வைரஸ் பாதிப்பிற்காக ஏலத்தில் விற்கப்பட்ட உலகின் முதலாவது ட்விட்டர் (Twitter) பதிவு:

March 27, 2021

'எனது ட்விட்டை நான் அமைத்துள்ளேன்' என்ற ட்விட்டர் (Twitter) பதிவானது மலேசியாவைத் தளமாகக் கொண்ட வர்த்தகர் ஒருவரால் 2.9 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளது. 
இந்த டுவிட்டர் பதிவே ட்விட்டர் நிறுவனர் ஜக் டோர்சி பதிவிட்ட 
முதலாவது பதிவாகும். இந்தப் பதிவு 2006 மார்ச் 21 ஆம் திகதி வெளியானதாகும். 
இந்த ஏலத்தொகையில் 95% டோர்சிக்குச் செல்லும் என்று நம்பப்படுகிறது. இந்த தொகையானது ஆபிரிக்காவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு நன்கொடையாகக் கொடுக்கப்படும் என்று டோர்சி தெரிவித்துள்ளார்.
வைரஸ் பாதிப்பிற்காக ஏலத்தில் விற்கப்பட்ட உலகின் முதலாவது ட்விட்டர் (Twitter) பதிவு: வைரஸ் பாதிப்பிற்காக ஏலத்தில் விற்கப்பட்ட உலகின் முதலாவது ட்விட்டர் (Twitter) பதிவு: Reviewed by irumbuthirai on March 27, 2021 Rating: 5

10,000 மாணவர்களுக்கு படிக்கும்போதே வேலைவாய்ப்பு: உ.தரம் சித்தியடைந்தவர்களுக்கு அரிய வாய்ப்பு: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு:

March 27, 2021

Computer Science (கணினி அறிவியல்) பட்டப்படிப்பிற்காக இம்முறை 10,000 மாணவர்கள் ஒரே தடவையில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். 
திறந்த பல்கலைக்கழகத்துடன் (The Open University of Sri Lanka) இணைந்த வகையில், இப்பட்டப்படிப்பு முன்னெடுக்கப்படும். உயர்தர பரீட்சையில் எந்தவொரு பாடப்பிரிவிலும் சித்தியடைந்த மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம். 
இதேவேளை தற்போது, 
நாட்டில் கணினி அறிவியல் துறையுடன் தொடர்புபட்ட 40,000 வேலைவாய்ப்புகள் காணப்படுவதாகவும் இதற்கமைய, தற்போது இந்த பட்டப்படிப்பில் இணைத்துக்கொள்ளப்படுபவர்களுக்கு முதலாம் ஆண்டிலிருந்தே வேலைவாய்ப்புகள் வழங்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்த சம்பத் அமரதுங்க மாணவர்கள் பாடநெறியையும் தொடர்ந்தும் முன்னெடுக்க முடியுமெனவும் கூறினார்.
10,000 மாணவர்களுக்கு படிக்கும்போதே வேலைவாய்ப்பு: உ.தரம் சித்தியடைந்தவர்களுக்கு அரிய வாய்ப்பு: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு: 10,000 மாணவர்களுக்கு படிக்கும்போதே வேலைவாய்ப்பு: உ.தரம் சித்தியடைந்தவர்களுக்கு அரிய வாய்ப்பு: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு: Reviewed by irumbuthirai on March 27, 2021 Rating: 5

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணியின் முதல் கட்டம் இன்று...

March 27, 2021

2020 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பிடும் முதல் கட்ட பணி இன்று(27) நாட்டிலுள்ள 86 பாடசாலைகள் மற்றும் 
111 மத்திய நிலையங்களில் ஆரம்பமாகிறது. 
இந்த முதற்கட்ட பணிகள் இன்று 27 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 05 ஆம் திகதி வரையில் நடைபெறும். நாட்டில் 57 நகரங்களில் இந்த மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணியின் முதல் கட்டம் இன்று... சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணியின் முதல் கட்டம் இன்று... Reviewed by irumbuthirai on March 27, 2021 Rating: 5

ஒரு வகுப்பில் 15 மாணவர்கள் மாத்திரமே... வெளியான புதிய சுற்றுநிருபம்...

March 26, 2021

மேல் மாகாணத்தில் இதுவரை ஆரம்பிக்கப்படாமல் இருந்த தரம் 1-4, 6-10, மற்றும் 12 ஆகிய வகுப்புகள் இம்மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கிறது. 
எனவே இது தொடர்பாக விசேட சுற்றறிக்கை ஒன்று கல்வி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது. 
அந்தவகையில்,
  • ஒரு வகுப்பில் அதிகமாக 15 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 
  • மாணவர்கள் குழுக்களாக பிரித்து ஒவ்வொரு குழுவும் ஒருநாள் விட்டு மறுநாளே பாடசாலைக்கு வரவேண்டும். 
  • கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். 
  • ஆசிரியர்களும் கல்விசாரா ஊழியர்களும் தினமும் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும். 
  • ஏதேனும் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டால், அந்த பகுதிக்குரிய பாடசாலைகளுக்கு மாத்திரம் குறித்த காலப்பகுதிக்கு விடுமுறை வழங்கப்படும். 
போன்ற விடயங்கள் உட்பட பல அறிவுறுத்தல்கள் அதில் வழங்கப்பட்டுள்ளன.
ஒரு வகுப்பில் 15 மாணவர்கள் மாத்திரமே... வெளியான புதிய சுற்றுநிருபம்... ஒரு வகுப்பில் 15 மாணவர்கள் மாத்திரமே... வெளியான புதிய சுற்றுநிருபம்... Reviewed by irumbuthirai on March 26, 2021 Rating: 5

சூயஸ் கால்வாயில் சிக்கிய பாரிய கப்பல்: 5,000 கடல் மைல்களை சுற்றும் நிலையில் ஏனைய கப்பல்கள்:

March 26, 2021

சீனாவிலிருந்து நூற்றுக்கணக்கான கொள்கலன்களுடன் புறப்பட்ட 'எவர்கிரீன்' என்ற வணிக கப்பல் சுயஸ் கால்வாய் வழியாக நெதர்லாந்தின் ரோட்டர்டாமுக்கு சென்றுகொண்டிருந்தது. 
அப்போது, திடீரென்று வீசிய பலத்த காற்றால் கட்டுப்பாட்டை இழந்த கப்பலின் முன்பக்கம் 
கால்வாயின் வடக்கு பக்க சுவற்றின் மீது மோதியுள்ளது. அடுத்த கணமே கப்பலின் பின்பக்கம் மேற்கு திசையில் இழுத்து தள்ளப்பட்டு மற்றொருபக்க சுவரில் மோதி நின்றது. இவ்வாறு பக்கவாட்டில் சிக்கிக்கொண்ட இந்த கப்பலால், அந்த பாதையில் ஒட்டுமொத்த கப்பல் போக்குவரத்தும் தடைப்பட்டது. 
மாற்று வழியில் ஏனைய கப்பல்கள் செல்ல வேண்டுமாயின், ஆப்பிரிக்காவின் ஊடாகவே செல்ல வேண்டும். இவ்வாறு செல்வதன் மூலம் குறைந்தது 10 நாட்கள் மேலதிகமாக பயணிக்க வேண்டிவரும் அதாவது மேலதிகமாக 5,000 கடல் மைல்களை கடக்க வேண்டி ஏற்படும். 
தற்போது இந்த நிலைமை காரணமாக ஏராளமான சரக்கு கப்பல்கள் கால்வாயின் தென்பகுதியில் குவிந்து வருகின்றன. கப்பல்களின் இந்த அணிவகுப்பால் அந்தக் கடல் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 
சர்வதேச கொள்கலன்களில் 30% மானவை தினமும் இந்த கால்வாயின் ஊடாகவே எடுத்துச்செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சூயஸ் கால்வாயில் சிக்கிய பாரிய கப்பல்: 5,000 கடல் மைல்களை சுற்றும் நிலையில் ஏனைய கப்பல்கள்: சூயஸ் கால்வாயில் சிக்கிய பாரிய கப்பல்: 5,000 கடல் மைல்களை சுற்றும் நிலையில் ஏனைய கப்பல்கள்: Reviewed by irumbuthirai on March 26, 2021 Rating: 5

புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை ஆகஸ்டில் நடைபெறுமா?

March 25, 2021

புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை என்பவற்றை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடத்துவது தொடர்பாக இன்னமும் 
இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 
 நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
இதேவேளை மேல் மாகாணத்தில் இதுவரை ஆரம்பிக்கப்படாதிருந்த தரம் 5, 11, 13 ஆகிய வகுப்புகளை தவிர்ந்த ஏனைய வகுப்புகளை இம்மாதம் 29ஆம் திகதி ஆரம்பிக்க சுகாதார அமைச்சு அனுமதி வழங்கினாலும் மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை ஆகஸ்டில் நடைபெறுமா? புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை ஆகஸ்டில் நடைபெறுமா? Reviewed by irumbuthirai on March 25, 2021 Rating: 5

இரு வருடங்களில் 04 பொதுத் தேர்தலை சந்தித்த இஸ்ரேல்!

March 25, 2021

இஸ்ரேலில் கடந்த 02 வருடங்களில் 4வது பொதுத் தேர்தலையும் நேற்று முன்தினம் அந்த மக்கள் சந்தித்துள்ளனர். 
தற்போது பதவியில் உள்ள பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவுக்கு 
இந்தத் தேர்தல் சவால் மிக்கதாக அமையும் என சொல்லப்படுகிறது. 
 முன்னைய 03 தேர்தல்களிலும் எந்தத் தரப்பும் உறுதியான வெற்றியைப் பதிவு செய்யாத நிலையில், இழுபறியை முடிவுக்குக் கொண்டுவர அமைக்கப்பட்ட ஐக்கிய அரசாங்கமும் கடந்த டிசம்பர் மாதம் முறிந்தது. 
 நெதன்யாகுவுக்கு எதிரான ஊழல் விசாரணை தொடங்க 02 வாரங்கள் இருக்கும் நிலையிலேயே இந்தத் தேர்தல் நடைபெற்றது. 
 இதேவேளை தம் மீதான குற்றச்சாட்டை நிராகரிக்கும் பென்ஜமின் நெதன்யாகு, அவை அரசியல் நோக்கம் கொண்டவை என்று தெரிவித்துள்ளார். எனினும் பிரதமரை பதவி விலகக் கோரி இஸ்ரேலில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இணைப்பு: இதுவரை வெளியான முடிவுகளின்படி யாரும் பெரும்பான்மையைப் பெறவில்லை.
இரு வருடங்களில் 04 பொதுத் தேர்தலை சந்தித்த இஸ்ரேல்! இரு வருடங்களில் 04 பொதுத் தேர்தலை சந்தித்த இஸ்ரேல்! Reviewed by irumbuthirai on March 25, 2021 Rating: 5

கத்தோலிக்க தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளை மீள ஆரம்பிக்க மற்றுமொரு திகதி அறிவிப்பு

March 25, 2021

கொழும்பு பேராயரின் கீழ் உள்ள சகல கத்தோலிக்க தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளில் தரம் 5,11,13 ஆகிய வகுப்புகள் தவிர ஏனைய வகுப்புகளுக்காக எதிர்வரும் 
ஏப்ரல் 05 திகதியே மீண்டும் திறக்கப்படும் என கத்தோலிக்க தனியார் பாடசாலைகளின் பொது முகாமையாளர் அறிவித்துள்ளார். 
மாறாக மார்ச் 29 இல் ஆரம்பிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளை மீள ஆரம்பிக்க மற்றுமொரு திகதி அறிவிப்பு கத்தோலிக்க தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளை மீள ஆரம்பிக்க மற்றுமொரு திகதி அறிவிப்பு Reviewed by irumbuthirai on March 25, 2021 Rating: 5

இரட்டிப்பு வீரியம் கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

March 25, 2021

இரட்டிப்பு வீரியம் கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் திரிபு இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
இந்தியாவில், 18 மாநிலங்களில் சேகரிக்கப்பட்ட 10,787 மாதிரிகளைக் கொண்டு நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்த புதிய வகை கொரோனா திரிபு உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 
இதேவேளை இந்த 10,787 மாதிரிகளில் 736 பேர் பிரித்தானியாவில் 
கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா திரிபுடனும் 34 பேர் தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா திரிபுடனும் ஒருவர் பிரேஸிலில் உருமாறிய கொரோனா திரிபுடனும் ஒத்துப்போவது தெரியவந்துள்ளது. 
இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமாக பரவ ஆரம்பித்துள்ள நிலையில், இந்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. 
எனினும், இந்த புதிய வகை வைரஸிற்கும் தொற்று அதிகரிக்கின்றமைக்கும் தொடர்பில்லையெனவும் இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இரட்டிப்பு வீரியம் கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு இரட்டிப்பு வீரியம் கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு Reviewed by irumbuthirai on March 25, 2021 Rating: 5

சா.தர வினாப்பத்திரங்கள் கடுமையாக இருந்ததாக குற்றச்சாட்டு: பதிலளித்த கல்வியமைச்சர்:

March 25, 2021

பல மாதங்களாக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாத நிலையில் கடந்த வருடத்திற்கான க.பொ.த.சாதாரண தரப்பரீட்சை இம்மாதம் (2021-மார்ச்) நடைபெற்றது. 
ஆனால் இந்த பரீட்சைக்கான வினாபத்திரங்கள் 
கடுமையானதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்திருக்கும் குற்றாச்சாட்டு தொடர்பில் அமைச்சர் G.L. பீரிஸ் கருத்து தெரிவிக்கையில், 
இந்த விடயத்தை கருத்திற்கொண்டு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.   
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சா.தர வினாப்பத்திரங்கள் கடுமையாக இருந்ததாக குற்றச்சாட்டு: பதிலளித்த கல்வியமைச்சர்:  சா.தர வினாப்பத்திரங்கள் கடுமையாக இருந்ததாக குற்றச்சாட்டு: பதிலளித்த கல்வியமைச்சர்: Reviewed by irumbuthirai on March 25, 2021 Rating: 5

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் பயிற்சியினை தொடர்வதற்காக ஆசிரியர்களை தெரிவு செய்தல் - 2021/2022 (விண்ணப்பம் உட்பட முழு விபரங்களும் இணைப்பு)

March 24, 2021

ஆசிரியர் கல்லூரிகளில் 2021/2022 இரு வருட கால பயிற்சி பாடநெறியை தொடர்வதற்காக உரிய தகைமைகளை கொண்ட ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 
  • ஆசிரியர் கல்லூரிகளில் காணப்படும் வெற்றிடங்களுக்கு அமைய மற்றும் நியமனத்தை அடிப்படையாகக் கொண்டு தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர் சேவையின் பதவி உயர்வின் போது தொழில்சார் தகைமை இன்மையினால் பாதிப்புகள் ஏற்படுவது மாத்திரமின்றி பாடசாலைக் கல்வியின் பண்புசார் தரத்தை விருத்தி செய்வதற்கும் தடைகள் ஏற்பட்டுள்ளன. இச்சகல விடயங்களையும் கருத்திற்கொண்டு சகல பட்டதாரி அல்லாத பயிற்றப்படாத ஆசிரியர்கள் பயிற்சியினை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். 

  • இம்முறை 25 பாடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 
  • நியமனம் பெற்ற பாடத்திற்கே பயிற்சி பெற வேண்டும். 
  • விசேட கல்வி பாட நெறிகளுக்கு மாத்திரம் வேறு பாடங்களுக்காக நியமனம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 
  • நியமனக் கடிதத்தில் பாடம் குறிப்பிடப்படாத ஆசிரியர்கள் தாம் உயர்தர பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த பாடத்திற்கு பயிற்சியை பெறலாம். 
  • சாதாரண தர தகைமைகளின் அடிப்படையில் நியமனம் பெற்றவர்கள் நியமன பாடம் குறிப்பிடப்படாத சந்தர்ப்பத்தில் ஆரம்பப் பிரிவு நியமனமாக அது கருதப்படும். 
  • விண்ணப்ப முடிவு திகதி: 27-04-2021.
இது தொடர்பான முழுமையான அறிவுறுத்தல்களை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
இது தொடர்பாக 28/2016 இலக்கம் கொண்ட சுற்றறிக்கையை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
விண்ணப்பத்தைப் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் பயிற்சியினை தொடர்வதற்காக ஆசிரியர்களை தெரிவு செய்தல் - 2021/2022 (விண்ணப்பம் உட்பட முழு விபரங்களும் இணைப்பு) ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் பயிற்சியினை தொடர்வதற்காக ஆசிரியர்களை தெரிவு செய்தல் - 2021/2022 (விண்ணப்பம் உட்பட முழு விபரங்களும் இணைப்பு) Reviewed by irumbuthirai on March 24, 2021 Rating: 5

23-03-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

March 24, 2021

23-03-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
23-03-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 23-03-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on March 24, 2021 Rating: 5

27 வருடங்களின் பின் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட Lanka Ashok Leyland

March 24, 2021

ஹோமாகம, ஜல்தர பிரதேசத்தில் அமைந்துள்ள, லங்கா அசோக் லேலண்ட் (Lanka Ashok Leyland) நிறுவனத்தின் வாகனங்களை பொருத்தும் தொழிற்சாலையில் செயற்பாடுகள் 27 வருடங்களின் பின் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அமைச்சர் விமல் வீரவன்ச இந்த தொழிற்சாலையை அண்மையில் பார்வையிட்டார். 
 1994 ஆம் ஆண்டு முதல் செயற்படாமல் இருந்த அசோக் லேலண்ட் 
நிறுவனத்தின் ஹோமாகம, ஜல்தரயில் அமைந்துள்ள வாகனங்களை பொருத்தும் தொழிற்சாலை அதாவது 27 வருடங்களுக்குப் பின் இவ்வாறு பணிகளை ஆரம்பித்துள்ளது. 
லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பங்குகள் முறையே இந்தியாவுக்கு 28% மற்றும் இலங்கைக்கு 72% என்ற அடிப்படையில் உண்டு. இதில் 30% உள்நாட்டு பங்கு உரிமையாளர்களுக்கு இருப்பதுடன் மிகுதி 42% கைத்தொழில் அமைச்சின் கீழ் காணப்படும் லங்கா லேலண்ட் அரச நிறுவனத்திற்கும் உள்ளது. 
வாகன பாகங்களை ஒனறு சேர்த்து 1994 ஆம் ஆண்டு முதல் பஸ் லொறி உட்பட வாகனங்களட இலங்கையில் தயாரிக்கப்பட்டு வந்ததுடன் இந்நாட்டில் வாகனங்களை பொருத்துவதை விட இந்தியாவிலிருந்து முழுமையாக அசோக் லேலண்ட் வாகனங்களை இறக்குமதி செய்வது இலாபகரமானதாக காணப்பட்டதால் 1994 ஆம் ஆண்டு முதல் வாகனங்களை தயாரிக்கும் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டன. 
 சமீபத்தில் கைத்தொழில் அமைச்சு வாகனங்களை தயாரித்தல், வாகனங்களை பொருத்துதல், வாகன உதிரி பாகங்களை தயரித்தல் பற்றிய ஒரு நிலையான செயல்முறையை வெளியிட்டது. நாட்டில் பாகங்களைக் கொண்டு வாகனங்களை தயாரித்து தேசிய பெறுமதியை ஒன்று சேர்த்து வரி நிவாரணத்தை அதிகரிப்பதன் மூலம், இலங்கை அசோக் லேலண்ட் நிறுவனம் வாகன இறக்குமதியை வரையறுத்து, பாகங்களைக் கொண்டு வாகனங்களை தயாரிக்கும் தொழிற்சாலையை திறந்து இந்நாட்டிலே இலாபகரமான முறையில் வாகனங்களை பொருத்தும் வாய்ப்பை உருவாக்கியுள்ளதாக அமைச்சர் விமல் வீரவங்ச இத்தொழிற்சாலை பார்வையிட சென்றபோது ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். 
 நிலையான செயல் முறையினூடாக வாகனங்களை பொருத்துதல் மற்றும் வாகன உதிரி பாகங்களை தயாரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள வரி நிவாரணம், மற்றும் சந்தை வாய்ப்புக்களை பயன்படுத்தி, லங்கா அசோக் லேலண்ட் நிறுவனம் எதிர்வரும் சில வருடங்களுக்குள் இலங்கையில் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் துறையில் பட்டதாரிகளுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கவும், ஆயிரக்கணக்கான வாகனங்களை நாட்டிலேயே பொருத்துதல் மற்றும் வாகன உதிரிப் பாகங்களையும் தயாரிக்கும் மேம்படுத்துவதே தனது எதிர்பார்ப்பாகும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச இங்கு தெரிவித்துள்ளார். 
 அதேபோல் தெற்காசிய பிராந்தியத்தில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மூலம் வாகன ஏற்றுமதியை மேற்கொள்ளவும் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப பஸ், லொரி மட்டுமல்லாமல் குப்பை கொண்டு செல்லும் லொரி, நீர் பவுசர்கள், கொங்கிரீட் கலக்கும் லொரிகள் போன்ற விசேடமான வாகனங்களையும் இலங்கையில் சந்தைப்படுத்தும் தேவைப்பாடு உள்ளதாகவும் அமைச்சர் அங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
(Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
27 வருடங்களின் பின் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட Lanka Ashok Leyland 27 வருடங்களின் பின் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட Lanka Ashok Leyland Reviewed by irumbuthirai on March 24, 2021 Rating: 5

மேல் மாகாண பாடசாலைகளில் ஏனைய தரங்களை ஆரம்பித்தல்: புதிய திகதி அறிவிப்பு:

March 24, 2021

மேல் மாகாணத்திலுள்ள அரச பாடசாலைகளில் 5,11,13 தர வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. ஏனைய தர வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருந்தது. 
ஆனால் தற்போது மேல் மாகாண பாடசாலைகளில் 
அனைத்து தர வகுப்புக்களும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 
இதற்கான அனுமதியை வழங்க தீர்மானித்திருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேல் மாகாண பாடசாலைகளில் ஏனைய தரங்களை ஆரம்பித்தல்: புதிய திகதி அறிவிப்பு: மேல் மாகாண பாடசாலைகளில் ஏனைய தரங்களை ஆரம்பித்தல்: புதிய திகதி அறிவிப்பு: Reviewed by irumbuthirai on March 24, 2021 Rating: 5

வட மாகாணத்தில் புதிய நியமனங்கள்

March 23, 2021

வட மாகாண பாடசாலைகளுக்கான ஆங்கில ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வும், வட மாகாண விவசாய அமைச்சுக்கு கீழான 
விவசாய போதனாசிரியர், விவசாய தொழில்நுட்பவியலாளர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வும் யாழ்பாணம் மத்திய கல்லூரி ‘தந்தை செல்வா’ மண்டபத்தில் நேற்று காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது. 
 இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினராக வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் கலந்து கொண்டார். 
 இதன்போது கருத்து தெரிவித்த ஆளுநர், 
ஜனாதிபதி தந்த விசேட அதிகாரத்தின் மூலம் மாகாண சபையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்பி வருவதாகவும் அச்செயற்பாட்டின் ஒரு கட்டமாகத்தான் இன்றைய நியமனங்கள் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். 
அத்துடன் முதன் முறையாக டிப்ளோமா பட்டதாரிகள் ஆங்கில ஆசிரியர்களாக வட மாகணத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆங்கில, கணித, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆசிரியர்களுடைய பற்றாக்குறை வடமாகாண கல்வி தரத்திலும் கல்வி நிலையிலும் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறிய ஆளுநர் அதனை நிவர்த்தி செய்யும் முதல் படியாக இந்த ஆங்கில ஆசிரியர் நியமனம் அமையும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.  
மேலும் இனிவரும் காலங்களில் சகல கிராமப்புற பாடசாலைகளிலும் ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ஆசிரியர்கள் தேவைக்கு ஏற்ப தகுதிகளின் அடிப்படையில் நியமிக்கபடவுள்ளதால் கல்வி சார் செயற்பாடுகள் சரியாக புகட்டப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். 
 அத்துடன் மாணவர்கள் பல்கலைகழகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் அந்தந்த துறைகளில் பயிற்றுவிக்கப்பட வேண்டும் எனவும் சர்வதேச தரத்திலான கல்வியை மாணவர்கள் பெற்றுகொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 
இதனைத்தொடர்ந்து விவசாய மற்றும் கால்நடை துறையில் புதிதாக நியமனம் பெறுவோர் பற்றி கருத்து தெரிவித்த ஆளுநர்,  
இலங்கையில் பாரம்பரிய முறையிலான உற்பத்தி முறைகளே தற்போதும் காணப்பட்டு வருவதால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் உற்பத்தி விலை அதிகமாக காணப்படுகிறது அதுவே பொருட்கள் இறக்குமதி செய்யக் காரணமாகிறது எனவும் சுட்டிக்காட்டினர். 
மேலும் இந்த நிலையை மாற்றி நவீன தொழில்நுட்ப முறைகளை விவசாயிகள் மற்றும் கால்நடை உற்பத்தியாளர்களுக்கு பயிற்றுவித்து நவீன தொழில்நுட்ப முறைகளின் மூலம் உற்பத்தி செலவை குறைத்து உற்பத்தி துறையிலே ஒரு புதிய புரட்சியை கொண்டுவர வேண்டும் எனும் நோக்கத்துடன் தான் இந்த நியமனங்கள் வழங்கபடுவதாகவும் குறிப்பிட்டார். 
 மேலும் பதவி நிலை சார் உத்தியோகத்தர்கள் வெகு விரைவாக நியமிக்கப்படுவார்கள் என விவசாயத்துறை அமைச்சர் கூறியதையும் ஞாபகப்படுத்தினார். 
 அத்துடன் கல்விசார் புலமையுடன் தொழில்சார் புலமையும் ஒரு சேவையை வழங்குபவருக்கு அவசியம் எனவும் சுட்டிக்காட்டினார். அத்துடன் இறுதியாக புதிதாக நியமன பெரும் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
(Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
வட மாகாணத்தில் புதிய நியமனங்கள் வட மாகாணத்தில் புதிய நியமனங்கள் Reviewed by irumbuthirai on March 23, 2021 Rating: 5

அரசாங்கத்திற்கு காலக்கெடு விதித்தார் பேராயர் மெல்கம் ரஞ்சித்

March 23, 2021

எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் 
நாடு தழுவிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை பலமாக மேற்கொள்ளப் போவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். 
எத்தகைய சக்திகள் செயற்பட்டாலும் இந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதி கிடைக்கும் வரை தாம் மக்களுடன் அணி திரள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 
திருப்பலிப் பூசை ஒன்றின் பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு காலக்கெடு விதித்தார் பேராயர் மெல்கம் ரஞ்சித் அரசாங்கத்திற்கு காலக்கெடு விதித்தார் பேராயர் மெல்கம் ரஞ்சித் Reviewed by irumbuthirai on March 23, 2021 Rating: 5

கொரோனாவிலிருந்து குணமடைதல்: இலங்கைக்கு முதலிடம்:

March 23, 2021

உலகளாவிய ரீதியில் கொரோனா நோயாளர்கள் குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கையானது முதலாம் இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது. 
 இலங்கையின் 90,200 கொரோனா நோயாளர்களில் இதுவரை 
86,759 பேர் குணமடைந்துள்ளார்கள். இது 96.52% மாகும். இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் முறையே 2ம் 3ம் இடங்களில் உள்ளன.
(Source : அரசாங்க தகவல் திணைக்களம் )
கொரோனாவிலிருந்து குணமடைதல்: இலங்கைக்கு முதலிடம்: கொரோனாவிலிருந்து குணமடைதல்: இலங்கைக்கு முதலிடம்: Reviewed by irumbuthirai on March 23, 2021 Rating: 5

கிராம சேவகர் வெற்றிடங்களை நிரப்ப மீண்டும் போட்டிப் பரீட்சை....

March 22, 2021

நாட்டில் காணப்படும் கிராம சேவகர் வெற்றிடங்களை நிரப்ப ஏற்கனவே நடைபெற்ற பரீட்சையை அடிப்படையாகக் கொண்டு நேர்முகத் தேர்வுகளை நடாத்த தீர்மானிக்கப்பட்ட போதும் அதற்கு 
அரச சேவை ஆணைக்குழு உடன்படவில்லை என்பதனால் புதிதாக போட்டிப்பரீட்சை நடத்தி அதனடிப்படையில் நேர்முகத் தேர்வு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் H.H.M. சித்ராநந்த தெரிவித்துள்ளார். 
எனவே இந்தப் போட்டி பரீட்சைக்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கிராம சேவகர் வெற்றிடங்களை நிரப்ப மீண்டும் போட்டிப் பரீட்சை.... கிராம சேவகர் வெற்றிடங்களை நிரப்ப மீண்டும் போட்டிப் பரீட்சை.... Reviewed by irumbuthirai on March 22, 2021 Rating: 5

தேசிய கல்வியற் கல்லூரி அனுமதி: இரண்டாவது தொகுதி பயிலுனர்களுக்கான நேர்முகப் பரீட்சை:

March 21, 2021

தேசிய கல்வியியற் கல்லூரிக்கு புதிதாக அனுமதிக்கப்படவுள்ள 2வது தொகுதி ஆசிரிய பயிலுனர்களுக்கான நேர்முகப் பரீட்சையானது எதிர்வரும் 27ம் திகதி சனிக்கிழமை மற்றும் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய 
தினங்களில் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது. 
இதுதொடர்பாக அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி கே. புண்ணியமூர்த்தி  தெரிவிக்கையில், 
கடந்த பெப்ரவரி மாதம் 14,15ம் திகதிகளில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சைக்கு சமூகம் கொடுக்காதவர்களின் வெற்றிடத்திற்கு இஸட் மதிப்பெண் அடிப்படையில் முதல் நிலையில் உள்ளவர்கள் அழைக்கப்ட்டுள்ளதாக தெரிவித்தார். 
இதனடிப்படையில் இஸ்லாம் கற்கை நெறிக்கு 30 பேரும், கணிதம் கற்கை நெறிக்கு 49 பேரும், வணிகக் கல்விக்கு 20 பேருமாக மொத்தம் 99 பயிலுனர்களுக்கான நேர்முகப்பரீட்சை நடைபெறவுள்ளதாகவும், இவர்களுக்கான கடிதங்கள் தனித்தனியாக விண்ணப்படிவத்தில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 
இதேவேளை நேர்முகப் பரீட்சைக்கு கடிதம் அனுப்பப்பட்டவர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள சகல ஆவணங்களுடனும் காலை 09.00 மணிக்கு சமூகமளிக்குமாறும் கேட்டுள்ளார். 
 2018 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்குமைய கல்வியற் கல்லூரிகளுக்கு ஆசிரிய பயிலுனர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். 
 அட்டாளைச்சேனை தேசியக் கல்வியக் கல்லூரிக்கு விஞ்ஞானம் கற்கை நெறிக்கு 20 பயிலுனர்களும், கணித கற்கை நெறிக்கு 20 பயிலுனர்களும், இஸ்லாம் கற்கை நெறிக்கு 30 பயிலுனர்களும், ஆரம்பநெறி கற்கை நெறிக்கு 90 பயிலுனர்களும், விசேட கற்கை நெறிகளுக்கு 15 பயிலுனர்களும், வணிகக் கல்விக்கு 20 பயிலுனர்களுமாக மொத்தம் 195 பயிலுனர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் பீடாதிபதி கே. புண்ணியமூர்த்தி இது தொடர்பில் மேலும் தெரிவித்தார்.
(Source : அரசாங்க தகவல் திணைக்களம்)
தேசிய கல்வியற் கல்லூரி அனுமதி: இரண்டாவது தொகுதி பயிலுனர்களுக்கான நேர்முகப் பரீட்சை: தேசிய கல்வியற் கல்லூரி அனுமதி: இரண்டாவது தொகுதி பயிலுனர்களுக்கான நேர்முகப் பரீட்சை: Reviewed by irumbuthirai on March 21, 2021 Rating: 5

Training Programmes (Sri Lanka Institute of Tourism & Hotel Management)

March 21, 2021

Training Programmes (Sri Lanka Institute of Tourism & Hotel Management) 
See the details below.


Training Programmes (Sri Lanka Institute of Tourism & Hotel Management) Training Programmes (Sri Lanka Institute of Tourism & Hotel Management)  Reviewed by irumbuthirai on March 21, 2021 Rating: 5

மாகொல முஸ்லிம் அனாதை நிலையத்தில் சிறுவர்களை அனுமதித்தல் - 2021

March 21, 2021

கடந்த 58 வருடங்களாக முஸ்லிம் அனாதை சிறுவர்களை பராமரித்து வழிகாட்டும் மாகொல முஸ்லிம் அனாதை நிலையத்தில் அனாதை சிறுவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 
தந்தையை இழந்த 6 - 12 வயதுக்கு உட்பட்ட ஆண் பிள்ளைகள் அனுமதிக்கப்படுவர். முழு விபரங்களை கீழே காணலாம்.


மாகொல முஸ்லிம் அனாதை நிலையத்தில் சிறுவர்களை அனுமதித்தல் - 2021 மாகொல முஸ்லிம் அனாதை நிலையத்தில் சிறுவர்களை அனுமதித்தல் - 2021 Reviewed by irumbuthirai on March 21, 2021 Rating: 5

Courses (Ceylon - German Technical Training Institute)

March 21, 2021

Courses (Ceylon - German Technical Training Institute) 
NVQ LEVEL - 5. 
Closing date: 31-03-2021. 
See the details below.


Courses (Ceylon - German Technical Training Institute) Courses (Ceylon - German Technical Training Institute) Reviewed by irumbuthirai on March 21, 2021 Rating: 5
Powered by Blogger.