ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு வெளியானது!


பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்த ஒரு தீர்மானத்திற்கும் தான் உடன்படுவதாக ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இந்த விடயத்தை ஜனாதிபதி தன்னிடம் தெரிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

முன்னதாக கட்சித் தலைவர்களுக்கான அவசர கூட்டத்தை நடத்துமாறும் பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதியின் உத்தியோக வாசஸ்தலம் என்பவற்றுக்குள் பொதுமக்கள் நுழைந்து அவற்றை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த நிலையிலேயே பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

இதேவேளை கடற்படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்களில் முக்கிய தரப்பினர் சிலர் கொழும்பு துறைமுகத்தில் இருந்து சென்றுள்ளதாக துறைமுக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் சில கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அவசரமாக செல்லும் வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளத்தில் இப்போது வேகமாக பரவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு வெளியானது! ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு வெளியானது! Reviewed by Irumbu Thirai News on July 09, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.