கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் தொடர்பில் வெளியான ஆய்வு

December 19, 2020

கொரோனா தொற்றுள்ள கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் அதற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது. 
இது தொடர்பில் சிங்கப்பூரில் 
நடத்தப்பட்ட ஆய்விலேயே இவ்விடயம் வெளியாகியுள்ளது. 
தாயிடமிருந்து பிள்ளைக்கு வைரஸ் கடத்தப்படுவதற்கு இதுவரை எவ்வித ஆதாரமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் தொடர்பில் வெளியான ஆய்வு கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் தொடர்பில் வெளியான ஆய்வு Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

8 லட்சம் வழக்குகள் நிலுவை... 15 வருடங்கள் தேவை...

December 19, 2020

இலங்கை நீதிமன்றங்களில் சுமார் 8 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் இவற்றை விசாரணைக்கு எடுக்க மேலும் 15 வருடங்கள் தேவைப்படும் எனவும் நீதி அமைச்சின் செயலாளர் எம். எம். பீ. கே. மாயாதுன்னே தெரிவித்துள்ளார். 
எனவே இந்த விசாரணைகளை துரிதப்படுத்துவதற்காக 
நீதிமன்றங்கள் மற்றும் நீதவான்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 
இதேவேளை சிறைச்சாலை நெருக்கடிகளை தவிர்க்கும் வகையில் சுமார் 8 ஆயிரம் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 லட்சம் வழக்குகள் நிலுவை... 15 வருடங்கள் தேவை... 8 லட்சம் வழக்குகள் நிலுவை... 15 வருடங்கள் தேவை...  Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

போலீசாருக்கு எதிராக இந்த வருடத்தில் மாத்திரம் 2400 முறைப்பாடுகள்..

December 19, 2020

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் போலீசாருக்கு எதிராக 2400 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 
இதில் 51 வீதமான முறைப்பாடுகளுக்கு தீர்வு பெற்று கொடுக்கப்பட்டுள்ளதாக இந்த ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 
கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் பெரும்பாலானவை போலீசார் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டமை மற்றும் உரிய நடவடிக்கைகளை எடுக்காமை தொடர்பானது என அவர் தெரிவித்தார்.
போலீசாருக்கு எதிராக இந்த வருடத்தில் மாத்திரம் 2400 முறைப்பாடுகள்.. போலீசாருக்கு எதிராக இந்த வருடத்தில் மாத்திரம் 2400 முறைப்பாடுகள்.. Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு இன்றும் செய்யப்பட்ட பரிசோதனை:

December 19, 2020

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு Rapid Antigen பரிசோதனை நேற்றைய தினத்தை போன்று இன்றும் நடைபெற்றது. 
கொழும்பு-புத்தளம் வீதியில் கொச்சிக்கடை பிரதேசத்திலும், ஹைலெவல் வீதியில் சாலாவ பிரதேசத்திலும் கொழும்பு - கண்டி வீதியில் நிட்டம்புவ பிரதேசத்திலுமாக மூன்று இடங்களில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 
இன்று எழுமாறாக 750 பேரில் செய்த பரிசோதனைகளில் 
ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். 
இதேவேளை நேற்று முதல் நாள் செய்யப்பட்ட 451 பரிசோதனைகளில் 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு இன்றும் செய்யப்பட்ட பரிசோதனை: மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு இன்றும் செய்யப்பட்ட பரிசோதனை: Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

கொரோனா ஜனாஸா விவகாரம்... ஜனாதிபதியை சந்திக்கும் முஸ்லிம் காங்கிரஸ்...

December 19, 2020

கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களது ஜனாஸாக்களை எரிக்கும் தீர்மானத்தை கைவிட வலியுறுத்தும் நோக்கில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்க விருப்பதாக நம்பகமாக தெரிய வருகிறது. 
ஏற்கனவே இது தொடர்பில் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த சாதகமான தீர்மானமும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா ஜனாஸா விவகாரம்... ஜனாதிபதியை சந்திக்கும் முஸ்லிம் காங்கிரஸ்... கொரோனா ஜனாஸா விவகாரம்... ஜனாதிபதியை சந்திக்கும் முஸ்லிம் காங்கிரஸ்... Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

வெளியாகின கொரோனா தடுப்பூசிகளின் விலைகள்...

December 19, 2020


Covid - 19 ற்காக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகளின் விலைகள் வெளியாகியுள்ளன. 

இதேவேளை அமெரிக்கா பிரித்தானியா கனடா போன்ற நாடுகள் ஏற்கனவே பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் தடுப்பூசி வழங்கும் திட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசிகளையும் அதன் விலையும் கீழே தருகிறோம்.

(1) பிரித்தானியாவின் அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசி - 1.78 யூரோ (ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் அதை விற்பனை செய்யும் விலை 8.50 அமெரிக்க டொலர்கள்)

(2) செனோஃபி- க்ளக்ஸோ ஸ்மித்கிளைன் தடுப்பூசி - 7.56 யூரோ.

(3) கியாவக் தடுப்பூசி - 10 யூரோ.

(4) பைசர் - பயோ என் டெக் தடுப்பூசி - 12 யூரோ.

(5) அமெரிக்காவின் மொடர்னா தடுப்பூசி  - 18 யூரோ.

அந்த வகையில் அதிக விலை கொண்ட மொடர்னா தடுப்பூசியின் இலங்கை பெறுமதி ரூபா 3420 ஆகும்.

வெளியாகின கொரோனா தடுப்பூசிகளின் விலைகள்... வெளியாகின கொரோனா தடுப்பூசிகளின் விலைகள்... Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

Online மூலம் எப்பொழுதும் மாணவர்களால் கற்க முடியாது - சுகாதார பணியக பிரதி பணிப்பாளர்

December 19, 2020

ஒன்லைன் (Online) கல்வி மூலம் எப்பொழுதும் மாணவர்களால் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. மாணவர்கள் உடல் ரீதியிலான செயற்பாட்டுடன் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதே சிறந்ததாகும். இதேபோன்று மற்ற மாணவர்களுடன் பிள்ளைகள் பழக வேண்டும் இவ்வாறான நடைமுறைகள் முக்கியமானதாகும். செயல்முறையிலான கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளை திறப்பது முக்கியமானதாகும் என சுகாதார பணியகத்தின் பிரதி பணிப்பாளர் திருமதி. சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார். 
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
அவர் மேலும் தெரிவிக்கையில், 
இதேபோன்று பிள்ளைகளின் போக்குவரத்து விடயத்திலும் பெற்றோர் உரிய கவனம் செலுத்த வேண்டும். அது சுகாதார பாதுகாப்பு முறைகளுக்கு உட்பட்டதாக இருப்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் வீடுகளுக்கு வந்த பின்னர் பெற்றோர் அவர்களை முறையான சுகாதார நடைமுறைகளுக்கு அமைய அவர்களது உடல் சுத்தத்தை பேணி வீடுகளுக்குள் அழைப்பதில் பெற்றோர் பொறுப்பாக செயற்படவேண்டும். 
இதேபோன்று பாடசாலை கென்டின் திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு தேவையான உணவுகளை பெற்றோர் வீடுகளிலேயே தயாரித்து வழங்குவது முக்கியமானதாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Online மூலம் எப்பொழுதும் மாணவர்களால் கற்க முடியாது - சுகாதார பணியக பிரதி பணிப்பாளர் Online மூலம் எப்பொழுதும் மாணவர்களால் கற்க முடியாது - சுகாதார பணியக பிரதி பணிப்பாளர் Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

Facebook உள்ளிட்ட சமூக ஊடகங்களைப் பாவித்தால் பதிவு செய்ய வேண்டும் - அமைச்சர் கெஹெலிய

December 19, 2020

சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் மத்தியில் சுயக்கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்காக நாட்டில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்யும் விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். 
ஊடகங்களை ஒழுங்குறுத்தும் நடவடிக்கை ஒன்று இருப்பதாக அறிகின்றோம் என ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், 
சமூக ஊடகங்கள் மூலமாக ஏற்பட்டுள்ள பாரிய முரண்பாடு மற்றும் வேறுபாடுகள் காரணமான அவற்றின் செயற்பாடுகள் தொடர்பில் கட்டுப்பாடு இருக்கவேண்டும் என்ற நிலைப்பாடு எமக்கு உண்டு. இதற்கமைவாக சகல சமூக ஊடகங்களும் அதாவது முகபுத்தகம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவோரை பதிவு செய்யவேண்டும். பதிவு செய்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றை நாம் எமது அமைச்சில் தயாரித்துள்ளோம். 
தற்பொழுது சமூக ஊடகங்களுக்கு மாத்திரமே இதனை நாம் தயாரித்துள்ளோம். சுயகட்டுப்பாடு தொடர்பில் நான் முன்னர் 2010ஆம் ஆண்டில் முயற்சித்தேன். அப்பொழுது அமைச்சராக இருந்த வேளையில் நான் இதற்கான நடவடிக்கையை முன்னெடுத்தேன். பலமுறை பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளேன். 
எதிர்வரும் திங்கட்கிழமையும் (21) இதுதொடர்பிலான பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளது. பேச்சுவார்த்தை முடிவடைந்த பின்னர் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டிய காலத்தின் தேவையும் ஏற்பட்டுள்ளது என நான் நினைக்கின்றேன் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 
(அரசாங்க தகவல் திணைக்களம்)
Facebook உள்ளிட்ட சமூக ஊடகங்களைப் பாவித்தால் பதிவு செய்ய வேண்டும் - அமைச்சர் கெஹெலிய Facebook உள்ளிட்ட சமூக ஊடகங்களைப் பாவித்தால் பதிவு செய்ய வேண்டும் - அமைச்சர் கெஹெலிய Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

Vacancy: Colombo Urban Regeneration Project

December 19, 2020

Vacancy for the Colombo Urban Regeneration Project. 
Closing date: 23-12-2020. 
See the details below.
Source: 13-12-2020 Sunday Observer.

Vacancy: Colombo Urban Regeneration Project Vacancy: Colombo Urban Regeneration Project Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

Vacancies: University of Moratuwa

December 19, 2020

Vacancies in the University of Moratuwa. 
Closing date: 03-01-2021. 
See the details below.
Source: 13-12-2020 Sunday Observer.

Vacancies: University of Moratuwa Vacancies: University of Moratuwa Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

Vacancy: Department for Registration of Persons.

December 19, 2020

Vacancy in the Department for Registration of Persons. 
Closing date: 13-01-2021. 
See the details below.
Source: 13-12-2020 Sunday Observer.


Vacancy: Department for Registration of Persons. Vacancy: Department for Registration of Persons. Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

Vacancies for Doctors in Oman

December 19, 2020

Vacancies for Doctors in Oman. 
See the details below.

Source: 13-12-2020 Sunday Observer.

Vacancies for Doctors in Oman Vacancies for Doctors in Oman Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

மேல் மாகாண பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்படுமா?

December 19, 2020

மேல் மாகாண பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பாக சுகாதார அமைச்சரையும் சுகாதாரத்துறை நிபுணர்களையும் சந்தித்து கலந்துரையாடியதாகவும் அதன்படி அது தொடர்பான தீர்மானத்தை எதிர்வரும் திங்கட்கிழமை அதாவது இம்மாதம் 21ஆம் திகதி அறிவிக்க முடியும் என கல்வி அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 
இதேவேளை பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை 
இம்மாதம் 23ஆம் தேதி வழங்கப்படுவதனால் அதற்குள் குறித்த பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது சாத்தியமற்றதாகவே தெரிகிறது. பெரும்பாலும் அடுத்த வருடம் ஆரம்பிப்பதற்கான சாத்தியப்பாடுகளே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேல் மாகாண பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்படுமா? மேல் மாகாண பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்படுமா? Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

திரிபோஷா விநியோக தடை தொடர்பில் அரசின் விளக்கம்

December 19, 2020

திரிபோஷா விநியோக தடை தொடர்பான விளக்கத்தை சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் திருமதி. சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார். 
அதாவது சோளத்திற்கான தட்டுப்பாடு காரணமாக 
திரிபோஷா தயாரிப்பு தடைபட்டிருக்கிறது. மாறாக இதை விநியோகிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பபடவில்லை. தயாரிப்பு தொடர்பிலேயே சிக்கல் இருக்கிறது. 
தற்பொழுது நிலவும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமைக்கு மத்தியில் குழந்தைகளின் போசாக்கு நிலை குறைவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்த அவர் இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளினதும், தாய்மார்களினதும் போசாக்கு அவசியமாகும். இதன் காரணமாக போசாக்கு உற்பத்திக்கானவற்றை விரிவுப்படுத்தி பாலூட்டும் தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் அதேபோன்று போசாக்கு குறைப்பாடுள்ள பிள்ளைகளுக்கும் திரிபோஷா வழங்கும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது அத்தியாவசியமானது என நாம் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
திரிபோஷா விநியோக தடை தொடர்பில் அரசின் விளக்கம் திரிபோஷா விநியோக தடை தொடர்பில் அரசின் விளக்கம் Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

காலி பிரதேச பாடசாலைகள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

December 19, 2020

காலி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதியே மீள திறக்கப்படும் என தென் மாகாண கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
காலி பிரதேச பாடசாலைகள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு காலி பிரதேச பாடசாலைகள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

திடீரென அதிகரித்தது மாணவர்களின் கண் பிரச்சினை...

December 19, 2020

கண் பிரச்சினைக்கு சிகிச்சை பெற வரும் மாணவர் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பைக் காண முடிவதாக மாத்தறை பொது வைத்தியசாலையின் சிரேஷ்ட கண் வைத்தியர் பிரியங்க இத்தவெல தெரிவித்துள்ளார். 
கண் பிரச்சினைகள் காரணமாக தற்போது தினமும் 20 தொடக்கம் 30 வரையான மாணவர்கள் வைத்தியசாலைக்கு வருவதாக தெரிவித்தார். 
அவர் மேலும் தெரிவிக்கையில், 
கொரோனா தொற்று காரணமாக Online கல்வியில் அதிக கவனம் செலுத்துவதால் இந்நிலைமை ஏற்பட்டிருக்கலாம். எனவே பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து கணினி அல்லது மொபைல் தொலைபேசி திரையை பார்க்க வேண்டாம். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் குறைந்தது 20 வினாடிகள் இடைவெளி எடுக்க வேண்டும். 
குறிப்பாக வாந்தி, தலைசுற்றல், கண் வலி மற்றும் கண்ணீர் போன்ற அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகள் சிகிச்சைக்கு வருகின்றனர். இதில் சிலர் CT SCAN களுக்கும் வேறு சிலர் MRI SCAN போன்ற உயர் பரிசோதனைகளுக்கும் உட்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்: டீச்மோ.
திடீரென அதிகரித்தது மாணவர்களின் கண் பிரச்சினை... திடீரென அதிகரித்தது மாணவர்களின் கண் பிரச்சினை... Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

11-12-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி

December 19, 2020

11-12-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை இங்கு தருகிறோம். 
Official gazette released on 11-12-2020. 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette.
11-12-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி 11-12-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

800 வருடங்களின் பின் நாளை இடம்பெறும் அரிய நிகழ்வு..

December 18, 2020

நாளை இரவு வியாழன் மற்றும் சனி கிரகங்கள் ஒன்று சேர்வதைக் காணும் அரிய சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளதாக வானியல் நிபுணர் அனுர சி பெரேரா தெரிவித்துள்ளார். 
நாளை மாலை 6.45 மணியளவில் இதன் உச்ச நிலையை கண்காணிக்க முடியும். இதனை வெற்றுக் கண்களால் 
மற்றும் தொலைநோக்கி ஊடாகவும் பார்க்கலாம். 800 வருடங்களுக்கு ஒரு தடவை இவ்வாறு கிரகங்கள் ஒன்றுசேர்கின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
800 வருடங்களின் பின் நாளை இடம்பெறும் அரிய நிகழ்வு.. 800 வருடங்களின் பின் நாளை இடம்பெறும் அரிய நிகழ்வு.. Reviewed by irumbuthirai on December 18, 2020 Rating: 5

எதிர்க்கட்சி ஆசனம் பெற்ற அத்துரலிய ரத்ன தேரர்..

December 18, 2020

இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அபே ஜனபல பக்ஷய / எங்கள் மக்கள் சக்தி / Our People's Power Party (OPPP) கட்சிக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் கிடைத்தது. 
 இதற்காக கட்சி சார்பாக நியமிக்கப்படும் உறுப்பினரின் பெயரை அனுப்புவதற்கான இறுதி தினத்திற்கு முந்தைய நாள் இந்தக் கட்சியின் பொதுச் செயலாளரான விமலதிஸ்ஸ தேரர் காணாமல் போனார். 
அதன் பின்னர் தானே அந்த பதவிக்கு பொருத்தமானவர் என அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருந்தார். 
இதேவேளை ஞானசார தேரர் 
மற்றும் அத்துரலிய ரத்ன தேரர் இந்த பதவி தமக்கே வேண்டுமென முயற்சித்தனர். அந்தவகையில் இதற்காக மும்முனை போட்டி நிலவியது. 
தற்போது இவ்வளவு நாட்களாக இழுபறியாக இருந்த இந்த விடயம் முடிவுக்கு வந்துள்ளது. 
குறித்த தேசிய பட்டியல் உறுப்பினராக அத்துரலிய ரத்ன தேரர் நியமிக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று விசேட வர்த்தமானியையும் வெளியிட்டுள்ளது. இதேவேளை ரத்ன தேரருக்கு எதிர்கட்சியில் ஆசனம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சி ஆசனம் பெற்ற அத்துரலிய ரத்ன தேரர்.. எதிர்க்கட்சி ஆசனம் பெற்ற அத்துரலிய ரத்ன தேரர்.. Reviewed by irumbuthirai on December 18, 2020 Rating: 5

மற்றுமொரு சோகம்... 46 நாள் குழந்தையும் எரிக்கப்பட்டது..

December 18, 2020

கொரோனா பாதிப்பினால் 46 நாள் பூர்த்தியான குழந்தையொன்று மரணம் அடைந்துள்ளதாக லேடி ரிஜ்வே வைத்தியசாலை தெரிவித்துள்ளது. கொரோனாவினால் ஏற்பட்ட 
நிமோனியா காய்ச்சலே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இது கொரோனாவினால் இடம்பெற்ற இரண்டாவது இளவயது மரணம் ஆகும். ஏற்கனவே இம்மாதம் டிசம்பர் 8ஆம் திகதி 20 நாட்கள் பூர்த்தியான குழந்தை Covid இனால் இதே வைத்தியசாலையில் மரணமாகியது குறிப்பிடத்தக்கது. அந்த குழந்தையும் எரிக்கப்பட்டது. 
அந்தவகையில் இந்த 46 நாட்கள் பூர்த்தியான குழந்தையும் இன்று மாலை பொரளை மயானத்தில் எரிக்கப்பட்டது. (நிவ்ஸ்வய)
மற்றுமொரு சோகம்... 46 நாள் குழந்தையும் எரிக்கப்பட்டது.. மற்றுமொரு சோகம்... 46 நாள் குழந்தையும் எரிக்கப்பட்டது.. Reviewed by irumbuthirai on December 18, 2020 Rating: 5

முல்லேரியா வைத்தியசாலை PCR இயந்திரத்திற்கு ஏற்பட்ட நிலை..

December 18, 2020

முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் உள்ள பிசிஆர் இயந்திரத்தில் தொடர்ந்தும் பரிசோதனைகளை மேற்கொள்வதில் சிக்கல் தோன்றி உள்ளதாக அந்த வைத்தியசாலை பணிப்பாளர் பிரியந்த கருணாரத்ன தெரிவித்துள்ளார். 
குறித்த இயந்திரத்திற்கு தேவையான இரசாயன பதார்த்தம் ஒன்றின் பற்றாக்குறையே இதற்கு காரணம். சுமார் 2,000 பரிசோதனைகள் செய்ய வேண்டிய நிலையில் 1,000 பரிசோதனைகளே தற்பொழுது இடம்பெறுகின்றன. குறித்த இரசாயன பதார்த்தத்தை அரசிடம் கேட்டும் இதுவரை கிடைக்கவில்லை. தற்போது உள்ள நிலைமையில் இதை வெளிநாட்டிலிருந்து தருவித்து தருவதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம். 
எவ்வாறாயினும் தற்போது  1000 பரிசோதனைகளை மேற்கொள்கிறோம். ஆனால் எதிர்காலத்தில் இது மேலும் குறைவடையலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
முல்லேரியா வைத்தியசாலை PCR இயந்திரத்திற்கு ஏற்பட்ட நிலை.. முல்லேரியா வைத்தியசாலை PCR இயந்திரத்திற்கு ஏற்பட்ட நிலை.. Reviewed by irumbuthirai on December 18, 2020 Rating: 5

MCC இலங்கைக்கு ஏன் வழங்கப்படவில்லை? (அமெரிக்க தூதரகத்தின் அறிக்கை இணைப்பு)

December 18, 2020

MCC உடன்படிக்கையில் இலங்கை ஏன் இணைத்துக் கொள்ளப்படவில்லை என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. 
அதாவது, இந்த விடயத்தில் இலங்கையின் ஈடுபாடு குறைந்ததன் காரணமாக இலங்கைக்கு வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்த ரூபா 89 பில்லியன் பெறுமதியான MCC அபிவிருத்தி நிதி உதவித் திட்டத்தை நிறுத்த MCC பணிப்பாளர் சபை இம்மாதம் 15ஆம் திகதி தீர்மானித்ததாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. 
 இருப்பினும் நட்பு நாடு என்ற அடிப்படையில் இலங்கைக்கு Covid உட்பட ஏனைய விடயங்களிலும் அமெரிக்கா தனது பங்களிப்பை தொடர்ந்தும் வழங்கும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையை கீழே காணலாம்.



MCC இலங்கைக்கு ஏன் வழங்கப்படவில்லை? (அமெரிக்க தூதரகத்தின் அறிக்கை இணைப்பு) MCC இலங்கைக்கு ஏன் வழங்கப்படவில்லை? (அமெரிக்க தூதரகத்தின் அறிக்கை இணைப்பு) Reviewed by irumbuthirai on December 18, 2020 Rating: 5

மோட்டார் சைக்கிள் களவு... தங்கச் சங்கிலி அறுப்பு ...

December 18, 2020

மோட்டார் சைக்கிளில் வந்து பெண்களின் தங்கச் சங்கிலியை அறுத்துச் செல்லும் சம்பவம் அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 
இதற்காக உள் வீதிகளில் பயணிக்கும் பெண்கள் குறிவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இதற்காக களவெடுத்த மோட்டார் சைக்கிள்களே பயன்படுத்தப்படுகின்றன. 
இதேவேளை மோட்டார் சைக்கிள்கள்சைக்கிள்கள் களவு போனமை தொடர்பான முறைப்பாடுகளும் அண்மையில் அதிகரித்துள்ளன. 3ம் தரப்பு செய்யும் குற்றங்களுக்காக வாகன உரிமையாளர்கள் மீதே சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிள் களவு... தங்கச் சங்கிலி அறுப்பு ... மோட்டார் சைக்கிள் களவு... தங்கச் சங்கிலி அறுப்பு ...  Reviewed by irumbuthirai on December 18, 2020 Rating: 5

நீடிக்கப்பட்டது ஆசிரியர் நியமனத்துக்கான விண்ணப்ப முடிவு திகதி(விண்ணப்பம் இணைப்பு)

December 17, 2020

தேசிய கல்வியியல் கல்லூரி டிப்ளோமாதாரிகள் தமக்குரிய நியமன பாடசாலைகளைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 
இம்மாதம் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இன்றுடன் முடிவடைவதாக இருந்த இந்த விண்ணப்பிக்கும் காலம் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது. 
இந்த Online முறையிலான விண்ணப்ப நடைமுறையில் பல குளறுபடிகள் இருப்பதாக விண்ணப்பதாரிகளும் ஆசிரியர் சங்கங்களும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
விண்ணப்பப்படிவத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

நீடிக்கப்பட்டது ஆசிரியர் நியமனத்துக்கான விண்ணப்ப முடிவு திகதி(விண்ணப்பம் இணைப்பு) நீடிக்கப்பட்டது ஆசிரியர் நியமனத்துக்கான விண்ணப்ப முடிவு திகதி(விண்ணப்பம் இணைப்பு) Reviewed by irumbuthirai on December 17, 2020 Rating: 5

இலங்கையின் முதலாவது LPL போட்டி முடிவும் வழங்கப்பட்ட விருதுகளும்..

December 16, 2020

Lanka Premier League - LPL (லங்கா பிரிமியர் லீக்) இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் இறுதிப் போட்டி இன்று (16) ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது. 
இதில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் (Jaffna Stallions) அணி 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கோல் கிளடியேடர்ஸ் (Galle Gladiators) அணியை தோற்கடித்து சாம்பியனானது. 
 Jaffna Stallions சார்பாக அதிக பட்சமாக சுஹைப் மலிக் 46 ஓட்டங்களை பெற்றார். 
போட்டியில் வழங்கப்பட்ட விருதுகளும் நபர்களும் பின்வருமாறு: 
Man of the Final – Shoaib Malik (Jaffna Stallions) 
Emerging Player of the Tournament – Dhananjaya Lakshan (Galle Gladiators) 
Fair Play Award – Dambulla Viiking 
Player of the Tournament – Wanindu Hasaranga (Jaffna Stallions)

இலங்கையின் முதலாவது LPL போட்டி முடிவும் வழங்கப்பட்ட விருதுகளும்.. இலங்கையின் முதலாவது LPL  போட்டி முடிவும் வழங்கப்பட்ட விருதுகளும்.. Reviewed by irumbuthirai on December 16, 2020 Rating: 5

சாதாரண தர பாடத்திட்டங்கள் எவ்வளவு முடிக்கப்பட்டுள்ளன? கல்வியமைச்சு வெளியிட்ட தகவல்...

December 16, 2020

இம்முறை சாதாரண தர மாணவர்களின் பாடத்திட்டங்கள் சுமார் 60% முதல் 100% வரை முடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேற்கொண்ட தகவல் சேகரிப்பில் தெரியவந்துள்ளதாக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதில் ஆங்கில பாடமே மிகக்குறைவாக முடிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் ஆசிரியர் பற்றாக்குறையே. மாறாக Covid-19 நிலைமை அல்ல.  
எதிர்வரும் மார்ச் மாதமே பரீட்சை நடைபெற உள்ளதால் அதற்குள் முடிக்கப்படாத பாடங்களை முடிக்கலாம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். 
கல்வியமைச்சு இதுதொடர்பான தகவல்களை முதலில் Online  மூலமும் அதன் பின்னர் மாகாண கல்விப் பணிப்பாளர் மூலமும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சாதாரண தர பாடத்திட்டங்கள் எவ்வளவு முடிக்கப்பட்டுள்ளன? கல்வியமைச்சு வெளியிட்ட தகவல்... சாதாரண தர பாடத்திட்டங்கள் எவ்வளவு முடிக்கப்பட்டுள்ளன? கல்வியமைச்சு வெளியிட்ட தகவல்... Reviewed by irumbuthirai on December 16, 2020 Rating: 5

கல்வியியற் கல்லூரி ஆசிரியர் நியமனம்: அதிரடி நடவடிக்கையில் இறங்கிய ஆசிரியர் சங்கம்:

December 16, 2020

தேசிய கல்வியியற் கல்லூரி டிப்ளோமாதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்காக இம்முறை Online முறையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 
இந்த விண்ணப்ப செயன்முறையில் காணப்படும் பல்வேறு குளறுபடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை 17 ஆம் தேதி காலை 10 மணிக்கு கல்வி அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை இலங்கை ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரியவருகிறது. 
அதாவது, 
  • விண்ணப்பத்தை ஒன்லைன் முறையில் பூர்த்தி செய்யும் போது சரியான தகவல்களை வழங்கினாலும் அவை பிழையான தகவல்கள் என காண்பிப்பதாக கூறப்படுகிறது. 
  • விண்ணப்பதாரியின் மாகாணத்தில் வெற்றிடம் உள்ள பாடசாலைகள் இருந்தாலும் வேறு மாகாணங்களையே காண்பிப்பதாக கூறப்படுகிறது. 
  • அதேபோன்று 2017 ல் இருந்த வெற்றிடங்கள் அல்லது வேறு வெற்றிடங்களை காண்பிப்பதாகவும் குற்றச்சாட்டு. 
  • பிரச்சினைகளுக்காக அழைக்குமாறு வழங்கப்பட்டுள்ள இலக்கங்கள் எதற்கும் பதில் அளிக்க உரிய அதிகாரிகள் யாரும் இல்லை. 
  • இந்த சிக்கல்களை பலமுறை உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. 
இந்த ஒன்லைன் முறையிலான விண்ணப்பம் நாளை 17ம் திகதியுடன் முடிவடைவதாக இருந்தாலும் தற்போது அது இம்மாதம் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டமை குறிப்படத்தக்கது. 
குறித்த Online விண்ணப்பத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
கல்வியியற் கல்லூரி ஆசிரியர் நியமனம்: அதிரடி நடவடிக்கையில் இறங்கிய ஆசிரியர் சங்கம்: கல்வியியற் கல்லூரி ஆசிரியர் நியமனம்: அதிரடி நடவடிக்கையில் இறங்கிய ஆசிரியர் சங்கம்: Reviewed by irumbuthirai on December 16, 2020 Rating: 5

திருகோணமலையிலிருந்தும் LPL அணி: அடுத்த வருடம் முதல் இடம் பெரும் மாற்றங்கள்...

December 16, 2020


அடுத்த வருடம் முதல் LPL போட்டிகளில் பல மாற்றங்களை செய்ய தீர்மானித்துள்ளதாக அதன் ஏற்பாட்டுக் குழு பணிப்பாளர் ரவின் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். அவற்றுள் சில பின்வருமாறு:

  • அடுத்த வருடம் ஜூலை 29 போட்டிகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஜனவரி முதல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். 
  •  அடுத்த வருடம் புதிய அணியொன்று இணைத்துக் கொள்ளப்படும். அதாவது கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் திருகோணமலையிலிருந்து அந்த அணி இடம் பெறும். 
  • அடுத்த வருடம் முதல் ஒவ்வொரு அணியிலும் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் இருவர் கட்டாயம் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

திருகோணமலையிலிருந்தும் LPL அணி: அடுத்த வருடம் முதல் இடம் பெரும் மாற்றங்கள்... திருகோணமலையிலிருந்தும் LPL அணி: அடுத்த வருடம் முதல் இடம் பெரும் மாற்றங்கள்... Reviewed by irumbuthirai on December 16, 2020 Rating: 5

விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டவருக்கு கொரோனா..

December 16, 2020

இவ்வருடம் நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. 
அந்த வகையில் பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயத்தில் அரசியல் விஞ்ஞானம் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டவர் திடீரென மயங்கி விழுந்ததாகவும் அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதியானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் அதன்பின்னர் மதிப்பீட்டு மண்டபம் கிருமி நீக்கம் செய்யப்பட்டு உரிய மதிப்பீட்டு பணிகள் வழமைபோன்று தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
குறித்த நபரோடு நெருங்கி இருந்த மற்றொருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டவருக்கு கொரோனா.. விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டவருக்கு கொரோனா.. Reviewed by irumbuthirai on December 16, 2020 Rating: 5

கல்வி அமைச்சின் முக்கிய தீர்மானங்கள்: சுற்றுநிருபம் விரைவில்...

December 16, 2020

அடுத்த வருடம் கல்வி நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய சில தீர்மானங்களை கல்வியமைச்சு மேற்கொண்டுள்ளது. 
இதுதொடர்பான விரிவான சுற்றுநிறுபம் இவ்வாரம் வெளியாகும் என தெரிய வருகிறது. 
குறித்த தீர்மானங்கள் சில பின்வருமாறு: 
  • உரியமுறையில் தவணைப் பரீட்சை நடக்காவிட்டாலும் சகல மாணவர்களும் வகுப்பேற்றப்படுவர். 
  • இவ்வருடம் முடிக்கப்படாத பாட அலகுகளை முடிப்பதற்கு அடுத்த வருடம் முதல் இரு வாரங்களை பயன்படுத்தலாம். 
  • தரம் 11 மாணவர்கள் மார்ச் வரை பாடசாலைக்கு வரலாம். இவர்களுக்கு இடவசதி போதாமல் இருந்தால் தரம் 8, 9 ஆகிய மாணவர்களை தொகுதி அடிப்படையில் மாத்திரம் பாடசாலைக்கு வரவழைக்கலாம். 
  • தரம் 1 மற்றும் 6 ஆகிய வகுப்புகளுக்கு புதிய மாணவர் அனுமதி பெப்ரவரி வரை பிற்போடப்பட்டுள்ளது. 
  • இவ்வருடம் 3ம் தவணை விடுமுறை டிசம்பர் 23 வழங்கப்பட்டு ஜனவரி 4 மீண்டும் பாடசாலை ஆரம்பமாகும். 
  • அடுத்த வருடம் முதலாம் தவணையில் இணைப்பாடவிதான செயற்பாடுகள் இல்லை. கல்விச் சுற்றுலா விளையாட்டுப்போட்டி எதற்கும் அனுமதி இல்லை.
கல்வி அமைச்சின் முக்கிய தீர்மானங்கள்: சுற்றுநிருபம் விரைவில்... கல்வி அமைச்சின் முக்கிய தீர்மானங்கள்: சுற்றுநிருபம் விரைவில்... Reviewed by irumbuthirai on December 16, 2020 Rating: 5

Vacancy: ICTA (Information Communication Technology Agent)

December 16, 2020

Vacancy: ICTA (Information Communication Technology Agent) 
Closing date: 19-12-2020. 
See the details below.


Vacancy: ICTA (Information Communication Technology Agent) Vacancy: ICTA (Information Communication Technology Agent) Reviewed by irumbuthirai on December 16, 2020 Rating: 5

Vacancies : University Hospital

December 16, 2020

Vacancies in the University Hospital ( Sir John Kotelawela Defence University) 
Closing date: 25-12-2020. 
See the details below.


Vacancies : University Hospital Vacancies : University Hospital Reviewed by irumbuthirai on December 16, 2020 Rating: 5

Vacancies: National Child Protection Authority

December 16, 2020

Vacancies in the National Child Protection Authority. 
பதவி வெற்றிடங்கள்: தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை. 
Closing date: 21-12-2020. 
See the details below.


Vacancies: National Child Protection Authority Vacancies: National Child Protection Authority Reviewed by irumbuthirai on December 16, 2020 Rating: 5

Vacancies: Central Environmental Authority

December 16, 2020

Vacancies in the Central Environmental Authority. 
Closing date: 21-12-2020. 
See the details below.


Vacancies: Central Environmental Authority Vacancies: Central Environmental Authority Reviewed by irumbuthirai on December 16, 2020 Rating: 5

14-12-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

December 15, 2020

14-12-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
14-12-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 14-12-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on December 15, 2020 Rating: 5

Vacancies: University of Sri Jayawardanapura

December 14, 2020

Vacancies in the University of Sri Jayawardenapura. 
See the details below.



Vacancies: University of Sri Jayawardanapura Vacancies: University of Sri Jayawardanapura Reviewed by irumbuthirai on December 14, 2020 Rating: 5

LPL இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய அணிகள்

December 14, 2020

லங்கா பிரிமியர் லீக் (LPL) தொடரின் நாளை மறு தினம் (16) இடம்பெறவுள்ள இறுதிப்போட்டியில் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியுடன் ஜப்ஃனா ஸ்டேலியன்ஸ் அணி மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
இன்று அம்பாந்தோட்டையில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தம்புள்ள வைகிங் அணியை தோற்கடித்து ஜப்ஃனா ஸ்டேலியன்ஸ் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது. முதலாவது அரையிறுதிப் போட்டியில் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணி வென்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகி இருந்தது.
LPL இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய அணிகள் LPL இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய அணிகள் Reviewed by irumbuthirai on December 14, 2020 Rating: 5

யாழில் மேலும் சில பாடசாலைகளுக்கு நாளை(15) முதல் பூட்டு!

December 14, 2020

வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமையவும் கல்வி அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் அடிப்படையில் யாழ் மாவட்ட வலிகாமம் கல்வி வலயம் மற்றும் யாழ்ப்பாணம் கல்வி வலயத்திற்குட்பட்ட சகல பாடசாலைகளும் நாளை (15) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், சட்டத்தரணி எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார். 
யாழில் நிலவும் கொரோனா பரவலைக் கருத்திற்கொண்டு இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழில் மேலும் சில பாடசாலைகளுக்கு நாளை(15) முதல் பூட்டு! யாழில் மேலும் சில பாடசாலைகளுக்கு நாளை(15) முதல் பூட்டு! Reviewed by irumbuthirai on December 14, 2020 Rating: 5
Powered by Blogger.