விரைவாக விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்துங்கள் - பிரதமர்


தேசிய மட்டத்தில் கொரோனாவிற்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிகிச்சை முறை மற்றும் மருந்துகளை விஞ்ஞான ரீதியில் உறுதிபடுத்தும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேசிய ஆராய்ச்சி சபைக்கு அறிவுறுத்தியுள்ளார். 
அந்தவகையில் கேகாலை தம்மிக பண்டார ஆயுர்வேத வைத்தியரின் மருந்து பானி, கொழும்பு பல்கலைக்கழகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட உள்ளூர் மருந்து, கலாநிதி ஹர்ஷ சுபசிங்க மற்றும் இந்திக ஜாகொட ஆகியோரினால் விசேடமாக தயாரிக்கப்பட்ட உள்ளூர் சிகிச்சை முறை என்பவற்றை ஆய்விற்கு உட்படுத்தி உறுதிபடுத்துவதற்கு பிரதமர் தேசிய ஆராய்ச்சி சபைக்கு பரிந்துரைத்துள்ளார்.
விரைவாக விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்துங்கள் - பிரதமர் விரைவாக விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்துங்கள் - பிரதமர் Reviewed by irumbuthirai on December 13, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.