சாரதி அனுமதிப் பத்திரத்தை இழக்கும் போதைப் பொருள் பாவனையாளர்கள்...


பார ஊர்திகளுக்காக (Heavy Vehicles) புதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு வருபவர்களும் பழைய அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கு வருபவர்களும் கடந்த ஒரு வருடத்திற்குள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளனரா என்பது தொடர்பில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில் போதைப்பொருள் பாவனை உறுதிப்படுத்தப்பட்டால் அவருக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார். 
பார ஊர்தி சாரதிகள் தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகளை ஆராய்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நடவடிக்கை ஜனவரி முதல் ஆரம்பமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சாரதி அனுமதிப் பத்திரத்தை இழக்கும் போதைப் பொருள் பாவனையாளர்கள்... சாரதி அனுமதிப் பத்திரத்தை இழக்கும் போதைப் பொருள் பாவனையாளர்கள்... Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.