அரசாங்கத்திற்கு காலக்கெடு விதித்தார் பேராயர் மெல்கம் ரஞ்சித்


எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் 
நாடு தழுவிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை பலமாக மேற்கொள்ளப் போவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். 
எத்தகைய சக்திகள் செயற்பட்டாலும் இந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதி கிடைக்கும் வரை தாம் மக்களுடன் அணி திரள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 
திருப்பலிப் பூசை ஒன்றின் பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு காலக்கெடு விதித்தார் பேராயர் மெல்கம் ரஞ்சித் அரசாங்கத்திற்கு காலக்கெடு விதித்தார் பேராயர் மெல்கம் ரஞ்சித் Reviewed by irumbuthirai on March 23, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.