விரைவில் கல்வி அமைச்சினால் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் சிலருக்கான விண்ணப்பங்கள் கோரப்படும்


சில மாகாணங்களுக்குரிய மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கான விண்ணப்பங்கள் கல்வியமைச்சினால் மிக விரைவில் கோரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
தகவல் அறியும் சட்டத்திற்கமைய கோரப்பட்ட விடயங்களுக்கு கல்வியமைச்சு வழங்கிய பதிலிலேயே குறித்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 
 
அந்தவகையில் தெற்கு, கிழக்கு, ஊவா ஆகிய மாகாணங்களுக்குரிய கல்விப் பணிப்பாளர்களுக்கான விண்ணப்பங்களே இவ்வாறு கோரப்படவுள்ளன. 
 
இதற்கான அனுமதி அரசாங்க சேவை ஆணைக்குழுவின் கல்விச்சேவை குழுவினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பாக கல்வி அமைச்சினால் அனுப்பப்பட்ட பதில் கடிதத்தை கீழே காணலாம்.

 
விரைவில் கல்வி அமைச்சினால் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் சிலருக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் விரைவில் கல்வி அமைச்சினால் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் சிலருக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் Reviewed by Irumbu Thirai News on April 15, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.