நிலையான அட்டவணையின்றி ஆரம்பமாகும் விமான சேவைகள்..


நிலையான அட்டவணையின்றி செல்லும் விமான சேவையே இம்மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்தார். 
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டின் 4 விமான நிலையங்களை திறப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக யாழ்ப்பாணம், கட்டுநாயக்க, மத்தள மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களுக்கு வணிக விமானங்களுக்கும் நிலையான நேர அட்டவணையின்றி செல்லும் விமானங்களும் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி கிடைக்கும். 
இதன்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், பின்பற்ற வேண்டிய சுகாதார ஆலோசனைகள் பின்னர் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். 
சர்வதேச விமான சேவைகளுக்காக இலங்கை மீண்டும் திறக்கப்படும் தினம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நிலையான அட்டவணையின்றி ஆரம்பமாகும் விமான சேவைகள்.. நிலையான அட்டவணையின்றி ஆரம்பமாகும் விமான சேவைகள்.. Reviewed by irumbuthirai on December 13, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.