Vacancies (Sri Lanka Army)

April 16, 2022


Vacancies (Sri Lanka Army) 

 Closing date: 30-04-2022.

Source: Sunday Observer.

Vacancies (Sri Lanka Army) Vacancies (Sri Lanka Army) Reviewed by Irumbu Thirai News on April 16, 2022 Rating: 5

தொடர்ச்சியாக வராத மாணவர்களை எவ்வாறு பதிவது?

April 15, 2022


மாணவர் இடைவிலகல் தொடர்பாக எவ்வாறு பதிவுகளை மேற்கொள்வது என்பது தொடர்பான விளக்கம் கல்வியமைச்சின் 2008/39 சுற்று நிருபத்திற்கு அமைவாக பின்வருமாறு மேற்கொள்ளப்பட வேண்டும். 

 

பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அறிவித்தலின்றி ஒரு மாணவர் தொடர்ச்சியாக 40 பாடசாலை நாட்கள் சமூகமளிக்காத பட்சத்தில் அவர் பாடசாலையிலிருந்து விலகிச் சென்றவராக கருதப்பட வேண்டும். விலகிய திகதியாக 41ஆவது பாடசாலை நாளுக்குரிய திகதி குறிக்கப்பட வேண்டும். 

 

இது தொடர்பான மேலதிக விளக்கங்களை கீழே காணலாம்.

நன்றி: மாணிக்கம் இளங்கோ (முகநூல்)

 

தொடர்ச்சியாக வராத மாணவர்களை எவ்வாறு பதிவது? தொடர்ச்சியாக வராத மாணவர்களை எவ்வாறு பதிவது? Reviewed by Irumbu Thirai News on April 15, 2022 Rating: 5

விரைவில் கல்வி அமைச்சினால் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் சிலருக்கான விண்ணப்பங்கள் கோரப்படும்

April 15, 2022

சில மாகாணங்களுக்குரிய மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கான விண்ணப்பங்கள் கல்வியமைச்சினால் மிக விரைவில் கோரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
தகவல் அறியும் சட்டத்திற்கமைய கோரப்பட்ட விடயங்களுக்கு கல்வியமைச்சு வழங்கிய பதிலிலேயே குறித்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 
 
அந்தவகையில் தெற்கு, கிழக்கு, ஊவா ஆகிய மாகாணங்களுக்குரிய கல்விப் பணிப்பாளர்களுக்கான விண்ணப்பங்களே இவ்வாறு கோரப்படவுள்ளன. 
 
இதற்கான அனுமதி அரசாங்க சேவை ஆணைக்குழுவின் கல்விச்சேவை குழுவினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பாக கல்வி அமைச்சினால் அனுப்பப்பட்ட பதில் கடிதத்தை கீழே காணலாம்.

 
விரைவில் கல்வி அமைச்சினால் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் சிலருக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் விரைவில் கல்வி அமைச்சினால் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் சிலருக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் Reviewed by Irumbu Thirai News on April 15, 2022 Rating: 5

வட மாகாணத்தில் விரைவில் 355 பேருக்கு ஆசிரிய நியமனம்!

April 14, 2022

கல்வியியல் கல்லூரிகளில் இருந்து வெளியேறி ஆசிரிய நியமனத்துக்காக காத்திருப்பவர்களில் 355 பேருக்கு விரைவில் வட மாகாண பாடசாலைகளுக்கு நியமனம் வழங்கப்படும் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பான பத்திரிகை செய்தியைக் கீழே காணலாம். 

 
வட மாகாணத்தில் விரைவில் 355 பேருக்கு ஆசிரிய நியமனம்! வட மாகாணத்தில் விரைவில் 355 பேருக்கு ஆசிரிய நியமனம்! Reviewed by Irumbu Thirai News on April 14, 2022 Rating: 5

பாடசாலை நேரத்தை அதிகரித்தல்: கல்வி அமைச்சுக்கு கடிதம் அனுப்பிய 16 தொழிற்சங்கங்கள்!

April 13, 2022


பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் அதிகரிப்பது தொடர்பான கல்வி அமைச்சின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 16 அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கல்வி அமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளன. 

 

மேலும் குறித்த முடிவை மீளப் பெறுமாறும் தொழிற்சங்க கூட்டமைப்பு குறித்த கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த கடிதத்தில் பின்வரும் விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

 

வரலாறு நெடுகிலும் அதிபர்கள் ஆசிரியர்கள் இரவு பகல் பாராது பல சிரமங்களுக்கு மத்தியிலும் எவ்வித மேலதிக கொடுப்பனவுமின்றி பணியாற்றி வந்துள்ளனர். 

 

அதுமாத்திரமன்றி கொரோனா காலப்பகுதியிலும் மாணவர்களின் நலன் கருதி பாடத்திட்டத்தை நிறைவு செய்வதற்கும் பரீட்சைகளை நடத்துவதற்கும் அரசின் எவ்வித அனுசரணையும் இல்லாத நிலையிலும் பல அர்ப்பணிப்புகளை மேற்கொண்டுள்ளனர். 

 

இந்நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைகளை கருத்தில் கொள்ளாது மாணவர்களையும் அதிபர்கள் ஆசிரியர்களையும் பல்வேறு சிரமங்களுக்குள் தள்ளும் வகையில் இவ்வாறான ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளதைக் கண்டிக்கிறோம். 

 

தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள், மின்சாரம் எரிவாயு, அத்தியாவசியப் பொருள் மற்றும் பொது போக்குவரத்து என்பவற்றில் காணப்படும் நெருக்கடி நிலைமை காரணமாக சாதாரண மக்களுக்கு தமது அன்றாட வாழ்வை கொண்டு செல்வதிலுள்ள சிரமத்தை நீங்கள் நன்கு அறிவீர்கள். 

 

அதேபோல் தற்போது காணப்படும் உணவுப் பொருள் தட்டுப்பாடு எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. 

 

இந்நிலையில் பொதுப் போக்குவரத்து நெருக்கடி நிலைமை காரணமாக மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தருவதில் சிக்கல் ஏற்படும். 

 

இவ்வாறான நிலைமையில் 07:30 - 02:30 வரை பாடசாலை நேரத்தை அதிகரிப்பது மாணவர்களைப் போல ஆசிரியர்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும். 

 

வரலாறு நெடுகிலும் அதிபர்கள் ஆசிரியர்கள் பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் தமது கடமைகளை செய்கின்றனர். அதே போல் இந்த நிலைமையிலும் செயற்படுவர். 

 

எனவே நேரத்தை அதிகரிக்கும் முடிவை மீளப்பெறுமாறு அதிபர் ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு என்ற வகையில் வேண்டுகோள் விடுக்கிறோம் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாடசாலை நேரத்தை அதிகரித்தல்: கல்வி அமைச்சுக்கு கடிதம் அனுப்பிய 16 தொழிற்சங்கங்கள்! பாடசாலை நேரத்தை அதிகரித்தல்: கல்வி அமைச்சுக்கு கடிதம் அனுப்பிய 16 தொழிற்சங்கங்கள்! Reviewed by Irumbu Thirai News on April 13, 2022 Rating: 5

12-04-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 12-04-2022.

April 13, 2022

12-04-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். (15ஆம் திகதி வெளியாக வேண்டிய வர்த்தமானி அறிவித்தல் தொடர் விடுமுறை காரணமாக 12ஆம் திகதி வெளியாகியுள்ளது)
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல... 
 
 
12-04-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 12-04-2022. 12-04-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 12-04-2022. Reviewed by Irumbu Thirai News on April 13, 2022 Rating: 5

08-04-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 08-04-2022.

April 13, 2022

08-04-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல....
 
 
 
08-04-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 08-04-2022. 08-04-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) /  Official Government Gazette Released on 08-04-2022. Reviewed by Irumbu Thirai News on April 13, 2022 Rating: 5

பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸினால் நடத்தப்படும் கட்டுரை போட்டி

April 13, 2022

பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸினால் அகில இலங்கை பல்கலைக்கழக இளம் பட்டதாரிகளுக்கிடையே கட்டுரை போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 
எழுத்தாளரின் பெயர், பல்கலைக்கழகம், பீடம், ஆண்டு என்பவற்றை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். 
 
வெற்றியாளர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். 
 
தெரிவு செய்யப்படும் ஆக்கங்கள் வருடாந்தம் 
 
வெளியிடப்படும் 'அல்இன்ஷிராஹ்' இதழில் பிரசுரமாகும். 
 
ஆக்கங்களை மின்னஞ்சல் மூலமோ அல்லது இணைய படிவத்தில் தரவேற்றுதன் மூலமோ அல்லது தபால் மூலமோ அனுப்பலாம். 
 
தலைப்புகள்(ஏதாவது ஒரு தலைப்பில் எழுத வேண்டும்): 
1) ஆன்மீகத்தை வலுவூட்டும் ரமழான். 
2) வாழ்க்கைக்கு வழிகாட்டும் பத்ர் போர். 
3) அல்லாஹ்விடத்தில் சிறந்தவர் தக்வாவில் சிறந்தவரே. 
4) அன்றைய மதீனாவின் ரமழானிய இரவொன்று. 

மொழி
தமிழ்மொழி மூலம் மாத்திரமே எழுதப்பட வேண்டும். 
 
சொற்கள்
1000 - 1250. 
 
மின்னஞ்சல் முகவரி: 
peramajlis@gmail.com 
 
இணைய படிவத்தில் பதிவேற்றுவதற்கான லிங்க்: 
 
முகவரி
Muslim Majlis. 
University of Peradeniya. 
Peradeniya. 
 
முடிவுத் திகதி: 
20-04-2022.
 
மேலதிக விபரங்களை கீழே காணலாம்.

பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸினால் நடத்தப்படும் கட்டுரை போட்டி பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸினால் நடத்தப்படும் கட்டுரை போட்டி Reviewed by Irumbu Thirai News on April 13, 2022 Rating: 5

இம்ரான் கான்: நம்பிக்கையில்லா பிரேரணையில் நடந்தது என்ன?

April 10, 2022

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. 
 
இந்த நம்பிக்கையில்லா பிரேரணையானது அரசியல் யாப்புக்கு முரணானது எனக் கூறி அந்நாட்டின் பிரதி சபாநாயகர் அதனை நிராகரித்தார். 
 
இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்வதாக இம்ரான்கான் அறிவித்தார். இவரின் இந்த பரிந்துரையை ஏற்று அந்நாட்டு ஜனாதிபதியும் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு உத்தரவிட்டார். 

இந்நிலையில் இது தொடர்பான வழக்கை கடந்த வியாழக்கிழமை விசாரித்த உயர் நீதிமன்றம் நம்பிக்கை இல்லா பிரேரணையை ரத்து செய்த பிரதி சபாநாயகரின் முடிவு செல்லாது எனவும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது எனவும் நம்பிக்கை இல்லா பிரேரணை மீண்டும் நடத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டது. 
 
இதனை தொடர்ந்து நேற்றைய தினம் நம்பிக்கையில்லா பிரேரணை நடைபெற்றது. இந்தப் பிரேரணை நிறைவேற்றுவதற்கு ஆகக்குறைந்தது 172 வாக்குகள் தேவை. 
 
இந்நிலையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் இம்ரான் கானுக்கு எதிராக 

174 வாக்குகள் கிடைத்துள்ளன. அந்த வகையில் அவர் தற்போது பிரதமர் பதவியை இழந்துள்ளார். 
 
எனவே தற்போது வேறு ஒரு பிரதமர் தெரிவு செய்யப்பட வேண்டும். அவர் 2023 ஒக்ரோபர் மாதம் நடைபெறும் தேர்தல் வரை பதவியில் இருப்பார். 
 
பாகிஸ்தானில் எந்தவொரு பிரதமரும் ஆட்சி காலம் முடியும் வரை பதவியில் இருந்ததில்லை. மேலும் நம்பிக்கை இல்லா பிரேரணை மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட பாகிஸ்தானின் முதலாவது பிரதமர் இம்ரான் கான் ஆவார். 
 
இம்ரான் கான்: நம்பிக்கையில்லா பிரேரணையில் நடந்தது என்ன? இம்ரான் கான்: நம்பிக்கையில்லா பிரேரணையில் நடந்தது என்ன? Reviewed by Irumbu Thirai News on April 10, 2022 Rating: 5
Powered by Blogger.