விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டவருக்கு கொரோனா..


இவ்வருடம் நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. 
அந்த வகையில் பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயத்தில் அரசியல் விஞ்ஞானம் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டவர் திடீரென மயங்கி விழுந்ததாகவும் அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதியானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் அதன்பின்னர் மதிப்பீட்டு மண்டபம் கிருமி நீக்கம் செய்யப்பட்டு உரிய மதிப்பீட்டு பணிகள் வழமைபோன்று தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
குறித்த நபரோடு நெருங்கி இருந்த மற்றொருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டவருக்கு கொரோனா.. விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டவருக்கு கொரோனா.. Reviewed by irumbuthirai on December 16, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.