மற்றுமொரு சோகம்... 46 நாள் குழந்தையும் எரிக்கப்பட்டது..


கொரோனா பாதிப்பினால் 46 நாள் பூர்த்தியான குழந்தையொன்று மரணம் அடைந்துள்ளதாக லேடி ரிஜ்வே வைத்தியசாலை தெரிவித்துள்ளது. கொரோனாவினால் ஏற்பட்ட 
நிமோனியா காய்ச்சலே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இது கொரோனாவினால் இடம்பெற்ற இரண்டாவது இளவயது மரணம் ஆகும். ஏற்கனவே இம்மாதம் டிசம்பர் 8ஆம் திகதி 20 நாட்கள் பூர்த்தியான குழந்தை Covid இனால் இதே வைத்தியசாலையில் மரணமாகியது குறிப்பிடத்தக்கது. அந்த குழந்தையும் எரிக்கப்பட்டது. 
அந்தவகையில் இந்த 46 நாட்கள் பூர்த்தியான குழந்தையும் இன்று மாலை பொரளை மயானத்தில் எரிக்கப்பட்டது. (நிவ்ஸ்வய)
மற்றுமொரு சோகம்... 46 நாள் குழந்தையும் எரிக்கப்பட்டது.. மற்றுமொரு சோகம்... 46 நாள் குழந்தையும் எரிக்கப்பட்டது.. Reviewed by irumbuthirai on December 18, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.