தொழில் முகவர் நிலையங்களுக்காக ஜப்பானில் OTIT என்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியைப் பெற்ற தொழில்முகவர் பட்டியல் www.slbfe.lk என்ற இணையத்தளத்தின் மூலம் பார்வை இடமுடியம். 
SSWRP விஷேட ஆற்றல்களைக் கொண்டவர்களுக்காக உடன்படிக்கைக்கு அமைவாக ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விஷேட ஆற்றல்களைக் கொண்ட பணியாளர்களுக்க ஜப்பானிற்கு தொழில்வாய்ப்பிற்கு செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும். இந்த உடன்படிக்கைக்கு அமைவாக 14 துறைகளின் கீழ் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும். பராமரிப்பு சேவை, கட்டிடங்களை துப்பரவு செய்வோர் (SSWRP), இயந்திர உதிரிப் பாகங்கள் மற்றும் ஒன்றிணைத்தல் மற்றும் தொழில்நுட்ப இயந்திர தொழில்துறை, இலத்திரனியல் மற்றும் தகவல் தொழிற்துறை, கட்டிட நிர்மாணத்தை கேந்திரமாக கொண்ட கப்பல் துறை ,கப்பல் தொழில்துறை, போக்குவரத்து வாகனங்கள் மற்றும் பராமரிப்பு, விமான தொழிற்துறை, தங்குமிடவசதி, விவசாய தொழில்துறை, கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உற்பத்தி, உணவு பானங்கள் தயாரிப்பு, உணவு சேவை உள்ளிட்ட 16 துறைகளை உள்ளடக்கியுள்ளது. இந்த SSWRP வேலைத்திட்டத்திற்காக எந்தவொரு தேசிய தொழில் முகவர் நிலையத்திற்கும் ஆட்களை இணைத்துக்கொள்வதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் அனுமதி வழங்கப்படவில்லை. இந்த வேலைத்திட்டத்தின் மூலம் ஜப்பான் தொழில்வாய்ப்பிற்காக செல்வதற்கு தகுதியைக் கொண்டவர்கள் பணியகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பணியகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் தகுதிகளைக் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு இலங்கையில் நடத்தப்படும் விஷேட ஆற்றல்களை பரிசோதிப்பதற்கு செயலகம் நடவடிக்கை மேற்கொள்ளும். 

இது தொடர்பான தவறான கருத்துக்களை வெளியிட்டு நபர்களை தவறாக வழிநடத்தும் மோசடி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஜப்பான் தொழில் வாய்ப்பிற்காக இவர்களுக்கு பணியாளர்களை அனுப்புவதற்கு முடியும் என்றும் அரசாங்கத்துடன் தொடர்புபட்டிருப்பதாக தெரிவித்து பணத்தை வசூலிப்பதாக சம்பவங்கள் அலுவலகத்திற்கு கிடைத்துள்ளன. இதனால் ஜப்பான் தொழில் வாய்ப்பிற்காக பணம் வசூலிக்கும் நபர்களிடம் சிக்க வேண்டாம் என்றும் அவ்வான நபர்கள் தொடர்பான தகவல்கள் இருக்குமாயின் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு பணியகம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. ஜப்பான் தொழில் வாய்ப்பு தொடர்பாக சகல தகவல்களும் www.slbfe.lk என்ற இணையத்தளத்தின் மூலம் அறிந்து கொள்ளமுடியும். 
(அ.த.தி)
ஜப்பானில் வேலைவாய்ப்பு: போலி நபர்களிடம் ஏமாற வேண்டாம்: உண்மை விளக்கம் இதோ.. ஜப்பானில் வேலைவாய்ப்பு: போலி நபர்களிடம் ஏமாற வேண்டாம்: உண்மை விளக்கம் இதோ.. Reviewed by irumbuthirai on September 06, 2019 Rating: 5

03.09.2019 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் (முழு விபரம் இணைப்பு)

September 05, 2019

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பயனாளிகளை தெரிவு செய்யும் நடைமுறையில் திருத்தத்தை மேற்கொள்ளல், 

இரத்தினபுரி தமிழ் வித்தியாலயத்திற்கு காணியை ஒதுக்கீடு செய்தல், காணாமற் போனவர்களுக்காக இடைக்கால நிவாரணத்தை வழங்குதல் உட்பட 23 விடையங்கள் தொடர்பான தீர்மானங்கள். 
01. அரச செலவு முகாமைத்துவும் 
கௌரவ பிரதமரினதும் கௌரவ அமைச்சரவை அந்தஸ்த்து அற்ற அமைச்சர்களினதும் கௌரவ இராஜாங்க அமைச்சர்களினதும் கௌரவ பிரதியமைச்சர்களினதும் தனிப்பட்ட அலுவலக ஊழியர் மற்றும் ஏனைய வசதிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய வரையறைகளை அறிவித்து ஜனாதிபதி செயலகத்தினால் 2010 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ள அரச செலவு முகாமைத்துவம் முன்னெடுக்கப்பட்;ட சுற்றுநிருபகத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை கவனத்தில் கொண்டு தற்காலத்திற்கு பொருத்தமான வகையில் உரிய திருத்தங்கள் மற்றும் புதிய விடயங்களை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அந்த விடயங்கள் தொடர்பிலான புதிய சுற்றறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  
02. போக்குவரத்து வாகன தவறு தொடர்பில் தரவு மற்றும் தகவல்கள் முகாமைத்துவத்துடன் தண்டப்பணத்தை சேர்த்தல் மற்றும் வாகன சாரதிகளுக்கு பாதகமான எச்சரிக்கையை குறிப்பிடும் புள்ளி முறையை நடைமுறைப்படுத்துவதற்காக விரிவான ஒன்றிணைந்த இலத்திரனியல் தீர்வை நடைமுறைப்படுத்துதல். 
போக்குவரத்து வாகன தவறு தொடர்பில் தரவுகள் மற்றும் தகவல்கள் முகாமைத்துவம் உடனடி தண்டப்பணம் சேகரித்தல் மற்றும் வாகன சாரதிக்கு பாதகமான எச்சரிக்கைப் புள்ளி முறையை நடைமுறைப்படுத்துவதற்காக விரிவான ஒன்றிணைந்த இலத்திரனியல் தீர்வை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நிதி அமைச்சின் கீழ் அமைக்கப்பட்டுள்ள அரச தனியார் புரிந்துணர்வுக்கான தேசிய பிரதிநிதிகளின் கண்காணிப்பு மற்றும் பரிந்துரையை உள்ளடக்கிய அறிக்கையை நடைமுறைப்படுத்துதல் அமைச்சரவையினால் கொள்கை ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக மேற்கொள்ளப்படவேண்டிய சாத்தியக்கூறு மதிப்பீட்டின் படி பேராதெனிய பல்கலைக்கழகத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைக்கு அமைவாக 22.2 மில்லியன் ரூபா (வட்டியற்ற) மதிப்பீடு செய்யப்பட்ட தொகைக்கு அவர்களால் மேற்கொள்ளவதற்காக பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
03. நெலும் (தாமரை) கோபுர திட்டம் - கொழும்பு தாமரை கோபுர கட்டிடத் தொகுதிக்காக உத்தேச வணிகமய செயற்பாடுகள்.
கொழும்பு நெலும் (தாமரை) கோபுர திட்டத்தை பூர்;த்தி செய்து இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குருத்தல் ஆணைக்குழுவிடம் விரைவில் ஒப்படைக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தில் துணைநலன்களை இலங்கை மக்கள் அனுபவிக்கக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதைப் போன்று இதனை வணிக செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்காக விரைவில் வணிக நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என்பதினால் இதற்கான பணிகளின் முகாமைத்துவத்திற்காக அரசாங்கத்திற்கான நிறவனமொன்றை ஸ்தாபிப்பதற்கென திறைசேரிக்கு அதிகாரத்தை வழங்குவதற்காக பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

04. கழிவுப் பொருள் முகாமைத்துவம் தொடர்பான தேசிய கொள்கை. 
திண்மப்பொருள் மற்றும் வாயு போன்று கழிவுப் பொருள் பிரிவுக்குட்பட்ட தற்பொழுது உள்ள மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனைத்து கழிவுப் பொருட்களையும் உள்ளடக்கி அந்த கழிவுப் பொருள் முகாமைத்துவத்தை மேற்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களின் பொதுவான, மாறுபட்ட பொறுப்பை விரிவான முறையில் அடையாளங்கண்டு திருத்த சட்டமூலம் மேற்கொண்ட கழிவுப் பொருள் முகாமைத்துவம் தொடர்பாக தேசிய கொள்கையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்காக தேவையான சட்டக்கட்டமைப்பு மற்றும் விதிகளை தயாரிப்பதற்காகவும் அந்த கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காகவும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
05. களனி தெற்கு ஆற்றங்கரை நீர் விநியோகத் திட்டம் - கட்டம் 2 
களனி வத்தளை மாஹர மியகம ஜாஹெலைப் போன்று சர்வதேச விமான நிலையம் சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் விமானப் படை முகாம் உள்ளிட்ட கட்டுநாயக்க பிரதேசத்திற்காக நீர் விநியோகத்தை மேற்கொள்வதற்கென தேசிய நீர் விநியோகம் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் நீர் விநியோகத்திட்டத்தின் 2ஆம் கட்ட கால எல்லையை 2020ஆம் ஆண்டு ஜுன் மாதம் 22ஆம் திகதி வரையில் நீடிப்பதற்காக நகரத்திட்டமிடல் நீர் விநியோகம் மற்றும் உயர்கல்வி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
06. 1978ஆம் ஆண்டு இல 16 இன் கீழான பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளல் 
உயர் கல்வி நிறுவனத்தை அமைத்தல் பராமரித்தல் மற்றும் நிர்வாகிப்பதற்கான 1978ஆம் ஆண்டு இல 16 இன் கீழான பல்கலைக்கழக சட்டம் சமீப கால அபிவிருத்தியுடன் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் பயனுள்ள வகையில் ஒழுங்குருத்தலை மேற்கொள்வதற்காக வலுவான சட்டக் கட்டமைப்பொன்றை வழங்கும் வகையில் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டிய தேவை உண்டு. விசேட சபையொன்றினால் இது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள எண்ணக்கரு ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் நகரதிட்டமிடல் நீர் விநியோகம் மற்றும் உயர்கல்வி அமைச்சின் செயலாளரின் தலைமையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக இதன் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
07. அரச தனியார் பங்குடைமையின் மூலம் கொழும்பு துறைமுக நகரத்துக்குள் அரசாங்கத்திற்கு உட்பட்ட நிரப்பப்படும் காணியில் காட்சி மற்றும் மகாநாட்டு மத்திய நிலையம் சர்வதேச பாடசாலை மற்றும் வைத்தியசாலை ஆகியவற்றின் துரிதமான அபிவிருத்திக்காக மூலோபாய முதலீட்டாளர்களை கண்டறிவதற்கான பரிந்துரை. 
புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத்தில் காணியை நிரப்பும் பணி தற்பொழுது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் அங்கீகரிக்கப்பட்ட முக்கிய திட்டம் மற்றும் அபிவிருத்தி நிர்வாக ஒழங்கு விதிகளுக்கு அமைவாக அரச தனியார் பங்குடைமைக்காக தேசிய பிரதிநிதித்துவ நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்த நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படவுள்ள சர்வதேச பாடசாலைக்கு அமைவான காணிப்பகுதியில் மகாநாட்டு ஹோட்டல் ஒன்றிற்காக முதலீட்டை மேற்கொள்ளுவதுடன் கண்காட்சி மற்றும் மகாநாட்டு மத்திய நிலையம் மற்றும் சர்வதேச வைத்தியசாலைக்காக முதலீட்டாளர்களிடம் ஆலோசனைகளை கோருவதற்காக இந்த பரிந்துரை பெறுகை நடைமுறைக்கு அமைவாக மதிப்பீட்டை மேற்கொள்வதற்காக கலந்துரையாடல் குழுவொன்றையும் திட்ட குழுவொன்றையும் நியமிப்பதற்காக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

08. முத்துராஜவெல கைத்தொழில் வலயத்தில் உள்ள இலங்கை காணி அபிவிருத்தி மற்றும் அபிவிருத்தி செய்யும் கூட்டுத்தாபனம் கொண்டுள்ள 13 ஏக்கர் 1 ரூட் 00.95 பேர்ச் காணி பகுதியை சி ஏ கிரசின் தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்குதல் 
வெளி சுற்றுவட்டம் அதிவேக வீதி திட்டத்தின் பணிகள் தற்பொழுது பூர்த்தியடையும் நிலையை எட்டியுள்ளது. இதற்கமைவாக இந்த திட்டத்தின் ஒப்பந்த நிறுவனமான மெட லொஜிக்கல் கோப்பரேஷன் ஒப் சைனா நிறுவனத்திடம் திட்ட தேவைக்காக வருடாந்த குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள முத்துராஜவெல கைத்தொழில் வலயத்தில் உள்ள இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் கொண்டுள்ள 13 ஏக்கர் 1 ரூட் 00.95 பேர்ச் காணியை அதன் திட்டத்திற்காக தயாரிக்கபட்ட மணல் மற்றும் வீதி கட்டுமாணப் பணிகளுக்குத் தேவையான தரைத்தளங்களுக்கான கல்லை விநியோகிக்கும் சி ஏ கிரசின் தனியார் நிறுவனத்திற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய நிறுவனங்களின் அனுமதியை பெற்றுக் கொள்வதற்கு அமைவாக 30 வருட கால எல்லைக்கு குத்தகைக்கு வழங்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
09. இரத்தினபுரி தமிழ் வித்தியாலயத்திற்கு இரத்தினபுரி புதிய நகரத்தில் காணியை ஒதுக்கீடு செய்தல் 
இரத்தினபுரி தமிழ் வித்தியாலயத்தின் அபிவிருத்தி திட்டத்திற்காக பதிய நகர வளவிலுள்ள 3 ஏக்கர் அளவிலான காணி ஒன்றை அரச காணியில் ஒதுக்கீடு செய்வது தொடர்பில் செயலாளர்களின் குழுவின் சிபாரிசுக்கு அமைவாக சப்ரகமுவ மாகாண கல்வி தகவல் தொழில் நுட்பம் மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சிற்கு ஒதுக்கீடு செய்வதற்காக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
10. பசுமைப் பூங்கா வரவு செலவு முன்மொழிவின் கீழ் மாநகர மற்றும் மேல்மாகாண அமைச்சிற்கு தேசிய வரவு செலவு திட்டத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட திறைசேரி மானியத்தைப் பயன்படுத்தி அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் 
பசுமைப் பூங்கா வரவு செலவு திட்ட தலைப்பின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட மானியத்தைப் பயன்படுத்தி அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இதற்கு முன்னர் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கு முன்னர் புத்தளம் மற்றும் பலாங்கொடை புதிய திட்டம் மற்றும் 19 திட்டங்களின் எஞ்சிய வேலைத்திட்ட விடயத்தை அதாவது சிறுவர் விளையாட்டுப் பூங்கா மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களை விநியோகித்தல் மற்றும் ஸ்தாபித்தல், காணிப்பகுதியை அலங்கரித்தல் ஆகிய பணிகளுக்காக மத்திய பொறியியலாளர் சேவை நிலையத்திற்கு தற்பொழுது உள்ள வரவு செலவு திட்ட எல்லைக்குள் வழங்குவதற்காக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
11. ஆசியா மற்றும் பசுபிக் வலயத்தில் ஒன்றிணைந்த கிராமிய அபிவிருத்தி தொடர்பான மத்திய நிலையத்தின் செயற்பாட்டு பேரவை மற்றும் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் - 2019 
ஆசியா மற்றும் பசுபிக் வலயத்தின் ஒன்றிணைந்த கிராம அபிவிருத்தி தொடர்பான மத்திய நிலையத்தின் நிறைவேற்றுக் குழு கூட்டம் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 ஆம் மற்றும் 9 ஆம் திகதிகளிலும் செயற்பாட்டுக் குழு கூட்டம் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் திகதியிலும் இலங்கையில் நடத்தப்படவுள்ளது. இதற்கமைவாக விவசாயம் கிராமிய பொருளாதார அலுவல்கள் நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீர் வள அபிவிருத்தி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட இதன் கூட்டத்திற்கான மதிப்பீடு செலவு அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. 
12. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பயனாளிகளை தெரிவு செய்யும் நடைமுறையில் திருத்தத்தை மேற்கொண்டு குறைந்த வருமானத்தைக்கொண்ட குடுபங்களின் பிள்ளைகளின் பெரும்பாலானவர்களுக்கு 2ஆம் நிலை கல்வி வசதிகளைசெய்து கொடுத்தல். 
தற்பொழுது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தகுதி பெற்ற குறைந்த வருமானத்தைக் கொண்ட குடும்பங்களின் 15,000 மாணவாகளுக்காக அரசாங்கத்தின் மூலம் வருடாந்தம் 625 மில்லியன் ரூபா அளவில் புலமை பரிசில் நிதியுதவி வழங்கப்படுகின்றது. 2019ஆம் ஆண்டு தொடக்கம் இதன் மாணவர் எண்ணிக்கையை 20,000 வரையில் அதிகரித்தல் இவர்களுக்கான மாதாந்த புலமைப்பரிசில் கொடுப்பனவை ரூபா 500 இலிருந்து ரூபா 750 வரை அதிகரித்தல் 2019ஆம் ஆண்டு தொடக்கம் புலமைபரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் குடும்பங்களின் புலமை பரிசில் நிதி உதவியை பெற்றுக்கொள்வதற்கு தகுதியைப் பெறும் மாதாந்த வருமான எல்லையை 15,000 ரூபாவாக திருத்துவதற்கும் அனைத்து புலமைப் பரிசில் நிதி உதவியும், அனைத்து புலமைப் பரிசில் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையும் 20,000 ஆக அதிகரிக்கப்படவுள்ளது. பரீட்சை திணைக்களத்தினால் சிபாரிசு செய்யப்படும் விசேட தேவைகளைக்கொண்ட பிள்ளைகளுக்காக புலமை பரிசில் தொகையை ஒதுக்கீடு செய்தல் மற்றும் பரிந்துரையை நடைமுறைப்படுத்தவதற்கான பணியில் ஈடுபட்டிருப்பதான விடயத்தை தெரிவித்து கல்வி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட குறிப்பை அமைச்சரவைகவனத்தில் கொண்டுள்ளது 

13. கொழும்பு பங்கு சந்தையினால் விதிக்கப்பட்டுள்ள பொதுவான பங்கு பரிமாறல் ஆகக் குறைந்த வரையறை 10 சதவீதத்தை நிறைவேற்றுவதற்காக இலங்கை டெலிகொம் சொத்தில் அரசாங்கம் கொண்டுள்ள வர்த்தகம் மற்றும் பங்களிப்பு நிதியத்தின் மூலம் முதலீட்டை மேற்கொண்டு அதன் மூலம் இலங்கை டெலிகொம் நிறுவனத்தின் அரசாங்கம் கொண்டுள்ள பங்கு உரிமையை வலுவூட்டுவதற்கான பரிந்துரை. 
இலங்கை டெலிகொம் பிஎல்சி நிறுவனம் அரசு கொண்டுள்ள ஏனைய வர்த்தகம் மற்றும் பங்களிப்பு முதலீட்டு நிதிய கணக்குகள் பலவற்றின் மூலம் 52.92 சதவீத பங்குகள் உரிமையை நிர்வகித்தல் மற்றும் 2.1 வீத பங்கை கொண்டுள்ள பொதுமக்களிடம் உள்ள முக்கிய சொத்து இந்த நாட்டின் தொலைத்தொடர்பு சேவை வழங்குணர் ஆவர். இலங்கை சேமிப்பு பத்திரங்கள் மற்றும் வெளிநாட்டு நாணய ஆணைக்குழுவினால் 2013ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விதிகளுக்கு அமைவாக பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பொது பங்கு சுதந்திர பரிமாறல் என்ற ரீதியில் 'பொது பங்கை விடுவித்தல் பரிமாறல்' ஆகக்கூடிய வகையில்; 10 சதவீத வரையை முன்னெடுக்கும் தேவையை இலங்கை டெலிகொமினால் ழுமைப்படுத்தும் பொருட்டு ஊழியர்சேமலாப நிதி வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் தேசிய கட்டிட நிர்மாண வங்கி இலங்கை வங்கி ஊழியர்களுக்கான நம்பிக்கை நிதி மற்றும் மக்கள் வங்கி ஆகிய அரசாங்கம் கொண்டுள்ள வர்த்தகம் மற்றும் பங்களிப்பு நிதிகளுக்கு தனது பணிப்பாளர் சபையினால் அனுமதிக்கு உட்பட்ட குறிப்பிடப்பட்ட இலங்கை தொலைதொடர்பு பங்கு முதலீட்டிற்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி அமைச்சர் அவர்களும் தொலைதொடர்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சும் கூட்டாக மேற்கொண்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்காரம் வழங்கப்பட்டுள்ளது. 
14. Peoples of Sri Lanka நூலின் தெரிவுசெய்யப்பட்ட 10 சமூகங்கள் தொடர்பாக தற்போதைய 10 வேலைத்திட்டங்களை உருவாக்குதல் 
Peoples of Sri Lanka என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு சினிமா துறையைச் சேர்ந்த முக்கியஸ்தகரான பர்ட்ரம் நிஹால் அவர்களினால் தயாரிக்கப்படவுள்ள இன சமூகங்கள் தொடர்பான வேலைத்திட்டத்தின் பிரதியை பரிசோதிக்கும் பணிக்காக முறையான குழுவொன்றின் மூலம் முழுமையான அனுமதியை பெற்றுக்கொள்ளப்பட்டமைக்கு அமைவாக சம்பந்தப்பட்ட பணியை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைவாக 5 வல்லுனர்களைக்கொண்ட குழவொன்றை வள பங்களிப்பு ரீதியில் இணைத்துக் கொள்வதற்காக தேசிய ஒருமைப்பாடு அரசகரும மொழி, சமூக மேம்பாடு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

15. காணாமல் போனமை குறித்து உறுதிசெய்யப்பட்ட காணாமற் போனவர்களுக்காக இடைக்கால நிவாரணத்தை வழங்குதல் 
காணாமல் போனவர்கள் தொடர்பான சான்றிதழை கொண்டுள்ள பயனாளிகளுக்காக 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் ஒவ்வொரு மாதமும் 10ஆவது தினத்தன்று நேரடியாக பணத்தை வைப்பீடு செய்வதன் மூலம் மாதாந்தம் 6,000 ரூபா இடைக்கால நிவாரணத்தை வழங்குவதற்காகவும் காணாமல் போன நபர் தொடர்பான அலுவலகத்தின் இடைக்கால அறிக்கையை கவனத்தில் கொண்டு அழுத்தத்திற்கு உள்ளான குடும்பங்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களுக்காக காணாமல் போனோர் தொடர்பான சான்றிதழை வழங்குமாறு பதிவாளரின் திணைக்களத்திற்கு உத்தரவை பிறப்பிப்பதற்காகவும் நிதி அமைச்சர் அவர்களும் தேசிய ஒருமைப்பாடு அரசகரும மொழி சமூக மேம்பாடு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் அவர்களும் கூட்டாக சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீhரம் வழங்கியுள்ளது. 
16. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு பேரவையினால் 1540 இல பரிந்துரையை இலங்கையில் நடைமுறைப்படுத்துதல் 
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு பேரவையின் 1540 இல பரிந்துரைக்கு அமைவாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் அனைத்து அங்கத்துவ நாடுகளில் ஆயுதங்களை கைப்பற்றுதல் தம்மிடம் வைத்துக்கொள்ளல் மற்றும் பெற்றுக்கொள்ளல் எடுத்துச் செல்லல் மற்றும் பயன்படத்துவதற்கு முயற்சிக்கும்; அரச சார்பற்ற செயற்பாடுகளுக்கு அது தொடர்பில் எந்த வகையிலும் ஒத்துழைப்பை வழங்குவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். இதற்கமைவாக படுகொலை ஆயுதம் அதற்கமைவான பொருட்களை விநியோகிப்போர் மீள் ஏற்றுமதி, இடம்பெயர்தல், கப்பலை மாற்றுதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபடுதல், போக்குவரத்து மற்றும் பணிகள் இந்த நாட்டில் இருந்து அல்லது இந்த நாட்டின் ஊடாக மேற்கொள்ளுதல் மற்றும் இது தொடர்பான சட்டம் மற்றும் ஒழுங்கு விதிகளை தயாரித்தல் காலத்தின் தேவை என்பதினால் இந்த தேவைக்கு உட்பட்ட வகையில் ஐரோப்பிய ஒன்றியம் யுத்த உபகரணப் பட்டியல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயன்பாட்டு கட்டுப்பாட்டுப் பட்டியலைப் பயன்படுத்தி இலங்கைக்கு பொருத்தமான வகையில் தேசிய கட்டுப்பாட்டு பட்டியலொன்றை ஒவ்வொரு வருடத்திலும் தயாரிப்பதற்கும் 1540 இலக்க பிரேரணையை நடைமுறைப்படுத்துவதற்காக 2039/31 மற்றும் 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ஈம் திகதி அன்று வெளியான அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்ட கட்டளைகளை மாற்றுவதற்காக திருத்த சட்ட மூலத்தை மேற்கொள்வதற்காகவும் அபிவிருத்தி மூலோபாயம சர்வதேச வர்த்தக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
17. பங்களாதேஷில் திடீரென ஏற்பட்ட வெள்ள நிவாரணத்திற்காக நன்கொடை வழங்கல் 
இந்த வருடத்தில் ஜுலை மாதம் தொடக்கம் பங்களாதேஷில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாரிய வெள்ள நிலைமையை கவனத்தில் கொண்டு பங்களாதேஷ் மக்கள் அரசாங்கத்திற்கு அவசர வெள்ள நிவாரண நிதியாக 50ஆயிரம் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குவதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

18. தங்கொட்டுவ நீர் விநியோகத் திட்டம் 
புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள மிகவும் வேகமாக வளர்ச்சியடையும் உப நகரமாக கருதப்படு;ம் வென்னப்புவ தங்கொடுவ நாத்தாண்டி பிரதேசங்களில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்துவதற்காக நீர்விநியோகம் மற்றும் வடிகான் அமைப்புச் சபையினால் தங்கொட்டுவ நீர் விநியோக திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் M/s BESIX S.A என்ற நிறவனத்திடம் 28 மில்லியன் யூரோக்கள் மற்றும் 5,400 மில்லியன் ரூபாவிற்கு வழங்குவதற்காக நகரத்திட்டமிடல் நீர்விநியோகம் மற்றும் உயர்கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
19. தேசிய கோபுரம் மற்றும் விநியோக வலைப்பின்னல் அபிவிருத்தி மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் திட்டம் - பொதி 1:400 kv, 220 kv மற்றும் 132kv கோபுர வழியை நிர்மாணித்தல் ஒப்பந்தத்தை வழங்குதல் 
தேசிய கோபுரம் மற்றும் விநியோக வலைப்பின்னல் அபிவிருத்தி செயல்திறன் தன்மையை மேம்படுத்தும் திட்டம் பொதி 1:400 kv, 220 kv மற்றும் 132kv கோபுர வழியை நிர்மாணிக்கும் ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய Joint Venture of Mitsubishi Corporation, Sumitomo Electic Industric Ltd. And Ceylex Engineering (Pvt.) Ltd, 3-1, Marrumouchi, 2-chome, Chiyoda, Tokyo 100- 8086, japan என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக மின்சக்தி எரிசக்தி, வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
20. நிலத்துக்கடியிலான வெண்கல கேபலின் கீழ் காப்பு (Insulation) செய்த240 sqmm 3 Core 11kV XLPE – 35 km மற்றும் விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல். 
இலங்கை மின்சார சபையின் விநியோக வலயம் ஒன்றிற்காக 240 sqmm 3 Core 11kV XLPE Insulation Under Ground Copper Cables கிலோ மீற்றர் 35 கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்திற்கு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய M/s Phelps Dodgee International (Thailand) Limited, No.159, MOO 10, Thwpaarak Road, Bangpla, Bangplee District, Samutprakarn, 10540, Thailand வழங்குவதற்காக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த் ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
21. அவசியம் பயிர் உற்பத்தி காப்புறுதி பணிக்காக 2019/20 பெரும்போக மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான சிறுபோகத்திற்கான மறுகாப்பீட்டை உள்வாங்கும் பணிகளை மேற்கொள்ளுதல் 
இயற்கை அனர்த்தங்களின் போது முழுமையாக பாதிக்கப்பட்ட சொத்துக்களுக்கு இழப்பீடுகள் வழங்கும் சுமையை அரசாங்கத்திற்கு விவசாயம் மற்றும் விவசாய காப்புறுதி சபைக்கு மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் ஏற்படும் நிதியை கட்டுப்படுத்துவதற்காக மீள் காப்புறுதி வேலைத்திட்டத்திற்கு பிரவேசிப்பதற்கு 2018ஆம் ஆண்டில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைவாக அவசியம் பயிர் உற்பத்தி காப்புறுதி மிகவும் பயனுள்ள நடவடிக்கைக்காக 2019ஃ20 பெரும்போகத்திற்கு மற்றும் 2020 ஆம் ஆண்டு சிறுபோகத்திற்கும் அவசியம் உற்பத்திக்காக உரிய பெறுகைக்கு உட்பட்டதாக மறுகாப்பீட்டு பணியை மேற்கொள்வதற்காக பொருத்தமான காப்புறுதி தவணை பணத்தை செலுத்துவோரிடம் அறவிடுவதற்கு அமைவாக பயிர் காப்புறுதியை உள்ளடக்கிய மற்றும் இதற்கு உட்பட்ட மறுகாப்புறுதியை உள்வாங்குவதற்காக விவசாயம் கிராமிய பொருளாதார அலுவல்கள் நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் நீர் வள அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

22. விவசாயப்பிரிவை நவீனமயப்படுத்துவதற்கான திட்டம் 
விவசாய தொழில்நுட்ப மாதிரிப்பூங்காவிற்கு திட்டமிட்டு அதனை அமைத்து நடைமுறைக்கு ஊடாக முகாமைத்துவத்தை மேற்கொண்டு திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் உற்பத்தி அமைப்பிடம் கையளிப்பதற்காக ஆலோசனை சேவையொன்றை ஸ்தாபிப்பதற்கான ஒப்பந்தம். உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் விவசாயத்துறை பிரிவை பயன்படுத்தும் திட்டத்தின் கீழ் விவசாய தொழில்நுட்ப மாதிரிப்பூங்கா திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்டு ஸ்தாபித்து நடைமுறைப்படுத்தி முகாமைத்துவம் செய்து அவற்றின் விவசாய உற்பத்தி அமைப்புக்களிடம் கையளிப்பு பணியை நிறைவேற்றுவதற்கான ஆலோசனை சேவையை வழங்குவதற்கான ஒப்பந்தம் நியுசிலாந்தின் வரையறுக்கபட்பட FCG ANZDEC சிவிடனின் FCG Swedish Development நிறுவனங்பகளினால் தயாரிக்கப்பட்ட கூட்டு ஒன்றிணைக்கப்பட்ட வர்த்தகத்திடம் வழங்குவதற்காக விவசாயம் கிராமிய பொருளாதார அலுவல்கள் நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் நீர் வள அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
23. ஹியுமன் அல்பியுமின் சொலியுஷன் 50 பிபி – பி எ எச் யு அர் 20சதவீ த 190,000 போத்தல்கள் விநியோகிப்பதற்கான பெறுகை. 
ஹியுமன் அல்பியுமன் சொலியுஷன் பிபி – பி எ எச் யு அர் 20 சதவீத 50 மில்லிமீற்றர் போத்தல்கள் 190,000 விநியோகிப்பதற்கான பெறுகை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக் குழுவின் சிபாரிசுக்கமைவாக சுவிஸ்லாந்து M/s Baxalta GmbH என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக சுகாதார போசாக்கும் மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது 
(அ.த.தி)
03.09.2019 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் (முழு விபரம் இணைப்பு) 03.09.2019 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் (முழு விபரம் இணைப்பு) Reviewed by irumbuthirai on September 05, 2019 Rating: 5

அடுத்த மாதம் 16 முதல் பலாலி விமான சேவை: தொழில் வாய்ப்பில் வடக்கிற்கு முன்னுரிமை:

September 05, 2019

பலாலி விமான நிலையத்தின் விமான சேவை உத்தியோகபூர்வமாக 16 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கூறினார். 
பலாலி விமான நிலையத்தின் நிர்மாணப்பணிகளை அமைச்சர் இன்று பார்வைஇட்டார். இந்த விஜயத்தின் போது ஊடகவியலாளர் மத்தியில் அமைச்சர் உரையாற்றுகையில் 

பலாலி விமான நிலையத்துடன் தொடர்புபட்ட தொழில்வாய்ப்புக்களை வழங்கும் பொழுது வடமாகாணத்தில் உள்ளவர்களுக்கு கூடுதலான சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். இலங்கையில்; 4 விமான நிலையங்கள் 

சர்வதேச விமான நிலையங்களாக அபிவிருத்தி செய்யப்படும் என்றும் கூறினார். கட்டுநாயக்கா, மத்தள, இரத்மலானை மற்றும் மட்டக்களப்பு ஆகிய விமான நிலையங்கள் அவையாகும். இந்த விமான நிலையங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தப்பட்ட வலயமாக சர்வதேச விமான சேவைகள் அரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி)
அடுத்த மாதம் 16 முதல் பலாலி விமான சேவை: தொழில் வாய்ப்பில் வடக்கிற்கு முன்னுரிமை: அடுத்த மாதம் 16 முதல் பலாலி விமான சேவை: தொழில் வாய்ப்பில் வடக்கிற்கு முன்னுரிமை: Reviewed by irumbuthirai on September 05, 2019 Rating: 5

4,286 பேருக்கு ஆசிரியர் நியமனம்

September 04, 2019


தேசிய கல்வியற் கல்லூரி டிப்ளோமா ஆசிரியர் நியமனங்கள் 4,286 பேருக்கு வழங்கப்படவுள்ளன. 

இவர்களுள் 2,340 பேர் சிங்கள மொழியிலும், 1,300 பேர் தமிழ் மொழியிலும், 646 பேர் ஆங்கிலம் மொழியிலும் 3 வருட காலம் கற்கை நெறியினைத் தொடர்ந்த பின்னர் 1 வருட காலம் ஆசிரியர் தொழிற்பயிற்சியை பூர்த்தி செய்துள்ளனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் எதிர்வரும் 8 ஆம் காலை 10.00 மணிக்கு இது தொடர்பான நிகழ்வு இடம்பெறவுள்ளது. 19 தேசிய கல்வியற் கல்லூரிகளில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 

31 கற்கை நெறிகளை பயின்ற இவர்கள் தேசிய கல்வியற் கல்லூரி டிப்ளோமா ஆசிரியர் என்று அடையாளப்படுத்தப்படுவர். அலரிமாளிகையில் இடம்பெறும் இந்த நகழ்வில் கல்வி அமைச்சர், கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். இது தொடர்பான மேலதிக விபரங்கள் கல்வி அமைச்சின் www.moe.gov.lk என்ற இணையத்தளத்தில் பார்வை இடமுடியும்.
(அ.த.தி)
4,286 பேருக்கு ஆசிரியர் நியமனம் 4,286 பேருக்கு ஆசிரியர் நியமனம் Reviewed by irumbuthirai on September 04, 2019 Rating: 5

587 பேருக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம்

September 04, 2019

மாணவர்களின் எதிர்காலம் ஆசிரியர்களினாலேயே தீர்மானிக்கப்படுவதுடன், அவர்கள் தொடர்பான தீர்மானங்களை ஆழமான புரிந்துணர்வுடனும் மனிதாபிமானத்துடனும் மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். 
நேற்று(02) கொழும்பு இலங்கை மன்றத்தில் இடம்பெற்ற மேல் மாகாண ஆசிரியர் நியமனங்களை வழங்கும் வைபவத்தில் உரையாற்றும் போது ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்ற மேல் மாகாண ஆசிரியர் சேவையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப்பரீட்சையில் தோற்றிய 15,000 விண்ணப்பதாரிகளுள் முதலாம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 
587 பேருக்கு இவ்வாறு நேற்று ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது. இந்த வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, கற்றறிந்த சமூகமொன்றை உருவாக்கி அனைவருக்கும் சமமான வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுத்து சமூக சமனிலையை உறுதிப்படுத்துவதே அரசின் நோக்கமாகும் என்று கூறினார். ஆசிரியர் சேவையின் ஆளுமை, நம்பிக்கை, இருப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்கு தொழிநுட்ப யுகம் பற்றிய தமது அறிவையும் ஆசிரியர்கள் இற்றைப்படுத்திக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 
ஆசிரியர் நியமனம் வழங்குதலை அடையாளப்படுத்தும் வகையில் 10 பேருக்கு ஜனாதிபதி நியமனக் கடிதங்களை வழங்கினார் பாராளுமன்ற உறுப்பினர்கள் லசந்த அழகியவன்ன, திலங்க சுமதிபால, மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.எல். முஸம்மில், இசுரு தேவப்பிரிய, காமினி திலக்கசிறி, ரஞ்சித் சோமவங்ச ஆகிய மக்கள் பிரதிநிதிகளும், மேல் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.ஜீ. விஜயபந்து மற்றும் மேல் மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.
(அ.த.தி)
587 பேருக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம் 587 பேருக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம் Reviewed by irumbuthirai on September 04, 2019 Rating: 5

காணாமல் போனவர்களுக்கு மாதாந்த கொடுப்பணவு...

September 04, 2019


காணாமல் போனமை குறித்து உறுதிசெய்யப்பட்ட காணாமற் போனவர்களுக்காக இடைக்கால நிவாரணத்தை வழங்குதல் என்ற தலைப்பில் இது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

காணாமல் போனவர்கள் தொடர்பான சான்றிதழை கொண்டுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு மாதாந்தம் 6,000 ரூபா கொடுப்பனவை அரசாங்கம் வழங்க தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சரவையில் அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டிருக்கிறது. 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் ஒவ்வொரு மாதமும் 10ஆவது தினத்தன்று காணாமல் போனவர்கள் தொடர்பான சான்றிதழை கொண்டுள்ள பயனாளிகளுக்காக 

நேரடியாக பணத்தை வைப்பீடு செய்வதன் மூலம் மாதாந்தம் 6,000 ரூபா இடைக்கால நிவாரணத்தை வழங்குவதற்காகவும் காணாமல் போன நபர் தொடர்பான அலுவலகத்தின் இடைக்கால அறிக்கையை கவனத்தில் கொண்டு அழுத்தத்திற்கு உள்ளான குடும்பங்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களுக்காக காணாமல் போனோர் தொடர்பான சான்றிதழை வழங்குமாறு பதிவாளரின் திணைக்களத்திற்கு உத்தரவை பிறப்பிப்பதற்காகவும் நிதி அமைச்சர் அவர்களும் தேசிய ஒருமைப்பாடு அரசகரும மொழி சமூக மேம்பாடு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் அவர்களும் கூட்டாக சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
(அ.த.தி)
காணாமல் போனவர்களுக்கு மாதாந்த கொடுப்பணவு... காணாமல் போனவர்களுக்கு மாதாந்த கொடுப்பணவு... Reviewed by irumbuthirai on September 04, 2019 Rating: 5

Japan Scholarship

September 01, 2019

The project for human resource development scholarship by Japanese grant Aid in Sri lanka 2019 scholarship includes,
monthly living allowance 
one round trip air fare 

full tuition fees 
and other designated allowances 
click the link below for more details


japan scholarship details
Japan Scholarship Japan Scholarship Reviewed by irumbuthirai on September 01, 2019 Rating: 5

VACANCY: Ministry of Education: Nearest School is the Best School

September 01, 2019
Applications are invited from suitably qualified and experienced individuals for the following positions of the Project Management Unit of the “Nearest School is the Best School” National Programme for school development. 
closing date: 4-9-2019.
Click the link below for more details.

vacancy details
VACANCY: Ministry of Education: Nearest School is the Best School VACANCY: Ministry of Education: Nearest School is the Best School Reviewed by irumbuthirai on September 01, 2019 Rating: 5

அரச தலைவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு இலங்கை கிரிக்கெட் அணிக்கு...

September 01, 2019

அரச தலைவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு இலங்கை கிரிக்கெட் அணிக்கும் வழங்கப்படவுள்ளது. அடுத்த மாத நடுப்பகுதியில் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யவுள்ள கிரிக்கெட் அணிக்கே இவ்வாறான பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. 
இலங்கை கிரிக்கெட்டின் செயலாளர் மொஹான் டி சில்வா இது தொடர்பாக தெரிவிக்கையில் தானும் கிரிக்கெட்டின் பாதுகாப்பு ஆலோசகர் மாஷல் ஒவ்.டி.எயார்போஸ் றொஷான் குணதிலக்கவும் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தோம். பாதுகாப்பு நிலைமையை கண்டறிவதற்காக சென்ற நாம் அங்கு அது தொடர்பான நிலமைகளை கண்டறிவதற்காக சுற்றுப்பயணங்களில் ஈடுபட்டோம். 

இதன்போது பாகிஸ்தான் அரசாங்கம் பாதுகாப்பு பிரிவு மற்றும் அந் நாட்டு கிரிக்கட் பேரவை இலங்கை அணிக்கு அரச தலைவர் ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பை வழங்குவதாக உறுதி தெரிவித்தனர். இலங்கை அணி தங்கியிருக்கும் ஹோட்டலுக்கும் பயிற்சியில் ஈடுபடும் விளையாட்டு மைதானங்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. ஹோட்டலில் இருந்து விளையாட்டு மைதானம் வரையில் பயணிக்கும் பஸ்ஸிற்கு விஷேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற சுப்பர்லீக்ஸ் போட்டியில் இறுதிப்போட்டி சிலவற்றிற்கு கலந்து கொண்ட வெளிநாட்டு வீரர்களுக்கு இவ்வாறான பாதுகாப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திதி இலங்கை அணி மீது லாகூர் நகரில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பின்னர் பாகிஸ்தானில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஒன்று நடத்தப்படவில்லை. 

அன்றிலிருந்து இதுவரை அங்கு ஒருசில போட்டிகளே நடந்துள்ளன. 2015 ஆம் ஆண்டில் சிம்பாவே அணி கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் பாகிஸ்தானில் ஒருநாள் சர்வதேச போட்டியில் கலந்து கொண்டது. 2017 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் சர்வதேச அணி மற்றும் பாகிஸ்தான் அணிக்கு இடையில் கண்காட்சி ரி-20 கிரிக்கெட் போட்டிகள் 3 நடைபெற்றுள்ளன. திசர பெரேராவின் தலைமையில் இலங்கை அணி 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் லாகூர் நகரில் ரி-20 போட்டியில் கலந்து கொண்டார். இம் முறை பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி மூன்றிலும், ரி-20 கிரிக்கெட் போட்டி மூன்றிலும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
அரச தலைவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு இலங்கை கிரிக்கெட் அணிக்கு... அரச தலைவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு இலங்கை கிரிக்கெட் அணிக்கு... Reviewed by irumbuthirai on September 01, 2019 Rating: 5

இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப கல்வியியற் கல்லூரி

September 01, 2019

தொழில் செயற்றிறனைக் கொண்ட ஆசிரியர் சமூகம் ஒன்று பாடசாலை கட்டமைப்புக்கு பங்களிப்பு செய்யும் நோக்கில் இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப கல்வியல் கல்லூரியை நிர்மாணிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

குளியாப்பிட்டி நாரங்கொல்ல என்ற இடத்தில் இதற்கான நிர்மாணப் பணிகள் நேற்று (31) ஆரம்பித்து வைக்கப்பட்டன. 
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில், கல்வியில் நவீன மய நடவடிககையையும், பொருளாதாரத்தில் நவீன மயத்தையும் முன்னெடுக்கும் நடவடிக்கையாக நாட்டில் முதலாவது தொழில்நுட்ப கல்வியில் கல்லூரி நிர்மாணிக்கப்படுவதாக கூறினார். தரம் 13க்கு உட்பட்ட பாடசாலைக் கல்வியை உறுதி செய்யும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தின் கீழ் இறுதி இரண்டு ஆண்டுகளில் தொழில்நுட்பத் துறையில் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு தேவையான ஆசிரியர்கள் இதன் மூலம் 


உருவாக்கப்படுவார்கள். ஜப்பான், கொரியா போன்ற நாடுகளைப் போன்று நாட்டிலும், பயிற்சி முறை செயலணி ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில் மாணவர்களுக்கு தொழில் பயிற்சியை பெற்றுக்கொடுக்க தேவையான வசதிகளை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. கொரிய நாட்டின் நிதி உதவியின் கீழ் நாட்டில் பாரிய தொழில் பயிற்சி நிலையம் ஒறுகொடவத்தையில் சமீபத்தில் திறந்து வைக்கப்படதாகவும் பிரதமர் கூறினார்.

நாட்டின் பல்கலைக்கழக துறையில் மற்றுமொரு வைத்தியபீடம் வயம்ப பல்கலைக்கழகத்தில் திறக்கப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.  
கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் உரையாற்றுகையில் இந்த தொழில்நுட்ப கல்வியல் கல்லூரியில் நான்கு வருடப் பயிற்சியை பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கு பட்டம் வழங்கப்படும். (அ.த.தி)
இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப கல்வியியற் கல்லூரி இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப கல்வியியற் கல்லூரி Reviewed by irumbuthirai on September 01, 2019 Rating: 5
Powered by Blogger.