விடைத்தாள் திருத்தும் பணியின் இரண்டாம் கட்டம் இடைநிறுத்தம்!


சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகளின் இரண்டாம் கட்டத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் L.M.D. தர்மசேன தெரிவித்துள்ளார்.

தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார். 


எரிபொருளை பெற்றுக் கொள்வதில் ஆசிரியர்கள் பல்வேறு அசௌகரிங்களுக்கு முகம் கொடுத்தமையினால் இந்த தீர்மானம் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மீண்டும் முறையான விதத்தில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் அமைந்தவுடன் விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்தார். இல்லாவிடின் ஆசிரியர்களை அசௌகரியங்களுக்கு உட்படுத்த முடியாது எனவும் தெரிவித்தார்.

விடைத்தாள் திருத்தும் பணியின் இரண்டாம் கட்டம் இடைநிறுத்தம்! விடைத்தாள் திருத்தும் பணியின் இரண்டாம் கட்டம் இடைநிறுத்தம்! Reviewed by Irumbu Thirai News on July 02, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.