கோதாபயவின் ராஜினாமா கடிதம் தொடர்பில் சபாநாயகர் விடுத்துள்ள அறிவிப்பு! (குறித்த அறிவித்தல் இணைப்பு)

July 14, 2022


இலங்கைக்கான சிங்கப்பூர் தூதுவர் அலுவலகத்தின் ஊடாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் ராஜினாமா கடிதம் சபாநாயகருக்கு கிடைக்க பெற்றுள்ளது. இதன் நம்பகத்தன்மை மீண்டும் பரீட்சிக்கப்படுவதுடன் இது தொடர்பான சட்ட நடைமுறைகள் முடிவடைந்ததன் பின்னர் நாளைய தினம் பதவி விலகல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என சபாநாயகரின் ஊடகப் பிரிவு  அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த ஊடக அறிவித்தலை கீழே காணலாம்.



கோதாபயவின் ராஜினாமா கடிதம் தொடர்பில் சபாநாயகர் விடுத்துள்ள அறிவிப்பு! (குறித்த அறிவித்தல் இணைப்பு) கோதாபயவின் ராஜினாமா கடிதம் தொடர்பில் சபாநாயகர் விடுத்துள்ள அறிவிப்பு! (குறித்த அறிவித்தல் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on July 14, 2022 Rating: 5

கோத்தாபய சிங்கப்பூர் சென்ற விமானம்: படைத்தது வரலாற்று சாதனை!

July 14, 2022


கோதாபய ராஜபக்ஷ மாலைதீவிலிருந்து சிங்கப்பூருக்கு சென்ற விமானம் வரலாற்று சாதனை படைத்துள்ளது. அதாவது உலகில் அதிகமான நபர்களால் கண்காணிக்கப்பட்ட விமானம் என்ற சாதனையை படைத்துள்ளது. 


விமானங்களின் கண்காணிப்பு தொடர்பான தகவல்களை வழங்கும் இணையத்தளமான Flightradar24.com  என்ற தளத்தின் தகவல்களின்படி மாலைதீவின் மாலேயிலிருந்து சிங்கப்பூர் நோக்கி புறப்பட்ட சவுதி அரேபியாவுக்கு சொந்தமான Saudia SV- 788  என்ற விமானம் 12,200 ற்கும் அதிகமான பேரால் கண்காணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் உலகின் கவனத்தையே திருப்பியுள்ளது என்பதற்கு இந்த விடயம் நல்ல சான்று என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


இதே வேளை கோதாபய ராஜபக்ச சென்ற விமானம் சிங்கப்பூர் நேரப்படி இரவு 7.17 க்கு தரையிறங்கியுள்ளது. 


இதேவேளை கோதாபயவின் வருகை தொடர்பில் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில்,


கோட்டாபய தனிப்பட்ட பயணமாகவே சிங்கப்பூர் வருகை தந்துள்ளார். அவர் எவ்வித அரசியல் தஞ்சமோ புகழிடமோ கோரவில்லை. அவ்வாறு அரசியல் புகழிடம் சிங்கப்பூரால் பொதுவாக வழங்கப்படுவதும் இல்லை. அவர் சிங்கப்பூரில் எவ்வளவு காலம் தங்குவார் என தெரியவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோத்தாபய சிங்கப்பூர் சென்ற விமானம்: படைத்தது வரலாற்று சாதனை! கோத்தாபய சிங்கப்பூர் சென்ற விமானம்: படைத்தது வரலாற்று சாதனை! Reviewed by Irumbu Thirai News on July 14, 2022 Rating: 5

60 தோட்டாக்களுடன் ராணுவ வீரரின் துப்பாக்கியை காணவில்லை! இன்னும் மாலைதீவை விட்டு செல்லாத ஜனாதிபதி! இலங்கையில் தொடரும் பரபரப்பு!

July 14, 2022


நேற்றிரவு பத்தரமுல்ல பொல்துவ சந்திக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த பலர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் இதில் ராணுவ வீரர் ஒருவரும் போலீஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அடங்குவதாக போலீஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.


இதில் பலத்த காயங்களுக்கு உள்ளான போலீஸ் அதிகாரி கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து நாரஹேண்பிட்ட போலீஸ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


மேலும் இதன் போது வெல்லவாய ராணுவ முகாமில் கடமையாற்றும் ராணுவ வீரர் ஒருவரின் துப்பாக்கியானது 60 தோட்டாக்களுடன் ஆர்ப்பாட்டக்காரர்களால் பறித்தெடுக்கப்பட்டுள்ளது. 


கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தகவல்களின்படி, நேற்று பல்வேறு இடங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் காயமடைந்த 79 ஆண்களும் 05 பெண்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதே வேலை சிங்கப்பூர் சென்றதும் ராஜினாமா கடிதத்தை அனுப்புவதாக கோதாபய ராஜபக்ஷ தெரிவித்ததாக செய்திகள் வெளியானாலும் இன்னமும் அவர் மாலைதீவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 


கோத்தாபயவிற்கு பாதுகாப்பு வழங்கி அடைக்கலம் கொடுத்தமைக்கு மாலைதீவின் எதிர்க்கட்சி ஆளும் கட்சியை வன்மையாக கண்டித்துள்ளது. 


மேலும் கோதாபையவை மாலை தீவில் இருந்து உடனடியாக வெளியேற்றுமாறு கோரி மாலைதீவில் உள்ள இலங்கையர்கள் அங்குள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். இதன் போது இருவர் கைது செய்யப்பட்டனர். 


நேற்றைய தினம் மாலைதீவிலிருந்து சிங்கப்பூர் செல்வதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் மாலைதீவின் வேலானா சர்வதேச விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தாலும் சிங்கப்பூர் செல்லும் இரு விமானங்களை நிராகரித்து அதில் செல்லாமல் அங்கேயே தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 


இதேவேளை இலங்கையில் நாடு பூராகவும் போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று அதிகாலை ஐந்து மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.


இலங்கையின் ஒவ்வொரு நிமிடமும் பலத்த எதிர்பார்ப்புகளுக்கும் சவால்களுக்கும் மத்தியில் நகருகிறது. சரியான முடிவுகள் எடுக்கப்பட்டு அமைதியான நிலைமை திரும்ப வேண்டும் என்பதே சகலரினதும் பிரார்த்தனையாகும்.

60 தோட்டாக்களுடன் ராணுவ வீரரின் துப்பாக்கியை காணவில்லை! இன்னும் மாலைதீவை விட்டு செல்லாத ஜனாதிபதி! இலங்கையில் தொடரும் பரபரப்பு! 60 தோட்டாக்களுடன் ராணுவ வீரரின் துப்பாக்கியை காணவில்லை! இன்னும் மாலைதீவை விட்டு செல்லாத ஜனாதிபதி! இலங்கையில் தொடரும் பரபரப்பு! Reviewed by Irumbu Thirai News on July 14, 2022 Rating: 5

வர்த்தமானியும் வெளியானது! நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு! கடும் பரபரப்புக்கு மத்தியில் இலங்கை!

July 13, 2022


பிரதமர் ரனில் விக்ரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக நியமித்து அதிவிஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. கோதாபய ராஜபக்சவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

தான் வெளிநாட்டில் இருப்பதால் தனது கடமைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் இருப்பதாலும் எனவே வெளிநாட்டில் இருக்கும் காலம் வரை தனது கடமைகளை நிறைவேற்றும் பொருட்டு தற்போதைய பிரதமர் ரனில் விக்ரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக நியமிக்கிறேன் என அந்த விஷேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை மாலைதீவிற்கு சென்ற கோத்தாபய ராஜபக்ஷ அங்கிருந்து சிங்கப்பூர் செல்வதாகவும் சிங்கப்பூரை சென்றடைந்ததும் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்புவார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இன்றைய தினம் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவிக்கையில் இன்றைய தினத்திற்குள் ஜனாதிபதியின்  ராஜினாமா கடிதம் கிடைக்காவிட்டால் தான் சபாநாயகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். 

இதேவேளை கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் அந்தக் கூட்டத்திற்கு சமூகமளிக்க முன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர். அந்த சந்திப்பின்போது அவர்களும் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகும் படி கூறியுள்ளனர். பின்னர் அவர்கள் கூட்டத்திற்கு வருகை தந்தனர் ஆனால் ரணில் விக்ரமசிங்க வரவில்லை. தற்போதைய நிலையில் பாராளுமன்றத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் அண்மித்துள்ளதாகவும் அவர்கள் பாராளுமன்றத்தை சுற்றி வளைத்துள்ளதாகவும் எனவே பாராளுமன்றத்திற்கு தாக்குதல்கள் நடத்தப்பட்டால் மீண்டும் பதில் தாக்குதல் நடத்துவதற்கு அனுமதி தருமாறு கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அந்தக் கோரிக்கை கட்சி தலைவர்களினால் நிராகரிக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

இது மாத்திரமின்றி அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நபர் ஒருவரை பிரதமராக பெயரிடுமாறு தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சபாநாயகருக்கு அறிவித்துள்ளார். சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் வகையிலேயே இவ்வாறு பிரதமர் ஒருவரை பெயரிடுமாறு அவர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை கடந்த 9ம் தேதி கூட்டத்தின் போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆளும் கட்சியை சேர்ந்தவரும் பலராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதாக கருதப்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். அதாவது ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும். சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்க வேண்டும் என்பதே கடந்த 9ம் திகதி நடைபெற்ற கட்சி தலைவர்களின் அவசர கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் ஆகும்.

இது மாத்திரமன்றி தற்போது புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் காணப்படும் பிரதமரின் காரியாலயம் உடனடியாக ஆர்ப்பாட்டக்காரர்களால் விடுவிக்கப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கு தாம் எப்போதும் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஆனால் அரச அலுவலகங்களை கைப்பற்றி சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ரணில் விக்ரமசிங்க உடனடியாக ராஜினாமா செய்து சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு வழி ஏற்படுத்த வேண்டும். மேலும் நாட்டின் நிர்வாகத்தை சபாநாயகருக்கு பொறுப்பு கொடுக்க வேண்டும். கடந்த ஒன்பதாம் தேதி ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய செயல்பட வேண்டும் என அரசாங்கத்திலிருந்து அண்மையில் விலகி சுயாதீனமாக செயல்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பு கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளது.

இது மாத்திரமன்றி தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவிக்கையில் தற்போதைய நெருக்கடியான நிலைமைக்கு பாராளுமன்றத்தால் தீர்வு காண முடியும். எனவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் பாராளுமன்றத்தையோ சபாநாயகரின் இல்லத்தையோ முற்றுகையிடுவதை தவிர்க்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சற்று நேரத்திற்கு முன் சபாநாயகரின் உத்தியோபூர்வ இல்லத்திற்கு அண்மையிலும் போராட்டக்காரர்கள் கூடியமையால் அங்கு கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டு கடும் பதற்ற நிலை தோன்றியது.

இதேவேளை மேல் மாகாணத்திற்கு மாத்திரம் போடப்பட்டிருந்த ஊரடங்கு தற்போது நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை அதிகாலை 5 மணி வரை இந்த ஊரடங்கு உத்தரவு முழு நாட்டிற்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பதில் ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவினால் இந்த ஊரடங்கு உத்தரவுக்கான அதிவிசேட வர்த்தமானி சற்று நேரத்திற்கு முன் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் ஒவ்வொரு நிமிடமும் கடும் பரபரப்புக்கு மத்தியிலும் போராட்டங்களுக்கு மத்தியிலும் கழிகின்றது. நல்ல முடிவுகள் எட்டப்பட்டு சுமூகமான நிலை உருவாக வேண்டும் என்பதே அனைவரினதும் பிரார்த்தனையாகும்.

வர்த்தமானியும் வெளியானது! நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு! கடும் பரபரப்புக்கு மத்தியில் இலங்கை! வர்த்தமானியும் வெளியானது! நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு! கடும் பரபரப்புக்கு மத்தியில் இலங்கை! Reviewed by Irumbu Thirai News on July 13, 2022 Rating: 5

ஜனாதிபதி மாலைதீவுக்கு சென்றமை தொடர்பில் விமானப்படை வெளியிட்ட அறிக்கை! (விமானப்படையின் அறிக்கை இணைப்பு)

July 13, 2022

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மாலைதீவுக்கு சென்றமை தொடர்பில் இலங்கை விமானப்படை அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

அந்த அறிக்கையில், 

ஜனாதிபதியும் அவரது மனைவியும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இலங்கை விமானப்படைக்கு சொந்தமான AN 32 வகையைச் சேர்ந்த விமானத்தை வழங்கியமை இலங்கையின் அரசியல் யாப்பிற்கு உட்பட்ட விடயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் குறித்த விமானம் பாதுகாப்பு அமைச்சின் பூரண அனுமதிக்கு உட்பட்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு உரித்தான குடிவரவு குடியகல்வு மற்றும் சுங்க சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டே விமான நிலையத்திலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை அந்த விமானத்தில் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷ மேலும் இரு பாதுகாப்பு அதிகாரிகளும் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியமையை பிரதமர் அலுவலகமும் உறுதிப்படுத்தியுள்ளது. 

ஜனாதிபதி பதவி விலகியதை சபாநாயகர் உத்தியோபூர்வமாக அறிவித்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

அதாவது தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிக ஜனாதிபதியாகப் பதவியேற்பதா? அல்லது சபாநாயகர் தற்காலிக ஜனாதிபதியாக பதவி ஏற்பதா என்பது தொடர்பில் இதுவரை தீர்க்கமான முடிவு எட்டப்படவில்லை. 

எவ்வாறாயினும் பிரதமர் ரனில் விக்ரமசிங்கவை தற்காலிக ஜனாதிபதியாக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ஆனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கமும் பதவி விலக வேண்டும் என்று புரட்சியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் அடுத்த கட்ட ஒவ்வொரு நகர்வையும் முழு உலகமும் அவதானித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் சகலரினதும் எதிர்பார்ப்பு நாட்டுக்கு நல்ல முடிவுகள் எட்டப்பட வேண்டும் என்பதே!

விமானப்படை வெளியிட்ட அறிக்கையை கீழே காணலாம்.



ஜனாதிபதி மாலைதீவுக்கு சென்றமை தொடர்பில் விமானப்படை வெளியிட்ட அறிக்கை! (விமானப்படையின் அறிக்கை இணைப்பு) ஜனாதிபதி மாலைதீவுக்கு சென்றமை தொடர்பில் விமானப்படை வெளியிட்ட அறிக்கை! (விமானப்படையின் அறிக்கை இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on July 13, 2022 Rating: 5

ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு வெளியானது!

July 09, 2022

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்த ஒரு தீர்மானத்திற்கும் தான் உடன்படுவதாக ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இந்த விடயத்தை ஜனாதிபதி தன்னிடம் தெரிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

முன்னதாக கட்சித் தலைவர்களுக்கான அவசர கூட்டத்தை நடத்துமாறும் பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதியின் உத்தியோக வாசஸ்தலம் என்பவற்றுக்குள் பொதுமக்கள் நுழைந்து அவற்றை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த நிலையிலேயே பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

இதேவேளை கடற்படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்களில் முக்கிய தரப்பினர் சிலர் கொழும்பு துறைமுகத்தில் இருந்து சென்றுள்ளதாக துறைமுக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் சில கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அவசரமாக செல்லும் வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளத்தில் இப்போது வேகமாக பரவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு வெளியானது! ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு வெளியானது! Reviewed by Irumbu Thirai News on July 09, 2022 Rating: 5

Annual Teacher Transfer - 2023 (Central Province) / வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் - 2023 (மத்திய மாகாணம்)

July 08, 2022

Applications are invited to a annual Teacher Transfer in the Central Province for 2023. 
 
மத்திய மாகாணத்திற்குட்பட்ட பாடசாலைகளில் சேவை புரியும் ஆசிரியர்களிடமிருந்து 2023 ஆம் வருடத்திற்கான ஆசிரியர் சேவை இடமாற்றங்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. 
 
வலயத்தினுள் இடமாற்றம் மற்றும் வலயங்களுக்கிடையிலான இடமாற்றங்களுக்கு இணையதளத்தின் ஊடாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 

மாகாணங்களுக்கிடையிலான இடமாற்றம் மற்றும் தேசிய பாடசாலைக்கான இடமாற்றம் என்பவற்றிற்கு மத்திய மாகாண கல்வி திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தியுள்ள புதிய விண்ணப்ப படிவத்தை மட்டுமே பயன்படுத்தவும். இதை வலயக் கல்வி காரியாலயங்களில் பெறலாம். 
 
சப்பிரகமுவ மாகாணத்திலும் ஆசிரியர் இடமாற்றத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதன் விபரம் மற்றும் விண்ணப்பத்தை கீழுள்ள லிங்கில் சென்று பார்வையிடலாம்.
 
 
வேறு மாகாணத்தின் மாகாண பாடசாலைகளுக்கு செல்வதாயின் 5 விண்ணப்பங்களும் மாகாண பாடசாலையிலிருந்து தேசிய பாடசாலைக்கு செல்வதாயின் 5 விண்ணப்பங்களும் சமர்ப்பிக்க வேண்டும். 
 
தேவை கருதியும் நியமன கடிதத்தின் நிபந்தனைகள் பூர்த்தி செய்வதற்காகவும் வேறு கல்வி வலயத்தில் உள்ள கஷ்ட பிரதேச பாடசாலைக்கு தங்களை பதவியில் அமர்த்த முடியும். 
 
ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக இடமாற்றம் பெற்ற ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பாக விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள். 
 
வேறு மாகாணத்திற்கு இடமாற்றம் கோருவதாயின் மத்திய மாகாணத்தில் குறைந்தபட்சம் 5 வருடங்கள் சேவையை பூர்த்தி செய்திருத்தலுடன் நிரந்தரமாக்கப்பட்டிருத்தலும் அவசியமாகும். 
 
விண்ணப்ப முடிவு திகதி: 30-07-2022. 
 
Online விண்ணப்பத்திற்கு கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
இது தொடர்பான பத்திரிகை அறிவித்தலை கீழே காணலாம். 
 

Annual Teacher Transfer - 2023 (Central Province) / வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் - 2023 (மத்திய மாகாணம்) Annual Teacher Transfer - 2023 (Central Province) / வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் - 2023 (மத்திய மாகாணம்) Reviewed by Irumbu Thirai News on July 08, 2022 Rating: 5

08-07-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 08-07-2022

July 07, 2022

08-07-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
குறிப்பு: தற்போதைய நிலையில் (07-07-2022: 11:30 PM) தமிழ் மொழி மூல வர்த்தமானி மாத்திரமே பதிவேற்றப்பட்டுள்ளது. ஆனால் ஆங்கிலம், சிங்களம் என்பவற்றுக்கான லிங்குகளையும் இங்கு தந்துள்ளோம். அரச அச்சக திணைக்களத்தால் பதிவேற்றம் செய்யப்பட்டதும் இந்த லிங்குகளில் சென்று பார்வையிடலாம். எனவே மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பாருங்கள். 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
 
 
08-07-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 08-07-2022 08-07-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 08-07-2022 Reviewed by Irumbu Thirai News on July 07, 2022 Rating: 5

01-07-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 01-07-2022

July 07, 2022

01-07-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
குறிப்பு: தற்போதைய நிலையில் (07-07-2022: 11:15 PM) தமிழ் மொழி மூல வர்த்தமானி மாத்திரமே பதிவேற்றப்பட்டுள்ளது. ஆனால் ஆங்கிலம், சிங்களம் என்பவற்றுக்கான லிங்குகளையும் இங்கு தந்துள்ளோம். அரச அச்சக திணைக்களத்தால் பதிவேற்றம் செய்யப்பட்டதும் இந்த லிங்குகளில் சென்று பார்வையிடலாம். எனவே மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பாருங்கள். 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
 
 
01-07-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 01-07-2022 01-07-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 01-07-2022 Reviewed by Irumbu Thirai News on July 07, 2022 Rating: 5

புதிய வகையான முகக் கவசம் கண்டுபிடிப்பு!

July 07, 2022


புதிய வகையான N95 முகக் கவசத்தை அமெரிக்காவின் ரென்சீலர் பொலிடெக்னிக் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

இந்த முக கவசமானது கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி அதை அழிக்கவும் செய்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட முகக் கவசத்தால் வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் அது அழிக்கப்படவில்லை. 


இந்த புதிய முக கவசத்தை நீண்ட காலம் பாவிக்கலாம். மேலும் காற்றின் மூலம் பொதுவாக பரவக்கூடிய கிருமிகளில் இருந்தும் பாதுகாப்பு வழங்குகிறது. 


ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள N95 முகக் கவசத்தில் காணப்படும் வடிகட்டுவதற்காக உள்ள அடுக்குகள் இரசாயண செயற்பாடுகளால் பாதிப்படைய கூடியவை. ஆனால் இந்த முக கவசத்தின் அடுக்குகள் பாலிபுரப்பலின் நார்கள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால் அவை வைரஸ் மற்றும் பாக்டீரியாவின் செல் சுவரை பாதிப்படையச் செய்து அவற்றை அழிக்கவும் செய்கின்றது.


புதிய வகையான முகக் கவசம் கண்டுபிடிப்பு! புதிய வகையான முகக் கவசம் கண்டுபிடிப்பு! Reviewed by Irumbu Thirai News on July 07, 2022 Rating: 5

Short course in Professional web development using Joomla and WordPress

July 06, 2022

The Open University of Sri Lanka 
 
Short course in Professional web development using Joomla and WordPress 
 
Duration: 03 Months. 
 
Medium: English/Sinhala 
 
Course fee: Rs. 25,000 /= (Per head) 
 
Closing Date: 15th July 2022.
 
Click the link below for online application:

Click the link below for full details:
 
 
Related:

 

 
 
Short course in Professional web development using Joomla and WordPress Short course in Professional web development using Joomla and WordPress Reviewed by Irumbu Thirai News on July 06, 2022 Rating: 5

04-07-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

July 05, 2022

04-07-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். இதில், பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...
 
04-07-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 04-07-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on July 05, 2022 Rating: 5

ஆசிரியர் சேவைக்குள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்தல்: கல்வி அமைச்சரின் அறிவிப்பு!

July 04, 2022


அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இருக்கும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் இணைப்பதற்கு தடையாக உள்ள வயது வரம்பை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 


அரச சேவைக்குள் இணைத்துக் கொள்வதற்கான உச்ச வயதெல்லை 45 ஆகும். ஆனால் ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக் கொள்வதற்கான உச்ச வயதெல்லை 35 ஆகும். 


எனவே இந்த 35 வயதெல்லையை நீக்கி அவர்களை ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சு தயாராக உள்ளது. 


ஆனால் இது தொடர்பில் தொழிற்சங்கங்களோடு கலந்துரையாடியே முடிவெடுக்கப்படும். தொழிற்சங்கங்களின் இணக்கம் இருந்தாலே இந்த வயது தொடர்பான நியதி நீக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

ஆசிரியர் சேவைக்குள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்தல்: கல்வி அமைச்சரின் அறிவிப்பு! ஆசிரியர் சேவைக்குள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்தல்: கல்வி அமைச்சரின் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on July 04, 2022 Rating: 5
Powered by Blogger.