மறு அறிவித்தல் வரை மூடப்படும் 73 பாடசாலைகள்


வலிகாமம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட உடுவில் கல்விக் கோட்ட பாடசாலைகள் மற்றும் வலிகாமம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட தெல்லிப்பழை கல்விக் கோட்ட பாடசாலைகள் என்பன மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார். 
வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். 
அந்த வகையில் உடுவில் கல்விக் கோட்டத்தில் 33 பாடசாலைகளும் தெல்லிப்பழை கல்விக் கோட்டத்தில் 40 பாடசாலைகளும் மொத்தமாக 73 பாடசாலைகள் இவ்வாறு மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மறு அறிவித்தல் வரை மூடப்படும் 73 பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்படும் 73 பாடசாலைகள் Reviewed by irumbuthirai on December 14, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.