ஜனாதிபதி வேட்பாளர்கள் 33 பேரின் கட்டுப்பணம் அரசுடமையாகியது

November 19, 2019

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சார்பில் 20 வேட்பாளர்களும்; மேலும் 15 பேர் சுயேட்சை வேட்பாளர்களாகவும் போட்டியிட்டனர். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர் ஒருவர் இம்முறை ஜனாதிபதி தேர்;தலில் 50 ஆயிரம் ரூபா வீதம் கட்டுப்பணம் செலுத்தினர். சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ஒருவர் 

75 ஆயிரம் ரூபா வீதம் கட்டுப்பணம் செலுத்தினர். அதற்கு அமைவாக இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 12.5 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குளை பெறமுடியாமல் போன 33 வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரச உடமையாக்கப்பட்டது, ஜனாதிபதி தேர்தலில் 12.5 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் பேட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோரினால் மாத்திரமே பெற முடிந்துள்ளது.
(அ.த.தி)
ஜனாதிபதி வேட்பாளர்கள் 33 பேரின் கட்டுப்பணம் அரசுடமையாகியது ஜனாதிபதி வேட்பாளர்கள் 33 பேரின் கட்டுப்பணம் அரசுடமையாகியது Reviewed by irumbuthirai on November 19, 2019 Rating: 5

Grade: 10 English (New Syllabus) With easy way

November 18, 2019


In this,


Self learning method by unit wise
Video Explanation
Full Syllabus
Teachers' Guide
Text Book
Work Book
Exam papers & More..
Click the link below for more details


English 10
Grade: 10 English (New Syllabus) With easy way Grade: 10 English (New Syllabus) With easy way Reviewed by irumbuthirai on November 18, 2019 Rating: 5

தரம் 10 தமிழ்மொழியும் இலக்கியமும் (புதிய பாடத்திட்டம்): முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இலகு முறைகளுடன்..

November 18, 2019


தரம் 10 புதிய பாடத்திட்டத்தின்படி தமிழ்மொழியும் இலக்கியமும் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி இணைக்கப்பட்டுள்ளது.
தவணைப் பரீட்சை வினாப்பத்திரங்கள் உள்ளன. 
செயலட்டைகள் தரப்பட்டுள்ளன. 
பயிற்சி வினாக்கள் உள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


தரம் 10 தமிழ்மொழியும் இலக்கியமும் (புதிய பாடத்திட்டம்): முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இலகு முறைகளுடன்.. தரம் 10 தமிழ்மொழியும் இலக்கியமும் (புதிய பாடத்திட்டம்): முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இலகு முறைகளுடன்.. Reviewed by irumbuthirai on November 18, 2019 Rating: 5

நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்துவேன் - ஜனாதிபதி கோதாபய

November 18, 2019


எனது இந்த தேர்தலின் வெற்றிக்கு அனைவராலும் பெரிதும் மதிக்கப்படும் பௌத்த மத மஹா சங்கத்தினரது நல்லாசியே காரணமாகும். சிங்கள மக்களின் ஆதரவுடன் மாத்திரம் இந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதை நான் அறிந்திருந்தேன். இருப்பினும் நான் தமிழ், முஸ்லிம் மக்களிடம் விசேட கோரிக்கையை முன்வைத்திருந்தேன் இந்த வெற்றியில் பங்காளிகளாக இருக்குமாறு. ஆனால் 

அதற்கான பெறுபேறு திருப்திகரமாக அமையவில்லை. நாட்டின் தேசிய பாதுகாப்பு முக்கியமானதாகும். எனது அரசாங்கத்தில் பாதுகாப்பை மீண்டும் வலுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். சர்வதேச மட்டத்தில் நடுநிலை கொள்கையை முன்னெடுப்பதே எனது நோக்கம். அதேவேளை நாட்டின் இறைமை, ஒருமைப்பாடு, கௌரவம் முக்கியமானதாகும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். சுயாதீன நாடு என்ற வகையில் இலங்கை இனிமேல் செயற்படும் என்பதையும் நான் கூறிக்கொள்கிறேன். இதன் அடிப்படையில் நாம் சர்வதேச நாடுகளுடன் நடுநிலைக் கொள்கையை கையாள்வோம். தீவிரவாதம் அடிப்படைவாதம், போதைப்பொருள், வர்த்தகம், பாதாள உலகக்குழுவினர், குற்றவாளிகள் இல்லாத ஒரு சமூகத்தை நாம் நிச்சயமாக உருவாக்குவோம் என இலங்கையின் புதிய ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச தெரிவித்தார். 
அவரது கன்னி உரையை முழுமையாக வாசிக்க கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்துவேன் - ஜனாதிபதி கோதாபய நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்துவேன் - ஜனாதிபதி கோதாபய Reviewed by irumbuthirai on November 18, 2019 Rating: 5
Powered by Blogger.