மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு இன்றும் செய்யப்பட்ட பரிசோதனை:


மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு Rapid Antigen பரிசோதனை நேற்றைய தினத்தை போன்று இன்றும் நடைபெற்றது. 
கொழும்பு-புத்தளம் வீதியில் கொச்சிக்கடை பிரதேசத்திலும், ஹைலெவல் வீதியில் சாலாவ பிரதேசத்திலும் கொழும்பு - கண்டி வீதியில் நிட்டம்புவ பிரதேசத்திலுமாக மூன்று இடங்களில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 
இன்று எழுமாறாக 750 பேரில் செய்த பரிசோதனைகளில் 
ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். 
இதேவேளை நேற்று முதல் நாள் செய்யப்பட்ட 451 பரிசோதனைகளில் 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு இன்றும் செய்யப்பட்ட பரிசோதனை: மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு இன்றும் செய்யப்பட்ட பரிசோதனை: Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.