அடுத்த வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு பற்றிய அறிவிப்பு...

December 30, 2020

அடுத்த வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வை ஜனவரி 05 - 08 வரை கூட்டுவதற்கு இன்று (30) முற்பகல் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற செயலாளர் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார். 
Covid-19 சுகாதார வழிகாட்டல்களின் கீழ் பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்குள் பிரவேசிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கும் இதன்போது அனுமதி வழங்கப்படும். ஜனவரி 06, புதன்கிழமை மு.ப. 10.00 - 10.30 மணி வரை பிரதமரிடம் கேள்வி கேட்பதற்கான 
நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 
 கொரோனா பரவல் காரணமாக கடந்த நவம்பர் 03ஆம் திகதி முதல், பாராளுமன்றம் செல்ல ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு பற்றிய அறிவிப்பு... அடுத்த வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு பற்றிய அறிவிப்பு... Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

கொரோனாவிற்கு பலியான அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்..

December 30, 2020

கொரோனா தொற்றினால் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மரணமடைந்துள்ளார். 
குடியரசு கட்சியை சேர்ந்த லூக் லெட்லோ ( luke letlow) என்பவரே இவ்வாறு மரணமானார். கடந்த 18ஆம் திகதி கொரோனா உறுதியான அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவிற்கு பலியான அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்.. கொரோனாவிற்கு பலியான அமெரிக்க  நாடாளுமன்ற உறுப்பினர்.. Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

தனிமைப்படுத்தப்பட்ட சபாநாயகர்...

December 30, 2020

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தன்னைத் தானே சுயதனிமைப்படுத்திக் கொண்டார். தனது 02 
பாதுகாப்பாளர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளானதையடுத்தே இவ்வாறு தன்னைத் தானே சுயதனிமைப்படுத்திக் கொண்டார். 
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டையிலுள்ள சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே தனிமைப்படுத்தலில் உள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட சபாநாயகர்... தனிமைப்படுத்தப்பட்ட சபாநாயகர்... Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிறைச்சாலை பாதுகாப்பு பணியில்...

December 30, 2020

முன்னாள் இராணுவ அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு குழுவொன்றை சிறைச்சாலைகளின் பாதுகாப்பிற்காக நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார். 
200 பேர் கொண்ட குழுவொன்று இந்த பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிறைச்சாலை பாதுகாப்பு பணியில்... முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிறைச்சாலை பாதுகாப்பு பணியில்... Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

சாரதி அனுமதிப் பத்திரத்தை இழக்கும் போதைப் பொருள் பாவனையாளர்கள்...

December 30, 2020

பார ஊர்திகளுக்காக (Heavy Vehicles) புதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு வருபவர்களும் பழைய அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கு வருபவர்களும் கடந்த ஒரு வருடத்திற்குள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளனரா என்பது தொடர்பில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில் போதைப்பொருள் பாவனை உறுதிப்படுத்தப்பட்டால் அவருக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார். 
பார ஊர்தி சாரதிகள் தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகளை ஆராய்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நடவடிக்கை ஜனவரி முதல் ஆரம்பமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சாரதி அனுமதிப் பத்திரத்தை இழக்கும் போதைப் பொருள் பாவனையாளர்கள்... சாரதி அனுமதிப் பத்திரத்தை இழக்கும் போதைப் பொருள் பாவனையாளர்கள்... Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

என்னை மன்னியுங்கள்: மிகவும் வருத்தத்துடன் அறிக்கையை வெளியிட்ட ரஜினிகாந்த் (அறிக்கை இணைப்பு)

December 29, 2020

ஜனவரியில் கட்சி தொடங்குவேன் என அறிவித்து மருத்துவர்களின் ஆலோசனையையும் மீறி ஹைதராபாத் சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார் தென்னிந்திய Super Star நடிகர் ரஜனிகாந்த். 
கொரோனா விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு படப்பிடிப்பு நடந்தாலும் அதில் நான்கு பேருக்கு தொற்று உறுதியானது. 
ரஜினிக்கு தொற்று ஏற்படவில்லையாயினும் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மூன்று நாட்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருக்க நேரிட்டது. 
வீடு திரும்பிய அவர் தனது அரசியல் பிரவேசம் பற்றியும் இதர விடயங்கள் தொடர்பாகவும் உருக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். 
அவர் வெளியிட்ட முழுமையான அறிக்கையை கீழே தருகிறோம்.




என்னை மன்னியுங்கள்: மிகவும் வருத்தத்துடன் அறிக்கையை வெளியிட்ட ரஜினிகாந்த் (அறிக்கை இணைப்பு) என்னை மன்னியுங்கள்: மிகவும் வருத்தத்துடன் அறிக்கையை வெளியிட்ட ரஜினிகாந்த் (அறிக்கை இணைப்பு) Reviewed by irumbuthirai on December 29, 2020 Rating: 5

சாரதி அனுமதிப் பத்திரம்: ஜனவரி முதல் இலங்கை ராணுவத்தால்...

December 29, 2020

இலங்கையில் மாதமொன்றுக்கு 60,000 - 90,000 வரையான சாரதி அனுமதிப் பத்திரங்கள் விநியோகிக்கப்படுகின்றன. 
அந்த சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து ஆணையாளர் சுமித் அளஹகோன் தெரிவித்துள்ளார். 
சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணி தென்னாபிரிக்க நிறுவனமொன்றினாள் கடந்த 11 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
சாரதி அனுமதிப் பத்திரம்: ஜனவரி முதல் இலங்கை ராணுவத்தால்... சாரதி அனுமதிப் பத்திரம்: ஜனவரி முதல் இலங்கை ராணுவத்தால்... Reviewed by irumbuthirai on December 29, 2020 Rating: 5

20 வகையான புதிய கொரோனா வைரஸ்கள்.... இலங்கைக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை...

December 29, 2020

வைரஸ்கள் மாற்றமடைவது இயல்பான விடயம். அதற்கு எல்லையில்லை. எங்கும் அது நிகழக்கூடும். இதன் காரணமாக உலகின் ஏனைய நாடுகளை போல இலங்கையிலும் புதிய வைரஸ் உருவாவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். 
மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ள போதிலும் ஏற்கனவே நாட்டில் காணப்படும் 
வைரஸ் மாற்றமடைந்து ஆபத்தானதாக மாறுவதை தடுக்க முடியாது. உலகில் 20 வகையான புதிய கொரோனா வைரஸ்கள் உள்ளன. எவ்வகையான வைரஸ் காணப்பட்டாலும் அடிப்படை சுகாதார விதிமுறைகளை பின்பற்றவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
20 வகையான புதிய கொரோனா வைரஸ்கள்.... இலங்கைக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை... 20 வகையான புதிய கொரோனா வைரஸ்கள்.... இலங்கைக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை... Reviewed by irumbuthirai on December 29, 2020 Rating: 5

இலங்கையிலும் மிகவும் வீரியம் கூடிய கொரோனா தொற்றாளர் கண்டுபிடிப்பு

December 29, 2020

மிகவும் வீரியம் கூடிய கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் அடையாளம் காணப்பட்டதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 
தம்புள்ளை சந்தைக்கு சென்று மரக்கறிகளை கொள்வனவு செய்து வந்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இவர் 37 வயதுடைய ஆண் ஆவார். 
இதனால் அவரோடு தொடர்பிலே இருந்தவர்கள் தங்களது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியுடன் தொடர்புகொண்டு PCR பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டும் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார். 
இதேவேளை தொற்றுறுதியான 
நபருடன் தொடர்புடைய 65 பேரும், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 129 பேரும் என மொத்தமாக 194 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ள போதிலும் ஏற்கனவே நாட்டில் காணப்படும் வைரஸ் மாற்றமடைந்து ஆபத்தானதாக மாறுவதை தடுக்கமுடியாது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையிலும் மிகவும் வீரியம் கூடிய கொரோனா தொற்றாளர் கண்டுபிடிப்பு இலங்கையிலும் மிகவும் வீரியம் கூடிய கொரோனா தொற்றாளர் கண்டுபிடிப்பு Reviewed by irumbuthirai on December 29, 2020 Rating: 5

ICC யின் தசாப்த விருது பெற்றோரும் தெரிவு முறையும் (முழு விபரம் இணைப்பு)

December 29, 2020

2020ஆம் ஆண்டு நிறைவடைந்த நிலையில், கடந்த 10 ஆண்டு காலப் பகுதியில் சிறந்து விளங்கிய கிரிக்கெட் வீரரை தெரிவு செய்து ICC யினால் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 
இது தொடர்பான நிகழ்வு நேற்று இடம்பெற்றது. 
தெரிவு செய்யப்படும் முறை: 
90% ஆன தெரிவு, முன்னாள் கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட குழு, ஊடகவியலாளர்கள், ஒளிபரப்பு நிறுவன பிரநிதிகள் உள்ளிட்டோரினாலும் 10% ஆன தெரிவு இரசிகர்களின் வாக்களிப்பின் மூலமும் இடம்பெறும். 
தெரிவு செய்யப்பட்டோர்: 
(1) தசாப்பதத்தின் ICC கிரிக்கெட் வீரருக்கான விருதான, சேர் கா(ர்)பீல்ட் சோபர் விருதுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி தெரிவு செய்யப்பட்டுள்ளார். 
(2) தசாப்பதத்தின் ICC ஒருநாள் கிரிக்கெட் வீரராகவும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி தெரிவு செய்யப்பட்டுள்ளார். 
(3) தசாப்தத்தின் ICC கிரிக்கெட் வீராங்கனைக்கான, ரச்சல் ஹெஹொ பிளின்ட் விருதுக்கும் தசாப்தத்தின் ஒரு நாள் கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதுக்கும் அவுஸ்திரேலிய அணியின் எல்லீஸ் பெர்ரி தெரிவு செய்யப்பட்டுள்ளார். 
(4) தசாப்தத்தின் சிறந்த டெஸ்ட் வீரர் - ஸ்டீவன் ஸ்மித் (அவுஸ்திரேலியா). 
(5) தசாப்தத்தின் ரி20 கிரிக்கெட் வீரர் ரஷீட் கான் (ஆப்கானிஸ்தான்) 
(6) தசாப்தத்தின் சிறந்த அறத்துடன் விளையாடிய வீரர்- MS Dhoni (இந்தியா) 
இது தவிர ICC தசாப்தத்தின் டெஸ்ட் அணியில் சங்கக்கார, ஒருநாள் அணியில் மாலிங்க ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். 
இது தொடர்பில் ICC யினால் வெளியிடப்பட்ட பட்டியல் வருமாறு: 
Virat Kohli wins the Sir Garfield Sobers Award for ICC Male Cricketer of the Decade 
Ellyse Perry wins the Rachael Heyhoe-Flint Award for ICC Female Cricketer of the Decade 
Steve Smith is ICC Men’s Test Cricketer of the Decade 
Virat Kohli is ICC Men’s ODI Cricketer of the Decade 
Ellyse Perry is ICC Women’s ODI Cricketer of the Decade 
Rashid Khan is ICC Men’s T20I Cricketer of the Decade 
Ellyse Perry is ICC Women’s T20I Cricketer of the Decade 
Kyle Coetzer is ICC Men’s Associate Cricketer of the Decade 
Kathryn Bryce is ICC Women’s Associate Cricketer of the Decade 
MS Dhoni wins ICC Spirit of Cricket Award of the Decade








ICC யின் தசாப்த விருது பெற்றோரும் தெரிவு முறையும் (முழு விபரம் இணைப்பு) ICC யின் தசாப்த விருது பெற்றோரும் தெரிவு முறையும் (முழு விபரம் இணைப்பு) Reviewed by irumbuthirai on December 29, 2020 Rating: 5

இராணுவத் தளபதிக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் கிடைத்த பதவி உயர்வு

December 28, 2020

இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இன்று (28) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜெனரல் தரத்திற்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதிக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் கிடைத்த பதவி உயர்வு இராணுவத் தளபதிக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் கிடைத்த பதவி உயர்வு Reviewed by irumbuthirai on December 28, 2020 Rating: 5

கொரோனா தடுப்பூசி: சர்வதேச உற்பத்தி கேந்திர நிலையமாக மாறும் இந்தியா:

December 28, 2020

இந்தியாவின் தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத், Covid-19 தடுப்பூசிக்கான உலகளாவிய உற்பத்தி கூடமாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
இங்கு 5 நிறுவனங்கள், கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளமையே இதற்கான காரணமாகும். 
அது தொடர்பான விபரங்களை கீழே தருகிறோம். 
(1) பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து 'கோவாக்சின் (Covaxin)' என்ற தடுப்பூசியை உருவாக்கி அதன் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. இந்திய பிரதமர் மோடி கடந்த மாதம் 28-ந் தேதி அங்கு நேரில் சென்று தடுப்பூசி உற்பத்தியின் முன்னேற்றத்தை கேட்டறிந்தார். 60-க்கு மேற்பட்ட வெளிநாட்டு தூதரக அதிகாரிகளும் தனியாக பார்வையிட்டனர். 
(2) Biological E Limited  (பயாலஜிக்கல் இ லிமிடெட்) என்ற மற்றொரு ஐதராபாத் நிறுவனம், ஜான்சென் பார்மசூட்டிக்கல் என்வி என்ற நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. அதன் பரிசோதனையும் நடந்து வருகிறது. 
(3) ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெடீஸ் லேப்ஸ் நிறுவனம், 
ரஷிய தயாரிப்பான 'ஸ்புட்னிக் வி (Sputnik-v)' கொரோனா தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைக்கும், இந்தியாவில் 10 கோடி டோஸ் தடுப்பூசியை வினியோகிப்பதற்கும் ஒப்பந்தம் செய்துள்ளது. 
(4) அரவிந்தோ பார்மா என்ற ஐதராபாத் நிறுவனம், கொரோனா உள்பட பல்வேறு வைரஸ்களை குணப்படுத்தும் தடுப்பூசிகள் உற்பத்திக்காக ரூ.275 கோடி முதலீடு செய்துள்ளது. 
(5) அத்துடன், ஐதராபாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம், கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி, இறக்குமதி செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தடுப்பூசிகளை சேமிக்க குளிர்பதன கிடங்கு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. 
இந்த வகையில் பார்க்கும் பொழுது கொரோனா தடுப்பூசிக்கான சர்வதேச மத்திய நிலையமாக இந்தியா மாறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா தடுப்பூசி: சர்வதேச உற்பத்தி கேந்திர நிலையமாக மாறும் இந்தியா: கொரோனா தடுப்பூசி: சர்வதேச உற்பத்தி கேந்திர நிலையமாக மாறும் இந்தியா: Reviewed by irumbuthirai on December 28, 2020 Rating: 5

உடல்களை எரிப்பது தொடர்பில் ஐ.தே.க.யின் நிலைப்பாடு...

December 28, 2020

Covid-19 னால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் தொடர்பிலான தீர்மானத்தை அரசாங்கம் சகல இனத்தினருடனும் கலந்தாலோசித்து பொது இணக்கப்பாட்டிற்கு வர வேண்டும் என கட்சியின் நிலைப்பாட்டை பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளார். 
கடந்த 23 ஆம் திகதி கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் போது குறித்த அறிக்கை ஒருமனதாக முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உடல்களை எரிப்பது தொடர்பில் ஐ.தே.க.யின் நிலைப்பாடு... உடல்களை எரிப்பது தொடர்பில் ஐ.தே.க.யின் நிலைப்பாடு... Reviewed by irumbuthirai on December 28, 2020 Rating: 5
Powered by Blogger.