கொரோனா உடல்களை அடக்கம் செய்தல்: இறுதித் தீர்மானத்திற்கு கூடிய இரண்டு குழுக்கள்: நடந்தது என்ன?


கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி அளிப்பதா? என்பது தொடர்பில் இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள நேற்று கூடிய இரண்டு குழுக்களும் எவ்வித தீர்மானமும் இன்றி வெளியேறினர். 
 இதில் ஒரு குழு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியினாலும் மற்றைய குழு இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளேயினாலும் நியமிக்கப்பட்டதாகும். 
 இதேவேளை உடல்களை எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 
நேற்றைய தினம் பொரளை மயானத்துக்கு முன்னால் சிலோன் தவ்ஹீத் ஜமாத் உட்பட ஏனைய அமைப்புக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க அபே ஜனபல கட்சி கொழும்பு மாவட்ட தலைவர் டான் பிரசாத் உள்ளிட்ட குழுவினர் குறித்த இடத்திற்கு வந்தமை குறிப்பிடத்தக்கது. 
எனினும் போலீசார் தலையிட்டு நிலைமையை சமாளித்தனர்.
கொரோனா உடல்களை அடக்கம் செய்தல்: இறுதித் தீர்மானத்திற்கு கூடிய இரண்டு குழுக்கள்: நடந்தது என்ன? கொரோனா உடல்களை அடக்கம் செய்தல்: இறுதித் தீர்மானத்திற்கு கூடிய இரண்டு குழுக்கள்: நடந்தது என்ன? Reviewed by irumbuthirai on January 01, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.