215 டிப்ளோமாதாரர்களுக்கு ஆசிரியர் நியமனம்

September 01, 2019

215 டிப்ளோமாதாரர் ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு 

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று (31) நடைபெற்றது. இதில் 148 ஆரம்பக்கல்வி ஆங்கில ஆசிரியர்களுக்கான நியமனமும் 67 உடற்கல்வி டிப்ளோமாதாரர் ஆசிரியர்களுக்கான நியமனமும் ஆளுநரினால் வழங்கப்பட்டன. 
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், ஆரம்பகால கல்வி என்பது மிகவும் முக்கியமானது. விழுந்திருக்கின்ற இந்த தேசத்தின், விளிம்பிலே இருக்கின்ற மக்களை திரும்பவும் வாழவைப்பதற்காகவும், வருகின்ற சந்ததியின் ஆரம்பகல்வியை உங்கள் கைகளில் இந்த மாகாணம் இன்று கொடுக்கின்றது. எனவே இந்த பொறுப்பை

இறைபக்தியுடனும் சமுதாய நோக்கத்துடனும் செய்து இந்த தேசத்தை திருப்பவும் கட்டியெழுப்பும் பணியை செவ்வனே செய்யவேண்டும் என்பது தான் எனது வேண்டுகோள் என்று ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி)
215 டிப்ளோமாதாரர்களுக்கு ஆசிரியர் நியமனம் 215 டிப்ளோமாதாரர்களுக்கு ஆசிரியர் நியமனம் Reviewed by irumbuthirai on September 01, 2019 Rating: 5

30-08-2019 அன்று வெளியான வர்த்தமானி (முழு விபரம் இணைப்பு)

August 30, 2019

30-08-2019 அன்று வெளியான வர்த்தமானி முழு விபரத்துடன் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இதில்,


இலங்கை கணக்காளர் சேவைக்கான ஆட்சேர்ப்பு
குடும்ப நல உத்தியோகத்தர் பதவிக்கான பயிற்சி நெறி
முஸ்லிம் விவாகப் பதிவாளர் பதவி


நீதிமன்ற ஏல விற்பனை
இன்னும் பல விடையங்களுடன் வெளிவந்த அரச வர்த்தமானியைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


Gazette-tamil
30-08-2019 அன்று வெளியான வர்த்தமானி (முழு விபரம் இணைப்பு) 30-08-2019 அன்று வெளியான வர்த்தமானி (முழு விபரம் இணைப்பு) Reviewed by irumbuthirai on August 30, 2019 Rating: 5

பகிடிவதைக்கு எதிராக அதிரடி நடவடிக்கை: பீடாதிபதிகள் உட்பட பலருக்கு வழக்கு:

August 30, 2019

பகிடிவதைக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கையை உயர் கல்வி அமைச்சு அமுல்படுத்தவுள்ளது. அந்தவகையில் 2018/2019 கல்வி ஆண்டுக்காக 

பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களை உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் தொல்லைக்கு உட்படுத்தினால் அதனுடன் தொடர்புபட்ட மாணவர்கள், இந்த செயற்பாட்டிற்கு உதவி ஒத்தாசை வழங்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் உயர்நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்கள் என்று உயர் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எம்.ரி.கே.மாயாதுண்னே கூறியுள்ளார். 

மாணவர் ஒருவர் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டு மரணம் அல்லது ஊனமுற்ற நிலைக்கு உள்ளானால் சம்பந்தப்பட்ட பீடாதிபதி முதல் பொறுப்பு கூறவேண்டிய அனைத்து தரப்பினருக்கும் எதிராக உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 
கொடூர பகிடிவதைக்கு எதிராக சட்டத்தில் உள்ள விதிகள் கடுமையானது என்றும் அவர் தெரிவித்தார். 10 வருட சிறைத்தண்டனையும் வழங்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்னார்.

பொலிஸ் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியதுடன் அவர்கள் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதாக தெரிவித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் தொல்லைகளின் காரணமாக வருடாந்தம் 2,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களை விட்டு விலகிச் செல்கின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி)
பகிடிவதைக்கு எதிராக அதிரடி நடவடிக்கை: பீடாதிபதிகள் உட்பட பலருக்கு வழக்கு: பகிடிவதைக்கு எதிராக அதிரடி நடவடிக்கை: பீடாதிபதிகள் உட்பட பலருக்கு வழக்கு: Reviewed by irumbuthirai on August 30, 2019 Rating: 5

புதிதாக 850 பேருக்கு சுகாதார துறையில் பயிற்சிக்கான சந்தர்ப்பம்: விண்ணப்பிக்கும் முறை Online மூலம்:

August 30, 2019

புதிதாக 850 பேருக்கு சுகாதார துறையில் இணைவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவிருக்கிறது. 2019 ஆம் ஆண்டுக்காக 

குடும்ப சுகாதார சேவை அதிகாரி பயிற்சியாளர் பதவிக்கே 850 பேர் சுகாதார போசாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சினால் இணைத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
இதற்கு 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் கல்வி பொது தராதர உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞானம், பௌதீக விஞ்ஞானம், விவசாய விஞ்ஞானம் மற்றும் இரசாயன விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் 3 பாடங்களில் ஒரே தடவையில் சித்தி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.

சுகாதார போசாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சின் உத்தியோக பூர்வ இணையத்தளமான www.health.gov.lk ஊடாக மாத்திரம் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம். 
அடுத்த மாதம் 20 ஆம் திகதி வரையில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

Online மூலம் விண்ணப்பிக்க கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

Apply online


புதிதாக 850 பேருக்கு சுகாதார துறையில் பயிற்சிக்கான சந்தர்ப்பம்: விண்ணப்பிக்கும் முறை Online மூலம்: புதிதாக 850 பேருக்கு சுகாதார துறையில் பயிற்சிக்கான சந்தர்ப்பம்: விண்ணப்பிக்கும் முறை Online மூலம்: Reviewed by irumbuthirai on August 30, 2019 Rating: 5

2019 உயர் தர பெறுபேறின்படி பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க இருப்பவர்களுக்கான மிக முக்கிய அறிவித்தல்

August 29, 2019

உயர் நீதிமன்ற பணிப்பிற்கமைய 2019 ஆம் ஆண்டு புதிய மற்றும் பழைய பாடத்திட்டப் படி பரீட்சைக்குத் தோற்றியவர்களை இரு வேறு குடித்தொகையினராக பல்கலைக்கழக அனுமதியின் போது கருத்திற்கொள்ளப்படவிருக்கின்றனர். 
இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

Special notice
2019 உயர் தர பெறுபேறின்படி பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க இருப்பவர்களுக்கான மிக முக்கிய அறிவித்தல் 2019 உயர் தர பெறுபேறின்படி பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க இருப்பவர்களுக்கான மிக முக்கிய அறிவித்தல் Reviewed by irumbuthirai on August 29, 2019 Rating: 5

Calling of applications to the Post for Graduate Translator Grade III(Tamil/English)

August 29, 2019

University Grants Commission
Application for the post of graduate translator
To find more details please click here


Graduate Translator (Tamil/ English)
To get Application form please the link below.


application
Calling of applications to the Post for Graduate Translator Grade III(Tamil/English) Calling of applications to the Post for Graduate Translator Grade III(Tamil/English) Reviewed by irumbuthirai on August 29, 2019 Rating: 5

உலகின் முதலாவது 5G ஹோட்டல்

August 29, 2019

ஒரு கடுமையான தொழில்நுட்ப விரும்பியாகவோ அல்லது அதிக செலவின்றி நவீன ஆடம்பர பயணத்தை நோக்கிச் செல்லும் ஆர்வமுள்ள பயணியாகவோ நீங்கள் இருக்கலாம், அவ்வாறான உங்களுக்கு அவுஸ்திரேலியாவில் உள்ள OPPO இன் 5G ஹோட்டலானது பதிலாக அமைகின்றது. 

OPPO அவுஸ்திரேலியா ஆனது, 5G மூலம் சாத்தியமாகின்ற விடயங்கள் பற்றி அனைவருக்கும் ஒரு விளக்கம் அளிக்கும் வகையில், உலகின் முதலாவது 5G இனால் வலுவூட்டப்பட்ட ஸ்மார்ட் ஹோட்டலை உருவாக்கியுள்ளது. முழு ஹோட்டலும் OPPO இன் Reno ஸ்மார்ட்போன், 5G வலையமைப்பு (5G Network) மற்றும் புதிய தொழில்நுட்பத்தால் நிரம்பியுள்ளது. 


இது இன்னும் சில மாதங்களில் அவுஸ்திரேலியா முழுவதும் 5G வலையமைப்பு காணப்படும் இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. 

 ஸ்மார்ட் மிரர், 5G கேமிங் சூட், விருந்தினர்கள் தங்கள் குரல் வழியாக மின் விளக்குகளைக் கட்டுப்படுத்தவும், மாய உண்மை (AR), இடையறாத இலவச பொழுதுபோக்கு போன்ற இன்னும் பல அம்சங்கள் இதில் காணப்படுகின்றன.
உலகின் முதலாவது 5G ஹோட்டல் உலகின் முதலாவது 5G ஹோட்டல் Reviewed by irumbuthirai on August 29, 2019 Rating: 5

புதிதாக 22 பீடங்கள்: மருத்துவ மாணவர்கள் 160 ஆல் அதிகரிப்பு:

August 29, 2019


பௌதீக வளங்களை அரச பல்கலைக்கழகங்களில் அபிவிருத்தி செய்ய 99 பில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்திருக்கிறது.

இதேவேளை புதிதாக 22 பீடங்கள் அமைக்கப்படவுள்ளது. மருத்துவபீடங்களுக்கு வருடாந்தம் இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 160 இனால் அதிகரிக்கப்படும் என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
(அ.த.தி)
புதிதாக 22 பீடங்கள்: மருத்துவ மாணவர்கள் 160 ஆல் அதிகரிப்பு: புதிதாக 22 பீடங்கள்: மருத்துவ மாணவர்கள் 160 ஆல் அதிகரிப்பு: Reviewed by irumbuthirai on August 29, 2019 Rating: 5

நுளம்பு ஒழிப்பு உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம்

August 29, 2019


2017 ஆம் ஆண்டு முதல் ஆயிரத்து 500 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனம் வழங்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார். 

டெங்கு நோயை ஒழிக்கும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்குடன் இவர்கள் இணைத்துக்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நுளம்பு ஒழிப்பு உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் நுளம்பு ஒழிப்பு உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் Reviewed by irumbuthirai on August 29, 2019 Rating: 5

காஷ்மீர் மக்களுக்காக தனது பதவியை தூக்கியெறிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி

August 27, 2019


வெளிப்படையாகப் பேசுவதை தடுக்கும் இடத்தில் இருந்து வெளியேற விரும்புகிறேன்"  காஷ்மீர் மாநிலத்தில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி பேசவேண்டும். ஆனால் என் கருத்துக்களை வெளிப்படுத்த முடியாமல் என் வேலை என்னைத் தடுக்கிறது. 

எளிமையான மக்களின் உரிமைகளுக்காக வேலை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில்தான் நான் ஐஏஎஸ் பணியில் சேர்ந்தேன். ஆனால், நாட்டில் ஒரு பகுதியில் வாழும் மக்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளைப் பற்றி கண்டுகொள்ளாமல், என் வேலையை பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. அது சரியானது அல்ல என என் மனம் சொல்கிறது,'' என்று சொல்கிறார் கண்ணன் கோபிநாத்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்தபோது,அரசின் முடிவால் அதிர்ந்து போய், தனது பதவியைத் தூக்கியெறியத் துணிந்துவிட்டார் கண்ணன் கோபிநாதன். 
ஆகஸ்ட் 5-ஆம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அங்கு மக்கள் நடமாட்டம் முடக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 21-ஆம் தேதி தனது ராஜிநாமா கடிதத்தை உயரதிகாரிகளுக்கு அனுப்பினார். ஆனால், அந்த ராஜிநாமா ஏற்கப்பட்டது தொடர்பாக உயரதிகாரிகளிடமிருந்து எந்தவிதத் தகவலும் வரவில்லை என்கிறார். 

33 வயதான கண்ணன் கோபிநாதன், தனது சொந்த மாநிலம் கேரள மாநிலம் கடந்த ஆண்டு வெள்ளத்தில் மூழ்கிய நேரத்தில், தாதரா நகர் ஹவேலியில் இருந்து நிவாரணப் பணிக்கான காசோலையை அளிக்க வந்தார். மக்களின் துயரங்களை கண்டு, திரும்ப மனமில்லாமல், எட்டு நாட்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டார். யாரிடமும் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளாமல், களத்தில் இறங்கி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். நிவாரணப் பொருட்கள் அடங்கிய மூட்டைகளைத் தூக்குவது உள்ளிட்ட வேலையை அவர் செய்ததால், சமூக வலைதளங்களில் பலத்த வரவேற்பை பெற்றார்.
காஷ்மீர் மக்களுக்காக தனது பதவியை தூக்கியெறிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி காஷ்மீர் மக்களுக்காக தனது பதவியை தூக்கியெறிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி Reviewed by irumbuthirai on August 27, 2019 Rating: 5

Examination Department: Application for a copy of Results Sheet for Private Candidates

August 27, 2019


Examination Department- Application for a copy of Results Sheet for Private Candidates by Normal service and One day service. பரீட்சார்த்திகளின் (தனிப்பட்ட) பெறுபேற்று சான்றிதழ்களை பரீட்சைத் திணைக்களத்திலிருந்து பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பம். (சாதாரண சேவை மற்றும் ஒரு நாள் சேவை)
Click here for Normal Service Application/ சாதாரண சேவைக்கான விண்ணப்பத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


Normal Service
Click here for One day Service Application / ஒருநாள் சேவைக்கான விண்ணப்பத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


One day Service
Examination Department: Application for a copy of Results Sheet for Private Candidates Examination Department: Application for a copy of Results Sheet for Private Candidates Reviewed by irumbuthirai on August 27, 2019 Rating: 5

ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனத்தை நிலைபடுத்தி கொடுப்பணவு

August 26, 2019

நுவரெலியா மாவட்டத்தின் அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டம் அபிவிருத்தி இணைப்புக் குழு இணைத் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கே.கே.பியதாச தலைமையில் நடைபெற்றது. 

இதில் உரையாற்றிய விஷேட பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், மலையத்தின் பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு உதவி ஆசிரியர்களாக தெரிவு செய்து ஆசிரியர் பயிற்சிகளை முடித்துக் கொண்ட பயிற்றபட்ட ஆசிரியர்களுக்கு தரம் 3-1 ற்கு பதவி நிலைபடுத்தி அவர்களுக்கான கொடுப்பனவை மத்திய மாகாணம் வழங்காததினால் பயிற்றபட்ட ஆசிரியர்கள் பல இன்னல்களை எதிர்நோக்குகின்றனர். ஏனைய சில மாகாணங்களில் அவர்களுக்கான கொடுப்பனவு வழங்கபட்டு வருகின்றது. அதேபோல் இவர்களுக்கும் கூடிய விரைவில் வழங்கப்பட வேண்டும் என்றார். 
இதற்கு பதிலளித்து உரையாற்றிய மத்திய மாகாண ஆளுனர் கீர்த்தி தென்னக்கோன் இதற்கான தீர்வினை 

பெற்றுக் கொடுப்பதில் நானும் இணைந்துக் கொள்கின்றேன். தற்போது பயிற்சி பெற்ற 215 ஆசிரியர் உதவியாளர்களின் விபரம் கிடைத்து உள்ளது. இவர்களில் மூன்று இரண்டுக்கு நிலைப்படுத்த தேவையான அனைத்து விபரங்களும் சரி செய்யபட்டு வருகின்றன. இன்னும் ஒரிரு வாரங்களில் இவர்களுக்கான பதவியை நிலைபடுத்தி கொடுப்பனவை மத்திய மாகாணம் மூலம் வழங்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதே போல் பயிற்சி பெற்றுக் கொண்டு இருப்பவர்களுக்கும் பயிற்சி பெற இருப்பவர்களுக்கும் இந்த நடைமுறை முன்னெடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனத்தை நிலைபடுத்தி கொடுப்பணவு ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனத்தை நிலைபடுத்தி கொடுப்பணவு Reviewed by irumbuthirai on August 26, 2019 Rating: 5

திடீரென மாநாட்டில் கலந்துகொண்ட ஈரான் அமைச்சர்: வியப்பில் அமெரிக்கா:

August 26, 2019

அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் கலந்து கொண்டுள்ள ஜி7 மாநாடு பிரான்சில் நடைபெற்றது. இதில் முன்னறிவிப்பு ஏதுமின்றி ஞாயிற்றுக்கிழமை அன்று திடீரென ஈரான் வெளியுறவு அமைச்சர் கலந்து கொண்டார். 

ஈரான் - அமெரிக்க இடையே அதிக பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்த மாநாட்டில் ஈரான் அமைச்சர் கலந்து கொண்டிருப்பது, அமெரிக்க அதிகாரிகளை வியக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 
பிரான்ஸ் அதிபரோடு ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தியதாக இரான் வெளியுறவு அமைச்சர் ட்விட் செய்துள்ளார். 2015 இரான் அணு ஒப்பந்தத்தில் இருந்து கடந்தாண்டு அமெரிக்கா விலகியதையடுத்து, இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
திடீரென மாநாட்டில் கலந்துகொண்ட ஈரான் அமைச்சர்: வியப்பில் அமெரிக்கா: திடீரென மாநாட்டில் கலந்துகொண்ட ஈரான் அமைச்சர்: வியப்பில் அமெரிக்கா: Reviewed by irumbuthirai on August 26, 2019 Rating: 5
Powered by Blogger.