Bachelor of Information Technology (BIT - External) - 2022 (University of Colombo)

June 25, 2022

University of Colombo - School of Computing 
 
Bachelor of Information Technology (BIT - External) - 2022 
 
Applications are called in from the eligible students for the Bachelor of Information Technology (BIT) Degree Programme (External) from University of Colombo - School of Computing. 
 
Application Fee: 
Rs. 1,800.00 (for Sri Lankans)
Rs. 5,000.00 (for students from SAARC countries) 
Rs 10,000.00 (students from non-SAARC countries) 


 
 

Duration: 03 Years.

Closing date: 06th July 2022. 
 
 
Click the link below for online application: 
 
 
Click the link below to see sample application: 
 
Click the link below for full details:
Bachelor of Information Technology (BIT - External) - 2022 (University of Colombo) Bachelor of Information Technology (BIT - External) - 2022 (University of Colombo) Reviewed by Irumbu Thirai News on June 25, 2022 Rating: 5

Short course in Professional Certificate in Revit Architecture (Online)

June 25, 2022

The Open University of Sri Lanka. 

Course: Short course in Professional Certificate in Revit Architecture (Online) 

Duration: 04 Months. 

Medium: English.

Issuing of Applications: 25-06-2022. 

Closing Date for Applications: 31-07-2022. 

Programme commencing date & Time: 03-08-2022. (Wednesday at 5.00pm- 9.00pm) 

Course Fees: 15,000/- 

Click the link below for Online Application: 
 

Click the link below for full details:
Short course in Professional Certificate in Revit Architecture (Online) Short course in Professional Certificate in Revit Architecture (Online) Reviewed by Irumbu Thirai News on June 25, 2022 Rating: 5

Results Released - Bachelor of Arts (BA- External) - 2020 (2021)

June 25, 2022

UNIVERSITY OF PERADENIYA
CENTRE FOR DISTANCE AND CONTINUING EDUCATION. 

Bachelor of Arts - 2020 (Old Syllabus)
Examination Held on November/ December - 2021 

Click the link below to view results:
Results Released - Bachelor of Arts (BA- External) - 2020 (2021) Results Released - Bachelor of Arts (BA- External) - 2020 (2021) Reviewed by Irumbu Thirai News on June 25, 2022 Rating: 5

அரச ஊழியர்கள் தற்காலிகமாக உள்நாட்டிலேயே தனியார் துறையில் பணிபுரியலாம்? இரு வாரங்களில் அறிக்கை!

June 24, 2022


அரச ஊழியர்கள் தற்காலிகமாக தமது சேவையிலிருந்து விலகி உள்நாட்டிலேயே தனியார் துறையில் சேவையாற்றுவதற்காக 05 வருடங்கள் விடுமுறை வழங்குவது தொடர்பாக ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

07 பேர் அடங்கிய குறித்த குழுவின் அறிக்கையானது இன்னும் 02 வாரங்களில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 22ஆம் திகதி வெளியிடப்பட்ட இது தொடர்பான சுற்றறிக்கை யானது சேவை மூப்பு மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பில்லாத வகையில் அரச ஊழியர்களுக்கு உள்நாட்டு வெளிநாட்டு சம்பளமற்ற லீவு வழங்குதல் என்ற தலைப்பிலேயே வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரச ஊழியர்கள் வெளிநாடு செல்ல சம்பளமற்ற விடுமுறை! (மும்மொழிகளிலும் சுற்றறிக்கை இணைப்பு)


போக்குவரத்து நெருக்கடி காரணமாக ஆசிரியர்களுக்கு தற்காலிக சேவை இணைப்பு வழங்கல் தொடர்பான அறிவித்தல் (தமிழ் மற்றும் சிங்களத்தில் முழுமையாக)


ஆரம்ப பிரிவு மற்றும் உயர்தர ஆசிரியர்களுக்கு விசேட வேலைத்திட்டம் - கல்வி அமைச்சர்

அரச ஊழியர்கள் தற்காலிகமாக உள்நாட்டிலேயே தனியார் துறையில் பணிபுரியலாம்? இரு வாரங்களில் அறிக்கை! அரச ஊழியர்கள் தற்காலிகமாக உள்நாட்டிலேயே தனியார் துறையில் பணிபுரியலாம்? இரு வாரங்களில் அறிக்கை! Reviewed by Irumbu Thirai News on June 24, 2022 Rating: 5

புதிய சுற்றறிக்கையின் படி ஒரு அரச நிறுவனத்திலிருந்து எத்தனை பேர் வெளிநாடு செல்லலாம்?

June 24, 2022


அரச ஊழியர்கள் வெளிநாடு செல்வதற்காக சம்பளமற்ற விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு இம்மாதம் 22ஆம் திகதி வெளியிட்டிருந்தது. 

"சேவை மூப்பு மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பில்லாத வகையில் அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு / வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறை வழங்குதல்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த சுற்றறிக்கை தொடர்பான விளக்கங்களை வழங்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. 

இதில் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். 

இந்த நிகழ்வில் பின்வரும் விடயங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.


அதாவது வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் அரச ஊழியர் தமது விதவைகள் அனாதைகள் ஓய்வூதிய நிதியத்திற்கு மாதாந்தம் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும்.

மேலும் குறிப்பிட்ட காலத்திற்குள் வதியாதோர் வெளிநாட்டு கணக்கு திறந்து அதன் ஊடாக நாட்டுக்கு மாதாந்தம் பணம் அனுப்ப வேண்டும்.

அரச ஊழியர்கள் வெளிநாடு செல்ல சம்பளமற்ற விடுமுறை! (மும்மொழிகளிலும் சுற்றறிக்கை இணைப்பு)


நிறைவேற்று தரமில்லாத புதிதாக இணைந்த அரச ஊழியர்களும் தமது தகுதிகாண் காலம் முடிவடைவதற்கு முன்னர் வெளிநாடு செல்லலாம். அவ்வாறு சென்றவர்கள் மீண்டும் நாட்டுக்கு வந்ததன் பின்னர் தகுதிகாண் காலத்தை நிறைவு செய்ய வேண்டும்.

ஒரு நிறுவனத்தில் எத்தனை பேரை வெளிநாடு செல்ல அனுமதிப்பது என்பது தொடர்பான தீர்மானம் அந்த நிறுவனம் நியமிக்கும் குழு மூலமே எடுக்கப்படும். அதன் அடிப்படையிலேயே குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்து எத்தனை பேரை உச்ச அளவில் வெளிநாடு செல்ல அனுமதிப்பது என்ற விடயம் தீர்மானிக்கப்படும்.


புதிய சுற்றறிக்கையின் படி ஒரு அரச நிறுவனத்திலிருந்து எத்தனை பேர் வெளிநாடு செல்லலாம்? புதிய சுற்றறிக்கையின் படி ஒரு அரச நிறுவனத்திலிருந்து எத்தனை பேர் வெளிநாடு செல்லலாம்? Reviewed by Irumbu Thirai News on June 24, 2022 Rating: 5

அரச ஊழியர்கள் வெளிநாடு செல்ல சம்பளமற்ற விடுமுறை! (மும்மொழிகளிலும் சுற்றறிக்கை இணைப்பு)

June 22, 2022

அரச ஊழியர்கள் வெளிநாடு செல்வது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு இன்றைய தினம் (22) வெளியிட்டுள்ளது. 14/2022  இலக்கம் கொண்ட குறித்த சுற்றறிக்கை "சேவை மூப்பு மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பில்லாத வகையில் அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு / வெளிநாட்டு சம்பளமற்ற லீவு வழங்குதல்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்ல அல்லது வெளிநாட்டு நிறுவனம் ஒன்றில் தொழில் ஒன்றில் ஈடுபடல் போன்ற நோக்கங்களுக்காக அரச உத்தியோகத்தர் சேவை காலத்தில் அதிகபட்சம் 05 வருடங்களுக்கு உட்பட்டு உத்தியோகத்தரின் சேவை மூப்பு மற்றும் ஓய்வூதியத்திற்கு ஏற்புடையதாக கொள்ளக்கூடிய வகையில் சம்பளம் இல்லாத வெளிநாட்டு லீவைப் பெற்றுக்கொள்ள முடியும்.


மேலும் 35 வயதுக்குட்பட்ட அரச உத்தியோகத்தர்கள், தகவல் தொழில்நுட்ப அறிவு, ஆங்கிலம் அல்லது வேறு எந்த மொழி / மொழிகள் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றில் தொழில் பயிற்சியை பூர்த்தி செய்வதற்கு அதிகபட்சம் ஒரு வருடத்திற்கு உட்பட்டு உள்நாட்டு அல்லது வெளிநாட்டு சம்பளமற்ற லீவினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

 

இந்த சுற்றறிக்கை அறிமுகப் படுத்துவதற்கு முன்னர் தாபன விதிக்கோவை ஏற்பாடுகளின் கீழ் வெளிநாடு சென்று இதுவரை நாடு திரும்பாத, அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை கால பகுதியில் உள்ள உத்தியோகத்தர்கள், சம்பளத்துடனான லீவு அல்லது சம்பளமற்ற லீவைப் பெற்றிருப்பதன் காரணமாக கட்டாய சேவை காலத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள், கட்டாய சேவை காலத்தை நிறைவு செய்துள்ள உத்தியோகத்தர்கள் மற்றும் தகுதிகாண் காலத்தில் உள்ள நிறைவேற்றுதரத்தில் அல்லாதவர்களுக்காகவும் இந்த விடுமுறை பெறலாம்.

 

ஏற்கனவே சம்பளமற்ற அல்லது சம்பளத்துடன் வெளிநாடு சென்றுள்ள ஊழியர்கள் இந்த ஏற்பாடுகளுக்கு அமைய சம்பளமற்ற லீவு பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் வெளிநாட்டிலிருந்தே எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கலாம். 


இந்த ஏற்பாடுகளின் கீழ் வெளிநாடு செல்லும் சகல ஊழியர்களும் வெளிநாட்டு நிதி கணக்கிற்கு (NRFC) பணம் அனுப்ப வேண்டும்.

 

அந்தவகையில், 

ஆரம்ப நிலை சேவை வகுதியை சேர்ந்த உத்தியோகத்தர்கள் மாதாந்தம் 100 அமெரிக்க டொலர்களும் 

இரண்டாம் நிலை சேவை வகுதியை சேர்ந்தவர்கள் மாதாந்தம் 200 அமெரிக்க டொலர்களும் 

மூன்றாம் நிலை சேவை வகுதியை சேர்ந்தவர்கள் மாதாந்தம் 300 அமெரிக்க டொலர்களும் 

நிறைவேற்றுத்தர சேவை வகையை சேர்ந்தவர்கள் மாதாந்தம் 500 அமெரிக்க டொலர்களும் அனுப்ப வேண்டும்.

 

உத்தியோகத்தர் வெளிநாட்டில் தொழில் செய்யும் போது மேற்கூறப்பட்டுள்ள பணத்தை அல்லது தொழில் மூலம் கிடைக்கும் சம்பளத்தில் 25 வீதத்தை அனுப்பீடு செய்ய வேண்டும். இவ்வாறு பணம் அனுப்பீடு செய்வதற்காக வெளிநாடு சென்ற நாள் முதல் 2மாத நிவாரணம் வழங்கப்படுவதுடன் மூன்றாவது மாதத்திலிருந்து பணம் அனுப்ப வேண்டும்.

 

இந்த சுற்றறிக்கையின் ஏற்பாடுகள் 2022-6-22ஆம் திகதி முதல் நடைமுறையாகும்.

 

இந்த சுற்றறிக்கைகளை மும்மொழிகளிலும் இங்கே பார்வையிடலாம் மற்றும் டவுன்லோட் செய்யலாம்..



அரச ஊழியர்கள் வெளிநாடு செல்ல சம்பளமற்ற விடுமுறை! (மும்மொழிகளிலும் சுற்றறிக்கை இணைப்பு) அரச ஊழியர்கள் வெளிநாடு செல்ல சம்பளமற்ற விடுமுறை! (மும்மொழிகளிலும் சுற்றறிக்கை இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on June 22, 2022 Rating: 5

Postgraduate Diploma in Special Needs Education (The Open University of Sri Lanka)

June 22, 2022

This programme has been accepted by the Ministry of Education as equivalent to the Post-graduate Diploma in Education offered by the OUSL and any other Post-graduate Diplomas offered by any other conventional university. 

பட்டப் பின் கல்வி டிப்ளோமாவாக கல்வி அமைச்சால் அங்கீகரிக்கப்பட்ட பாடநெறியாகும்.
 
Target Group: 
graduate teachers and principals who are interested in Special Needs Education. 

Duration
Minimum 15 months. 
 
Closing Date for Applications : 
14th July 2022 
 
Application Fee :  Rs. 800.00 
Registration fee : Rs. 1,500.00 
Facilities fee : Rs. 2,500.00 
Library fee : Rs. 200.00 
Tuition fee : Rs. 74,160.00 
Practical fee for teaching practice : Rs. 7,000.00 
Fees for the whole Programme : Rs. 85,360.00 
 
Click the link below for full details & online application:
Postgraduate Diploma in Special Needs Education (The Open University of Sri Lanka) Postgraduate Diploma in Special Needs Education (The Open University of Sri Lanka) Reviewed by Irumbu Thirai News on June 22, 2022 Rating: 5

ஆரம்ப பிரிவு மற்றும் உயர்தர ஆசிரியர்களுக்கு விசேட வேலைத்திட்டம் - கல்வி அமைச்சர்

June 21, 2022


எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாத விடுமுறை குறைக்கப்பட்டு பாடசாலை நடைபெறும் நாட்களை அதிகரித்து அந்த மேலதிக தினங்களில் பிள்ளைகளுக்கு நிறைவுசெய்ய இயலாமல் போன சகல பாட விதானங்களையும் நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 


இன்று இடம்பெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 


அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களுக்கு ஜூலை மாதம் முதல் தொடர்ச்சியான பயிற்சி செயலமர்வுகள் இடம்பெறவிருப்பதுடன் உயர்தர ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழக கட்டமைப்பு மூலமான பயிற்சி செயலமர்வுகள் நடத்தப்பட்டு உயர் தரத்திற்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டல் வழங்கப்படும்.


இந்த விசேட வேலைத்திட்டம் ஆகஸ்ட், செப்டம்பர், ஒக்டோபர் ஆகிய மாதங்களில் நடைமுறைக்கு வரும் என்பதுடன் சகல பயிற்சி  நடவடிக்கைகளும் ஜூலை மாதம் நடைபெறுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


இதனிடையே நாடளாவிய ரீதியில் பிரதான நகரங்கள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் 70 வீதம் முதல் 80 வீதம் வரையான தொகையினர் வருகை தந்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


ஆரம்ப பிரிவு மற்றும் உயர்தர ஆசிரியர்களுக்கு விசேட வேலைத்திட்டம் - கல்வி அமைச்சர் ஆரம்ப பிரிவு மற்றும் உயர்தர ஆசிரியர்களுக்கு விசேட வேலைத்திட்டம் - கல்வி அமைச்சர் Reviewed by Irumbu Thirai News on June 21, 2022 Rating: 5

20-06-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

June 21, 2022

20-06-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். இதில், பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
 
 
முன்னைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...
 
 
 
 
20-06-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 20-06-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on June 21, 2022 Rating: 5

தனிப்பட்ட விடுமுறையில் பதியப்படும் என அச்சுறுத்தல் விடுக்க எந்த அதிபருக்கும் அதிகாரம் இல்லை - மஹிந்த ஜயசிங்க

June 20, 2022


பாடசாலைக்குச் செல்லாத ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட விடுமுறையில் பதியப்படும் என அச்சுறுத்தல் விடுக்க எந்த அதிபருக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜெயசிங்க இன்று தனது முகநூல் நேரலையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

பல பிரதேசங்களிலும் அதிபர்கள் ஆசிரியர்களைக் கட்டாயம் வரவேண்டும் என்று கூறுவதோடு வராவிட்டால் தனிப்பட்ட விடுமுறையில் பதியப்படும் என அச்சுறுத்தல் விடுத்து தேவையற்ற நெருக்கடிகளை அவர்களுக்கு தோற்றுவிப்பதும் அறியக்கிடைக்கிறது 


கல்வி அமைச்சர் கூறினார்... இந்த வாரம் ஆசிரியர்கள் தன்னார்வ அடிப்படையில் சுய விருப்பத்தின் பேரில் கடமைக்கு செல்வார்கள் என இவ்வாறான பின்னணியில் எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து பிரச்சினை காரணமாக பாடசாலைக்கு செல்ல முடியாத ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட விடுமுறை வழங்கப்படும் என அச்சுருத்தல் விடுக்க எந்த அதிபருக்கும் கல்வி அமைச்சால் அதிகாரம் வழங்கப்படவில்லை. இவ்வாறு செய்வது பிரச்சினைகளை ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார்.

போக்குவரத்து நெருக்கடி காரணமாக ஆசிரியர்களுக்கு தற்காலிக சேவை இணைப்பு வழங்கல் தொடர்பான அறிவித்தல் (தமிழ் மற்றும் சிங்களத்தில் முழுமையாக)


தனிப்பட்ட விடுமுறையில் பதியப்படும் என அச்சுறுத்தல் விடுக்க எந்த அதிபருக்கும் அதிகாரம் இல்லை - மஹிந்த ஜயசிங்க தனிப்பட்ட விடுமுறையில் பதியப்படும் என அச்சுறுத்தல் விடுக்க எந்த அதிபருக்கும் அதிகாரம் இல்லை - மஹிந்த ஜயசிங்க Reviewed by Irumbu Thirai News on June 20, 2022 Rating: 5

போக்குவரத்து நெருக்கடி காரணமாக ஆசிரியர்களுக்கு தற்காலிக சேவை இணைப்பு வழங்கல் தொடர்பான அறிவித்தல் (தமிழ் மற்றும் சிங்களத்தில் முழுமையாக)

June 20, 2022

போக்குவரத்து நெருக்கடி காரணமாக ஆசிரியர்களுக்கு தற்காலிக சேவை இணைப்பு வழங்கல் தொடர்பாக கல்வியமைச்சால் 16-6-2022 அன்று வெளியிடப்பட்ட அறிவித்தலின் முழுமையான தமிழ் வடிவத்தை இங்கே தருகிறோம். 

 
சகல மாகாண அரச சேவை ஆணைக்குழு செயலாளர்கள், 
சகல மாகாண கல்விச் செயலாளர்கள், 
சகல மாகாண கல்விப் பணிப்பாளர்கள், 
சகல வலயக் கல்விப் பணிப்பாளர்கள், 
சகல தேசிய பாடசாலை அதிபர்கள். 
 
 
நிலவும் போக்குவரத்து சிக்கல் காரணமாக ஆசிரியர்களுக்கு சலுகை வழங்கல் 
 
நிலவும் போக்குவரத்து சிக்கல் காரணமாக ஆசிரியர்களுக்கு சலுகை வழங்குவது தொடர்பில் பின்வரும் விடயங்களுக்கு உட்பட்ட விதத்தில் குறித்த ஆசிரியர்களின் கோரிக்கையை கருத்திற் கொண்டு வசதியான பாடசாலைக்கு தற்காலிக சேவை இணைப்பு வழங்குவதற்கு கருத்தில் கொள்ளுமாறு இத்தால் அறியத்தருகிறேன். 
 
(1) அடிப்படை விடயம்: 
 
1.1 ஒரே மாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலைகளுக்கிடையில் மற்றும் தேசிய பாடசாலை - மாகாண பாடசாலைகளுக்கிடையிலான சேவை இணைப்பு செய்வதற்கான அதிகாரம் மாகாண கல்விப் பணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. 
 
1.2 இரண்டு மாகாணங்களுக்கு இடையில் மாகாண பாடசாலை ஆசிரியர்களை இணைப்பு செய்வது, சம்பந்தப்பட்ட மாகாணங்களின் மாகாண அரச சேவை ஆணைக்குழு செயலாளர்களின் அனுமதியுடன் செய்வதற்கு யோசனை முன்வைக்கப்படுகிறது. 
 
1.3 மாகாணங்களுக்கு இடையில் இடம்பெறும் தேசிய பாடசாலைகளுக்கிடையிலான இணைப்பு கல்வி அமைச்சின் கல்வி பணிப்பாளர் (ஆசிரியர் இடமாற்றம்) மூலம் இடம்பெற வேண்டும். 
 
 
(2) மேலுள்ள சகல வழிகளிலும் இணைப்பு செய்தல், பாடசாலையின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு தடை இல்லாத முறையில் சம்பந்தப்பட்ட இரு பாடசாலைகளினதும் அதிபர்களின் எழுத்துமூல உடன்பாட்டுடன் மாத்திரம் இடம்பெற வேண்டும். 
 

(3) இணைப்பு நிபந்தனைகள்: 
 
3.1 கோரிக்கை விடுக்கும் ஆசிரியர் குறித்த பாடசாலையில் மேலதிகம் என்றால், அவர் அல்லது அவளுக்காக பதிலீடு பெற்றுக் கொடுப்பது அவசியம் இல்லை. 
 
3.2 கோரிக்கை விடுக்கும் ஆசிரியர் மேலதிகமானவர் இல்லை என்றால் பொருத்தமான பதிலீடு பெற்று கொடுத்ததன் பின்னர் இணைப்பு மேற்கொள்ள வேண்டும். 
 
3.3 அதிபர்களின் உடன்பாட்டுடன் பரஸ்பர இடமாற்றம் மேற்கொள்ளும் முறையிலேயே இந்த இணைப்பும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 
 
(4) கர்ப்பிணிகள் மற்றும் வைத்திய சிபாரிசுக்கு அமைய மேற்கொள்ளும் இணைப்பு குறித்த வைத்திய சான்றிதழின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு மேற்கொள்ள வேண்டும். (2007/ 20 சுற்றுநிருபம் 3.4.111 ற்கு அமைய) 
 
 
(5) மாகாணக் கல்விப் பணிப்பாளர் மூலம் தேசிய பாடசாலைகள் தொடர்பில் மேற்கொள்ளும் இணைப்பு பற்றிய கடிதத்தின் பிரதி கல்வி அமைச்சின் கல்வி பணிப்பாளர் (ஆசிரியர் இடமாற்றம்) க்கு அனுப்ப வேண்டும். 
 
(6) இந்த இணைப்பானது 2022-12-31 ம் திகதிவரை மட்டும் செல்லுபடியான விதத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும். 
 
(7) இன்னும் இந்த இணைப்பு மேற்கொள்ளலானது குறித்த பாடசாலைக்கான இடமாற்றம் அல்ல என்பதுடன் இணைப்பு காலப்பகுதியினுள் ஆசிரியரின் சம்பளம் நிரந்தர சேவை நிலையத்தால் கொடுக்கப்பட வேண்டும். 
 
எம்.என். ரணசிங்க. 
செயலாளர். 
கல்வி அமைச்சு. 
 
 
 
குறித்த அறிவித்தலின் சிங்கள மொழி மூலத்தை கீழே காணலாம். 


 
போக்குவரத்து நெருக்கடி காரணமாக ஆசிரியர்களுக்கு தற்காலிக சேவை இணைப்பு வழங்கல் தொடர்பான அறிவித்தல் (தமிழ் மற்றும் சிங்களத்தில் முழுமையாக) போக்குவரத்து நெருக்கடி காரணமாக ஆசிரியர்களுக்கு தற்காலிக சேவை இணைப்பு வழங்கல் தொடர்பான அறிவித்தல் (தமிழ் மற்றும் சிங்களத்தில் முழுமையாக) Reviewed by Irumbu Thirai News on June 20, 2022 Rating: 5

விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து நாளை முதல் ஆசிரியர்கள் விலகத் தீர்மானம்! - ஜோசப் ஸ்டாலின்

June 19, 2022


சாதாரண தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து நாளை (20) முதல் ஆசிரியர்கள் விலகத் தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை தமக்குத் தேவையான எரிபொருளை பெற்றுத்தரக்கோரி எம்பிலிப்பட்டிய, ஹட்டன், காலி மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் கல்வி அமைச்சர், அமைச்சின் செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர் ஆகியோர் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது பரீட்சைகள் ஆணையாளர் தெரிவிக்கையில், 110 விடைத்தாள் திருத்தம் மத்திய நிலையங்கள் இருக்கும் நிலையில் அதில் 5, 6 மத்திய நிலையங்கள் தற்போதைய நிலையில் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எரிபொருள் பிரச்சினை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இன்று காலையும் பேசினேன்... விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கடமைக்கு செல்வதற்கு முன்னர் காலை 6 மணி முதல் 7 மணி வரை அல்லது கடமை நிறைவடைந்து செல்லும்போது மாலை 5 மணி முதல் 6 மணி வரையான காலப்பகுதியிலும் எரிபொருளை பெறச் சென்றால் அதனை வழங்க முடியுமாக இருக்கும் என்று எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தை காட்டி எரிபொருள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள் ஏச்சு பேச்சு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து நாளை முதல் ஆசிரியர்கள் விலகத் தீர்மானம்! - ஜோசப் ஸ்டாலின் விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து நாளை முதல் ஆசிரியர்கள் விலகத் தீர்மானம்! - ஜோசப் ஸ்டாலின் Reviewed by Irumbu Thirai News on June 19, 2022 Rating: 5

கல்வி அமைச்சர், செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பு: தெரிவிக்கப்பட்ட முக்கிய விடயங்கள்!

June 19, 2022

இன்று கல்வி அமைச்சர், கல்வியமைச்சின் செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர் ஆகியோர் இணைந்து அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடத்திய விசேட ஊடக சந்திப்பின்போது தெரிவிக்கப்பட்ட முக்கிய விடயங்களை இங்கு தருகிறோம். 

1) கொழும்பு வலயம் மற்றும் ஏனைய நகர்ப்புற பாடசாலைகள் ஜுன் 20 முதல் 24 வரை மூடப்படும். 

2) ஏனைய பிரதேச பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு போக்குவரத்து சிரமமின்றி வர முடியுமாக இருந்தால் பாடசாலையை நடத்தலாம். 

3) இது விடுமுறை காலம். எனவே ஆசிரியர்கள் பாடசாலைக்கு செல்வது கட்டாயம் அல்ல. அவர்களின் சுய விருப்பத்தின் பேரில் தொண்டர் அடிப்படையில் பாடசாலை சென்று பணி புரியலாம். 

4) இந்த வாரம் நடைபெறாத பாடசாலைகள் வாரத்தில் மேற்கொண்ட செயற்பாடுகள் தொடர்பாக பதிவுகளை வைத்திருக்க வேண்டும். 

5) Nenasa TV, E-Thakshalawa, LMS, NIE YouTube channel என்பவற்றிற்கு மாணவர்கள் வழி காட்டப்பட வேண்டும்.

6) ஆகஸ்ட் மாத தவணை விடுமுறை குறைக்கப்படும். 

7) இந்த வருடம் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான தேசிய ரீதியான நிகழ்ச்சித்திட்டம் எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பமாகும்.

குறிப்பு:- இந்த ஊடக சந்திப்பு தொடர்பான முழுமையான விவரங்களை விரைவில் எமது இணையதளத்தில் பதிவேற்றுவோம்.
 
கல்வி அமைச்சர், செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பு: தெரிவிக்கப்பட்ட முக்கிய விடயங்கள்! கல்வி அமைச்சர், செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பு: தெரிவிக்கப்பட்ட முக்கிய விடயங்கள்! Reviewed by Irumbu Thirai News on June 19, 2022 Rating: 5

National Level ICT Championship Competition -2022 (Registration Date Extended)

June 19, 2022

National Level ICT Championship Competition -2022 registration Date extended to 2022.06.30. 
 
All Particpiants Should Register for the Competition by only using the online form. 
 
Click the link below for full details & online application.
National Level ICT Championship Competition -2022 (Registration Date Extended) National Level ICT Championship Competition -2022 (Registration Date Extended) Reviewed by Irumbu Thirai News on June 19, 2022 Rating: 5

Annual Transfer Orders - 2022 (Appeals)

June 19, 2022


2022 வருடாந்த இடமாற்றம் கட்டளைகள் தொடர்பில் அரசாங்க சேவை ஆணைக்குழுவிற்கு மேன்முறையீடுகளை சமர்ப்பித்தல் தொடர்பான அறிவித்தலை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது. 

 

மேல் முறையீடுகள் தொடர்பில் ஏற்கனவே தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் புதிய மேல்முறையீடுகள் கவனத்தில் கொள்ளப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த அறிவித்தலை கீழே காணலாம்.


Annual Transfer Orders - 2022 (Appeals) Annual Transfer Orders - 2022 (Appeals) Reviewed by Irumbu Thirai News on June 19, 2022 Rating: 5
Powered by Blogger.