விடைத்தாள் திருத்தும் பணியின் இரண்டாம் கட்டம் இடைநிறுத்தம்!

July 02, 2022


சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகளின் இரண்டாம் கட்டத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் L.M.D. தர்மசேன தெரிவித்துள்ளார்.

தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார். 


எரிபொருளை பெற்றுக் கொள்வதில் ஆசிரியர்கள் பல்வேறு அசௌகரிங்களுக்கு முகம் கொடுத்தமையினால் இந்த தீர்மானம் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மீண்டும் முறையான விதத்தில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் அமைந்தவுடன் விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்தார். இல்லாவிடின் ஆசிரியர்களை அசௌகரியங்களுக்கு உட்படுத்த முடியாது எனவும் தெரிவித்தார்.

விடைத்தாள் திருத்தும் பணியின் இரண்டாம் கட்டம் இடைநிறுத்தம்! விடைத்தாள் திருத்தும் பணியின் இரண்டாம் கட்டம் இடைநிறுத்தம்! Reviewed by Irumbu Thirai News on July 02, 2022 Rating: 5

22nd Amendment (Tamil, English & Sinhala) / 22ம் திருத்தம் (மும்மொழிகளிலும்)

July 02, 2022

The draft of the 22nd Amendment to the constitution announced through a Gazette notification. 

அரசியலமைப்புக்கான 22 ஆம் திருத்தத்திற்கான நகல், வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. 

Click the link below for Tamil Gazette. 

Click the link below for English Gazette. 

Click the link below for Sinhala Gazette.


To see other Gazettes...
 
22nd Amendment (Tamil, English & Sinhala) / 22ம் திருத்தம் (மும்மொழிகளிலும்) 22nd Amendment (Tamil, English & Sinhala) / 22ம் திருத்தம் (மும்மொழிகளிலும்) Reviewed by Irumbu Thirai News on July 02, 2022 Rating: 5

Indian Scholarship - 2022/2023

July 01, 2022


Indian Scholarship - 2022-2023 (Undergraduate/ Masters/ PhD)

Application are invited from eligible applicants for Undergraduate, Master and PhD.

 

Undergraduate (Ayurveda/ Unani/ Homeopathy/ Siddha/ Yoga)

Age: Below 22.

Ed. Qualifications: 


Qualified in G.C.E (A/L)

C Pass in O/L English

S Pass in A/L English.

Cl. Date: 07-07-2022.

More details about undergraduate click here: Undergraduate

 

Postgraduate - Master (Ayurveda/ Unani/ Siddha/ Homeopathy)

Age: Below 50.

Must have a relevant Bachelor's Degree.

Be employed in the public sector, a state university, or a state corporation.

IELTS minimum 6.00 or equant professional certificates.

Cl. Date: 07-07-2022.

More details about postgraduate(Master) click here: Master

 

Postgraduate - PhD (Ayurveda/ Unani/ Yoga)

Age: Below 50.

Must have a relevant Bachelor's Degree.

Be employed in the public sector, a state university, or a state corporation.

IELTS minimum 6.00 or equant professional certificates.

Cl. Date: 07-07-2022.

More details about postgraduate(PhD) click here: PhD

 

Click the link below for online Application.

Online Application 


Related:

Bachelor of Information Technology (BIT - External) - 2022 (University of Colombo)

Short course in Professional Certificate in Revit Architecture (Online) 

Postgraduate Diploma in Special Needs Education (The Open University of Sri Lanka)

 

Indian Scholarship - 2022/2023 Indian Scholarship - 2022/2023 Reviewed by Irumbu Thirai News on July 01, 2022 Rating: 5

இன்று (1) சுகாதார ஊழியர்களுக்கு பெற்றோல் வழங்கப்படும் இடங்கள்

July 01, 2022

இன்று(1) சுகாதார ஊழியர்களுக்கு பெட்ரோல் வழங்கப்படும் எரிபொருள் நிலையங்களின் விவரங்களை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ளது. 

ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் 6500 லிட்டர் விநியோகிக்கப்படுகிறது.



இன்று (1) சுகாதார ஊழியர்களுக்கு பெற்றோல் வழங்கப்படும் இடங்கள் இன்று (1) சுகாதார ஊழியர்களுக்கு பெற்றோல் வழங்கப்படும் இடங்கள் Reviewed by Irumbu Thirai News on July 01, 2022 Rating: 5

G.C.E. (A/L) Engineering Technology Practical Exam & Admission Download Link

June 29, 2022

உயர்தர பரீட்சை - 2021(2022) 

உயர்தர பரீட்சையின் பொறியியற் தொழில்நுட்பவியல் (Engineering Technology) பரீட்சை திகதி 2022-06-29 தொடக்கம் 2022-07-09 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

பாடசாலை பரீட்சார்த்திகளுக்கு அனுமதி அட்டைகள் பாடசாலைகளுக்கும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு அனுமதி அட்டைகள் தனிப்பட்ட முகவரிக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

மேலும் இணையத்தளத்தினூடாகவும் அனுமதி அட்டையை பதிவிறக்கம் செய்யலாம். 

அனுமதி அட்டையை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
 
பரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட அறிவித்தலை கீழே காணலாம்.
G.C.E. (A/L) Engineering Technology Practical Exam & Admission Download Link G.C.E. (A/L) Engineering Technology Practical Exam & Admission Download Link Reviewed by Irumbu Thirai News on June 29, 2022 Rating: 5

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் முக்கிய அறிவித்தல்கள் / Important Notices from The Open University of Sri Lanka

June 29, 2022


தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இலங்கை திறந்த பல்கலைக்கழகம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்களை இங்கே தருகிறோம்.

(01) ஜூலை 5, 6, 7 ஆகிய தினங்களில் நடைபெறவிருந்த பட்டமளிப்பு விழா மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.


 

(02) ஜூன் 29 முதல் ஜூலை 15 வரை நடைபெறவிருந்த பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன.


 


இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் முக்கிய அறிவித்தல்கள் / Important Notices from The Open University of Sri Lanka இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் முக்கிய அறிவித்தல்கள் / Important Notices from The Open University of Sri Lanka Reviewed by Irumbu Thirai News on June 29, 2022 Rating: 5

24-06-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 24-06-2022

June 28, 2022

24-06-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
குறிப்பு: தற்போதைய நிலையில் (28-6-2022: 11:15 PM) சிங்கள மொழி மூல வர்த்தமானி மாத்திரமே பதிவேற்றப்பட்டுள்ளது. ஆனால் தமிழ், சிங்களம் என்பவற்றுக்கான லிங்குகளையும் இங்கு தந்துள்ளோம். அரச அச்சக திணைக்களத்தால் பதிவேற்றம் செய்யப்பட்டதும் இந்த லிங்குகளில் சென்று பார்வையிடலாம். எனவே மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பாருங்கள். 

 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
 
24-06-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 24-06-2022 24-06-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 24-06-2022 Reviewed by Irumbu Thirai News on June 28, 2022 Rating: 5

27-06-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

June 28, 2022

27-06-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். இதில், பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...
 
27-06-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 27-06-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on June 28, 2022 Rating: 5

வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் - 2022/2023 (சப்பிரகமுவ மாகாணம்)

June 27, 2022

சப்பிரகமுவ மாகாணத்தில் உள்ள மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கான வருடாந்த இடமாற்றத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. வலயத்தினுள் அல்லது ஒரு வலயத்திலிருந்து இன்னொரு வலயத்திற்கு அல்லது வேறு மாகாணத்திற்கு அல்லது தேசிய பாடசாலைக்கு செல்வதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

மேற்படி 04 முறைகளிலும் விண்ணப்பிக்கும் ஆசிரியர் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

31-12-2022 ற்கு 5 வருடங்களை பூர்த்தி செய்த சகலரும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்காதவர்கள் சப்ரகமுவ மாகாணத்தில் எந்த இடத்திற்கும் இடமாற்றம் பெற்றுச் செல்ல விரும்புவதாக கருதப்படும்.

சகல விண்ணப்பங்களும் ஒன்லைன் முறையிலேயே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

Online இல் விண்ணப்பிக்கும்போது தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டால் கீழ்வரும் இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.


                    071-8111513. (அன்சப் - உதவிப் பணிப்பாளர்)

                    070-4001966. (WhatsApp)

                    072-2355681 (WhatsApp)

ஆசிரியர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இறுதி தினம்: 31-07-2022.

 

Online விண்ணப்பத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

Online Application 

 

அரச அலுவலகங்களுக்கு உத்தியோகத்தர்களை வரவழைப்பதை மட்டுப்படுத்துதல் தொடர்பான புதிய சுற்றறிக்கை (மும்மொழிகளிலும்)


இலங்கையின் எரிபொருள் நெருக்கடி: விரைந்து செயற்பட்ட அரச ஊழியர்! வீட்டில் இடம்பெற்ற பிரசவம்!


பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை! கல்வி அமைச்சின் புதிய அறிவித்தல்!

வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் - 2022/2023 (சப்பிரகமுவ மாகாணம்) வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் - 2022/2023 (சப்பிரகமுவ மாகாணம்) Reviewed by Irumbu Thirai News on June 27, 2022 Rating: 5

அரச அலுவலகங்களுக்கு உத்தியோகத்தர்களை வரவழைப்பதை மட்டுப்படுத்துதல் தொடர்பான புதிய சுற்றறிக்கை (மும்மொழிகளிலும்)

June 27, 2022


எரிபொருள் நெருக்கடி, போக்குவரத்து பிரச்சினை என்பவற்றின் காரணமாக அரச அலுவலகங்களுக்கு உத்தியோகத்தர்களை வரவழைப்பதை மட்டுப்படுத்தல் தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு மீண்டும் வெளியிட்டுள்ளது. 


16 / 2022 (1) இலக்கம் கொண்ட குறித்த சுற்றறிக்கை 26-06-2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த 17 - 6 - 2022 ஆம் திகதி 16/2022 இலக்கம் கொண்ட சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டிருந்தது. இந்த சுற்றறிக்கையை மறு அறிவித்தல் வரை பின்பற்றுமாறு கூறியே புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

ஏற்கனவே வெளியான சுற்றறிக்கையை இந்த லிங்கில் சென்று பார்வையிடலாம்.

https://www.irumbuthirainews.com/2022/06/blog-post_79.html 


ஏனெனில் ஏற்கனவே வெளியான சுற்றறிக்கையில் இரு வாரங்களுக்கே அரச ஊழியர்களை அலுவலகங்களுக்கு வரவழைப்பதை மட்டுப்படுத்துமாறு கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மறு அறிவித்தல் வரை அதை பின்பற்றுமாறு கூறப்பட்டுள்ளது.


எவ்வாறாயினும் அத்தியாவசிய சேவைகளுக்கு தடையில்லாத விதத்தில் ஆகக்குறைந்த ஊழியர்களை மட்டுமே அமைக்குமாறு கூறப்பட்டுள்ளது.

புதிதாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை மும்மொழிகளிலும் கீழே காணலாம்.



அரச அலுவலகங்களுக்கு உத்தியோகத்தர்களை வரவழைப்பதை மட்டுப்படுத்துதல் தொடர்பான புதிய சுற்றறிக்கை (மும்மொழிகளிலும்) அரச அலுவலகங்களுக்கு உத்தியோகத்தர்களை வரவழைப்பதை மட்டுப்படுத்துதல் தொடர்பான புதிய சுற்றறிக்கை (மும்மொழிகளிலும்) Reviewed by Irumbu Thirai News on June 27, 2022 Rating: 5

இலங்கையின் எரிபொருள் நெருக்கடி: விரைந்து செயற்பட்ட அரச ஊழியர்! வீட்டில் இடம்பெற்ற பிரசவம்!

June 26, 2022

இலங்கையில் தற்போது உக்கிரமடைந்துள்ள எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து பிரச்சனை என்பவற்றின் காரணமாக பல்வேறு துறைகளின் செயற்பாடுகளும் முடங்கும் நிலையை அடைந்துள்ளது. 

இந்நிலையில் நிக்கவெரட்டிய பிரதேசத்தில் வீட்டில் இடம்பெற்ற பிரசவம் பலரின் கவனத்தை திருப்பியுள்ளது. 
குறித்த கர்ப்பிணிக்கு சிசேரியன் செய்வதற்கான திகதி குறிக்கப்பட்டிருந்தது. அதற்கு இன்னும் நாட்கள் இருந்த நிலையில் இன்று அதிகாலை அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. 

அதிகாலை 05:10 மணியளவில் நிக்கவரட்டிய,  திவுல்லேகொட பிரதேசத்திற்கு பொறுப்பான குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தருக்கு இது தொடர்பில் தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டது. 

உடனடியாக விரைந்து செயற்பட்ட அந்த உத்தியோகத்தர் தனது இல்லத்திலிருந்து 03 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குறித்த கர்ப்பிணியின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் தனது கணவர் சகிதம் சென்றுள்ளார். தனது மோட்டார் சைக்கிளுக்கு போதியளவு எரிபொருள் இல்லாத நிலையிலும் அதையும் பொருட்படுத்தாது அவர் சென்றமை குறிப்பிடத்தக்கது. 

குறித்த கர்ப்பிணியின் வீட்டுக்கு சென்று வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். இது குறித்த தாயின் மூன்றாவது பிள்ளையாகும். 

அதன் பின்னர் வைத்தியசாலையில் அவர்களை அனுமதிப்பதற்காக 1990 சுவ செரிய நோயாளர் காவு வண்டியை வரவழைக்க பாரிய பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

குறித்த பிரதேசத்தில் அந்த நோயாளர் காவு வண்டியை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில், 
வேறு ஒரு பிரதேசத்திலிருந்து வரவழைக்கப்பட்டது.  

சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் அந்த நோயாளர் காவு வண்டி வந்து சேர்ந்ததும் தாயும் பிள்ளையும் குளியாப்பிட்டிய வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இது தொடர்பில் குடும்ப சுகாதார சேவை ஊழியர் சங்கத்தின் தலைவி தேவிகா கொடிதுவக்கு கூறுகையில், 

குடும்ப சுகாதார நல உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் அத்தியாவசியமாக காணப்படுகிறது. அவர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று பணியாற்ற வேண்டியுள்ளது. தாயையும் பிள்ளையையும் காப்பாற்றும் பொறுப்பு அவர்களுக்குள்ளது. எனவே அவர்களுக்கு உரிய முறையில் எரிபொருள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். 

சுகாதார சேவை ஊழியர்களுக்கு வரிசையில் நிற்காமல் எரிபொருள் வழங்குவதற்கு ஒரு சில இடங்களில் மக்களிடமிருந்து எதிர்ப்பும் வந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஆனால் அவர்களுக்கு எரிபொருள் கிடைக்காத பட்சத்தில் அது நோயாளிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை. 

எரிபொருள் பற்றாக்குறைக்கு மத்தியில் விரைந்து செயற்பட்டு, தனது கடமை உணர்வையும் மனிதாபிமானத்தையும் நிரூபித்து, குறித்த தாயையும் ப பிள்ளையையும் காப்பாற்ற நடவடிக்கை எடுத்த அந்த உத்தியோகத்தரை பலரும் பாராட்டி வருகின்றனர்.



இலங்கையின் எரிபொருள் நெருக்கடி: விரைந்து செயற்பட்ட அரச ஊழியர்! வீட்டில் இடம்பெற்ற பிரசவம்! இலங்கையின் எரிபொருள் நெருக்கடி: விரைந்து செயற்பட்ட அரச ஊழியர்! வீட்டில் இடம்பெற்ற பிரசவம்! Reviewed by Irumbu Thirai News on June 26, 2022 Rating: 5

பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை! கல்வி அமைச்சின் புதிய அறிவித்தல்!

June 26, 2022


மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் தேசிய பாடசாலை அதிபர்களுடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் பாடசாலைகளை நடத்துவது தொடர்பான புதிய அறிவித்தலை கல்வி அமைச்சு சற்று நேரத்துக்கு முன்னர் வெளியிட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து பிரச்சினை என்பவற்றைக் கருத்திற் கொண்டே புதிய தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கல்வி அமைச்சின் புதிய அறிவித்தலின்படி கடந்த வாரத்தை போன்று மேல் மாகாணம் கொழும்பு வலயத்தில் உள்ள சகல பாடசாலைகளும் மற்றும் நாட்டின் பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இந்த வாரம் மீண்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பிரதான நகர பாடசாலை தவிர்ந்த ஏனைய பாடசாலைகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு போக்குவரத்து பிரச்சனைகள் காணப்படாவிட்டால் மாத்திரம் செவ்வாய், புதன் வியாழன் ஆகிய மூன்று நாட்களில் மாத்திரம் பாடசாலை நடத்தப்பட வேண்டும்.

குறித்த கிராமிய பாடசாலைகளை நடாததுவது தொடர்பில் சிக்கல் நிலை இருந்தால் அது தொடர்பில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்கள் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக மாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தி பொருத்தமான முடிவை எடுக்கலாம்.

இதேவேளை நாளை திங்கட்கிழமை உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு தவணை பரீட்சை 

ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தால் அந்த பரிட்சைகளை இரண்டு வாரத்தில் பின்னர் நடத்தும் படியும் கல்வி அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளை பாடசாலை நடைபெறாவிட்டால் மாணவர்களுக்கு இணையவழி மூலம் கற்பித்தலை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். பாடசாலை நடைபெற்றும் போக்குவரத்து பிரச்சினை காரணமாக வரமுடியாத மாணவர்களுக்கும் இணையவழியில் கற்பித்தலை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை! கல்வி அமைச்சின் புதிய அறிவித்தல்! பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை! கல்வி அமைச்சின் புதிய அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on June 26, 2022 Rating: 5
Powered by Blogger.