ஒரு வகுப்பில் 15 மாணவர்கள் மாத்திரமே... வெளியான புதிய சுற்றுநிருபம்...


மேல் மாகாணத்தில் இதுவரை ஆரம்பிக்கப்படாமல் இருந்த தரம் 1-4, 6-10, மற்றும் 12 ஆகிய வகுப்புகள் இம்மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கிறது. 
எனவே இது தொடர்பாக விசேட சுற்றறிக்கை ஒன்று கல்வி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது. 
அந்தவகையில்,
  • ஒரு வகுப்பில் அதிகமாக 15 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 
  • மாணவர்கள் குழுக்களாக பிரித்து ஒவ்வொரு குழுவும் ஒருநாள் விட்டு மறுநாளே பாடசாலைக்கு வரவேண்டும். 
  • கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். 
  • ஆசிரியர்களும் கல்விசாரா ஊழியர்களும் தினமும் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும். 
  • ஏதேனும் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டால், அந்த பகுதிக்குரிய பாடசாலைகளுக்கு மாத்திரம் குறித்த காலப்பகுதிக்கு விடுமுறை வழங்கப்படும். 
போன்ற விடயங்கள் உட்பட பல அறிவுறுத்தல்கள் அதில் வழங்கப்பட்டுள்ளன.
ஒரு வகுப்பில் 15 மாணவர்கள் மாத்திரமே... வெளியான புதிய சுற்றுநிருபம்... ஒரு வகுப்பில் 15 மாணவர்கள் மாத்திரமே... வெளியான புதிய சுற்றுநிருபம்... Reviewed by irumbuthirai on March 26, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.