ஆசிரியர் சேவைக்குள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்தல்: கல்வி அமைச்சரின் அறிவிப்பு!


அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இருக்கும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் இணைப்பதற்கு தடையாக உள்ள வயது வரம்பை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 


அரச சேவைக்குள் இணைத்துக் கொள்வதற்கான உச்ச வயதெல்லை 45 ஆகும். ஆனால் ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக் கொள்வதற்கான உச்ச வயதெல்லை 35 ஆகும். 


எனவே இந்த 35 வயதெல்லையை நீக்கி அவர்களை ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சு தயாராக உள்ளது. 


ஆனால் இது தொடர்பில் தொழிற்சங்கங்களோடு கலந்துரையாடியே முடிவெடுக்கப்படும். தொழிற்சங்கங்களின் இணக்கம் இருந்தாலே இந்த வயது தொடர்பான நியதி நீக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

ஆசிரியர் சேவைக்குள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்தல்: கல்வி அமைச்சரின் அறிவிப்பு! ஆசிரியர் சேவைக்குள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்தல்: கல்வி அமைச்சரின் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on July 04, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.