ஜன. 11 க்கு முன் ஆசிரியர் நியமனம்: வீடுகளுக்கே நியமனக் கடிதங்கள்:

January 02, 2021

கல்வியியற் கல்லூரியில் இருந்து வெளியேறிய 3,772 பேருக்கான ஆசிரியர் நியமனம் ஜனவரி மாதம் 11 ஆம் திகதிக்கு முன்னர் வழங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அதுவும் வீடுகளுக்கே நியமனக் 
கடிதங்கள் அனுப்பி வைக்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் குறிப்பிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 
இதில் 1,000 பேர் தேசிய பாடசாலைகளுக்கும் ஏனைவர்கள் மாகாண பாடசாலைகளுக்கும் நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜன. 11 க்கு முன் ஆசிரியர் நியமனம்: வீடுகளுக்கே நியமனக் கடிதங்கள்: ஜன. 11 க்கு முன் ஆசிரியர் நியமனம்: வீடுகளுக்கே நியமனக் கடிதங்கள்: Reviewed by irumbuthirai on January 02, 2021 Rating: 5

Vacancy: State Ministry of National Heritage Performing Arts and Rural Arts Promotion

January 02, 2021

Vacancy in the State Ministry of National Heritage Performing Arts and Rural Arts Promotion. (Tower Hall Theatre Foundation) 
Closing date: 14-01-2021. 
See the details below.
Source: 27-12-2020 Sunday Observer.


Vacancy: State Ministry of National Heritage Performing Arts and Rural Arts Promotion Vacancy: State Ministry of National Heritage Performing Arts and Rural Arts Promotion  Reviewed by irumbuthirai on January 02, 2021 Rating: 5

ஒரு முகக் கவசத்திலிருந்து 1 ரூபா மஹபொல நிதியத்திற்கு...

January 02, 2021

தற்சமயம் மகாபொல புலமைப்பரிசில் நிதியத்தின் மீதி ரூ. 12.2 பில்லியன்களாகக் காணப்படுகின்றது. அதனை அதிகரிப்பதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. 
அந்தவகையில் சதோச நிறுவனங்களின் ஊடாக விற்பனை 
செய்யப்படும் முகக்கவசங்களின் வருமானத்தின் ஒரு பகுதி மகாபொல புலமைப்பரிசில் நிதியத்திற்கு வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். 
முகக்கவசங்கள் சதோசவின் ஊடாக 15 ரூபா என்ற சில்லறை விலைக்கு விற்கப்படுகின்றது. ஒரு முகக்கவசத்தை விற்பனை செய்வதன் ஊடாக ஒரு ரூபா மகாபொல புலமைப்பரிசில் நிதியத்திற்கு வழங்கப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
ஒரு முகக் கவசத்திலிருந்து 1 ரூபா மஹபொல நிதியத்திற்கு... ஒரு முகக் கவசத்திலிருந்து 1 ரூபா மஹபொல நிதியத்திற்கு... Reviewed by irumbuthirai on January 02, 2021 Rating: 5

Vacancies: Sugathadasa National Sports Complex Authority

January 02, 2021

Vacancies: Sugathadasa National Sports Complex Authority. 
Closing date: 11-01-2021. 
See the details below.
Source : 27-12-2020 Sunday Observer.


Vacancies: Sugathadasa National Sports Complex Authority Vacancies: Sugathadasa National Sports Complex Authority Reviewed by irumbuthirai on January 02, 2021 Rating: 5

Vacancies: Indian Housing Project

January 02, 2021

Vacancies in the Indian Housing Project. 
Closing date: 15-01-2021. 
See the details below.


Vacancies: Indian Housing Project Vacancies: Indian Housing Project Reviewed by irumbuthirai on January 02, 2021 Rating: 5

18-12-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

January 02, 2021

18-12-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம்.  
Official gazette released on 18-12-2020 (In three languages) 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.
18-12-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 18-12-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on January 02, 2021 Rating: 5

பதிவு செய்யப்படாத சனிடைசர் (Sanitizer): வெளிவந்தது விசேட வர்த்தமானி:

January 02, 2021

பதிவு செய்யப்படாத சனிடைசர் தொடர்பாக விசேட வர்த்தமானி நேற்று வெளியிடப்பட்டுள்ளது. 
அதாவது, தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பதிவு செய்யப்படாத Sanitizer களை விற்பனை செய்தல் தடை செய்யப்பட்டு அந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 
குறித்த தடை 2021 பெப்ரவரி 1ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பதிவு செய்யப்படாத சனிடைசர் (Sanitizer): வெளிவந்தது விசேட வர்த்தமானி: பதிவு செய்யப்படாத சனிடைசர் (Sanitizer): வெளிவந்தது விசேட வர்த்தமானி: Reviewed by irumbuthirai on January 02, 2021 Rating: 5

உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கிய கொரோனா தடுப்பூசி

January 02, 2021

அவசர தேவைக்காக Pfizer-BioNTech கொரோனா தடுப்பு மருந்தை பாவிக்க உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளது. 
உலக நாடுகள் தடுப்பூசி இறக்குமதியையும் விநியோகத்தையும் விரைவாக அங்கீகரிக்க இந்த அறிவிப்பு வழிவகுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கிய கொரோனா தடுப்பூசி உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கிய கொரோனா தடுப்பூசி Reviewed by irumbuthirai on January 02, 2021 Rating: 5

தரம் 12 மாணவர்களுக்கு வழங்கும் புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பம்

January 01, 2021

தரம் 12 மாணவர்களுக்கு வழங்கும் சுபக எனப்படும் புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பம் கல்வி அமைச்சினால் கோரப்பட்டுள்ளது. 
இது மாதாந்தம் 2500 ரூபா வீதம் 20 மாதங்களுக்கு வழங்கப்படும். 2020இல் தரம் 12 இல் கற்கும் மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை 12.01.2021 க்கு முன்னர் பாடசாலை அதிபருக்கு சமர்ப்பிக்க வேண்டும். 
இது தொடர்பான முழு விபரங்கள் அடங்கிய சுற்றறிக்கையை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
விண்ணப்ப படிவத்தை பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
மேலதிக இணைப்புகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 12 மாணவர்களுக்கு வழங்கும் புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பம் தரம் 12 மாணவர்களுக்கு வழங்கும் புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பம் Reviewed by irumbuthirai on January 01, 2021 Rating: 5

ஜனவரி 15-ல் ஆசிரிய நியமனம்?

January 01, 2021

ஜனவரி 15ஆம் தேதி டிப்ளமாதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்பட இருப்பதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளதாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
தேசிய கல்வியியற் கல்லூரிகளில் டிப்ளோமா முடித்த 3,772 பேர்களுக்கே இவ்வாறு நியமனம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
திறமைச் சித்தி உடையவர்களுக்கு தேசிய பாடசாலைகளுக்கும் ஏனையவர்களுக்கு அந்த மாவட்டத்திலேயே 
நியமனம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 ஆனால் ஜனவரி 15 நியமனம் வழங்கப்படும் என்ற விடயத்தில் தமக்கு நம்பிக்கை இல்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார். ஏனெனில் இது தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் கல்வி அமைச்சு வெளியிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 15-ல் ஆசிரிய நியமனம்? ஜனவரி 15-ல் ஆசிரிய நியமனம்? Reviewed by irumbuthirai on January 01, 2021 Rating: 5

பாடசாலைகளுக்கு இணைய வசதிகளுடன் Online கல்வி: கல்வியமைச்சு நடவடிக்கை:

January 01, 2021

ஹுவாவி (Huawei) நிறுவனத்துடன் இணைந்து நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு இணையத்தள வசதிகளை உருவாக்கி வெளிவாரி கல்வி வசதிகளை முன்னேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 
இதற்காக 30,000 உபகரணங்களை இலவசமாக பெற்றுக் 
கொடுப்பதற்கு மேற்படி நிறுவனம் இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளது. 
இந்த செயற்றிட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையொன்று அமைச்சரின் தலைமையில் கல்வியமைச்சில் நடைபெற்றுள்ளது. அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, தகவல் தொழில்நுட்ப கல்விப் பிரிவின் பணிப்பாளர் உதாரா திக்கும்புர, ஹுவாவி ஸ்ரீலங்கா நிறுவனத்தின் உப தலைவர் இந்திக டி சொய்சா, ஹுவாவி பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) ரிகார்டோ ஷியாவோ உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர். 
கற்றல் நடவடிக்கைகளை மிகவும் பிரயோசனமுள்ள வகையில் நடைமுறைப்படுத்த இணையதள வசதிகளை பாடசாலைகளுக்கு பெற்றுக்கொடுக்க கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பமானது காலத்துக்கு பொருத்தமானதும் மிகவும் பெறுமதியானதுமாகும் என கல்வியமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளுக்கு இணைய வசதிகளுடன் Online கல்வி: கல்வியமைச்சு நடவடிக்கை: பாடசாலைகளுக்கு இணைய வசதிகளுடன் Online கல்வி: கல்வியமைச்சு நடவடிக்கை: Reviewed by irumbuthirai on January 01, 2021 Rating: 5

இன்று முதல் மாற்றப்படும் அவுஸ்திரேலிய தேசிய கீதம். காரணம் இதுதான்..

January 01, 2021

இன்று முதல் (ஜன. 01) ஆவுஸ்திரேலியர்கள் தங்கள் தேசிய கீதத்தை சில மாற்றங்களோடு பாடுவார்கள் என்று அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார். 
அந்நாட்டுப் பூர்வகுடி மக்களின் நீண்ட வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
"நாம் இளமையானவர்கள்" என்ற இடம் "நாம் ஒன்றே" என்று பொருள் தரும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. 
அதாவது 'நாம் இளமையும், சுதந்திரமும் ஆனவர்கள் என்பதால்' என பொருள் தரும் "ஃபார் வீ ஆர் யங் அன் ஃப்ரீ' என்ற வரி நீக்கப்பட்டு, 
'ஃபார் வீ ஆர் ஒன் அன் ஃப்ரீ' என்ற வரி சேர்க்கப்பட்டுள்ளது. 
300க்கும் மேற்பட்ட தேசிய மூதாதையரிடம் இருந்தும், மொழிக் குழுக்களிடமிருந்தும் பெறப்பட்டதே நம் தேசத்தின் கதை என்பதை, புவியில் மிக வெற்றிகரமாக இயங்கும் பன்முக பண்பாடுகள் கொண்ட நாடு நாம் என்பதை இது அங்கீகரிக்கிறது. கொரோனா வைரஸ் உலகத் தொற்றின்போது ஆஸ்திரேலியா ஏற்படுத்திக்கொண்ட ஒற்றுமையைக் கொண்டாடும் வகையில் இந்த மாற்றம் உள்ளது. இந்த மாற்றம் எந்தப் பொருளையும் நீக்கவில்லை. ஆனால், நிறைய பொருள் சேர்த்திருக்கிறது என்று குறிப்பிட்டார் மாரிசன். 
இந்த மாற்றத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இன்று முதல் மாற்றப்படும் அவுஸ்திரேலிய தேசிய கீதம். காரணம் இதுதான்.. இன்று முதல் மாற்றப்படும் அவுஸ்திரேலிய தேசிய கீதம். காரணம் இதுதான்.. Reviewed by irumbuthirai on January 01, 2021 Rating: 5

விளையாட்டு பாடசாலைகளுக்கு விளையாட்டுத் திறமை கொண்ட மாணவர்களை அனுமதித்தல் - 2021

January 01, 2021

விளையாட்டு திறமை கொண்ட மாணவர்களை, கல்வியமைச்சின் கீழ் நாடளாவிய ரீதியில் காணப்படும் 30 விளையாட்டு பாடசாலைகளுக்கு 2021 ம் ஆண்டிற்காக அனுமதிக்க விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. 
 விண்ணப்ப முடிவு திகதி: 22-01-2021. 
இது தொடர்பான முழு விபரங்களை கீழே காணலாம்.



விளையாட்டு பாடசாலைகளுக்கு விளையாட்டுத் திறமை கொண்ட மாணவர்களை அனுமதித்தல் - 2021 விளையாட்டு பாடசாலைகளுக்கு விளையாட்டுத் திறமை கொண்ட மாணவர்களை அனுமதித்தல் - 2021 Reviewed by irumbuthirai on January 01, 2021 Rating: 5

Vacancies: University of Colombo

January 01, 2021

Vacancies in the University of Colombo. 
Closing :date 07-01-2021. 
See the details below.


Vacancies: University of Colombo Vacancies: University of Colombo Reviewed by irumbuthirai on January 01, 2021 Rating: 5

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர் சில மணி நேரங்களில் மரணம்..

January 01, 2021

உலகில் பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசியைப் போட ஆரம்பித்துள்ளனர். 
அந்தவகையில் சுவிட்சர்லாந்தின் முதியோர் இல்லத்தில் உள்ள ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு சில மணி நேரங்களில் மரணமடைந்துள்ளார். 
ஊசி போட்ட பிறகு அடிவயிற்றிலும் சிறுநீர்க்குழாய் பகுதியிலும் வலி இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். 
ஆனால் இதற்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 91 வயதான அவர் ஏற்கனவே வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர். எனவே இது இயற்கை மரணம் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர் சில மணி நேரங்களில் மரணம்.. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர் சில மணி நேரங்களில் மரணம்.. Reviewed by irumbuthirai on January 01, 2021 Rating: 5

2021இல் அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பான அறிவித்தல்

January 01, 2021

2021இல் அரச ஊழியர்களை கடமைக்கு அழைக்கும்போது நிறுவன தலைவர்களின் தேவைக்கேற்ப குறிப்பிட்ட ஊழியர்கள் மாத்திரம் அழைக்கப்படுவது 
போதுமானது என பொது நிர்வாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே ஜே ரத்னசிறி தெரிவித்துள்ளார். 
 குறிப்பாக கொரோனா கட்டுப்பாடு வழமைக்கு திரும்பிவிட்டது என சுகாதார அமைச்சு அறிவித்தால், சகல ஊழியர்களும் கடமைக்கு திரும்புவது தொடர்பான சுற்றுநிறுபம் அனுப்பி வைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
2021இல் அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பான அறிவித்தல் 2021இல் அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பான அறிவித்தல் Reviewed by irumbuthirai on January 01, 2021 Rating: 5

கொரோனா உடல்களை அடக்கம் செய்தல்: இறுதித் தீர்மானத்திற்கு கூடிய இரண்டு குழுக்கள்: நடந்தது என்ன?

January 01, 2021

கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி அளிப்பதா? என்பது தொடர்பில் இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள நேற்று கூடிய இரண்டு குழுக்களும் எவ்வித தீர்மானமும் இன்றி வெளியேறினர். 
 இதில் ஒரு குழு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியினாலும் மற்றைய குழு இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளேயினாலும் நியமிக்கப்பட்டதாகும். 
 இதேவேளை உடல்களை எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 
நேற்றைய தினம் பொரளை மயானத்துக்கு முன்னால் சிலோன் தவ்ஹீத் ஜமாத் உட்பட ஏனைய அமைப்புக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க அபே ஜனபல கட்சி கொழும்பு மாவட்ட தலைவர் டான் பிரசாத் உள்ளிட்ட குழுவினர் குறித்த இடத்திற்கு வந்தமை குறிப்பிடத்தக்கது. 
எனினும் போலீசார் தலையிட்டு நிலைமையை சமாளித்தனர்.
கொரோனா உடல்களை அடக்கம் செய்தல்: இறுதித் தீர்மானத்திற்கு கூடிய இரண்டு குழுக்கள்: நடந்தது என்ன? கொரோனா உடல்களை அடக்கம் செய்தல்: இறுதித் தீர்மானத்திற்கு கூடிய இரண்டு குழுக்கள்: நடந்தது என்ன? Reviewed by irumbuthirai on January 01, 2021 Rating: 5

மகர சிறை கலவரம்: அறிக்கை தொடர்பாக அமைச்சின் நிலைப்பாடு:

January 01, 2021

மகர சிறைச்சாலை தொடர்பான அறிக்கையை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை செயற்படுத்த 
திட்டமொன்று தயாரிப்பதாகவும் நீதி அமைச்சின் செயலாளர் எம். எம். பி. கே. மாயாதுன்னே தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு அதன் இறுதி அறிக்கையை நேற்று முன்தினம் நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மகர சிறை கலவரம்: அறிக்கை தொடர்பாக அமைச்சின் நிலைப்பாடு: மகர சிறை கலவரம்: அறிக்கை தொடர்பாக அமைச்சின் நிலைப்பாடு: Reviewed by irumbuthirai on January 01, 2021 Rating: 5

ஜனாசா எரிப்புக்கு எதிராக கிறிஸ்தவ மதத் தலைவர்கள் உட்பட பலரும் நடத்திய ஆர்ப்பாட்டம்..

January 01, 2021

ஜனாசா எரிப்புக்கு எதிராக கூட்டிணைந்த அமைப்புகளின் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்றைய தினம் (31) பொரளை மயானத்துக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது. 
 இதில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்கள் உட்பட ஏனைய மத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஜனாசா எரிப்புக்கு எதிராக கிறிஸ்தவ மதத் தலைவர்கள் உட்பட பலரும் நடத்திய ஆர்ப்பாட்டம்.. ஜனாசா எரிப்புக்கு எதிராக கிறிஸ்தவ மதத் தலைவர்கள் உட்பட பலரும் நடத்திய ஆர்ப்பாட்டம்.. Reviewed by irumbuthirai on January 01, 2021 Rating: 5

அடக்கம் செய்வதற்கான உரிமை முஸ்லிம் மக்களுக்கு கிடைக்க வேண்டும் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால

January 01, 2021

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான உரிமை முஸ்லிம் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 
த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
மேலும் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியும் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ள நிலையில் முன்னாள் சுகாதார அமைச்சர் என்ற வகையில் தாமும் அந்த நிலைப்பாட்டிற்கு இணங்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அடக்கம் செய்வதற்கான உரிமை முஸ்லிம் மக்களுக்கு கிடைக்க வேண்டும் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால அடக்கம் செய்வதற்கான உரிமை முஸ்லிம் மக்களுக்கு கிடைக்க வேண்டும் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால Reviewed by irumbuthirai on January 01, 2021 Rating: 5

70 வருட பூர்த்தி: 20 ரூபாய் நாணயம் வெளியிட்ட மத்திய வங்கி:

January 01, 2021
இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட 20 ரூபாய் நாணயம் நேற்றைய தினம் (31) ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. 
மத்திய வங்கியின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த நாணயம் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
இந்த நாணயம் 7 பக்க வடிவத்துடன் அலுமினியம் மற்றும் வெண்கலத்தால் ஆக்கப்பட்டுள்ளது. 3,000 நாணயங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ள நிலையில் இவை புழக்கத்திற்கு விடப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த நாணயம் 
மத்திய வங்கி தலைமையகத்திலும் அதன் பிராந்திய கிளைகளிலும் ரூபா 1300 க்கு விற்பனை செய்யப்படும்.
70 வருட பூர்த்தி: 20 ரூபாய் நாணயம் வெளியிட்ட மத்திய வங்கி: 70 வருட பூர்த்தி: 20 ரூபாய் நாணயம் வெளியிட்ட மத்திய வங்கி: Reviewed by irumbuthirai on January 01, 2021 Rating: 5

தனித்துப் பயணிப்பது தொடர்பில் தமது கட்சி தீர்மானிக்கும் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால

December 31, 2020

மாகாண சபை தேர்தலில் தமிழ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்பார்க்கும் அளவு வேட்பாளர்களை ஒதுக்குவதற்கு ஆளும்கட்சி தவறினால் 
தனித்து பயணிப்பது தொடர்பில் தமது கட்சி தீர்மானிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 
The Hindu பத்திரிகைக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். 
மேலும் தெரிவிக்கையில், 
கடந்த பொதுத் தேர்தலில் தமது கட்சிக்கு அநீதி இழைக்கபட்டதாக கூறிய அவர் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் கூட்டணியில் போட்டியிட தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தனித்துப் பயணிப்பது தொடர்பில் தமது கட்சி தீர்மானிக்கும் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால தனித்துப் பயணிப்பது தொடர்பில் தமது கட்சி தீர்மானிக்கும் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால Reviewed by irumbuthirai on December 31, 2020 Rating: 5

நீதிமன்ற தீப்பரவல் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா? குழுவின் அறிவிப்பு

December 31, 2020

டிசம்பர் 15ஆம் திகதி உயர்நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தீ பரவலானது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட செயல் என்பதற்கான சாட்சிகள் இல்லை என அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குழு தெரிவித்துள்ளது. 
 இதேவேளை இது தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீதிமன்ற தீப்பரவல் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா? குழுவின் அறிவிப்பு நீதிமன்ற தீப்பரவல் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா? குழுவின் அறிவிப்பு Reviewed by irumbuthirai on December 31, 2020 Rating: 5

புதிய கட்சிகளை பதிதல்... மாகாண சபைத் தேர்தலுக்கு நான்காயிரம் மில்லியன்... இன்றைய கூட்ட தீர்மானங்கள்:

December 31, 2020

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று அதன் தலைமையகத்தில் நடைபெற்றது. 
அதில், புதிய அரசியல் கட்சிகளை ஜனவரி முதல் பதிவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டதாக அதன் தலைவர் நிமல் நிமல் புஞ்சி ஹேவா தெரிவித்தார். 
இதேவேளை மாகாணசபைத் தேர்தல் ஒன்று நடைபெற்றால் அதற்காக 
4 ஆயிரம் மில்லியன் ரூபாய்கள் நிதி ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 
மேலும் எதிர்வரும் ஜனவரி 11ஆம் திகதி அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறும். அதே தினம் மாலை வேளையில் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் உடனான சந்திப்பும் இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.
புதிய கட்சிகளை பதிதல்... மாகாண சபைத் தேர்தலுக்கு நான்காயிரம் மில்லியன்... இன்றைய கூட்ட தீர்மானங்கள்: புதிய கட்சிகளை பதிதல்... மாகாண சபைத் தேர்தலுக்கு நான்காயிரம் மில்லியன்... இன்றைய கூட்ட தீர்மானங்கள்: Reviewed by irumbuthirai on December 31, 2020 Rating: 5

சபாநாயகர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாரா? ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கை

December 31, 2020

சபாநாயகர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என வெளியான தகவல்களை சபாநாயகர் ஊடகப்பிரிவு மறுத்துள்ளது. இது உண்மைக்கு புறம்பான தகவல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சபாநாயகரின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து சபாநாயகர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என நேற்றைய தினம் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
சபாநாயகர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாரா? ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கை சபாநாயகர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாரா? ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கை Reviewed by irumbuthirai on December 31, 2020 Rating: 5

ஊடக அடையாள அட்டை: நீடிக்கப்பட்டது செல்லுபடியான காலம்:

December 31, 2020

ஊடகவியலாளர்களின் ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியான காலம் 2021 மார்ச் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 
 இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில்,
2021 ஆம் ஆண்டுக்கான ஊடக அடையாள அட்டையை வழங்குவதற்கான அடிப்படை அலுவல்கள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 
இதற்கான விண்ணப்பத்தை www.dgi.gov.lk என்ற அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அல்லது www.news.lk என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். 
இதே போன்று 2020 க்காக வழங்கப்பட்டுள்ள ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியான காலம் 2020 டிசம்பர் 31 ஆம் திகதி தொடக்கம் 2021 மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடக அடையாள அட்டை: நீடிக்கப்பட்டது செல்லுபடியான காலம்: ஊடக அடையாள அட்டை:  நீடிக்கப்பட்டது செல்லுபடியான காலம்: Reviewed by irumbuthirai on December 31, 2020 Rating: 5

சகல வசதிகளுடனும் 1000 தேசிய பாடசாலைகள்: முதல் பாடசாலை 200 வருட பழமையானது:

December 31, 2020

மாணவர்களுக்கு முழுமையான கல்வியை வழங்கும் விடயத்தில் கணினி தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், மொழிக் கல்வி உள்ளிட்ட வசதிகள் விருத்தி செய்யப்பட வேண்டும். நாட்டில் அமைக்கப்படும் புதிய தேசிய பாடசாலைகள் இந்த சகல வசதிகளையும் வழங்கும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார். 
 நாட்டில் சகல வசதிகளுடன் கூடிய 1000 தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப வைபவம் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தலைமையில் நேற்று (30) 
கோட்டை ஸ்ரீ ஜயவர்தனபுர கல்லூரியில் இடம்பெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார். 
அவர் மேலும் தெரிவிக்கையில், 
இந்த வேலைத்திட்டத்தின் முதல் பாடசாலையாக சுமார் 200 வருடங்கள் பழைமைவாய்ந்த இந்த கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ், 1000 தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த செயற்றிட்டம் பல கட்டங்களாக முன்னெடுக்கப்படும். 1ம் கட்டத்தில் 123 பாடசாலைகளும், 2ம் கட்டத்தில் 673 பாடசாலைகளும் தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்படும் என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சகல வசதிகளுடனும் 1000 தேசிய பாடசாலைகள்: முதல் பாடசாலை 200 வருட பழமையானது: சகல வசதிகளுடனும் 1000 தேசிய பாடசாலைகள்: முதல் பாடசாலை 200 வருட பழமையானது: Reviewed by irumbuthirai on December 31, 2020 Rating: 5

Degree Courses with Free Laptop (Sir John Kotelawela Defence University)

December 31, 2020

Degree Courses with Free Laptop in the Sir John Kotelawela Defence University - Ratmalana. 
Closing date: 06-01-2021. 
See the details below.
Source: 27-12-2020 Sunday Observer.


Degree Courses with Free Laptop (Sir John Kotelawela Defence University) Degree Courses with Free Laptop (Sir John Kotelawela Defence University) Reviewed by irumbuthirai on December 31, 2020 Rating: 5

Vacancies: National Enterprise Development Authority (NEDA)

December 31, 2020

Vacancies in thevNational Enterprise Development Authority (NEDA) 
Closing date:12-01-2021. 
See the details below.
Source: 27-12-2020 Sunday Observer.


Vacancies: National Enterprise Development Authority (NEDA) Vacancies: National Enterprise Development Authority (NEDA) Reviewed by irumbuthirai on December 31, 2020 Rating: 5

Vacancies: United Nations High Commissioner for Refugees (UNHCR)

December 31, 2020

Vacancies in the United Nations High Commissioner for Refugees (UNHCR) 
See the details below.

Source: 27-12-2020 Sunday Observer.

Vacancies: United Nations High Commissioner for Refugees (UNHCR) Vacancies: United Nations High Commissioner for Refugees (UNHCR) Reviewed by irumbuthirai on December 31, 2020 Rating: 5

Vacancies: State Ministry of Estate Housing and Community Infrastructure

December 31, 2020

Vacancies in the State Ministry of Estate Housing and Community Infrastructure. 
Closing date: 15-01-2021. 
See the details below.
Source: 27-12-2020 Sunday Observer.


Vacancies: State Ministry of Estate Housing and Community Infrastructure Vacancies: State Ministry of Estate Housing and Community Infrastructure Reviewed by irumbuthirai on December 31, 2020 Rating: 5

Teacher Vacancies (Musaeus College - Colombo 07)

December 31, 2020

Teacher Vacancies in the Musaeus College, Colombo - 07. 
Closing date:10 days from 27-12-2020. 
See the details below.

Source : 27-12- 2020 Sunday Observer.


Teacher Vacancies (Musaeus College - Colombo 07) Teacher Vacancies (Musaeus College - Colombo 07) Reviewed by irumbuthirai on December 31, 2020 Rating: 5

மேல் மாகாண பாடசாலைகள்: மீள ஆரம்பிப்பது பற்றி கல்வியமைச்சர்...

December 30, 2020

மேல் மாகாணத்தில் தற்போதைய நிலையில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் பாடசாலைகளை மீள திறப்பது சற்றுக் கடினம். அது 
00000
மேலும் தாமதம் அடையலாம் என கல்வி அமைச்சர் G.L. பீரிஸ் தெரிவித்துள்ளார். 
 முடக்கப்படாத ஏனைய பிரதேசங்கள் பற்றியே தீர்மானம் எடுக்கப்பட்டது. அந்த பிரதேச பாடசாலைகள் திட்டமிட்டபடி ஜனவரி 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். அதில் எந்த மாற்றமுமில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேல் மாகாண பாடசாலைகள்: மீள ஆரம்பிப்பது பற்றி கல்வியமைச்சர்... மேல் மாகாண பாடசாலைகள்: மீள ஆரம்பிப்பது பற்றி கல்வியமைச்சர்... Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

ரத்து செய்யப்பட்டது 50 பஸ்களின் அனுமதிப் பத்திரம்

December 30, 2020

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத 50 பேருந்துகளின் பயண அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். 
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 
கொவிட் தொற்றாளர்களுடன் தொடர்புடைய 68 சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத பஸ் வண்டிகள் தொடர்பாக தொடர்ந்தும் கண்காணிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ரத்து செய்யப்பட்டது 50 பஸ்களின் அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்பட்டது 50 பஸ்களின் அனுமதிப் பத்திரம் Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

சான்றிதழ் பெற்ற இலங்கையின் வயது கூடிய பெண்மணி மரணம்

December 30, 2020

இலங்கையின் அதிகூடிய வயதை கொண்ட பெண்மணி களுத்துறை நாவல பெரிய வைத்தியசாலையில் நேற்று (29) காலமானார். 
தொடாங்கொடை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மெஹின்ன கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த வேலு பாப்பாத்தி என்ற 117 வயது மூதாட்டியை இவ்வாறு மரணமானார். 
1903-மே-3ஆம் திகதி பிறந்த இவர் பெருபான்மை இனத்தவரை 
திருமணம் செய்துள்ளதுடன் இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். 
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி சர்வதேச முதியோர் தினத்தில் முதியோருக்கான தேசிய சபை நாட்டின் ஆகக்கூடிய வயதை கொண்ட பெண் என்ற சான்றிதழை இவருக்கு வழங்கியுள்ளது. 
அரசாங்கத்தினால் வழங்கப்படும் முதியோர் அடையாள அட்டையில் இவரது வயது குறிப்பிடப்பட்டுள்ளது.
சான்றிதழ் பெற்ற இலங்கையின் வயது கூடிய பெண்மணி மரணம் சான்றிதழ் பெற்ற இலங்கையின் வயது கூடிய பெண்மணி மரணம் Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

கொரோனா தடுப்பூசியை போட்ட தாதிக்கு கொரோனா

December 30, 2020

பைஸர் பயோ-என்-டெக் கொரோனா தடுப்பு மருந்தை போட்டுக்கொண்ட அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநில தாதி ஒருவருகுக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 
டிசம்பர் 18 ஆம் திகதி குறித்த தடுப்பு மருந்தைப் போட்டுக்கொண்டவருக்கு 6 நாள் கழித்து கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 
எவ்வாறாயினும் குறித்த தடுப்பு மருந்து செயல்பட சுமார் 10 - 14 நாள்களாகும் எனக் கூறப்படுவதோடு 2 முறை போட்டுக்கொண்டால் தான் அது 95% திறன்வாய்ந்ததாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா தடுப்பூசியை போட்ட தாதிக்கு கொரோனா கொரோனா தடுப்பூசியை போட்ட தாதிக்கு கொரோனா Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

அமைச்சர் அலி சப்ரியிடம் கையளிக்கப்பட்ட இறுதி அறிக்கை

December 30, 2020

அண்மையில் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான விடயங்களை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நீதி அமைச்சர் அலி சப்ரி, முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி குஸலா சரோஜினி வீரவர்தன தலைமையில் குழுவை கடந்த மாதம் 29ஆம் திகதி நியமித்தார். 
குழுவின் இடைக்கால அறிக்கை கடந்த 7ஆம் திகதி (2020.12.07) கையளிக்கப்பட்டது. 
அதன் இறுதி அறிக்கையை குழுவின் தலைவர் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி குஸலா சரோஜினி வீரவர்தன தலைமையில் இன்று 
நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியிடம் கையளித்தது. 
மஹர சிறைச்சாலை கலவரத்தின்போது 11 கைதிகள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் அலி சப்ரியிடம் கையளிக்கப்பட்ட இறுதி அறிக்கை அமைச்சர் அலி சப்ரியிடம் கையளிக்கப்பட்ட இறுதி அறிக்கை Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

உருமாறிய கொரோனா: விஷேட பரிசோதனையை ஆரம்பித்த இலங்கை..

December 30, 2020

தற்பொழுது பல நாடுகளிலும் பதிவாகி வரும் உருமாறிய கொரோனா வைரசு இலங்கைக்குள் வந்துள்ளதா? என்பது பற்றி விசேட பரிசோதனைகளை ஜெயவர்த்தனபுரா பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவம் மற்றும் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவு (The Department of Immunology and Molecular Medicine and Allergy, Immunology and Cell Biology Unit of University of Sri Jayewardenepura) ஆம்பித்துள்ளது. 
 இது தொடர்பாக, இதன் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவன்தர தெரிவிக்கையில், 
இந்த புதிய உருமாறிய வைரஸ் இங்கிலாந்திலே ஆரம்பமானது. தற்பொழுது இந்தியா உட்பட பல நாடுகளிடையே பரவி வருகிறது. இதை PCR பரிசோதனையின் மூலம் அறிந்துக்கொள்ள முடியாது என்று கூறுவதற்கில்லை. இவ்வாறான பரிசோதனை மூலம் கண்டறிய முடியும் இதனால் இதுதொடர்பில் பொது மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லை. இருப்பினும், பொதுவான பி.சீ.ஆர் பரிசோதனையில் இதனை வேறுப்படுத்தி அடையாளம் காண முடியாது. இதை கண்டறிவதற்கு தனியான விசேட மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 
இந்த உருமாறிய வைரஸை அடையாளம் காண்பது இலங்கை போன்ற நாடுக்கு மிகவும் முக்கியமானதாகும் என்று தெரிவித்த அவர் பொதுவான பி.சீ.ஆர் பரிசோதனையில் இந்த புதிய உருமாறிய வைரசுக்கு இலக்கான நபர்கள் தொடர்பில் ஏமாறக்கூடிய வாய்ப்பும் இருப்பதாக அவர் கூறினார். தற்போதுள்ள நிலைமையில் இதுதொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை. இருப்பினும் ஒரு பிரச்சினை உண்டு. பொதுவாக நாம் பி.சீ.ஆர் பரிசோதனையில் குறிப்பிட்ட இலக்குடன் செயல்படும் பொழுது அந்த இலக்கு சிலவேளை தவறக்கூடும். இதனால் பி.சீ.ஆர் பரிசோதனையின் மூலம் இதனை கண்டறிய முடியாது என்று திட்டவட்டமாக கூறமுடியாது என்றும் அவர் மேலும் கூறினார்.
உருமாறிய கொரோனா: விஷேட பரிசோதனையை ஆரம்பித்த இலங்கை.. உருமாறிய கொரோனா: விஷேட பரிசோதனையை ஆரம்பித்த இலங்கை.. Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5
Powered by Blogger.